.

Saturday, June 9, 2007

பாரிஸ் ஹில்டனைத் தொடரும் சிறை வாசம்

போதையோடு காரோட்டியதற்காக பாரிஸ் ஹில்டனுக்கு 45 நாள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. எனினும் மூன்று முழு நாட்கள் மட்டுமே ஜெயிலில் இருந்தபிறகு, வீட்டுக்காவலுக்கு மாற்றப்படுவதாக காவல்துறை அறிவித்தது.

இது குறித்த தனக்கு தெரிவிக்கப்படாமல் முடிவெடுத்ததாக தெரிவித்த நீதிபதி, இந்த குறைக்கப்பட்ட தண்டனைக்காலத்துக்கு ஒப்புதல் தர மறுத்தார். நாற்பத்தைந்து நாள்களையும் வீட்டுவாசத்திற்கு பதில் சிறைவாசமாக நிலைநிறுத்திய இன்றைய தீர்ப்பில், 'மூன்றே நாளில் வெளியே விடுவது நீதிமன்றத்தின் மேல் பொதுமக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை சீர்குலைப்பதாக அமையும்' என்றார்.

தீர்ப்பைக் கேட்ட பாரீஸ், 'அம்மா' என்று தன்னுடைய தாயாரை நோக்கிக் கதறியவாரே மீண்டும் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

சி.என்.என்.

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...