.

Thursday, June 28, 2007

தமிழ்நாடு: 2500 கோடியில் டாடா தொழிற்சாலை

தமிழகத்தில் நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ. 2500 கோடி மதிப்பில் டைட்டானியம் டை ஆக்ஸைடு தொழிற்சாலையை அமைக்கும் ஒப்பந்தத்தில் தமிழக அரசுடன், இன்று டாடா நிறுவனம் கையெழுத்திட்டது.

தென் தமிழகத்தில் அமையவிருக்கும் மிகப் பெரிய நிறுவனத்தின் தொழிற்சாலை இது என்பதால் இந்த ஒப்பந்தம் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.

இதுதொடர்பான ஒப்பந்தம் முதல்வர் கருணாநிதி தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தில் டாடா ஸ்டீல் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் முத்துராமனும், தமிழக அரசின் தொழிற்துறை செயலாளர் சக்தி கந்ததாஸும் கையெழுத்திட்டனர்.

நிகழ்ச்சியில் முதல்வர் கருணாநிதி, டாடா குழும தலைவர் ரத்தன் டாடா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த ஒப்பந்தம் குறித்து ரத்தன் டாடா கூறுகையில், ரூ. 2,500 கோடியில் டாடா ஸ்டீல் நிறுவனத்தின் சார்பில் நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்ளில் டைட்டானியம் டை ஆக்ஸைடு நிறுவனம் நிறுவப்படும்.

இதன் உற்பத்தித் திறன் 1 லட்சம் டன்னாக இருக்கும். இந்தத் திட்டத்தின் மூலம் 1000 பேருக்கு நேரடியாகவும், 3000 பேருக்கு மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு கிடைக்கும்.

இதுத் தவிர 10,000 பேருக்கு விவசாயத் தொழில் துறையில் வேலை கிடைக்கும் என்றார்.

இந்தத் தொழிற்சாலை அமைப்பதற்கான நிலத்தைத் தர முன்வந்து நிலம் கொடுக்க விரும்புபவர்களுக்கு, அவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும் என டாடா நிறுவனம் தெரிவித்துள்ளது.

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...