.

Saturday, June 9, 2007

முஸ்லிம் இட ஒதுக்கீடு: இது ஆந்திர பாணி!

முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அளிக்க அவசர சட்டம் கொண்டு வரப்படும் என ஆந்திர முதல்வர் ஒய்.எஸ். ராஜْசேகர் ரெட்டி இன்று தெரிவித்தார்.

கல்வி மற்றும் வேْலைவாய்ப்புகளில் முஸ்லிம்களுக்கு 5 சதவீத இடஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் இந்த சட்டம் இன்னும் ஒரு மாதத்திற்குள் கொண்டு வரப்படும் என்றும் அவர் கூறினார்.

ஹைதராபாதில் நடைபெற்ற மதரசாக்களுக்கு கம்யூட்டர் வழங்கும் நிகழ்ச்சியில் அவர் பேசினார்:

முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்க அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது.சட்டரீதியான அனைத்துத் தடைகளையும் எதிர்கொண்டு இன்னும் ஒரு மாதத்திற்குள் வெற்றி பெற்று விடுவாம்.

முஸ்லிம்களின் நலனுக்குத் ْதேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம். நடப்பு கல்வியாண்டிْலேயே முஸ்லிம் மாணவர்கள் பயனடையும் வகையில் இந்த அவசரச் சட்டத்தைக் கொண்டுவர அரசு முடிவு செய்துள்ளது என்றார் ராஜْசேகர் ரெட்டி.

மதரசாக்களில் மதிய உணவுத் திட்டம்: நிகழ்ச்சியில் மதரஸாக்களில் மதிய உணவுத் திட்டத்தையும் அவர் அறிமுகப்படுத்தினார். அபுல் கலாம் ஆசாத்தின் பிறந்த நாளான நவம்பர் 11-ம் தேதி முஸ்லிம்கள் நல தினமாகக் கொண்டாடப்படும் என்றும் அவர் அறிவித்தார்.

தினமணி

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...