.

Saturday, May 19, 2007

ஹைதராபாத் மசூதியில் குண்டுவெடிப்பை கண்டித்து TNTJ தமிழகம்முழுவதும் கண்டன ஆற்பாட்டம்.

ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் கடந்த 18 .05 2007 அன்று 400 ஆண்டு கால புகழ் பெற்ற மெக்கா மசூதியில் பயங்கர வெடி குண்டுகள் வெடித்துள்ளன அன்று வெள்ளிக்கிழமை சிறப்பு தொழுகையில் ஈடுப்பட்டிருந்த முஸ்லிம்களை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த பயங்கர தாக்குதலில் பத்துக்கும் மேற்ப்பட்டோர் பலியானதுடன் போலிசார் துப்பாக்கி சூட்டிலும் பலர் பலியாகி உள்ளனர். இதற்க்கு முன்பு கூட டெல்லி ஜும்மா மசூதியில் இதுபோன்ற பயங்கர தாக்குதல் சம்பவம் நடைப்பெற்றது இப்படி தொடர்ச்சியாக இறை இல்லங்களில் மீது நடத்தப்படும் இந்த தாக்குதல் சம்பவத்தின் பின்னணியில் உள்ள உண்மைக்குற்றவாளிகளை கண்டித்து கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும்,இனி வரும் காலங்களில் இதுப்போன்ற சம்பவங்கள் நடைப்பெறாமல் தடுக்கும் வகையிலும் உறக்கதில் இருக்கும் உளவுத்துறையை விழிப்படைய செய்யும் வகையிலும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் வடசென்னை சார்பில் இன்றுமாலை 4 மணியளவில் பார்க் டவுன் மெமொரியல் ஹால் அருகில் மாபெரும் கண்டன ஆற்பாட்டம் நடைப்பெற்றது ஆற்பாட்டத்திற்க்கு மாவட்ட தலைவர் நிஜாமுதீன் தலைமைதாங்கினார் மாநிலதலைவர் பீ ஜைனுலாபிதீன் கண்டன உரைநிகழ்த்தினார்.இந்த ஆற்பாட்டதிற்க்கு ஏராளமான ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் கலந்துக்கொண்டு குண்டுவெடிப்பு சம்பவத்தை கண்டித்து கோஷங்களை எழுப்பினார்கள்.

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...