.

Friday, March 30, 2007

சற்றுமுன்: இலங்கை கடற்படை தாக்குதல்: 4 மீனவர் பலி

இலங்கை கடற்படையினர் இன்று நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 மீனவர்கள் பலியாகினர். 2 பேர் காயம் அடைந்தனர்.

இலங்கை கடல்எல்லையில் இந்திய மீனவர்கள் 6 பேர் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இதில் 4 பேர் பலியாகினர். 2 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக கன்னியாகுமரிக்கு கொண்டுவரப்பட்டனர்.

இலங்கை கடற்படையினர் எவ்வித முன்எச்சரிக்கையும் விடுக்காமல், திடீர் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.

"Yahoo-Tamil"

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...