.

Monday, March 26, 2007

மஞ்சுநாத் வழக்கில் பிகே மிட்டலுக்கு தூக்கு

இன்று மஞ்சுநாத் கொலைவழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப் பட்டது. முதல் குற்றவாளியான பெட்ரோல் பங்கு உரிமையாளர் பவன் குமார் மிட்டலுக்கு தூக்கு தண்டனை வழங்கப் பட்டுள்ளது.மற்ற ஏழு குர்றவாளிகளுக்கும் மாவட்ட நீதிமன்றம் ஆயுள்தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.


மேலும். Zee News -

ஸ்ரீலங்காவில் புலிகள் தாக்குதல் குறித்து இந்திய அரசு கவலை

இன்று கொழும்பு விமானநிலயத்தின் மீது நடந்த வான்புலிகளின் தாக்குதல் குறித்து இந்தியா கவலை தெரிவித்துள்ளது. உலகிலேயே முதன்முறையாக ஒரு போராட்டக் குழு இத்தைகைய வான்வழி தாக்குதலை மேற்கொண்டுள்ளது. முல்லைத்தீவு படைத்தளத்திலிருந்து கொழும்புவரை சென்று தாக்குதலை நடத்தி பத்திரமாக மீளவும் முடிந்திருக்கிறது என்றால் தமிழகத்தின் பல பகுதிகளை புலிகள் எளிதாக தாக்க முடியும். இருப்பினும் அவர்களால் தமிழகத்திற்கோ இந்தியாவிற்கோ உடனடி அபாயம் எதுவும் இல்லை என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.


மேலும்..DNA - India

சற்றுமுன்: சினிமா: நடிகை இரம்பா போஜ்பூரி படங்களின் புது ஸ்டார்


தமிழ்படங்களில் நடித்த நடிகை ரம்பா தற்போது பாட்னாவில் போஜ்பூரி படங்களில் வெற்றிநடை போடுகிறார்.


இது பற்றிய செய்தி..

சற்றுமுன் : வீரர்களின் வீடுகளை தாக்க வேண்டாம்: கபில்

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் தோல்வி அடைந்ததற்காக இந்திய வீரர்களின் வீடுகளை தாக்க வேண்டாம் என்று கபில்தேவ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து கோல்கட்டாவில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், விளையாட்டில் இதுபோன்ற தோல்விகள் உண்டாவது இயல்பானது. இதற்காக ரசிகர்கள் உணர்ச்சிவசப்படக்கூடாது என்றார். தோல்விகாக கிரிக்கெட் வீரர்களின் வீடுகளை ரசிகர்கள் தாக்கக்கூடாது என்ற கபில், இது தவறான செயல். வீரர்கள் தேடித்தந்துள்ள வெற்றியை ரசிகர்கள் கருத்தில் கொள்ள வேண்டும் என்றார்.

சற்றுமுன்: கட்டுனாயக்க இராணுவ விமானத்தளத்தில் வான்புலிகள் தாக்குதல்

மார்ச் 26, 2007 - இன்று அதிகாலை, தமிழீழ விடுதலைப் புலிகளின் வான் புலிகள் பிரிவு, கொழும்புக்கு அருகில் அமைந்த கட்டுனாயக்க இராணுவ விமாளத்தளத்தின் மீது வான் குண்டு வீச்சுத் தாக்குதல் நடத்தியது. இது வான்புலிகள் பொறுப்பேற்றுக் கொண்டுள்ள முதல் அதிகாரப்பூர்வத் தாக்குதலாகும். இதனால், வான்புலிகள் அமைப்பு இருப்பது உறுதிப்படுகிறது. இதில் இருவர் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலை நடத்த இரண்டு இலகு ரக விமானங்களை வான்புலிகள் பயன்படுத்தி உள்ளனர். இலங்கை விமானப் படையின் தாக்குதல் திறத்தை குறைப்பதற்காக இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக விடுதலைப் புலிகளின் செய்தித் தொடர்பாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்தார்.

மேலும் அறிய -

TimesNow.tv

சற்றுமுன்:பங்ளாதேஷில் பறவைக்காய்ச்சல்

பங்ளாதேஷில் பறவைக் காய்ச்சல்(Bird Flu) பரவியுள்ளதாகத் தெரிகிறது. அங்குள்ள பண்ணைகளிலிருந்து சுமார் 5,600 கோழிகள் கொன்றழிக்கப்பட்டன.

