பிகாரின் அர்வால் மாவட்டத்தில், குடிபோதையில் மணமகன் மணமேடை ஏறினார். இதனால் மணப்பெண், மணமகனின் தம்பியை கைப்பிடித்தார்.
தன்னுடைய நடத்தைக்காகத் தற்போது வருந்தும் அண்ணன், தனக்கு இனிமேல் எப்படி திருமணமாகும் என்று கவலைப்படுவதாக பேட்டி தந்திருக்கிறார்.
Drunk groom chased away :: CHICAGO SUN-TIMES :: Nation | Financial Express
Wednesday, May 2, 2007
குடித்ததனால் மணமகன் மாற்றம்
Posted by
Boston Bala
at
8:07 AM
0
comments
11 வருடங்களாக ஓடும் இந்தி திரைப்படம்
முபையின் மரத மந்திர் திரை அரங்கில் ஒரு இந்தி திரைப்படம் 11 வருடங்களாக ஓடிக்கொண்டிருக்கிறது. ஷா ருக் கான் கஜோல் நடிப்பில் வெளிவந்த 'தில்வாலே துல்ஹனியா லேஜாயங்கே' எனும் படம்தான் அது.
இதில் இன்னும் வியப்பென்னவென்றால் இன்றும் வார இறுதிகளில் அரங்கு நிறைந்து காட்சிகள் ஓடுகின்றனவாம்.
DDLJ completes 600 weeks
Posted by
சிறில் அலெக்ஸ்
at
3:13 AM
1 comments
Tuesday, May 1, 2007
ச:வட இந்தியாவில் கோடைவெயிலுக்கு 8 பேர் பலி
வட இந்தியாவில் கோடைவெயில் அளவுக்கு அதிகமாக காய்கிறது. பஞ்சாபில் இன்று இறந்த இளைஞர் உட்பட மொத்தம் 8பேர் கோடை வெயிலில் துவண்டு பலியாகியுள்ளனர்.
இராஜஸ்தானில் தெருக்கள் காலியாக காணப்படுகின்றன. இங்குள்ள சுருவில் வெட்பம் 46.2 டிகிரியை எட்டியது.
N Karnataka sizzles in heat wave Deccan Herald
No respite from heat in North, one more dead Hindu
Ganganagar sizzles as mercury soars NDTV.com
all 31 news articles » Google News
Posted by
சிறில் அலெக்ஸ்
at
9:30 PM
0
comments
ச:நிறுவனங்கள் ரூ.2500கோடி தொழிலாளர் வைப்புநிதி பாக்கி
பல்வேறு நிறுவனங்கள் ரூ. 2500 கோடி தொழிலலளர் வைப்பு நிதி(PF) பாக்கி வைத்திருப்பதாக நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Over 2,500 crore due from establishments defaulting on PF
Posted by
சிறில் அலெக்ஸ்
at
8:07 PM
0
comments
ச:தமிழக கேரள விமான நிலையங்கள் எச்சரிக்கை நிலையில்
தோகாவிலிருந்து சென்னை வந்த கத்தார் ஏர்லைன்சின் விமானத்தில் மனித வெடிகுண்டு இருப்பதாக வந்த தகவலின் பேரில் தமிழக மற்றும் கேரள விமானநிலையங்கள் அனைத்தும் எச்சரிக்கை நிலையில் இயங்கின.
குறிப்பிட்ட விமானத்தில் வந்த பயணிகள் அனைவரிடமும் சோதனை முடிந்தபின்னர். விமானம் முழுவதுமாக சோதனையிடப்பட்டது. பின்னர் மர்ம தொலைபேசிச் செய்தி புரளி என அறிவிக்கப்பட்டது.
Airports in TN, Kerala put on high alert
Posted by
சிறில் அலெக்ஸ்
at
7:56 PM
0
comments
ச:சென்னையில் ரிலையன்ஸ் எதிர்ப்பு முற்றுகைப் போராட்டம்
இன்று காலை சென்னை, சின்மயா நகர், ரிலையன்ஸ் பிரஷ் பல்பொருள் அங்காடிக்கு அருகே மக்கள் கலை இலக்கிய கழகம், விவசாயிகள் விடுதலை முன்னணி, புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி இவர்களின் தலைமையில் முற்றுகைப் போராட்டம் நடந்தது. சில்லறை வியாபாரிகள், கோயெம்பேடு தொழிலாளர்கள் உள்ளிட்டவர்களும் போராட்டத்தில் கலந்து கொண்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த போராட்டம் குறித்து ஏற்கனவே தமிழகம் முழுவதும் சுவரொட்டிகள், சுவரெழுத்துக்கள் மூலம் இந்த அமைப்புகள் விரிவாக பிரச்சாரம் செய்து அழைப்பு விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
சில்லறை வணிகத்தில் பன்னாட்டு, தரகு கம்பேனிகள் நுழைந்து உள்நாட்டு அண்ணாச்சிகளின் வாழ்வாதாரத்தை அழிப்பதை எதிர்த்து நடந்த போராட்டத்தில் தோராயமாக இரண்டாயிரம் பேருக்கு மேல் கலந்து கொண்டு கைதானதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்தான செய்திகள் சன், ஜெயா, மக்கள் தொலைக்காட்சிகளில் மகஇக வின் தலைவர் மருதையனின் பேட்டியுடன் ஒலி/ஒளி பரப்பப்பட்டது.
