உத்தரபிரதேசம் நான்காம் கட்ட தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி முன்னிலை பெறும் என தேர்தலுக்குப் பின் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.உத்தரபிரதேச சட்டசபைக்கு ஏழு கட்டங்களாக தேர்தல் நடந்து வருகிறது. இதில் முதல் நான்கு கட்ட தேர்தல்கள் முடிந்துவிட்டன. நான்காம் கட்ட தேர்தலில் 46 சதவீத ஓட்டுக்கள் பதிவாகியுள்ள நிலையில், தனியார் செய்தி நிறுவனம் தேர்தலுக்குப்பின் நடத்திய கருத்துக் கணிப்பில் பகுஜன்சமாஜ் கட்சிக்கே ஆதரவு அதிகம் இருப்பதாக தெரிகிறது.மொத்தமுள்ள 57 தொகுதிகளில் பகுஜன் சமாஜ் கட்சி 13 முதல் 17 சீட்டுகளை மட்டுமே பிடிக்கும். சமாஜ்வாடி கட்சி 25 முதல் 29 தொகுதிகளை கைப்பற்றும் எனத் தெரிய வந்துள்ளது.
Tuesday, April 24, 2007
Monday, April 23, 2007
சற்றுமுன் : முன்னாள் ரஷ்யா அதிபர் எல்ட்சின் மரணம்
மேலும் படிக்க...
Former Russian leader Yeltsin dead
Posted by
கோவி.கண்ணன் [GK]
at
7:37 PM
1 comments
இடஒதுகீடு : தடையை நீக்க உச்சநீதிமன்றம் மறுப்பு.
மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் இதர பிறபடுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க உச்ச நீதிமன்றம் இன்று மறுத்து விட்டது.இந்திய மேலாண்மைக் கழகம்-ஐஐஎம், இந்திய தொழில்நுட்பக் கழகம் - ஐஐடி உள்ளிட்ட மத்திய உயர் கல்விநிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரும் அச்சட்டத்திற்கு ஒப்புதல் அளித்தார்.
Posted by
Adirai Media
at
5:29 PM
0
comments
வெற்றிக்கரமாக விண்ணில் பாய்ந்தது 'பி.எஸ்.எல்.வி.- சி 8'ராக்கெட்
வணிக ரீதியாக உருவாக்கப்பட்டுள்ள 'பி.எஸ்.எல்.வி.- சி 8' ராக்கெட் இன்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இத்தாலிய நாட்டு செயற்கைக்கோள் 'ஏகிள்' உடன் இந்த ராக்கெட் வடிவமைக்கப்பட்டிருந்தது. சென்னையை அடுத்த ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள சதிஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து இன்று மாலை 3.30 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது.
Posted by
Adirai Media
at
4:58 PM
1 comments
விமானப்படை வீரர்களின் சாகச நிகழ்ச்சி .
சென்னை மெரினா கடற்கரையில் நேற்று மாலை 5லிருந்து 6 மணி வரை விமான சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் விமானபடையின் வீரர்கள் பல்வேறு சாகச நிகழ்சிகளை நிகழ்த்தினர் இதையொட்டி 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர் இதையொட்டி வாகனப் போக்குவரத்தும் மாற்றியமைக்கப்பட்டதின் எதிரொளியாக சாகசநிகழ்சிக்குப்பின் பொதுமக்கள் வீடு திரும்பபெரும்பாடு பட்டனர்.
Posted by
Adirai Media
at
3:33 PM
0
comments
ஜெயலலிதாவுக்கு கொலை மிரட்டல்.
தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், அதிமுக கட்சியின் பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவுக்கு கடிதம் ஒன்றின் மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதையடுத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை, ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள ஜெயா டிவி அலுவலகத்துக்கு கடந்த சனிக்கிழமையன்று ஒரு தபால் அட்டை வந்துள்ளது. அதில், அரசை குறைகூறி ஜெயா டிவியில் தொடர்ந்து செய்தி வருவதை உடனே நிறுத்த வேண்டும் என்றும், இல்லையென்றால் ஜெயலலிதா மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்படும் என்றும் மிரட்டல் விடுத்து எழுதப்பட்டிருந்தது.
