இலங்கையின் தலைநகர் கொழும்பிற்கு அருகிலுள்ள எரிபொருட்கள் நிலைகள் மீது விடுதலைப் புலிகள் நடத்திய வான் தாக்குதலுக்கு பதிலடியாக தமது வான் படையினர் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிகள் மீது தாக்குதலை நடத்தியுள்ளதாக இலங்கை அரசின் விமானப்படை கூறியுள்ளது.
ஆனால் இலங்கையின் வடக்கில் உள்ள தமது பிரதேசத்தில் விசுவமடு பகுதியில் இன்று அதிகாலை ஒரு மணியளவில் அரச விமானப்படையினர் நடத்திய விமானக்குண்டுத் தாக்குதலுக்குப் பதிலடியாகவே தமது வான்படையினர், கொழும்பில் வான்வழி தாக்குதல்களை நடத்தியதாக விடுதலைப் புலிகளின் இராணுவத்துறை பேச்சாளர் இளந்திரையன் கூறியுள்ளார்.
29 ஏப்ரல் அதிகாலை சுமார் 1.45 மணியளவில் விடுதலைப் புலிகளின் இரண்டு இலகுரக விமானங்கள் தலைநகர் கொழும்பிலுள்ள கொலன்னாவ மற்றும் புறநகர்பகுதியான முத்துராஜவெல போன்ற இடங்களிலுள்ள எண்ணெய் சேகரிப்பு நிலையங்கள் மீது தாக்குதல் நடத்திவிட்டுத் தப்பிச் சென்றிருக்கின்றன.
கொழும்பில் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதியாட்டத்தை திறந்தவெளி திரைகளில் ரசிகர்கள் பார்த்துக் கொண்டிருந்த சமயத்தில் விடுதலைப் புலிகள் இந்த வான் தாக்குதலை நடத்தினர். விமான எதிர்ப்பு எறிகணைகள் சுடப்பட்டத்தின் வானத்தில் செந்நிற நெருப்பு கீற்றுகள் காணப்பட்டன.
இந்தத்தாக்குதலினால் எண்ணெய் சேகரிப்பு நிலையங்கள் எவற்றிற்கும் எவ்வித தாக்குதலும் இல்லை என்று பி.பி.சி தமிழோசையிடம் தெரிவித்த அரசாங்கப் பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான அனுர பிரியதர்ஷன யாப்பா புலிகளின் விமானங்களைத் தாக்கியழிப்பதே அரசின் நோக்கம் என்று தெரிவித்தார்.
புலிகளின் தாக்குதலை தொடர்ந்து கிளிநொச்சி மாவட்டத்தில் இரணைமடுவுக்கு கிழக்கே உள்ள விசுவமடு பகுதியில் அடையாளம் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் இலக்கு ஒன்றின் மீது அரச விமானப்படைக்குச் சொந்தமான விமானங்கள் குண்டு வீச்சுத் தாக்குதல்களை நடத்தியதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்திருக்கின்றது.
இரணைமடுவுக்கு அருகில் உள்ள விடுதலைப் புலிகளின் விமான ஓடுபாதைப் பகுதியில் இன்று காலை 5.35 மணியளவில் மீண்டும் ஒரு விமானக் குண்டுத் தாக்குதலை விமானப்படையினர் நடத்தியிருப்பதாகவும் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் அறிவித்திருக்கின்றது.
கடந்த மாதம் தான் விடுதலைப் புலிகள் முதல் முறையாக தமது இலகுரக விமானம் மூலம் இலங்கை அரசின் நிலைகள் மீது வான் தாக்குதலை நடத்தினர்.
இலங்கை செய்தி ஆய்வாளர் டி.பி.எஸ். ஜேயராஜ் செவ்வி
இதன் மூலம் புலிகள் சொல்ல வருவது ஓர் ஆணித்தரமான அரசியல் ராணுவ செய்தி. இலங்கை அரசாங்கம் சொல்லிவருவது போல நாங்கள் ஓரங்கட்டப்படவில்லை, ஓரங்கட்டப்படவும் மாட்டோம் என்பது தான் அந்தச் செய்தி என்கிறார் இலங்கை செய்தி ஆய்வாளர் டி.பி.எஸ். ஜேயராஜ்.