Posted by
சிறில் அலெக்ஸ்
at
7:53 PM
0
comments
AIADMK leaders' charge against Speaker
தமிழக சட்டசபை சபாநாயகர் ஆவுடையப்பனின் உதவியாளர் எழுதிய சிபாரிசுக் கடிதம் குறித்து, சமீபத்தில் தமிழக சட்ட சபையில் விவாதம் எழுந்திருக்கிறது.
ஆவுடையப்பனின் தனி உதவியாளர், ‘பார்’ நடத்த ஒப்பந்தத்துக்கு விண்ணப்பித்த ஒருவரைச் சிபாரிசு செய்து, சபாநாயகரின் லெட்டர்ஹெட்டைப் பயன்படுத்திக் கடிதம் அனுப்பியதாகக் குற்றம் சாட்டியிருக்கிறார் ஓ.பன்னீர் செல்வம். அதுகுறித்துச் சபாநாயகரின் விளக்கத்தையும் கோரியிருக்கிறார்.
அதையொட்டி, தம்மைப் போன்ற அமைச்சர்களும், எம்.எல்.ஏ.க்களும் தினமும் கண்ணை மூடிக்கொண்டு சிபாரிசுக் கடிதங்களில் கையெழுத்துப் போடுவதாகப் பேசியிருக்கிறார் ஆர்க்காடு வீராசாமி.
‘‘சபாநாயகர் பேரில் குற்றமில்லை; அவரது உதவியாளர் கடிதம் அனுப்பியதற்கு அவர் பொறுப்பாக முடியாது; மேலும், அந்தக் கடிதம் சிபாரிசு செய்த நபருக்கு ஒப்பந்தம் அளிக்கப்படவுமில்லை’’ என்பது வீராசாமியின் வாதம்.
- கல்கி | News Today
Posted by
Boston Bala
at
7:20 PM
0
comments
இன்று திரைக்கு வருகிறார் 'பெரியார்'
சென்னை, மே 1: "பெரியார்' திரைப்படம் தமிழகம் முழுவதும் செவ்வாய்க்கிழமை திரையிடப்படுகிறது.
"மனிதனை மனிதனாக தன்மானத்தோடு வாழ்வதற்கு வழிவகுத்த சீர்திருத்தவாதியின் வாழ்க்கயை சித்தரிக்கும் இப்படத்தை திமுகவினர் அனைவரும் பார்வையிட வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி, தனது கட்சித் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திமுகவின் அதிகாரப்பூர்வ ஏடான "முரசொலி' மூலம் இத்தகைய வேண்டுகோளை அவர் விடுத்துள்ளார். லிபர்டி கிரியேஷன்ஸ் தயாரிப்பான இப்படத்துக்கு தமிழக அரசு ரூ. 95 லட்சம் அளித்துள்ளது.
செவ்வாய்க்கிழமையன்று திரைக்கு வரும் இத்திரைப்படத்தை அமைச்சர்கள் ஆர்க்காடு வீராசாமி, கே.என். நேரு, பொங்கலூர் பழனிச்சாமி ஆகியோரின் உறவினர்கள் முறையே சென்னை, திருச்சி, கோவையில் திரையிடுவதற்கான உரிமையைப் பெற்றுள்ளனர். இதேபோல பல திமுக பிரமுகர்களும், இத்திரைப்படத்தை வாங்கி வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.
திரைப்படத்தின் தயாரிப்புப் பணிகளில் தன்னை முழுவதுமாக ஈடுபடுத்திக் கொண்டதோடு, தேவையான ஆலோசனைகளையும் முதல்வர் வழங்கியுள்ளார்.
இத்திரைப்படம் தொடக்க விழாவிலிருந்து சர்ச்சைக்கு உள்ளாகி வந்துள்ளது. இத்திரைப்படத்தில் கதாநாயகியாக 'குஷ்பு' நடிப்பதற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். அதேபோல இப்படத்தின் பாடலுக்குத் தடை விதிக்கக் கோரி நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது.
இத்தனை தடைகளையும் தாண்டி இத்திரைப்படம், செவ்வாய்க்கிழமை திரையிடப்பட உள்ளது.