Bird flu detected in Bangladesh, 5600 chickens killedPeople's Daily Online - 23 Mar 2007
Bird flu enters Bangladesh Financial Express.bd
Bangladesh says detects bird flu in poultry Reuters India

நாய் வாலை நிமிர்த்த முடியும்




சேலம: தமிழக அரசின் சாதனைகளை விளக்கும் பல்துறை விளக்க கண்காட்சி கடந்த எட்டு நாட்களாக சேலம் போஸ் மைதானத்தில் நடந்து வருகிறது. நேற்று மாலை இதில் நாய் கண்காட்சி நடந்தது. சேலம் மேயர் நகரை சேர்ந்த சத்யா என்பவர் தனது நாயை காட்சிக்கு கொண்டு வந்திருந்தார். இந்த நாயின் வால் நிமிர்ந்திருந்தது கண்டு பலரும் ஆச்சரியமடைந்தனர்.

இது குறித்து சத்யா, எனது நண்பர் நாய் வாலை நிமிர்த்த முடியுமா என சவால் விட்டார். சாவலில் வெற்றி பெற வேண்டும் என முடிவு செய்தேன். அதற்காக நாய்க்கு தினமும் பயிற்சி அளித்தேன். முதலில் நாய் வாலை நிமிர்த்த ‘ஸ்டேக்‘ (சிறு நாடா) கட்டி வைத்தேன். தினமும் 10 நிமிஷம் வாலை நீவி விட்டேன். 7 மாத கால பயிற்சிக்கு பின் நாய் வால் நிமிர்ந்து விட்டது.

Sunday, March 25, 2007

அஸ்த்ரா வெற்றிகரமாக சோதனை

இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்ட வான் வெளியிலிருந்து வானில் உள்ள இலக்குகளை சென்று தாக்கவல்ல அஸ்த்ரா ஏவுகணை சோதனை இன்று வெற்றிகரமாக நடந்தது.

ஒரிசா மாநிலம் சந்திப்பூரில் உள்ள் ஒருங்கிணைந்த சோதனை தளத்தில் இருந்து முற்பகல் 11.56 மணிக்கு இந்த சோதனை நடைபெற்றதாக பாதுகாப்புப்படை வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த ஏவுகணையின் செலுத்து தூரம் 80 கி.மீ. வேகத்தில் சென்று தாக்கக்கூடியது என்றும், செலுத்து வேகம் 0.6 முதல் 2.2 மேக் வரை இருக்கக்கூடும் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

சுமார் 3,750 மிமீ நீளமும், 178 மி.மீ குறுக்களவையும் கொண்ட ஏவுகணை அஸ்த்ரா என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும்

சற்றுமுன்: நூறு கோடி இந்தியர்களின் பிரார்த்தனையோடு களமிறங்குகிறோம் : பெர்முடா கேப்டன்.

இலங்கை அணியிடம் தோல்வி கண்டு உலக்க்கோப்பையில் இருந்து வெளியேறும் நிலைக்கு வந்து விட்ட இந்திய அணி வெறும் அதிர்ஷ்டத்தை மட்டும் நம்பி இன்றைய நாளை எதிர் நோக்குகிறது. இன்று நடைபெறும் ஆட்டத்தில் பெர்முடா அணி வங்க தேசத்தை வெற்றி கொண்டால் இந்திய அணி அடுத்த சுற்றுக்கு போகமுடியுமாம். இந்த குருட்டு அதிர்ஷ்டத்தை நம்பி இந்தியா...!

இதில் பெர்முடா கேப்டன் வேறு நூறு கோடி இந்தியர்களின் பிரார்த்தனையோடு களமிறங்குகிறோம் என்று சொல்லியிருக்கிறார்.

சற்றுமுன்: ஜப்பானில் கடும் நில நடுக்கம்

மத்திய ஜப்பான் கடலில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் ஒருவர் உயிரிழந்தார். நூற்றுக்கும் கூடுதலானோர் காயமுற்றனர்.

மேலும் அறிய -
வாஷிங்டன் போஸ்ட்
தட்ஸ்தமிழ்

சற்றுமுன்: ஜல்லிக்கட்டில் காளை முட்டி வாலிபர் பலி.

புதுக்கோட்டை மார்ச் 25,
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள விராலிமலை உள்ள விராலுரில் ஜல்லிக்கட்டு நடைப்பெற்றது இதில் சுற்று வட்டாரம் மற்றும் வெளிமாவட்டங்களை சேர்ந்த 300க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.இந்த ஜல்லிக்கட்டில் மாடுகள்முட்டி கல்குத்தாப்பட்டியை சேர்ந்த சுப்பிரமணியன்(35) உட்பட 20 பேர் காயமடைந்தனர் இதில் சுப்பிரமணியன் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைபலனின்றி இறந்தார்.

