.

Monday, May 7, 2007

ச: கல்லூரிகளில் தமிழ் புறக்கணிப்பு - தமிழாசிரியர்கள் கவலை

திருச்சி, மே 7-

மொழிக் கொள்கைக்கு எதிராக கல்லூரிகளில் தமிழ்ப் பாடங்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகின்றன.

தமிழர் பண்பாட்டை கற்பிக்கவும், அவர்களின் அறவியல், கலைத் திறனை வளர்ப்பதை முதன்மை நோக்கமாகக் கொண்டு கல்லூரிகளில் தமிழ்ப்பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. இதன்படி தன்னம்பிக்கை, நாட்டுப் பற்று, சமூக சீர்திருத்தம் ஆகியவற்றை வலியுறுத்தி திருமூலர், திருவள்ளுவர், பாரதி, பாரதிதாசன் முதல் தற்போதைய இலக்கியவாதிகளின் படைப்புகள் வரை பாடமாக வைக்கப்பட்டுள்ளன.

அனைத்து கலை, அறிவியல் கல்லூரிகள் மற்றும் தொலை தூரக் கல்வி மையம் மூலம் இளநிலைப் பட்டப் படிப்பு படிக்கும் மாணவர்களுக்கும் முதல் இரண்டு ஆண்டுகளுக்கு தமிழ்ப் பாடங்கள் கற்றுத் தரப்படுகின்றன. இதில் கல்லூரிகளில் சேர்ந்து படிப்போருக்கு ஒரு பருவத்துக்கு (செமஸ்டர்) ஒன்று என மொத்தம் 4 தாள்களும், தொலை நிலைக் கல்வி மையம் மூலம் படிப்போருக்கு ஆண்டுக்கு ஒரு தாள் என இரண்டும் தமிழ்த் தாள்கள் இருக்கும். கல்லூரிகளில் 90 வேலை நாட்களுக்கு 90 மணி நேரம் தமிழ்ப் பாடங்கள் நடத்தப்பட்டு, நான்கு பருவத்துக்கும் மொத்தம் 360 மணி நேரம் தமிழ்ப்பாடங்கள் கற்பிக்கப்பட வேண்டும்.

ஆனால் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சில ஆண்டுகளாக இளநிலை வணிகவியல் (பி.காம்) பட்டப் படிப்பு மாணவர்களுக்கு முதல் ஆண்டு மட்டும் போதும். அதுவும் இலக்கண இலக்கியங்களைப் பயிற்றுவிக்க தேவையில்லை என்று முடிவு செய்து ‘வணிகத் தமிழ்Õ என்று ஒரு தாள் மட்டுமே வைக்கப்பட்டுள்ளது. பின்னர் தொலை நிலைக் கல்வி மையம் மூலம் கற்பிக்கப்படும் குறிப்பிட்ட சில பட்டப் படிப்புகளுக்கும் இதே நடைமுறையை தொடர்ந்தனர்.

இதைத் தொடர்ந்து மனோன்மணியம் சுந்தரனார், பெரியார் பல்கலைக்கழக இணைவு பெற்ற கல்லூரிகளில் மற்றும் மதுரை காமராஜர் பல்கலைக்கழக இணைவு பெற்ற சில தன்னாட்சி கல்லூரிகளில் பி.காம் மற்றும் பி.எஸ்சி கணினி அறிவியல் ஆகிய பாடங்களுக்கு முதலாண்டு மட்டுமே தமிழ்ப்பாடங்கள் தற்போது நடத்தப்படுகின்றன.

பாரதியார் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள சில கல்லூரிகளில் 8 பட்டப் படிப்புக்களுக்கு தமிழ்ப் பாடம் முதல் ஆண்டு மட்டுமே கற்பிக்கப்படுகிறது. இந்த தமிழ் புறக்கணிப்புக்கு விருப்ப பாட தேர்வு புள்ளி முறை (சாய்ஸ் பேஸ்டு கிரடிட் சிஸ்டம் - சி.பி.சி.எஸ்) எனும் முறையை சாதுர்யமாக பயன்படுத்தியுள்ளனர். இதையே தமிழகம் முழுவதும் சில தன்னாட்சி கல்லூரிகள் பின்பற்ற தொடங்கியுள்ளன. இது போன்ற முறை தொடர்வது நல்லதல்ல என்கின்றனர் பேராசிரியர்கள்.

