பேரவையில் 50 ஆண்டுகள் பணியாற்றியதற்காக முதல்வர் கருணாநிதிக்கு நடந்த பாராட்டு விழாவில் திமுக வைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் பங்கேற்றனர். ஆனால் கருணாநிதியின் பேரனான மத்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சர் தயாநிதி மாறன் மட்டும் பங்கேற்கவில்லை.
மாலையில் பிரதமரை வரவேற்க விமான நிலையத்துக்கு வந்திருந்த தயாநிதி மாறன் சென்னை தீவுத் திடலில் நடந்த பொன் விழா பொதுக்கூட்டத்துக்கும் வரவில்லை.
மத்திய அமைச்சர் பதவியிலிருந்து தயாநிதி மாறனை நீக்க வேண்டும் என்று முதல்வர் கருணாநிதியைத் திமுகவினர் சிலர் வலியுறுத்துவதாகத் தெரிகிறது. தயாநிதி மாறனின் மத்திய அமைச்சர் பதவி குறித்து அடுத்த வாரம் முதல்வர் கருணாநிதி முடிவு செய்வார் என்று திமுக தலைவர்கள் சிலர் தெரிவித்தனர்.
சென்னை தீவுத் திடலில் கருணாநிதிக்கு நடந்த பாராட்டு விழாவை நேரடியாக ஒளிபரப்பும் உரிமை சன் டிவிக்கு மறுக்கப்பட்டது. இந்தச் சூழ்நிலையில் ராஜ் டிவிக்கு அந்த உரிமை வழங்கப்பட்டிருப்பதும் முக்கிய திருப்பமாகக் கருதப்படுகிறது.
Saturday, May 12, 2007
ச: திமுகவில் மோதல் வலுக்கிறது:
Posted by
✪சிந்தாநதி
at
9:22 AM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
Error loading feed.
No comments:
Post a Comment