.

Friday, April 27, 2007

திருச்சூர் பூரத்தில் ஆனை மிரண்டது

கேரள மாநில திருச்சூரில் இன்று நடந்த பூரம் திருவிழாவில் திரண்டிருந்த யானைகளில் ஒன்று முரண்டுபிடித்து ஓடியதால் மக்கள் கூட்டம் மிரண்டு இங்குமங்கும் ஓடினர். 'இளஞ்சிதாரா' மேளம் வாசிக்கும் போது உன்னிக்கிருஷ்ணன் என்ற யானை தனது இரும்புசங்கிலியிலிருந்து தப்பி ஓடியதை கண்ட அஞ்சிய மக்கள் பின்னர் அது அடக்கப் பட்டபிறகு மீண்டும் கூடி பூரத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான 'குடை மாற்றம்' நிகழ்ச்சியைக் கண்டு களித்தனர்.


DNA - India - Elephant turns violent at Thrissur pooram - Daily News & Analysis

உலகப்போர் இந்திய வீரர்களுக்கு கலாம் அஞ்சலி

இரண்டாம் உலகப்போரில் கிரேக்க நாட்டில் பணிபுரிந்து வீரமரணமடைந்த இந்திய வீரர்களுக்கு அறுபது வருடங்களுக்குப் பிறகு இந்திய குடியரசுத் தலைவர் திரு அப்துல் கலாம் அவர்கள் ஏதென்ஸில் இறுதி அஞ்சலி செலுத்தினார்.இதுவரை சென்ற இந்திய தலைவர்கள் எவரும் இவர்களுக்கு அஞ்சலி செலுத்தவில்லை. ஆங்கிலேயர்களுக்காக தங்கள் தாயகத்திலிருந்து போர் புரிந்த பஞ்சாப் ், சென்னை வீரர்களுக்கு திரு கலாம் நம் நன்றியறிதலை வெளிபடுத்தினார்.


மேலும்..The Hindu News Update Service

காஷ்மீர்: கிலானி கைது

காஷ்மீர் ஹுரியத் கான்ஃப்ரன்ஸ் தலைவர் சையத் அலி ஷா கிலானி இன்று வீட்டுக் காவலில் வைக்கப் பட்டார். நேற்று அவரது ஆறு துணைவர்கள் ஒரு பொதுக் கூட்டத்தில் பேச முற்படும் போது கைது செய்யப் பட்டனர். ஏப்ரல் 22 அன்று நடந்த ஒரு பேரணியில் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக எழுப்பிய கோஷங்களைத் தொடர்ந்து அவர்மீதும் மற்ற நான்கு தலைவர்கள் மீதும் குற்றம் பதியப் பட்டது.
மேலும் விவரங்களுக்கு..
NDTV.com

பாரதி ஏர்டெல்லின் நான்காம் பருவ இலாபம் இருமடங்கானது

முக்கியமான இந்திய செல்பேசி சேவையாளர்களில் ஒன்றான பாரதி நிறுவனம் இன்று வெளியிட்ட நான்காம் பருவ முடிவுகளில் அதன் இலாபம் இருமடங்காக அதிகரித்துள்ளது.
மேல்விவரங்களுக்கு..Business-The Times of India

குஜராத்:போலி துப்பாக்கிசூட்டில் இறந்தவரின் மனைவியும் கொலை ?

இன்று உச்ச நீதிமன்றத்தில் குஜராத் அரசு ் துப்பாகிச் சூட்டில் மரணமடைந்த ஷேக்கின் மனைவி கசூர் பீயை நேரில் ஆஜர் படுத்தமுடியாததிற்கு அவரும் கொலையுண்டிருக்கலாம் என்று அறிக்கை சமர்பித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும்...- Hindustan Times

கருணாநிதி பிறந்த நாள்: சாலை ஓரங்களில் 2 லட்சம் மரக் கன்றுகள்

சென்னை, ஏப். 26: முதல்வர் கருணாநிதி பிறந்த நாளையொட்டி சாலை ஓரங்களில் 2 லட்சம் மரக் கன்றுகள் நடப்படும் என்று நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் கூறினார்.