- மாலை முரசு

ச: வரதட்சணை கேட்டு நடிகர் பிரசாந்த் கொடுமை: மனைவி புகார்

சென்னை: வரதட்சணை கேட்டு நடிகர் பிரசாந்த் கொடுமை மனைவி போலீசில் புகார் கொடுத்துள்ளார். நடிகர் பிரசாந்த் , கிரகலட்சுமி திருமணம் முடிந்த சொற்ப காலங்களிலே பிரிந்தனர். இதனையடுத்து மனைவியை குடும்பம் நடத்த வர உத்தரவிடுமாறு பிரசாந்த் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நிலுவையில் இருக்கும் நேரத்தில் கிரகலட்சுமி , கணவர் பிரசாந்த பல முறை வரதட்சணை கேட்டு கொடுமை படுத்தியுள்ளார் என கமிஷர் லத்திகாசரணை சந்தித்து மனுக்கொடுத்துள்ளார்.

- தினமலர்

ச:போலி என்கௌன்டர் வழக்கு: நாடாளுமன்றம் அமளியால் தள்ளி வைப்பு

குஜராத் போலி துப்பாக்கிசூடு விவகாரத்தினால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் காங்கிரஸும் இடதுசாரி கட்சிகளும் குஜராத் முதல்வர் மோடியின் பதவி விலகலைக் கோரி அவைநடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவித்ததால் அவை நடைவடிக்கைகள் ஒத்திவைக்கப் பட்டன.

News From Sahara Samay:: Parliament adjourned over Guj fake encounter

ச: AIIMS: உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

உச்சநீதிமன்றம் ஏஐஐஎமெஸ் இயக்குனர் வேணுகோபாலுக்கும் நடுவண் அரசிற்கும் இருவரின் உயர்நீதிமன்ற தீர்ப்பினை எதிர்த்த மேல்முறையீட்டினை விசாரிக்க நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

மேல் விவரங்களுக்கு AIIMS: SC notices to Centre, Venugopal - Daily News & Analysis

ச: சார்கோசி பிரான்ஸின் அதிபராக தேர்வு

ஞாயிறன்று நடந்த அதிபர் தேர்தலில் வலதுசாரி நிக்கோலஸ் சார்கோசி 53.3% வாக்குகள் பெற்று அதிபராக தேர்ந்தெடுக்கப் பட்டார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பெண் வேட்பாளரும் இடதுசாரி அரசியல்வாதியுமான ரோயல் 46.7% வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். ஒரு வெளிநாட்டு வம்சாவளி பிரெஞ்சுக்காரர் நாட்டின் முதல் குடிமகனாவது வளர்ந்துவரும் இனப்பிரச்சினைகளைக் களையுமா என்ற கேள்வி அந்நாட்டு அரசியலாரிடம் எழுந்துள்ளது.

இது பற்றி - New York Times

Sunday, May 6, 2007

ச: கௌஹாத்தியில் குண்டு வெடிப்பு: 12 பேர் காயம்

அசாமின் முக்கியநகரான கௌஹாத்தியில் மக்கள் நெரிசல்மிக்க கடைத்தெருவில் இன்று குண்டு வெடிப்பில் இரு துணைராணுவத்தினர் உட்பட, குறைந்தது 12 பேர் காயமடைந்தனர். நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் குண்டு வைக்கப் பட்டிருந்ததாகத் தெரிகிறது.

மேலும்..Blast in Guwahati injures 12, including 2 troopers- Hindustan Times

வெய்யில்: கேரளாவில் விருது, கான் திரைப்படவிழாவிற்கு தேர்வு


பசுபதி,பிரியங்கா,பரத்,பாவ்னா நடித்து இயக்குனர் ஷங்கர் தாரிப்பில் வெளியான 'வெய்யில்' படம் 'மற்றமொழிப்படங்களில் மிகச்சிறந்தது' என்ற வகையில் கேரளாவில் அம்ரிதா விருதைப் பெற்றுள்ளது. அதே நேரம் பிரான்ஸின் மதிப்புமிக்க கான்( Cannes) திரைப்பட விழாவில் இந்திய திரைபடங்களின் சார்பாக பங்குபெற தெர்ந்தெடுக்கப் பட்டுள்ளது.


