.

Saturday, August 25, 2007

இந்தியா: 16 வயதுக்குக் கீழ் கை பேசி வேண்டாம் - அறிவுறுத்தல்

அலை பேசிகளிலிருந்து வெளியாகும் மின் காந்த கதிர்வீச்சு, காதில் உள்ள மென்மையான திசுக்களை வெப்பமடைய செய்யும். இது உடல் ரீதியான பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், 16 வயதுக்கு உட்பட்டவர்களை அலைபேசி பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என்று அறிவுறுத்த இந்திய தொலைத்தொடர்புத் துறை முடிவு செய்துள்ளது.

அலைபேசிகளிலிருந்து வெளியாகும் மின்காந்த கதிர்வீச்சு எந்த அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும், இதை தடுக்க எவ்விதமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து தொ.தொ. துறையின் தொலை தொடர்பு பொறியியல் வல்லுனர் மையம் சில வழிகாட்டு குறிப்புகளை தயார் செய்துள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:

மொபைல் போனில் இருந்து வெளியாகும் மின்காந்த கதிர்வீச்சு, மனிதர்களின் காதில் உள்ள திசுக்களை வெப்பமடைய செய்து விடும். இது உடல் ரீதியான பாதிப்பை ஏற்படுத்தும். 16 வயதுக்கு உட்பட்டவர்களின் திசுக்கள் மிகவும் மென்மையானவை. அவர்கள் மொபைல் போனை பயன்படுத்தினால் பிரச்னை ஏற்படும். எனவே, 16 வயதுக்கு உட்பட்டவர்கள் மொபைல் போனை பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என தொலை தொடர்பு நிறுவனங்கள் வலியுறுத்த வேண்டும்.இந்தியாவில் மொபைல் போன் பயன்பாடு மிக வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால், ஏராளமான டவர்களை அமைத்து, அவற்றில் ஆன்டனாக்களை அதிக அளவில் பொருத்தி வருகின்றனர். இதனாலும் மின்காந்த கதிர்வீச்சு அதிக அளவில் வெளிப்படும். எனவே, பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் அருகே இதுபோன்ற டவர்களை ஏற்படுத்த கூடாது என்று வலியுறுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது
.இவ்வாறு டெலிகாம் துறை கூறியுள்ளது.டெலிகாம் துறையின் இந்த நடவடிக்கை குறித்து தொலை தொடர்பு நிறுவனங்கள் கூறியதாவது:
அறிவியல் ஆதாரம் இல்லாமல் இது போன்ற அறிவுரைகளை வெளிப்படுத்துவதால் இந்தியாவில் மொபைல் போன் பயன்பாடு பெரிதும் பாதிக்கப்படும். ரேடியோ கதிர்வீச்சு அலைகள் மற்றும் மொபைல் தொடர்பு ரேடியோ கதிர்வீச்சு அலைகள் குறித்து பல ஆண்டுகளாக பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியுள்ள அளவுக்கும் குறைவான கதிர்வீச்சு அலைகளால் உடல் ரீதியாக எந்த பாதிப்பும் வராது என்றே அந்த ஆய்வு முடிவுகள் தெரியப்படுத்தியுள்ளன.

இவ்வாறு தொலை தொடர்பு நிறுவனங்கள் கூறியுள்ளன.

இது குறித்து இந்திய தொ.தொடர்புத் துறையிடம் கேட்ட போது, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும்படி உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியுள்ளது. கனடா, அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், ஜப்பான் மற்றும் சீனா ஆகிய நாடுகள் இந்த முன்னெச்சரிக்கை அறிவுரை ஏற்று பல வகையிலும் நடைமுறைப்படுத்தியுள்ளன. எனவே, இந்தியாவிலும் இதை நடைமுறைப்படுத்த முயற்சி மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டது.

தினமலர்

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...