பெரியார் பட ட்ரெயிலரை இங்குப் பார்க்கலாம்
Posted by
Boston Bala
at
2:06 AM
0
comments
Monday, April 30, 2007
எவ்வளவு தொந்தரவு கொடுத்தாலும் எந்தக் கூட்டணியிலும் சேர மாட்டேன்: விஜயகாந்த்
ஒசூர், ஏப். 30: எவ்வளவு தொந்தரவு கொடுத்தாலும் எந்தக் கூட்டணியிலும் சேர மாட்டேன் என தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மீண்டும் உறுதிபடத் தெரிவித்தார்:
என்னுடைய திருமண மண்டபத்தை இடித்தார்கள். எனக்குப் பல வழிகளில் பொருளாதாரரீதியாக தொந்தரவு கொடுத்துப் பார்த்தார்கள். இப்படி எல்லாம் தொந்தரவு கொடுத்தால் இவன் கூட்டணியில் சேர மாட்டானா என்று எதிர்பார்க்கின்றனர். ஆனால், எனக்கு எவ்வளவு தொந்தரவு கொடுத்தாலும் எந்தக் கூட்டணியிலும் சேர மாட்டேன்.
மலை ஏறுவது கடினம்தான்; ஏறிய பிறகுதான் தெரியும் மலை நமது காலுக்கடியில் இருப்பது.
நான் பிழைப்பிற்காக அரசியலுக்கு வரவில்லை. மக்களுக்கு உழைப்பதற்காக அரசியலுக்கு வந்திருக்கின்றேன்.
சிலர் என்னை சீண்டி பார்க்கிறார்கள். இளைஞர்களை தூண்டிவிட்டால் தமிழ்நாடே பற்றி எரியும். ஆனால் இளைஞர்களை நல்வழியில் நடத்த வேண்டியது நம் கடமை. விஜயகாந்த்தை அழிக்கவும், அடிக்கவும், நினைக்கின்றனர். ஆனால் அது நடக்காது.
சட்டமன்றத் தேர்தலில் தேமுதிகவுக்கு 8.33 சதவிகிதமாக இருந்த வாக்கு வங்கி தற்பொழுது நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் 33 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.
படித்த இளைஞர்களுக்கும், படிக்காத இளைஞர்களுக்கும் வேலைவாய்ப்பை உருவாக்கித் தர வேண்டும்.
எந்த அரசியல் தலைவரும் தனி மனித வருமானத்தைத் தெரிவிப்பதில்லை. மத்திய நிதி அமைச்சரை கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சியினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
கர்நாடகம், ஆந்திரம், கேரளம் ஆகிய 3 மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வர வேண்டிய தண்ணீர் நமக்குக் கிடைக்கவில்லை.
Dinamani
Posted by
Boston Bala
at
11:13 PM
0
comments
நந்திகிராமத்தில் நில பாதுகாப்பு அமைப்பினர் ஆளுங்கட்சியினர் இடையே தொடரும் வன்முறை தாக்குதல்
நந்திகிராமம், ஏப். 30: மேற்குவங்கத்தில் உள்ள நந்திகிராமத்தில் நில பாதுகாப்பு அமைப்பினருக்கும் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் இடையே மூன்றாவது நாளாக ஞாயிற்றுக்கிழமை வன்முறைத் தாக்குதல் நடந்தது. ஹெஜுரியில் இருந்து திரண்டு வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 200 பேர் நந்திகிராமத்தில் நுழைய முயன்றனர். அப்போது அவர்களை நில பாதுகாப்பு அமைப்பினர் எதிர்த்தனர். இதில் இரு தரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது.
இரு தரப்பினரும் கையெறி குண்டுகளை மாறி மாறி வீசினர். துப்பாக்கியால் சுட்டுக் கொண்டனர். இதில் ஒருவர் பலியானார். இருவர் காயம் அடைந்தனர். நந்திகிராமத்தைச் சுற்றியுள்ள பங்கபெரா, சதிங்கபரி, ஆதிகரிபரா மற்றும் சிமல்குந்து பகுதிகளிலும் இரு தரப்பினருக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
Dinamani
Posted by
Boston Bala
at
11:01 PM
0
comments
கலாமுக்கு மீண்டும் பதவி: மார்க்சிஸ்ட் எதிர்ப்பு
கலாமை மீண்டும் குடியரசுத் தலைவராக தேர்வு செய்ய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆதரவு தெரிவிக்காது என்று தெரிகிறது.
அடுத்த குடியரசுத் தலைவர் பதவிக்கு மார்க்சிஸ்ட் கட்சி யாரை ஆதரிக்கும்; மக்களவைத் தலைவர் சோம்நாத் சட்டர்ஜி அப்பதவிக்கு போட்டியிடுவாரா? என்று பிரகாஷ் காரத்திடம் கேட்கப்பட்டது.
