.

Thursday, March 8, 2007

தமிழகத்தில் ரூ.300 கோடி செலவில் விமான உதிரிபாக தொழிற்சாலை

சென்னைக்கு அருகிலுள்ள சிப்காட் ஸ்ரீபெரும்புதூர் தொழில் வளாகத்தில் ரூ.300 கோடிக்கும் கூடுதலான முதலீட்டில், மோட்டார் உதிரி பாகங்கள் உற்பத்தி செய்வதற்கான திட்டம் ஒன்றினை ஏற்கனவே இங்கி லாந்தை சேர்ந்த கெபாரோ நிறுவனம் அமைத்து வருகிறது.

முதலீடுக்கான சாதகமான சூழ்நிலை, தமிழ்நாடு அரசு அளித்த ஆதரவு ஆகியவை தந்த ஊக்கத்தினால், தற்போது ரூ.300 கோடிக்கு மேலான முதலீட்டில், கெபாரோ வாகனப் பொருட்கள் இந்தியா லிமிடெட் என்ற நிறுவனம் மூலமாக மோட்டார் வாகனம் மற்றும் ஏரோஸ்பேஸ் ஆகிய வற்றுக்குத் தேவையான ட்ïபுலர் பாகங்கள், மோட்டார் வாகன ப்ரேக்கிங் ஸிஸ்டம், பாசனர்ஸ், ஒருங்கிணைந்த பொருட்கள் ஆகியவற்றை உற்பத்தி செய்வதற்கும், பரிசோதனைகள் செய்வதற்காகவும், ஒரகடம் சிப்காட் தொழிற்பூங்காவில் புதிய திட்டம் ஒன்றினை செயல்படுத்த கெபாரோ கருதியுள்ளது.

இதனால் 850 பேருக்கு நேரடி வேலை வாய்ப்பு உள் ளிட்டு மொத்தம் சுமார் 2000 பேருக்கு வேலை வாய்ப்பு உருவாக்கப்படும்.

முதல்-அமைச்சர் கருணாநிதி முன்னிலையில் இதற்கான புரிந்துணர் ஒப்பந் தம் கையெழுத்தானது.

- மாலை மலர்

1 comment:

Anonymous said...

A good news!!

-o❢o-

b r e a k i n g   n e w s...

Error loading feed.