IndiaGlitz - Veyyil gets one more award - Tamil Movie News

ச: நொறுங்கிய விமானத்தில் பயணித்த இந்தியர்கள்

இந்திய அரசு ஞாயிறன்று கென்யா ஏர்லைன்ஸில் விழுந்து நொறுங்கிய விமானத்தில் பயணம் செய்ததாக எண்ணப்படும் இந்திய பயணிகளின் பெயர்களை வெளியிட்டுள்ளது.
1. நிக்லி ஷிர்லி (Nigli Shirly)
2. நிக்லி கெவின் ஜோசஃப் (Nigili Kewin Joseph)
3.ஜோர்ஜ் ஜோசஃப் கோச்சேரி (George Joseph Kocherry)
4. மரியா ஜோசஃப் (Maria Joseph)
5. கிரேசி மானுவல் (Gracey Manuel)
6. அமன் கௌர் (Aman Gaur)
7. பிரகாசம் சுந்தரராமன் (Prakam Sundaraman)
8. திருமதி பாக்யா மதுசூதன் (Mrs Bhagya Madhusudhan)
9. செல்வி பூஜிதா மதுசூதன் (Ms Poojitha Madhusudhan)
10. திரு மதுசூதன் (Mr Madhusudhan)
11. மேரி ரூபி (Mary Ruby)
12. அமோல் சௌஹான் (Amol Chauhan)
13. திரு நளகாத் கிரீசன் (Mr Nalakath Gireesan).
14. திருமதி மீரா ஷா) Mrs Meera Shah

இதில் திரு அமோல் சௌஹான் பார்லே குடிபானங்கள் நிறுவனத்தின் டைரக்டர் ஆவார்.

மேலுமறிய....DNA - India - Names of Indians on Kenyan plane that crashed - Daily News & Analysis

ச: உலகின் பெரிய பயணிகள் விமானம் A380 இந்தியா வந்தது !

இந்திய வான்வெளி வரலாற்றில் முதல்முறையாக உலகின் மிகப் பெரிய பயணிகள் விமானமான ஏர்பஸ் A380 தில்லியின் இந்திராகாந்தி பன்னாட்டு விமானதாவளத்தில் தரையிறங்கியது. இரண்டு தட்டுகளில் 850 பேர் வரை பயணிக்கக் கூடிய இந்த விமானம் கிங்பிஷர் ஏர்லைன்ஸின் இரண்டாம் வருட கொண்டாட்டங்களின் அங்கமாக இன்று காலை இந்திய நேரம் 10.50க்கு பிரான்ஸின் துலூஸிலிருந்து வந்திறங்கியதைப் பார்க்க பெரும் கூட்டம் கூடியிருந்தது. விமானநிலையத்தின் அண்மையில் செல்லும் NH 8 சாலையில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.


Airbus 380's maiden trip to India - Deccan Herald - Internet Edition

இன்று ஐம்பது - நாவல் "Atlas Shrugged " by Ayn Rand

தத்துவ இயலை கருவாக கொண்டு வெளிவந்த நாவலாசிரியர் Ayn Rand ன் ஆங்கில நாவல், "Atlas Shrugged" இன்று தன் ஐம்பதாவது பிறந்த நாளை கொண்டாடுகிறது. 1957 ல் வெளியிடபட்ட இந்த புத்தகம் மக்களிடையே பரவலாக படிக்க பட்ட ஒன்றாக இருக்கிறது.

இந்த புத்தகத்தை பற்றி சில கருத்துக்களை படிக்க


http://www.ocregister.com/ocregister/opinion/atoz/article_1681164.php

http://www.ocregister.com/ocregister/opinion/atoz/article_1681148.php

போதிய எண்ணிக்கையில் உறுப்பினர்கள் இல்லாததால் மக்களவை ஒத்திவைப்பு

புதுதில்லி, மே 5: போதுமான உறுப்பினர்கள் இல்லாததால், வெள்ளிக்கிழமை மாலை மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.