செவ்வி:
அரசாங்கம் கிழக்கில் படையினர் கண்ட வெற்றிகளை வைத்துக் கொண்டு தென்னிலங்கை மக்கள் மத்தியில் தாங்கள் புலிகளை ஓரங்கட்டி விட்டோமென்றும், புலிகள் வசம் ஓரிரு சிறு விமானங்கள் தான் உள்ளன, அவற்றை நாங்கள் விரைவில் இரண்டிலொன்று பார்த்து விடுவோம் என்றும் சொல்லி வரும் வேளையில் அதற்கான புலிகளின் பதில் தான் இது என்று படுகிறது.
புலிகளின் விமானத் தாக்குதல்களால் ஏற்பட்ட பாதிப்புகள், இழப்புகள் சிறிதா பெரிதா என்பதை விட, புலிகளின் வான்தாக்குதல்கள் தொடருகின்றன என்ற செய்தி தான் முக்கியமாக தென்னிலங்கை மக்கள் மத்தியில் சென்று சேரப் போகிறது.
அரசும் புலிகளும் ஒரே மொழி
வான் தாக்குதல்கள் தொடர்பாக அரசாங்கம் பேசும் அதே மொழியை அதே நியாயத்தைத் தான் புலிகளும் பேசுகிறார்கள். ஏனென்றாhல் சில குண்டுகள் மக்கள் குடியிருப்புப் பகுதியில் வீழ்ந்த போதிலும் அது ராணுவ ரீதியிலான தமது பதில் தாக்குதல் என்று அரசாங்கம் கூறிவருகிறது. அதை எவரும் பெரிதாக கண்டிக்க முன்வரவில்லை. புலிகளும் தங்களுடைய இந்த மூன்றாவது தாக்குதல் ராணுவ ரீதியிலானது என்கிறார்கள். எனவே புலிகளின் இந்த வான் தாக்குதல்களை கண்டிக்கக் கூடிய தார்மீக நிலையில் எவரும் இல்லை என்று தான் கூற வேண்டும்.
அரசின் போக்கில் மாற்றம் வராது
சர்வதேச நாடுகள் கேட்பது போல இலங்கை அரசு யுத்த நிறுத்த ஒப்பந்தத்தைப் பலப்படுத்தி, ஒரு உண்மையான யுத்த நிறுத்தத்தைக் கொண்டு வந்து, மீண்டும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கும் வாய்ப்பில்லை என்றே தெரிகிறது. இந்த தாக்குதல் நடந்து சில மணி நேரத்தில் புலிகளின் விசுவமடுப் பகுதியில் அரசு வான் தாக்குதல் நடத்தியதை வைத்துப் பார்த்தால் அடிக்கு அடி, பல்லுக்கு பல்லு என்று தான் அரசு நிற்கிறது என்று படுகிறது. இருப்பினும் -
ஊடகங்களிலும் அரசாங்கப் பேச்சாளர் மூலமாகவும் பல கருத்துக்கள் வந்து கொண்டிருந்தாலும் அவற்றை உற்று நோக்கும் போது தெரிவது என்னவென்றால் புலிகளிடம் எத்தனை விமானங்கள் உள்ளன என்றோ, எத்தகைய விமானங்கள் உள்ளன என்றோ, அல்லது அவை எங்கே வைக்கப்பட்டிருக்கினறன என்றோ அரசாங்கத்துக்கோ எவருக்குமோ எதுவுமே தெரியாது என்பது தான் உண்மை. ஆனால் -
அரசு அல்லாத ஓர் அமைப்பிடம் இத்தகைய வான் படை வலு இருப்பதை எந்த நாடும் விரும்பாது, குறிப்பாக மேற்குலக நாடுகளும், இந்தியாவும் இத்தகைய நிலையை விரும்ப மாட்டா.
செய்தி: பிபிசி - தமிழ்
Monday, April 30, 2007
ச: புலிகளும் அரசும் தமது தாக்குதல்களைப் "பதிலடி" என்கிறார்கள்
Posted by
Boston Bala
at
7:28 PM
2
comments
ச:இன்பத்தமிழன் சரணடைந்தார்
முன்னாள் அ.தி.மு.க மந்திரி இன்பத் தமிழன் இன்று மதுரை கீழ் கோர்ட்டில் சரணடைந்தார். முனிசிபல் சேர்மேனின் கணவரைக்கொன்ற வழக்கில் அவர் தேடப்பட்டார்.