சட்டப்பேரவையில் நெடுஞ்சாலைத் துறை மானியக் கோரிக்கை மீது செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விவாதங்களுக்குப் பதிலளித்து அவர் பேசும்போது இத் தகவலை வெளியிட்டார். ஜூன் 3-ம் தேதி முதல்வர் கருணாநிதி பிறந்த நாள். அன்று தமிழகத்தின் பிரதான சாலைகளின் இரு புறங்களிலும் மரக்கன்றுகள் நடப்படும் என்று அவர் கூறினார்.

இந்த மரக் கன்றுகள் முறையாகப் பராமரிக்கப்படும். ஆக்கிரமிப்புகளைத் தடுக்க சாலை எல்லையில் கற்கள் நடப்படும் என்றார்.

Dinamani

Thursday, April 26, 2007

UPA vs Modi in Gujarat encounter case

3 ஐ.பி.எஸ். அதிகாரிகளை கைது செய்யவைத்த சோரபுதீன் குடும்பத்தார் இனிப்பு வழங்கி மகிழ்ச்சி

இந்தூர், ஏப். 26: குஜராத் துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் டி.ஜி. வன்சாரா, காவல்துறை கண்காணிப்பாளர்கள் ஆர்.கே. பாண்டியன், எம்.என். தினேஷ்குமார் (ராஜஸ்தான்) என்ற 3 ஐ.பி.எஸ். அதிகாரிகள் கைது செய்யப்பட்டதை, சோரபுதீன் ஷேக் குடும்பத்தார் தங்களுடைய சொந்த கிராமத்தில் இனிப்பு வழங்கியும் பட்டாசு வெடித்தும் மகிழ்ச்சியாகக் கொண்டாடினர்.

மத்தியப் பிரதேச மாநிலத்தின் உஜ்ஜைன் மாவட்டத்தில் ஜிர்னியா என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் சோரபுதீன் ஷேக். ஜிர்னியா கிராமத்தின் பஞ்சாயத்துத் தலைவராக சோரபுதீனின் அம்மா ஜெபுன்னிசா பீவி பதவி வகிக்கிறார்.

1995-ம் ஆண்டு சோரபுதீன் பெயர் முதல்முறையாக பத்திரிகைகளில் வந்தது. அந்த கிராமத்து கிணறு ஒன்றிலிருந்து 2 டஜனுக்கும் மேற்பட்ட ஏ.கே.-56 ரக தானியங்கி துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டன. அவரை சிபிஐ போலீஸôர் சந்தேகத்தின்பேரில் கைது செய்து அழைத்துச் சென்றனர். பிறகு அவரை நிரபராதி என்று விட்டுவிட்டனர்.

பிறகு அவரை 2005 நவம்பர் 26-ம் தேதி குஜராத் மாநில பயங்கரவாத எதிர்ப்புப்படை போலீஸôரும் ராஜஸ்தான் மாநில சிறப்புப் படையைச் சேர்ந்த அதிகாரி எம்.என். தினேஷ் குமாரும் ஆமாதாபாத் நகருக்கு வெளியே சுற்றிவளைத்து சுட்டுக்கொன்றனர்.

அவருக்கும் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகளுக்கும் தொடர்பு இருப்பதாகவும், குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, அத்வானி மற்றும் விசுவ ஹிந்து பரிஷத் தலைவர்களைக் கொலை செய்ய அவர் சதித்திட்டம் தீட்டி, அதை நிறைவேற்ற குஜராத்துக்கு வந்தார் என்றும் கூறப்பட்டது.

பிறகு சோரபுதீனின் சகோதரர் ருபாபுதீன் இச் சம்பவத்தை விசாரிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். உச்ச நீதிமன்றம், குஜராத் போலீஸôருக்கு ஆணையிட்டு இதைத் தீவிரமாக விசாரிக்கும்படி கூறியது. பிறகு உண்மை அம்பலமானது. 3 ஐ.பி.எஸ். அதிகாரிகள் வேண்டுமென்றே சதி செய்து அவரைக் கொன்றிருப்பதாக, விசாரித்த அதிகாரிகள் அறிக்கை அளித்தனர். அதன் பேரில் 3 பேரும் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனர்.