அதற்கு, "கடந்த முறை குடியரசுத் தலைவராக கே.ஆர்.நாராயணனை மீண்டும் தேர்வு செய்யலாம் என்று கேட்டபோது, பாஜக எதிர்ப்பு தெரிவித்தது. யாரையும் இரண்டாவது முறையாக அப்பதவிக்கு தேர்வு செய்யக் கூடாது என்று அக்கட்சியினர் வாதிட்டனர். இப்போது அவர்கள் எந்த வகையில் அதே கருத்தை அணுகப்போகிறார்கள் என்பது வியப்பாக இருக்கிறது' என்றார்.
உத்தரப்பிரதேச தேர்தல் முடிவடைந்ததும் அடுத்த குடியரசுத் தலைவர் யார் என்பது குறித்து கட்சி விவாதித்து முடிவு எடுக்கும் என்றார் காரத்.
அரசியல் கட்சிகள் ஒருமித்த கருத்துடன் ஆதரித்தால் மீண்டும் குடியரசுத் தலைவராக கலாம் சம்மதம்?
Posted by
Boston Bala
at
10:54 PM
0
comments
எலியின் மூளை செயல்பாடு கணினியின் மூலம் உருவகமானது
எலியின் மூளையை கணினியில் உருவகப்படுத்துவதில் அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் அரைக்கிணறு தாண்டிவிட்டார்கள். எலி யோசிப்பது மாதிரியே கணினியையும் தன்னுடைய உருவகங்களில் சிந்திக்க வைப்பதிலும் வெற்றி கண்டிருக்கிறார்கள்.
புத்தி எவ்வாறு செயல்படும் என்பது மிகவும் சிக்கலான விஷயம். எட்டு மில்லியன் நியுரான் இணைப்புகளை 4,096 கணிச்செயலர்களை (processors) உள்ளடக்கிய சூப்பர்கம்ப்யூட்டர் மூலம் ஜேம்ஸ் ஃப்ரை (James Frye), ராஜகோபால் அனந்தநாராயணன், தர்மேந்திரா எஸ் மோதா ஆகியோர் இதை செயல்படுத்தியிருக்கிறார்கள்.
BBC NEWS | Technology | Mouse brain simulated on computer
Posted by
Boston Bala
at
9:58 PM
0
comments
சற்றுமுன் - சாலை உருகியது !
அமெரிக்கா வளைகுட பகுதியில் இருக்கும் பாலம் உருகியது. பெட்ரோல் எடுத்து சென்றுகொண்டிருந்த ஒரு பெரிய வாகனம்(லாரி)வெடித்து தீ பிடித்து எரிந்தததால் சான்fரான்சிச்கோ - ஓக்லாண்ட் பகுதியையும் மற்ற சாலைகளையும் இணைக்கும் இந்த பாலம் சேதம் அடைந்ததது. இதனால் மிகுந்த போக்குவரத்து நெரிசல் உண்டாகியிருக்கிறது.
மேலும் படிக்க
http://www.msnbc.msn.com/id/18392684/
Posted by
Radha Sriram
at
7:55 PM
0
comments
'பிக் பிரதர்' தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக காவல்துறைக்கு மூன்று கோடி ரூபாய் செலவு
ஷில்பா ஷெட்டியினால் இந்தியாவிலும் கவனிக்கப்பட்ட 'பிக் பிரதர்' தொலைக்காட்சி நிகழ்ச்சியினால் காவல்துறைக்கு ஏற்படும் செலவுகளின் விவரம் வெளியாகியுள்ளது. கடந்த ஆறு வருடங்களில் £350,000 செலவாகியுள்ளது.
BBC NEWS | UK | England | Beds/Bucks/Herts | Big Brother police costs revealed
Posted by
Boston Bala
at
7:54 PM
0
comments
ச:போதையில் மாப்பிள்ளை, தம்பிக்குத் திருமணம்
பிகாரில் திருமணத்தன்று குடித்துவிட்டு அதிக போதையில் பெண்வீட்டாரோடு சண்டைபோட்ட மாப்பிள்ளையை ஊரார் விரட்டிவிட்டு அவரின் தம்பிக்கு மணமகளை திருமணம் செய்துவைத்தனர்.
Bihar groom too drunk to wed, so brother steps in
"The groom was drunk and had reportedly misbehaved with guests when the bride's family and local villagers chased him away," Madho Singh, a senior police officer told Reuters after Sunday's marriage in a village in Bihar's Arwal district.
The younger brother readily agreed to take the groom's place beside the teenage bride at her family's invitation, witnesses said.
"The groom apologised for his behaviour, but has been crying that word will spread and he will never get a bride again," Singh said by phone.
Posted by
சிறில் அலெக்ஸ்
at
7:49 PM
0
comments
b r e a k i n g n e w s...