Ex-AIADMK Minister surrenders in court
Posted by
சிறில் அலெக்ஸ்
at
7:08 PM
0
comments
நந்திகிராம் விவகாரம்: மக்களவையில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு
நந்திகிராம் பிரச்சனையில் மத்திய அரசு தலையிட வேண்டும் என்று வலியுறுத்தி தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகள் மக்களவையில் இருந்து இன்று வெளிநடப்பு செய்தன.
மேலதிக விபரங்களுக்கு...
http://content.msn.co.in/Tamil/News/National/0704-30-11.htm
Posted by
Adirai Media
at
4:47 PM
0
comments
"மே தினம்" தலைவர்கள் வாழ்த்து.
மே தினம்' என்றழைக்கப்படும் தொழிலாளர் தினம் நாளை கொண்டாடப்பட இருப்பதையொட்டி தமிழக முதல்வர் கருணாநிதி உள்பட பல்வேறு கட்சித் தலைவர்களும் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர். தமிழக முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதி வெளியிட்டுள்ள மே தின வாழ்த்துச் செய்தியில், தொழிலாளர்களுக்கு தடையின்றி தாராளமாக போனஸ், ஊக்கத் தொகை, நிலமற்ற ஏழை விவசாயத் தொழிலாளர் குடும்பங்களுக்கு இலவச நிலம் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை வழங்கி, திமுக அரசு தொழிலாளர் நலம் பெற தொடர்ந்து பாடுபட்டு வருவதை சுட்டிக்காட்ட விரும்புவதாகத் தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா தனது வாழ்த்துச் செய்தியில், உரிமைகள் மறுக்கப்பட்டு அதன் பயன் ஒரு சிலருக்கு மட்டுமே உடைமையாக்கப்பட்டபோது, அடங்கி ஒடுங்கிக் கிடந்த தொழிலாளர்கள் ஆர்ப்பரித்து எழுந்து தங்கள் உரிமையை பெற்ற நாள் என்று மே தினத்தைக் குறிப்பிட்டுள்ளார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், மே தின நன்னாளில் அனைவருக்கும் வேலை கிடைக்கவும், கண்ணியமான வாழ்வு அமையவும் புதியதோர் சமுதாயம் அமைவதற்கு சூளுரை மேற்கொள்வோம் என குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன், மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் உள்ளிட்ட தலைவர்களும் மே தின வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
Posted by
Adirai Media
at
4:38 PM
0
comments
விசாகப்பட்டிணம் காவல் கண்காணிப்பாளர் ஊழல் குற்றச்சாட்டில்்டில் கைது
விசாகப் பட்டிணத்தின் காவல் கண்காணிப்பாளர் ஜே ஜி முரளி ஞாயிறன்று ஊழல் தடுப்பு காவலர்களால் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து ரூ1.5 இலட்சம் பணம், 22 தோலா தங்கம், மற்றும் 64 இலட்சம் பெறுமான சொத்துக்களின் ஆவணங்கள் கைப்பற்றப் பட்டுள்ளது.
மேலும்..NDTV.com
Posted by
மணியன்
at
12:03 PM
0
comments
Sunday, April 29, 2007
உலக கோப்பையை ஆஸ்திரேலியா கைப்பற்றியது ?
வெளிச்சமின்மை காரணமாக D/L படி ஆஸ்திரேலியா உலக கோப்பையை கைப்பற்றியது.
The light's been offered and Sri Lanka have taken it - meaning Australia have won the World Cup again. They certainly deserve it and are huddling in celebration.
ஆஸ்திரேலியா 281 / 4
இலங்கை 206 /7
ஆஸ்திரேலியா உலக கோப்பையை கைப்பற்றியது.
என்று முன்னார் அறிவித்தார்கள்.
இடையில் என்ன ஆயிற்றோ திரும்பவும் விளையாடுகிறார்கள்.
இறுதியாக 36 ஓவரில் ஆட்டம் முடிந்தது !
53 ரன்கள் வேறுபாட்டில் ஆஸ்திரேலியா D/L முறைப்படி வெற்றிபெற்றது !
:)
கங்காருகளுக்கு வாழ்த்துக்கள் !