சற்றுமுன்: ராமேஸ்வரம் கடலில் 12 மீனவர்களை காணவில்லை.

குளச்சலில் இருந்து ராமேஸ்வரம் கடலில் மீன் பிடிக்க சென்ற 12 மீனவர்களை காணவில்லை அவர்களை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

Saturday, March 24, 2007

சற்றுமுன்: இரான் எண்ணைக் குழாய் - இந்தியா தொடரும்

இரானிலிருந்து பாக்கிஸ்தான் வழியாக இந்தியாவுக்கு எரி எண்ணை கொண்டு வரும் திட்டத்துக்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்திருந்தது.
இன்று, திட்டத்தை இந்தியா செயல்படுத்தும் என்றும் வேறெந்த நாடும் அதை கைவிடும்படி இந்தியாவை வற்புறுத்த இயலாது என்றும் பெட்ரோலியத் துறை அமைச்சர் தியோரா பதிலளித்துள்ளார்.

India can't be pressured on Iran pipeline project: Deora
Unfazed by concerns expressed by the US on the proposed USD 7.2 billion Iran-Pakistan-India (IPI) gas pipeline, India today said it will go ahead with the project and no country can pressure New Delhi to scrap it.

"I don't see any problem (on IPI pipeline). No country can debar India from this project. No country can pressure us. We are committed to this," Union Petroleum Minister Murli Deora told reporters here.

"I can't give any timeframe. The advisors have been appointed and they are preparing the feasibility report. It is too early to say at this stage," he said.

EDITORIAL: Handle pipeline politics cautiously Daily Times
India to go ahead with the Iran gas pipeline: Deora Daily News & Analysis

சற்றுமுன்:தெல்கிக்கு 10 ஆண்டுகள் சிறை

முத்திரைத் தாள் மோசடியில் பிடிபட்ட தெல்கிக்கும் மற்றும் 4 பேருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் ரூ. 50,000 அபராதமும் வழங்கப்பட்டுள்ளது.

Telgi sentenced to 10 years in prison
A court in Bangalore has sentenced Abdul Kareem Telgi and four others to 10 years in prison and imposed a fine of Rs 50,000 on each of them in a case of cheating. The court found them guilty of forgery and cheating the government and a private company of around Rs 42 lakh. They forged documents to register a private company's property worth nearly Rs 4 crore. The case is one of 28 being probed by the CBI in which Telgi is an accused.

Telgi, 4 aides sentenced to 10 years RI Daily News & Analysis
Bangalore: Scam king Telgi sentenced CNN-IBN

சற்றுமுன்:உல்மர் கொலை : 2 பாக் வீரர்கள் தங்கியிருக்க உத்தரவு

கொலைசெய்யப்பட்ட பாகிஸ்தான் பயிற்சியாளர் பாப் உல்மர் வழக்கு விசாரணையில் வெள்ளியன்று புதிய திருப்பம் ஏற்பட்டது. பாகிஸ்தான் அணியைச் சேர்ந்த இரண்டு வீரர்கள் ஜமைக்காவிலேயே தங்கியிருக்கவேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

அணியின் மற்ற வீரர்கள் நாடு திரும்ப அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஜமைக்கா தொலைக்காட்சியின் தகவலின்படி இரண்டு வீரர்கள் நீதிபதி முன்னிலையில் விசாரிக்கப்படுவார்கள் என்று தெரிகிறது. ஆனால் அந்த வீரர்கள் பெயர் விவரம் வெளியிடப்படவில்லை.

பாப் உல்மர் கொலை விசாரணையை மேற்கொண்டு வரும் காவல்துறை அதிகாரி மார்க் ஷீல்ட்ஸ், முன்னதாக சந்தேகத்துக்குரிய நபர்கள் என்று யாரையும் அடையாளப்படுத்தவில்லை.

உல்மர் கொலை செய்யப்பட்ட விதம் பற்றி ஷீல்ட்ஸ் தெரிவிக்கையில், அறையில் எதுவும் உடையாத நிலையில் கொலையாளியை உல்மர் அறிந்திருக்க வேண்டும் என்றார்.

உல்மரின் தோற்றதை வைத்துப் பார்க்கும்போது ஒருவருக்கு மேற்பட்டோர் இந்த கொலையைச் செய்திருக்க வாய்ப்பிருப்பதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.

நன்றி: MSN TAMIL

-o❢o-

b r e a k i n g   n e w s...