தமிழக முதல்வர் கருணாநிதி இன்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியைச் சந்தித்துப் பேசினார்.
இந்தச் சந்திப்பின்போது அவர், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் மற்றும் துணை ஜனாதிபதி வேட்பாளர் குறித்தும், இதில் திமுக கூட்டணிக் கட்சிகளின் நிலை குறித்தும் ஆலோசனை நடத்தினார்.மேலும், டெல்லிக்கு இரண்டு நாள் பயணம் மேற்கொண்டுள்ள அவர், ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் குறித்து பிரதமர் மன்மோகன் சிங்கையும் சந்தித்துப் பேசவுள்ளார். இதனிடையே, டெல்லியில் இன்று நடைபெறவுள்ள தேசிய வளர்ச்சி கவுன்சில் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசும் அவர், தமிழகத்துக்குத் தேவையான வளர்ச்சித் திட்டங்கள், மத்திய அரசு வழங்கவேண்டிய உதவிகள் குறித்து விவரிப்பார் எனத் தெரிகிறது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் அங்கம் வகிக்கும் கூட்டணி கட்சிகளில் திமுக பிரதானக் கட்சியாகத் திகழ்வதால், சோனியா காந்தி மற்றும் மன்மோகன் சிங் உடனான கருணாநிதியின் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
Monday, May 28, 2007
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
Error loading feed.
No comments:
Post a Comment