Posted by
கோவி.கண்ணன் [GK]
at
3:45 AM
0
comments
Saturday, April 28, 2007
சற்றுமுன்: உலகக்கோப்பை இறுதிப் போட்டி: ஆஸ்திரேலியா x இலங்கை
உலக கோப்பை இறுதிப் போட்டி : ஆஸ்திரேலியா டாஸ் வென்று முதலில் பேட் செய்ய முடிவு; 38 ஒவராக குறைப்பு
பார்படாஸ் : உலக மக்கள் பெரிதும் எதிர்பார்க்கும் உலக கோப்பை இறுதிப் போட்டி வெஸ்ட் இண்டீசின் பார்படாஸ் நகரில் நடைபெறவிருக்கிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. மழையால் ஆட்டம் துவங்குவது தாமதப்பட்டுள்ளது. இந்திய நேரப்படி இரவு 0945 மணிக்கு ஆட்டம் துவங்கும்; மழை காரணமாக ஆட்டம் 38 ஒவராக குறைக்கப்பட்டுள்ளது. உலகப் புகழ் பெற்ற ஆஸி., வீரர் மெக்ராத் மற்றும் இலங்கை வீரர் அர்னால்ட் ஆகிய இருவருக்கும் இது கடைசி போட்டி ஆகும்.
=தினமலர்
Posted by
✪சிந்தாநதி
at
8:27 PM
21
comments
மாநில நடுவண் அரசுகளின் உறவை சீர்திருத்த புது கமிஷன் அமைப்பு
மாநில அரசுகளுக்கும் நடுவண் அரசிற்குமிடையே நிலவும் அதிகாரப் பங்கினை ஆய்ந்து சீர்திருத்தங்களை பரிந்துரைக்க முன்னாள் தலைமை நீதிபதி திரு எம்.எம்.புன்ச்சி தலைமையில் ஒரு புது கமிஷன் அமைக்கப் பட்டுள்ளது. மாநில சுயாட்சியை பரிந்துரைத்தவர்கள் பங்குபெறும் ஆட்சியில் நடுவண் அரசிற்கு அதிக அதிகாரங்களை, தாமே மைய காவல்படையினரை மாநிலங்களுக்கு அனுப்புவிதமாகவும், நாட்டிற்கு ஊறு விளைவிக்கும் குற்றங்களை நேரடியாக ஆயும் விதமாகவும் கொடுப்பதற்கு வித்திட இந்த கமிஷன் அமைக்கப் பட்டுள்ளது.
மேலும் அறிய...The Hindu : National : New commission on Centre-States ties
Posted by
மணியன்
at
5:11 PM
0
comments
மேலாண்மை கல்வி நிறுவனங்களில் மாணவர்சேர்க்கை ஆரம்பம்
இந்திய அரசின் மனிதவள அமைச்சின் வழிகாட்டலை அடுத்து ஐந்து இந்திய மேலாண்மை நிறுவனங்கள் ( அகமதாபாத், பங்களூரு,கொல்கொத்தா, இந்தோர், இலக்னோ) மாணவர்களை சேர்க்கும் விதமாக தங்கள் தேர்வுபட்டியலை அவரவர் வலைத்தளங்களில் வெளியிட்டனர்.
Institutes in action mode
Posted by
மணியன்
at
4:55 PM
0
comments
வீரப்பன் உளவாளி கொலை வழக்கு நக்கீரன் கோபால் விடுதலை.
2007 கோபிச்செட்டிப்பாளையம் வீரப்பனுக்கு உணவு உள்ளிட்டவற்றை சப்ளை செய்து வந்த ஹோட்டல் அதிபர் கந்தவேல் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த நக்கீரன் ஆசிரியர் கோபால், நிருபர்கள் சிவசுப்ரமணியம், ஜீவா தங்கவேல் உள்ளிட்ட 11 பேர் விடுதலை செய்யப்பட்டனர். ஈரோடு மாவட்டம் பர்கூரில் ஹோட்டல் வைத்திருந்தவர் கந்தவேல். இவர் வீரப்பனுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்டவற்றைக் கொடுத்து வந்தார். மேலும் வீரப்பனின் உளவாளியாகவும் இருந்தார். இவரை சிலர் கொலை செய்து விட்டனர். இதையடுத்து கடந்த அதிமுக ஆட்சியில் நக்கீரன் கோபால், நக்கீரன் நிருபர்கள் சிவசுப்ரமணியம், ஜீவா தங்கவேல் உள்ளிட்ட11 பேர் மீது கொலை வழக்கு போடப்பட்டது. இந்த வழக்கு கோபிச்செட்டிப்பாளையம் விரைவு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்தது. நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டது. கோபால் உள்ளிட்டோர் மீதான குற்றச்சாட்டு சரிவர நிரூபிக்கப்படவில்லை என்பதால் அனைவரையும் விடுதலை செய்வதாக நீதிபதி பிரேம்குமார் தனது தீர்ப்பில் தெரிவித்தார். தீர்ப்பை அறிவதற்காக கோபி நீதிமன்றத்திற்கு வந்திருந்த கோபால் தீர்ப்பு குறித்து கூறுகையில், இது பொய் வழக்கு என்பது அனைவருக்கும் தெரியும். இந்த வழக்கால் நானும், எனது பத்திரிக்கை நிருபர்களும் கடந்த ஆட்சியில் அலைக்கழிக்கப்பட்டோம், துன்புறுத்தப்பட்டோம். இப்போது பெரும் சட்டப் போராட்டத்துக்குப் பின்னர் நிரபராதிகள் என நிரூபிக்கப்பட்டுள்ளோம் என்றார்.