மக்களவையில் வெள்ளிக்கிழமை மாலை பட்டினி சாவுகளைத் தடுப்பது குறித்தப் பிரச்சினையை காங்கிரஸ் உறுப்பினர் சிந்தா மோகன் கிளப்பினார்.

ஆண்டுக்கு 16 லட்சம் குழந்தைகள் இறக்கின்றன: மத்திய அரசு தகவல்

புதுதில்லி, மே 5: நோய் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நாட்டில் ஆண்டுக்கு 16 லட்சம் குழந்தைகள் உயிரிழக்கின்றன; இதில் 11 லட்சம் குழந்தைகள் பிறந்த முதல் மாதத்திலேயே இறந்து விடுகின்றன என சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை இணை அமைச்சர் பனபாக லட்சுமி கூறியுள்ளார்:

குறைப் பிரசவம், மிகக் குறைந்த எடையுடன் பிறத்தல், வயிற்றுப் போக்கு, மலேரியா, சின்னம்மை, மூச்சுத் திணறல் மற்றும் சுவாசக் கோளாறுகளே பிறந்த ஓராண்டுக்குள் குழந்தைகளின் இறப்புக்கு அதிக அளவில் காரணமாகின்றன.

குழந்தைகள் இறப்பு உலகளவில் இந்தியாவில்தான் அதிகம் என யுனிசெப் (ஐ.நா. குழந்தைகள் நிதியம்) அமைப்பு தெரிவிக்கிறது. இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 16 லட்சம் குழந்தைகள் இறக்கின்றன. இதில் 11 லட்சம் குழந்தைகள் பிறந்த முதல் மாதத்திலேயே இறந்து விடுகின்றன.

Dinamani

Saturday, May 5, 2007

ச:பாரிஸ் ஹில்டனுக்கு 45 நாள் ஜெயில்

ஹில்டன் ஓட்டல் குடும்ப வாரிச்சும், உலகளாவிய பிரபலமுமான பாரிஸ் ஹில்டனுக்கு 45 நாள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. முந்தைய வழக்கில் விதிக்கப்பட்ட தடையைஇ மீறி லைசன்ஸ் இல்லாமல் வண்டி ஓட்டியதற்காக இந்த தண்டனை வழங்கப்பட்டது.

தீர்ப்பை கேட்டதும் பாரிஸ் ஹில்ட்டன் அழுதார். அவரது தாயார் தன் வக்கீலை 'நீர் படுமோசம்' எனத் திட்டியுள்ளார்.

ச:ரூ.50கோடி வரி ஏய்ப்பு அம்பலம்

தூத்துக்குடி குமரி உள்ள தனியார் கல்லூரிகளிலும் மேலாளரின் வீட்டிலும் வருமானவரி சோதனையில் ரூ.50 கோடி அளவில் வரி ஏய்ப்பு நடந்துள்ளது தெரியவந்துள்ளது.

குலசேகரம் பகுதியில் மூகாம்பிகை கல்விநிறுவனங்கள் செயல்பட்டுவருகின்றன. இப்பகுதியைஅ சேர்ந்த வேலாயுதம் நாய்யர் என்பவர் இதை நடத்துகிறார். இந்த நிறுவனமும் மற்றுமொரு நிறுவனமும் வருமானவரி அதிகாரிகளால் சோதனைக்குட்படுத்தப்பட்டன.

Around Rs. 50 cr. worth tax evasion detected

ச:பயிற்சியின்போது ட்ராவிட் முகத்தில் காயம்

பயிற்சியின்போது ஆர்.பி. சிங்கின் பந்து ராகுல் ட்ராவிட் முகத்தில் பட்டு காயம் ஆனது. காயம் பெரிதானதில்லையென்றாலும் அவர் மூக்கிலிருந்து ரத்தம் வந்ததால் ஓய்வு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.




-o❢o-

b r e a k i n g   n e w s...