ஆள்கடத்தல் வழக்கில் சிக்கியுள்ள பா.ஜனதா எம்பி பாபுபாய் கட்டாரா மக்களவை கூட்டத்தில் கலந்து கொள்ளக் கூடாது என சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி இன்று உத்தரவிட்டார்.பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது கூட்டம் இன்று தொடங்கிய நிலையில், பாபுபாய் பிரச்சனை குறித்த அறிக்கை ஒன்றினை சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி அவையில் படித்தார்.அப்போது, பாபுபாயின் ஆள் கடத்தல் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்த சாட்டர்ஜி, இப்பிரச்சனை தொடர்பாக மக்களவையில் இடம் பெற்றுள்ள அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூடி விவாதித்து முடிவெடுக்கும் வரை பாபுபாய் மக்களவையில் கல்ந்து கொள்ளக் கூடாது என உத்தரவிட்டார்.பாபுபாயின் செயலுக்கு தமது சார்பிலும், மக்களவை சார்பிலும் தாம் கடும் கண்டனம் தெரிவிப்பதாக சாட்டர்ஜி மேலும் கூறினார்.
Thursday, April 26, 2007
பா.ஜனதா எம்பி பாபுபாய் மக்களவையில் கலந்து கொள்ள தடை.
Labels:
அரசியல்
Posted by
Adirai Media
at
2:48 PM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
No comments:
Post a Comment