Posted by
Adirai Media
at
2:53 PM
0
comments
ச: நுழைவுத் தேர்வு தேவை இல்லை. ஐகோர்ட் தீர்ப்பு
நுழைவுத்தேர்வு இல்லை! * தமிழக அரசின் சட்டம் செல்லும் என ஐகோர்ட் தீர்ப்பு * பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்களின் கவலை தீர்ந்தது
சென்னை: "தொழில் கல்விக்கான நுழைவுத் தேர்வை ரத்து செய்து தமிழக அரசு கொண்டு வந்த புதிய சட்டம் செல்லும்' என்று சென்னை ஐகோர்ட் தீர்ப்பளித்துள்ளது.
சட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. நுழைவுத் தேர்வு இல்லை என்று முடிவானதால் பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்களின் கவலை தீர்ந்தது. மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட தொழில் கல்விக்கான நுழைவுத் தேர்வு 20 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வந்தது. இதை ரத்து செய்ய வேண்டும் என அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்தன. "நுழைவுத் தேர்வால் கிராமப்புற மாணவர்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்; நகர்ப்புற மாணவர்களே பலனடைகின்றனர்' என்று கருத்து தெரிவிக்கப்பட்டது. கடந்த அ.தி.மு.க., ஆட்சியின் போது நுழைவுத் தேர்வை ரத்து செய்து இரண்டு முறை தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இதனை சென்னை ஐகோர்ட் ரத்து செய்தது.
தி.மு.க., அரசு பதவியேற்ற உடன், நுழைவுத் தேர்வை ரத்து செய்வது குறித்து பரிந்துரைக்க முன்னாள் துணைவேந்தர் அனந்தகிருஷ்ணன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இக்குழு அனைத்து தரப்பிலும் கருத்துக்களை கோரியது. வெவ்வேறு போர்டு தேர்வுகளை எழுதும் மாணவர்களின் மதிப்பெண்களை எப்படி சமன்படுத்துவது என்பது குறித்து ஆராய்ந்தது. கடைசியில் அரசுக்கு தனது அறிக்கையை அளித்தது. அதன் அடிப்படையில், நுழைவுத் தேர்வை ரத்து செய்து தமிழக அரசு சட்டம் கொண்டு வந்தது. இச்சட்டத்துக்கு ஜனாதிபதியின் ஒப்புதலும் பெறப்பட்டது. சட்டத்தை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் மாணவர் அஸ்வின்குமார் உள்ளிட்ட நால்வரும், ஆதரித்து பா.ம.க., மாணவர் அணி, திராவிட கழகம் ஆகியவையும் மனுக்கள் தாக்கல் செய்தன. இந்த மனுக்களை முதலில் தலைமை நீதிபதி ஏ.பி.ஷா அடங்கிய "முதல் பெஞ்ச்' விசாரித்தது. பின்னர் இவ்வழக்கு நீதிபதிகள் பி.கே.மிஸ்ரா, சம்பத்குமார் அடங்கிய "டிவிஷன் பெஞ்ச்' விசாரணைக்கு மாற்றப்பட்டது. தமிழக அரசு சார்பில் அட்வகேட்ஜெனரல் விடுதலை, கூடுதல் அட்வகேட்ஜெனரல் கண்ணதாசன், சிறப்பு அரசு பிளீடர் சேகர், மத்திய அரசு சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் வி.டி.கோபாலன், உதவி சொலிசிட்டர் ஜெனரல் பி.வில்சன், ஏ.ஐ.சி.டி.இ., சார்பில் வக்கீல் முரளிகுமரன், இந்திய மருத்துவ கவுன்சில் சார்பில் வக்கீல் சிங்காரவேலன், பா.ம.க., சார்பில் சீனியர் வக்கீல் ரவிவர்மகுமார், வக்கீல் ஜோதிமணி, தி.க., சார்பில் வக்கீல்கள் தியாகராஜன், வீரசேகரன், ஆகியோர் ஆஜராயினர். இவ்வழக்கில் கடந்த 11ம் தேதி தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டது.