Posted by
Adirai Media
at
2:13 PM
0
comments
Saturday, April 21, 2007
நாசா கட்டடத்தில் துப்பாக்கிச் சூடு: இருவர் பலி.
அமெரிக்காவில் உள்ள நாசா விண்வெளி கட்டடத்தில் இயங்கும் ஜான்சன் விண்வெளி ஆய்வு மையத்தில், பில்டிங் 44 என்ற கட்டடத்தில் ஒருவன் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், இந்த சம்பவத்தில் இருவர் பலியானதாகவும் தகவல்கள் வெளியாயின.கட்டடத்திற்குள் புகுந்த மர்ம மனிதன், விஞ்ஞானி ஒருவரை சுட்டுக் கொன்றதாகவும், பின்னர் தன்னைத் தானே சுட்டு கொன்றதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. கையில் துப்பாக்கியுடன் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஒருவன் நாசா கட்டடத்திற்குள் புகுந்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர்.சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.வெர்ஜீனியாவில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவ பரபரப்பு அடங்குவதற்குள், நாசா கட்டடத்தில் நடந்திருக்கும் இந்த சம்பவம், அமெரிக்க மக்களிடையே பரபரபபை ஏற்படுத்தியுள்ளது.
Posted by
Adirai Media
at
12:40 PM
0
comments
பெரியார் சிலை உடைப்பு:முத்துப்பேட்டையில் பதற்றம்.
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பேருந்து நிலையம் அருகில் உள்ள பெரியார் சிலயை சில மர்ம ஆசாமிகளால் உடைத்ததின் எதிரொளியாக அங்கு பதற்றமான சூழ்நிலை உருவாகிஉள்ளது இதனால் அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
Posted by
Adirai Media
at
12:02 PM
2
comments
Friday, April 20, 2007
சற்றுமுன் : 'அபிஷேக் ஏமாற்றி விட்டார்' து. நடிகை தற்கொலைக்கு முயற்சி!!
மும்பை: நடிகர் அபிஷேக் பச்சன் தன்னைக் கல்யாணம் செய்து கொள்வதாக கூறி பலமுறை தகாத முறையில் நடந்து கொண்டு ஏமாற்றி விட்டு தற்போது ஐஸ்வர்யா ராயைத் திருமணம் செய்து கொள்வதாக கூறி இந்தி துணை நடிகை ஜான்வி கபூர் என்பவர் அமிதாப் பச்சன் வீட்டின் முன்பு தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
அபிஷேக்பச்சனுடன் தஸ் என்ற படத்தில் இணைந்து சிறு வேடத்தில் நடித்தவர் துணை நடிகை ஜானகி கபூர். இன்று காலை அவர் அமிதாப் பச்சனின் வீட்டுக்கு வந்தார். வீட்டின் முன்புறம் திடீரென தனது கையின் மணிக்கட்டை கத்தியால் அறுத்துக் கொண்டார்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரைப் பரிசோதித்தபோது அவர் போதைப் பொருள் உட்கொண்டிருந்தது தெரிய வந்தது.
மேலும் முன்னுக்குப் பின் முரணாகவும் அவர் பேசினார். அவருக்கு மன நலம் பாதிக்கப்பட்டிருக்கலாம் என டாக்டர்கள் கூறியுள்ளார்.
போலிஸில் ஜான்வி கபூர் அளித்த வாக்குமூலத்தில், நானும், அபிஷேக் பச்சனும் காதலித்தோம். என்னைக் கல்யாணம் செய்து கொள்வதாக அபிஷேக் உறுதியளித்திருந்தார்.
கடந்த ஆண்டு சில நண்பர்கள் முன்னிலையில் எனக்கு அவர் சிந்தூர் (குங்குமம்) வைத்தார். இதனால் எங்களுக்கு திருமணம் ஆகிவிட்டதாகத் தான் அர்த்தம்
இதையடுத்து பலமுறை என்னிடம் அவர் தகாத முறையில் நடந்து கொண்டார்.
