.

Saturday, June 9, 2007

நயாகராவில் அஸ்தி கரைப்புச் சடங்கு: ஹிந்துக்கள் கோரிக்கை

கனடா நாட்டில் ஒன்டாரியோ மாகாணத்தில் வசிக்கும் ஹிந்து சமூகத்தவர், நயாகரா நதியில் அஸ்திகளைக் கரைக்க அரசின் அனுமதியை நாடியுள்ளனர். கனடா வாழ் ஹிந்து சமூகத்தவரின் சம்மேளனத் தலைவர் ரூப்நாத் சர்மா இதைத் தெரிவிக்கிறார்.

நயாகரா என்பது வேகமாக ஓடும் நதி. அதன் நீர் மிகத் தூய்மையாக இருக்கிறது. இறந்தவர்களின் அஸ்திகளை ஆற்றில் கரைப்பது ஹிந்துக்களின் வழக்கம். ஆனால் மேற்கத்திய நாடுகளில் நதி நீரைச் சுத்தமாக வைத்திருக்க சட்டமே இருக்கிறது. எனவே அஸ்தி கரைப்பை அரசின் அனுமதி பெறாமல் மேற்கொள்ள முடியாது. இறந்தவர்களுக்காக ஹிந்துக்கள் செய்யும் சடங்குகளை விளக்கி, அஸ்திகரைப்பும் அதில் ஒன்று என்று புரிய வைக்க வேண்டும். அதன் பிறகு கனடா அரசின் அனுமதியைப் பெற்றால்தான் அஸ்தியைக் கரைக்க முடியும்.

Dinamani.com

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...