நேற்று நீதிபதிகள் பி.கே.மிஸ்ரா, சம்பத்குமார் அடங்கிய "டிவிஷன் பெஞ்ச்' இவ்வழக்கில் உத்தரவு பிறப்பித்தது. பொதுவான உத்தரவை முதலில் நீதிபதி மிஸ்ரா வாசித்தார். பின்னர் நீதிபதி சம்பத்குமார் கூடுதலாக தனது உத்தரவை வாசித்தார். "நுழைவுத் தேர்வை ரத்து செய்து தமிழக அரசு கொண்டு வந்த சட்டம் செல்லும்' என்றும் இதை எதிர்த்த மனுக்களை தள்ளுபடி செய்தும் தீர்ப்பளித்தனர். கட்டடக்கலை படிப்பில் சேரும் மாணவர்களைப் பொறுத்தவரை அவர்கள் திறன் தேர்வு எழுத வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. பொது நுழைவுத் தேர்வை ரத்து செய்து தான் இச்சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது என்றும், திறன் தேர்வு ரத்து பற்றி குறிப்பிடப்படவில்லை என்றும், எனவே அதை நடத்த வேண்டும் என்றும், நீதிபதிகள் தங்கள் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர். "நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பது கோடிக்கணக்கான மக்களின் விருப்பம். அவர்களின் விருப்பத்தை மறுக்க முடியாது. அதை நிறைவேற்ற வேண்டும்.சமூக நீதியை பாதுகாக்க இச்சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது' என்று நீதிபதி சம்பத்குமார் கூறினார்.
தினமலர்
Posted by
✪சிந்தாநதி
at
11:08 AM
0
comments
கள்ளச் சாராயத்தை ஒழிக்க முடியாது: கருணாநிதி
சென்னை, ஏப். 27: காங்கிரஸ் கட்சியின் கடைசி தொண்டர் நினைத்தாலும், கள்ளச்சாராயத்தை ஒழிக்க முடியாது என முதல்வர் கருணாநிதி தெரிவித்தார். பேரவையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து அவர் பேசியது:
இங்கு நடைபெற்ற விவாதத்தில் பேசிய சில உறுப்பினர்கள் கள்ளச் சாராய சாவுகளைக் கூறி அதனை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்றார்கள். காமராஜர் ஆட்சி வர வேண்டும் என்று பேசிவரும் காங்கிரஸ் உறுப்பினர்கள் காமராஜர் ஆட்சிக் காலத்திலேயே கள்ளச்சாராயத்தை ஒழிக்க முடியவில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். குஜராத் மாநிலம் போர்பந்தரில் மகாத்மா காந்தியடிகள் வாழ்ந்த வீடு அருகே கிணறு தோண்டி அதில் வைத்திருந்து கள்ளச்சாராயம் விற்கப்பட்ட தகவலை நாடாளுமன்றத்தில் கூறி அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி வேதனைப்பட்டார்.
இந்திரா காந்தி அல்ல, காங்கிரஸ் கட்சியின் கடைசித் தொண்டர் நினைத்தாலும் கள்ளச்சாராயத்தை ஒழிக்க முடியாது. இதற்கு மதுவிலக்கு திட்டத்தில் திருத்தங்கள் செய்ய வேண்டும், தனியார் நிறுவனங்களுடன் போட்டியிடும் அளவுக்கு நல்ல சரக்குகளை உற்பத்தி செய்தால்தான் கள்ளச் சாராயத்தை ஒழிக்க முடியும்.
மதுவிலக்குப் பற்றி பேசிய சில உறுப்பினர்கள் டாஸ்மாக் பணியாளர்கள் குறித்தும் பேசினார்கள். அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைப்பதாக இருந்தால் டாஸ்மாக் மதுக் கடைகளையும் மூட அரசு தயாராக உள்ளது.