கைதான வன்சாரா, முதல்வர் நரேந்திர மோடிக்கு நெருக்கமானவர் என்று கூறப்படுகிறது.

Dinamani | Zee News - Joy at Sohrabuddin`s home after arrest of three IPS officers: "Rubabuddin, however, claimed the well did not belong to his family. 'It was a roadside well and the weapons were dumped in it by gangster Abdul Latif in connivance with the anti-terrorist squad of Gujarat'".

பா.ஜனதா எம்பி பாபுபாய் மக்களவையில் கலந்து கொள்ள தடை.

ஆள்கடத்தல் வழக்கில் சிக்கியுள்ள பா.ஜனதா எம்பி பாபுபாய் கட்டாரா மக்களவை கூட்டத்தில் கலந்து கொள்ளக் கூடாது என சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி இன்று உத்தரவிட்டார்.பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது கூட்டம் இன்று தொடங்கிய நிலையில், பாபுபாய் பிரச்சனை குறித்த அறிக்கை ஒன்றினை சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி அவையில் படித்தார்.அப்போது, பாபுபாயின் ஆள் கடத்தல் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்த சாட்டர்ஜி, இப்பிரச்சனை தொடர்பாக மக்களவையில் இடம் பெற்றுள்ள அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூடி விவாதித்து முடிவெடுக்கும் வரை பாபுபாய் மக்களவையில் கல்ந்து கொள்ளக் கூடாது என உத்தரவிட்டார்.பாபுபாயின் செயலுக்கு தமது சார்பிலும், மக்களவை சார்பிலும் தாம் கடும் கண்டனம் தெரிவிப்பதாக சாட்டர்ஜி மேலும் கூறினார்.

இறுதிப் போட்டி: இலங்கையுடன் ஆஸ்திரேலியா மோதல்

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில் 28ம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டியில் இலங்கை அணியுடன் ஆஸ்திரேலியா மோதுகிறது.

முன்னதாக இன்று நடைபெற்ற இரண்டாவது அரையிறுதியில் தென்னாப்பிரிக்காவை அந்த அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இன்றைய போட்டியில் முதலில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பேட்டிங் செய்ய முடிவெடுத்தது. ஆனால் ஆஸ்திரேலிய அணியின் பந்து வீச்சை சமாளிக்க இயலாமல் துவக்க ஆட்டக்காரர்கள் மளமளவென அவுட்டாகி பெவிலியன் திரும்பினர். எனினும் பின்னர் வந்த கிப்ஸ், கெம்பம் ஆகியோர் நிதானமாக ஆடியதால் அந்த அணி 149 ரன்கள் எடுத்தது.

இதைத் தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலிய துவக்கத்தில் கில்கிறிஸ்ட் மற்றும் பாண்டிங் விக்கெட்களை இழந்த போதிலும் இலக்கை எளிதாக எட்டி வெற்றி பெற்று இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது. 31.3 ஓவர்களில் ஆஸ்திரேலியா 3 விக்கெட்களை இழந்து 153 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது..

MSN

Wednesday, April 25, 2007

புதைகுழியில் விழுந்த 2 சிறுவர்கள் சாவு

திருச்செங்கோடு, ஏப். 25: திருச்செங்கோட்டில் பாழடைந்த குளத்தில் விளையாடிக் கொண்டிருந்த இரண்டு சிறுவர்கள் புதைகுழியில் விழுந்து உயிரிழந்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையைச் சேர்ந்தவர் செல்வம் (35). இவரது மகன் ஸ்ரீநாத் (7) இங்குள்ள பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்தார். செல்வத்தின் உறவினர் மகன் கோகுல் (6).

கோகுலும், ஸ்ரீநாத்தும் வீட்டிற்கு அருகில் உள்ள பாழடைந்த குளத்தில் திங்கள்கிழமை தாவிக் குதித்து விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது தவறி அங்கிருந்த புதை குழியில் இருவரும் விழுந்து விட்டனர். அதில் மூச்சுத் திணறி இருவரும் உயிரிழந்தனர்.

