.

Tuesday, August 7, 2007

தில்லியில் மற்றொமொரு சாலை வன்முறை

தலைநகர் தில்லியில் சாலைகளில் செல்லும் மோடார் பைக் ஓட்டிகள் அத்துமீறி வன்முறையில் இறங்குவது தொடர்கிறது. இவ்வாறான மூன்றாவது நிகழ்வில், நேற்று, பிற்பகல் மூன்றுமணிக்கு தெருவில் 28 வயதான அர்விந்த் தனது மகனுக்கு மருந்து வாங்கிக் கொண்டு செல்பேசியில் பேசிக் கொண்டே நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த நரேந்திர சிங் எழுப்பிய ஹாரன் ஒலியை கேட்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த நரேந்திர சிங் அவரை ஒரு செங்கல்லால் தலையில் அடித்து உதைத்தார். மூன்று குழந்தைக்களுக்கு தந்தையான அர்விந்த் படுகாயமடைந்து குரு தேக் பகதூர் மருத்துவமனையில் அனுமதிக்க செல்லும் வழியிலேயே இறந்தார்.

ஜூலை 16 அன்று ஜிதேந்திர பவார் என்பவர் சாகேத் என்ர இடத்தில் நான்கு பைக்கர்களால் அடிபட்டு இறந்தார். அதற்கு இருநாட்கள் முன் தேசிய பாதுகாப்புப் படையை சேர்ந்த இருவர் 22 வயது இளைஞனை ஒரு தெருச் சண்டையில் கொன்றனர்.

தில்லியில் சாலை மரணங்களுக்கு விபத்துக்கள் மட்டுமே காரணமாயமைவதில்லை.

IBNLive.com > Road rage again! Biker beats man to death in Delhi : delhi, road rage

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...