திருச்சி அருகே நேற்று போலீசார் நடத்திய சோதனையில், மூட்டை, மூட்டையாக வெடிகுண்டு புதையல் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. திருச்சியை அடுத்த நெடுமலை என்னுமிடத்தில் உரிமம் இன்றி ஏராளமான வெடிபொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கியூ பிராஞ்ச் போலீசுக்கு நேற்று காலை தகவல் கிடைத்தது. இதையடுத்து, கியூ பிராஞ்ச் போலீசார், சோமரசம்பேட்டை போலீசுடன் இணைந்து நெடுமலை பகுதியில் தீவிர சோதனையிட்டனர். அப்போது அங்குள்ள குடிசை வீட்டில் மூட்டை, மூட்டையாக வெடிபொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்தனர். மூட்டைகளை அவிழ்த்து பார்த்ததில் 984 எலக்ட்ரிக் டெட்டனேட்டர், 570 சாதாரண டெட்டனேட்டர், 318 ஜெலட்டின் குச்சிகள், 120 கிலோ வெடி உப்பு மற்றும் 400 மீட்டர் ஒயர் ஆகியவற்றை பறிமுதல் செய்து சோமரசம்பேட்டை போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு வந்தனர். இப்பகுதியில் உள்ள கல்குவாரிகளில் கல் உடைக்க பதுக்கி வைத்திருந்த புங்கனூரைச் சேர்ந்த ஜேசுராஜை(45), சோமரசம்பேட்டை போலீசார் தேடி வருகின்றனர்.
.
Friday, July 13, 2007
திருச்சியில் பயங்கர வெடிப்பொருட்கள் பறிமுதல்.
Labels:
சட்டம் - நீதி,
தீவிரவாதம்
Posted by
Adirai Media
at
11:02 AM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
No comments:
Post a Comment