ஆனால் இப்போது என்னை ஏமாற்றி விட்டு ஐஸ்வர்யாவைத் திருமணம் செய்து கொள்ள அவர் முடிவெடுத்துள்ளார். இது எனக்கு மிகுந்த மன வேதனையைத் தந்தது. அதனால்தான் தற்கொலைக்கு முயன்றேன் என்று கூறியுள்ளார் கபூர்.
ஜான்வி கபூர் ஏற்கனவே திருமணமானவர் என்றும் விவாகரத்து ஆனவர் என்றும் கூறப்படுகிறது. இவரது நிஜப் பெயர் நைனா ரிஸ்வி.
வெறும் பரபரப்புக்காக அவர் இப்படி நடந்து கொண்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
ஆனால், இந்த விஷயத்தில் பச்சன் குடும்பத்தினர் இதுவரை வாய் திறக்க மறுப்பது தான் மர்ம முடிச்சாக உள்ளது.
நன்றி : தட்ஸ் தமிழ்.காம்
Posted by
கோவி.கண்ணன் [GK]
at
10:08 PM
1 comments
சற்றுமுன் : நைஜீரியாவில் நெய்வேலி என்ஜீனியர் கடத்தல்
நைஜீரியாவில் நெய்வேலி என்ஜீனியர் கடத்தல்
ஏப்ரல் 20, 2007
நெய்வேலி: நெய்வேலியைச் சேர்ந்த பொறியாளர், நைஜீரியா நாட்டில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டுள்ளார். அவரை மீட்க தமிழக அரசும், மத்திய அரசும் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் நெய்வேலியைச் சேர்ந்தவர் திவாகரன். இவரது மகன் ராமச்சந்திரன் (36). நைஜீரியாவில் உள்ள குளோபல் ஸ்டீல் ஹோல்டிங்ஸ் என்ற நிறுவனத்தில் பொறியாளராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 10 மாதங்களாக இப்பணியில் அவர் உள்ளார்.
இந்த நிலையில், தீவிரவாதிகள் ராமச்சந்திரன் உள்ளிட்ட இரு இந்தியப் பொறியாளர்களைக் கடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் ராமச்சந்திரனின் குடும்பத்தினர் பெரும் அதிர்ச்சியிலும், சோகத்திலும் மூழ்கியுள்ளனர்.
ராமச்சந்திரனை மீட்க துரித நடவடிக்கை எடுத்து உதவுமாறு கோரி பிரதமர் மன்மோகன் சிங், முதல்வர் கருணாநிதி ஆகியோருக்கு பெற்றோர் திவாகரன், சாந்தம்மாள், சகோதரர் ராதாகிருஷ்ணன், சகோதரி ராதாமணி ஆகியோர் தந்தி அனுப்பியுள்ளனர்.
நன்றி : தட்ஸ் தமிழ்.காம்
Posted by
கோவி.கண்ணன் [GK]
at
1:02 PM
0
comments
Thursday, April 19, 2007
ஈராக் குண்டுவெடிப்பு பலி 172 ஆக உயர்வு.
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்ததில் பலியானவர்கள் எண்ணிக்கை 172 ஆக உயர்ந்தது.ஈராக்கின் மத்திய மற்றும் புறநகரில் ஷியா பிரிவு மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் நேற்று அடுத்தடுத்து 5 இடங்களில் தொடர்ச்சியாக சக்தி வாய்ந்த குண்டுகள் வெடித்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷியா பிரிவினர் அதிகமிருக்கும் சத்ரியா என்ற இடத்தில் உள்ள மார்க்கெட்டில் பஸ் ஒன்றில் வைக்கப்பட்ட குண்டு வெடித்து 90 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.இதுபோன்ற பல்வேறு இடங்களில் நடந்த சம்பவங்களால் பலியானவர்களின் எண்ணிக்கை 172 ஆக உயர்ந்தது. 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Posted by
Adirai Media
at
4:13 PM
0
comments
மும்பை குண்டுவெடிப்பு : தண்டனை இன்று அறிவிப்பு?