சம்பவம் நடந்த இடத்துக்கு அருகில் ஒரு பள்ளி இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

Dinamani

சர்வதேச மகளிர் சம்மேளன துணைத் தலைவராக இந்தியப் பெண் தேர்வு

புது தில்லி, ஏப். 25: சர்வதேச ஜனநாயக மகளிர் சம்மேளனத்தின் துணைத் தலைவர்களில் ஒருவராக, இந்திய தேசிய மகளிர் சம்மேளனத்தின் பொதுச் செயலர் ஆன்னி ராஜா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சர்வதேச சம்மேளனத்தின் 14-வது மாநாடு, வெனிசூலா தலைநகர் காரகாஸில் சமீபத்தில் நடைபெற்றது. அதில், இந்திய சம்மேளனத்தின் தலைவர் சாரதாமணி, ஆன்னி ராஜா, கிருஷ்ணா மஜும்தார், பி.வி. விஜயலட்சுமி, ஆந்திரத்தின் பஸ்யா பத்மா, கேரளத்தின் கமலா சதானந்தன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். வெனிசூலா அதிபர் ஹியூகோ சாவேஸ் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

பெண்களுக்கு அதிக அதிகாரம் அளிக்க வேண்டும் என்றும், ஏழை மக்களைப் பாதிக்கும் தாராளமயக் கொள்கைகளுக்கு எதிராகவும் இந்த மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சர்வதேச சம்மேளனத்தின் தலைவராக பிரேசில் நாட்டைச் சேர்ந்த மர்கியா கேம்போஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தியாவின் ஆன்னி ராஜாவுடன், பாலஸ்தீனம், அங்கோலா, ஆர்ஜென்டீனா, சைப்ரஸ் நாடுகளின் பிரதிநிதிகள் துணைத் தலைவர்களாகத் தேர்வு செய்யப்பட்டனர்.

Dinamani

இட ஒதுக்கீடு: பிரதமருடன் அர்ஜுன்சிங் சந்திப்பு.


உயர் கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு தொடர்பான பிரச்சனை முடிவுக்கு வராத நிலையில்,பிரதமர் மன்மோகன் சிங்கை மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் அர்ஜுன்சிங் இன்று சந்தித்துப் பேசினார். ஐஐஎம் உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்களில் இவ்வாண்டு நடைபெறும் மாணவர் சேர்க்கையின் போது, பொதுப் பிரிவினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவினர் பாதிக்க்கப்படாமல் இருப்பது குறித்து இருவரும் விவாதித்ததாகத் தெரிகிறது.பிரதமரை சந்திப்பதற்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய அர்ஜுன்சிங், இட ஒதுக்கீடு வழக்கை முன்னதாகவே விசாரிக்கும் உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குப் பின் மாறுபட்ட தன்மை நிலவுகிறது என்றார். வழக்கை முன்கூட்டியே விசாரிக்கும் உச்ச நீதிமன்றத்தின் முடிவு வரவேற்கத்தக்கது என்று குறிப்பிட்ட அவர், இதனால் இட ஒதுக்கீடு பிரச்சனைக்கு விரைவில் தீர்வு எட்டப்படும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.உயர் கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கையின் போது பிற்படுத்தப்பட்ட பிரிவினர் பாதிக்கப்படாமல் இருப்பது குறித்து, பிரதமருடன் ஆலோசனை நடத்தப்படும் என்று அவர் சொன்னார்.

அணை விவகாரம்: தெலுங்கானா பகுதியில் பந்த்

அணை கட்டும் விவகாரத்தில் மகாராஷ்டிரா அரசின் போக்கை கண்டித்து காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்த தெலுங்கானா பந்த், 21 காலை துவங்கியது. இதையொட்டி அடிலாபாத், நிஸாமாபாத், கரீம் நகர், வாரங்கல் மற்றும் நல்கொண்டா ஆகிய ஐந்து தெலுங்கானா மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

பஸ் உள்ளிட்ட வாகனப் போக்குவரத்து நிறுத்தப்பட்டு இருந்தன. பள்ளி, கடைகள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டு, சாலைகள் வெறிச்சோடி கிடந்தன. கோதாவரி ஆற்றின் குறுக்கே அணை கட்ட்டுவதற்கு மகாராஷ்டிரா அரசு திட்டமிட்டுள்ளது. இதனால் நந்தத் மாவட்டத்திற்கு தேவையான 2.7 டிஎம்சி குடிநீர் கிடைப்பதில் பாதிப்பு ஏற்படும் என்று ஆந்திரா கூறி வருகிறது.