டாஸ்மாக் மூலம் கிடைக்கும் வருவாய் ரூ. 7 ஆயிரம் கோடி இழப்பையும் ஏற்க அரசு தயாராக உள்ளது. அதில் பணிபுரியும் ஊழியர்கள் என்ன ஆவார்கள் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும்.
Posted by
Boston Bala
at
4:44 AM
4
comments
எய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஷில்பாவுக்கு முத்தம் கொடுத்த ஹாலிவுட் நடிகருக்கு கைது வாரண்ட்
ஜெய்ப்பூர், ஏப். 27: பொது நிகழ்ச்சியில், இந்தி நடிகை ஷில்பா ஷெட்டிக்கு முத்தம் கொடுத்த, ஹாலிவுட் நடிகர் ரிச்சர்ட் கெரியை கைது செய்யும்படி ஜெய்ப்பூர் நகர நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது. மேலும் நடிகை ஷில்பா ஷெட்டியை வரும் மே 5-ம் தேதி நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பொது இடத்தில் செக்ஸ் உணர்வுகளை தூண்டும் விதமாக இருவரும் நடந்துகொண்டதால் இந்திய குற்றவியல் சட்டப்படி அவர்களை தண்டிக்க வேண்டுமென ஜெய்ப்பூர் நகரைச் சேர்ந்த பூணம் சந்த் பண்டாரி என்பவர் பொது நலன் வழக்கு தொடர்ந்தார்.
இவ்வழக்கை ஜெய்ப்பூர் கூடுதல் முதன்மை மாஜிஸ்திரேட் தினேஷ் குப்தா, வியாழக்கிழமை விசாரித்தார். இதுதொடர்பான விடியோ காட்சிகளை பார்வையிட்ட அவர், இச்செயல் எல்லை மீறியது; சமூகத்தை தவறான பாதைக்கு இட்டுச் செல்லக்கூடியது என்றார். மேலும், கெரியின் அரவணைப்பில் இருந்து விடுவித்துக் கொள்ளாமல் ஒத்துழைப்பு அளித்ததன் மூலம் ஷில்பா ஷெட்டியும் குற்றவாளியாகிறார் என்றார் நீதிபதி.
பொது இடத்தில் இருவரும் நாகரீகம் இல்லாமல் நடந்து கொண்டதாக, இதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது. தில்லி, மும்பை, வாராணசி, போபால், கான்பூர், இந்தூர் ஆகிய நகரங்களில் பெரும்பாலும் ஹிந்து அமைப்புகளைச் சேர்ந்தோர் இருவரின் உருவ பொம்மைகளை தீயிட்டு கொளுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
Dinamani
Posted by
Boston Bala
at
12:11 AM
3
comments
Friday, April 27, 2007
இந்தியாவின் நாட்டு உற்பத்தி ட்ரில்லியன் டாலர் !
உலகநாடுகளில் தங்களது மொத்த உற்பத்தி ( GDP) ஒரு ட்ரில்லியன் டாலர்களை மிஞ்சிய ஒரு சிலநாடுகளுடன் ( 12 நாடுகள்) இந்தியா இன்று சேர்ந்து கொண்டது. இந்திய ரூபாயின் மதிப்பு டாலருக்கு 41ரூ. வாக உயர்ந்ததும் ஒரு முக்கிய காரணமாகும். இந்திய பங்குசந்தையில் சந்தையாக்கப்பட்ட பங்குகளின் மதிப்பும் இன்று ஒரு ட்ரில்லியனை எட்டியது குறிப்பிடத் தக்கது. இது ரூபாயின் மதிப்பைப் பொறுத்து தற்காலிகமானது என்றாலும் இந்த கணக்காண்டில் நிரந்தரமாக இவ்வெல்லையை கடக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.
DNA - Money - Cheers! India is now a trillion dollar economy - Daily News & Analysis
Posted by
மணியன்
at
7:25 PM
0
comments
ச: முடிந்தது சிவாஜி-இமயமலை கிளம்பினார் ரஜினி
சிவாஜி படம் சம்பந்தமான அனைத்து வேலைகளும் முடிந்து விட்டதால் ஓய்வுக்காக இமயமலைக்கு இன்று புறப்பட்டுச் செல்கிறார் ரஜினிகாந்த்.
செய்தி...
முன்னதாக 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ரசிகர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
விவரம்
Posted by
✪சிந்தாநதி
at
6:49 PM
1 comments
b r e a k i n g n e w s...