1993ம் ஆண்டு நடந்த மும்பை தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் குற்றம் உறுதி செய்யப்பட்ட 100 குற்றவாளிகளின் தண்டனை இன்று முதல் பல கட்டங்களாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மும்பையில் கடந்த 1993ம் ஆண்டு நடந்த பயங்கர தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் நூற்றுக்கணக்கான அப்பாவி மக்கள் பலியானார்கள். பலர் காயமடைந்தனர். இது தொடர்பான வழக்கு மும்பை தடா சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. இதில் டைகர் மேமன் முக்கிய குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய்தத் உள்ளிட்ட 100 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். ஆனால் இவர்களது குற்றங்களுக்கான தண்டனை பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், குற்றவாளிகள் 100 பேரும் மும்பை தடா கோர்ட்டில் இன்று ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளனர்.இதையடுத்து, குற்றவாளிகளின் தண்டனை இன்று முதல் அறிவிக்கப்படலாம் என நீதிமன்றத்தில் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Posted by
Adirai Media
at
2:19 PM
0
comments
லோகநாதன் குடும்பத்தினர் அமெரிக்கா கிளம்பினர்: வாஷிங்டன்- விர்ஜினீயா செல்ல சிறப்பு விமானம்.
தென் கொரிய மாணவரால் சுட்டுக் கொல்லப்பட்ட பேராசிரியர் லோகநாதனின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக அவரது பெற்றோர் உள்பட 9 பேர் நேற்று நள்ளிரவு அமெரிக்காவுக்குக் கிளம்பிச் சென்றனர். லோகநாதனின் உடல், அவர் கடந்த 15 ஆண்டுகளாகப் பணியாற்றி வந்த விர்ஜீனியா டெக் பல்கலைக்கழக வளாகத்திலேயே அவரது விருப்பப்படி அடக்கம் செய்யப்படவுள்ளது
Posted by
Adirai Media
at
12:58 PM
1 comments
Wednesday, April 18, 2007
போலி மனைவியுடன் கனடா செல்ல முயன்ற பாஜக எம்.பி கைது!
அந்தப் பெண்ணின் பாஸ்போர்ட்டை குடியேற்றத் துறை அதிகாரிகள் சோதித்தபோது, அதில் அந்தப் பாஸ்போர்ட்டுக்குரியவர் கத்தாராவின் மனைவி சாரதா பென் இல்லை என்பது தெரிய வந்தது. கத்தாராவுடன் வந்த பெண்ணின் பெயர் பரம்ஜித். இதையடுத்து இருவரையும் போலீஸார் கைது செய்தனர். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தைத் தொடர்ந்து கத்தாரா விவகாரம் குறித்து முழுமையான விசாரணைக்கு உத்தரவிட்டார் பாஜக தலைவர் ராஜ்நாத் சிங். அதில் கத்தாரா தவறு செய்தது தெரிய வந்தது. இதையடுத்து கத்தாராவை கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கி ராஜ்நாத் சிங் உத்தரவிட்டார். குடியேற்றத் துறையினரால் பிடிக்கப்பட்ட கத்தாரா மற்றும் பரம்ஜித் ஆகிய இருவரும் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
நன்றி : தட்ஸ் தமிழ்
Posted by
Adirai Media
at
9:13 PM
2
comments
உத்தரபிரதேசம்: ராகுல் காந்தி 5ம் கட்ட பிரச்சாரம்.
உத்தரபிரதேச சட்டசபைக்கான மூன்றாம் கட்டத் தேர்தல் நடந்து வரும் நிலையில்,காங்கிரஸ் தலைவர் சோனியாவின் மகன் ராகுல் காந்தி தனது 5ம் கட்ட தேர்தல் பிரச்சாரத்தை அமேதி தொகுதியில் இருந்து இன்று துவக்கியுள்ளார்.
Posted by
Adirai Media
at
3:06 PM
0
comments
b r e a k i n g n e w s...