மகாராஷ்டிர அரசின் இந்த போக்கைக் கண்டித்து தெலுங்கானா பகுதிகளீல் ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சி இந்த வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.

MSN

உலகக்கோப்பை இறுதி ஆட்டத்திற்கு இலங்கை தகுதி?

இலங்கை அணியின் கேப்டன் ஜெயவர்த்தனே ஆட்டமிழக்காமல் 115 ரன்கள் எடுத்தன் விளைவாக அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 289 ரன்களை குவித்தது.

இரண்டாவதாக ஆடிய நியுசிலாந்து 35 ஓவர்களில் ஒன்பது விக்கெட்களை இழந்து 165 மட்டுமே அடித்திருக்கிறது. முரளி நான்கு விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் அரையிறுதி ஆட்டத்தில், முன்னாள் உலகச் சாம்பியன் இலங்கை அணி வெற்றியின் வாயிலில் உள்ளது.

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்து களமிறங்கியது.

2004-ல் "இந்தியா ஒளிர்கிறது' என்று பாஜக பிரசாரம் செய்தது தவறுதான்: அத்வானி

புணே, ஏப். 24: 2004-ம் ஆண்டில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் "இந்தியா ஒளிர்கிறது' என்று பாஜக தேர்தல் பிரசாரம் செய்தது தவறுதான் என்று கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான எல்.கே.அத்வானி தெரிவித்தார்:

"சென்ற மக்களவைத் தேர்தலில் இந்தியா ஒளிர்கிறது என்று பிரகடனப்படுத்தி பாஜக தேர்தல் பிரசாரம் செய்தது தவறு. அதற்கு பதிலாக "இந்தியா எழுச்சி பெறுகிறது' என்று பிரசாரம் செய்திருக்கலாம். அதுதான் உண்மை.

தில்லியில் சமீபத்தில் நான் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன். அங்கு வைக்கப்பட்டிருந்த விளம்பர பேனரில் "இந்தியா எழுச்சி பெறுகிறது' என்று எழுதிவைக்கப்பட்டிருந்தது. அப்போது எனக்கு இந்தியா ஒளிர்கிறது என்பதற்கு பதிலாக இந்தியா எழுச்சி பெறுகிறது என்று கூறி தேர்தல் பிரசாரம் செய்திருந்தால் சரியாக இருந்திருக்கும் என்று தோன்றியது என்று அத்வானி கூறினார்.

2009-ம் ஆண்டு நடைபெறும் பொதுத் தேர்தலுக்கு "இந்தியா எழுச்சி பெறுகிறது' என்ற வாசகத்தை பிரகடனப்படுத்தி தேர்தல் பிரசாரம் செய்யப்படுமா என்று கேட்டதற்கு, உங்கள் யோசனையை வரவேற்கிறேன். ஆனால் அடுத்த தேர்தலுக்கு என்ன உத்தி கையாளப்படும் என்று இப்போதே சொல்லுவதற்கில்லை என்று அத்வானி கூறினார்.

பாஜகவின் பொதுச் செயலாளர்களில் ஒருவரான பிரமோத் மகாஜன் சுடப்பட்ட முதலாண்டு நிகழ்ச்சி புணேயில் நடைபெற்றது. இதில் அத்வானி கலந்துகொண்டார். கடந்த பொதுத் தேர்தலின்போது "இந்தியா ஒளிர்கிறது' என்ற பாஜக தேர்தல் பிரசார வாசகம் உருவாகக் காரணமாக இருந்தவர்களில் மகாஜனும் ஒருவர். இந்நிலையில் அத்வானி இப்போது அதுபற்றி கருத்து கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது."

Dinamani

-o❢o-

b r e a k i n g   n e w s...