பாப் உல்மர் கொலைவழக்கில் புதுத் திருப்பமாக பாக்கிஸ்தான் தொலைக்காட்சியொன்று தன்னிடம் கொடுக்கப்பட்ட நஞ்சு கலந்த இரண்டு சாம்பேன் மது போத்தல்களை அணியின் பௌலிங் கோச்சான முஷ்டாக் அஹ்மது உல்மருக்கு கைமாற்றியதாக கூறியது.
இதுபற்றிய செய்தி துணுக்கு: MSN INDIA - Champagne bottles passed on to Woolmer by Ahmed: TV channel
Thursday, May 10, 2007
பாப் உல்மர் கொலை: முஷ்டாக் அஹ்மத் விஷம் கலந்த மதுபோத்தல்களை கொடுத்தார் ?
Posted by
மணியன்
at
8:51 PM
0
comments
இந்தியா பங்களாதேசத்தை ஐந்து விக்கெட்டில் வென்றது
தோனியின் தேர்ந்த ஆட்டமும் தினேஷ் கார்த்திக்கின் துணையும் இந்தியா ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் பங்களாதேசத்தை வென்று கிரிக்கெட் உலகக்கோப்பையில் தோற்றதிற்கு பதிலடி கொடுப்பதாக அமைந்தது.
ஸ்கோர்:
பங்களாதேசம்: 250/7 47 ஓவர்களில்
( ஜாவேத் ஓமர்-80, சகிபுல் ஹாசன்-50 தினேஷ் மோங்கியா- 3/49 )
இந்தியா : 251/5 (46 ஓவர்களில்)
(தோனி: 91 N.O, தினேஷ் கார்த்திக் 58,சையத் ரசல் 2/66, சகிபுல் ஹாசன் 2/43)
MSN INDIA - Dhoni powers India to 5-wicket win against Bangladesh
Posted by
மணியன்
at
8:36 PM
1 comments
ச:கருக்கலைப்பு - போப் கடுமை
உலகிலேயே பெரிய கத்தோலிக்க நாடான பிரேச்சிலில் சுர்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் போப் பெனடிக்ட் கரூக்கலைப்பை ஆதரிக்கும் சட்டங்களுக்கு ஆதரவளிக்கும் அரசியல்வாதிகள் மதத்திலிருந்து விலக்கப்படுவார்கள் என கடுமையாக எச்சரித்துள்ளார்.
திருச்சபையின் சட்டங்கள் உயிர்களைக் கொல்வதற்கு எதிரானது என்றும் அப்படிச் செய்பவர்களால் இயேசுவை நற்கருணைமூலம் பெற இயலாது எனவும் அவர் தெரிவித்தார்.
சுயநலமும், பயமுமே கருக்கலைப்பை ஆதரிப்பதற்கு ஆதாரம் எனவும் திருச்சபை உயிர்களைக் காக்கப் போராடும் என்றும் தெரிவித்த அவர் வாழ்க்கை அழகானது என்றும் போராட்டங்களுக்கிடையே வாழ்வது ஒரு கொடை எனவும் கூறினார்.
Pope gives abortion warningITV.com
Pope Warns Politicians Over Abortion Sky News
Pope Benedict XVI stresses opposition to abortion in Brazil International Herald Tribune
Posted by
சிறில் அலெக்ஸ்
at
8:11 PM
1 comments
தில்லியின் பால்தாக்கரே ?
பீஹாரிலிருந்தும் உத்தரப்பிரதேசத்திலிருந்தும் புலம் பெயர்ந்தவர்களாலேயே பிரச்சினைகள் உருவாவதாக தில்லி முதல்வர் ஷீலா தீக்சித் கூறியிருப்பது காங்கிரஸின் முதும் தலைவர்களின் கண்டனத்திற்கு உள்ளாகியிருக்கிறது.
நேற்று தில்லியின் மக்கட்பெருக்கத்திற்கான காரணமாக இவ்வாறு அவர் பேசியது நாடாளுமன்றத்திலும்் எதிரொலித்தது.
இது பற்றி.....Sheila Dikshit hauled up by Congress- Hindustan Times
Posted by
மணியன்
at
7:46 PM
1 comments
ச:டோனி ப்ளேர் பதவி விலகல்
10 வருடங்களாக இங்கிலாந்தின் பிரதமராக பணியாற்றிவந்த டோனி ப்ளேர் வரும் ஜூன் 27ம் தேதி பதவி விலகப் போவதாக அறிவித்தார். ஈராக்கில் பிரித்தானியப் படைகள் அமெரிக்கப்படைகளுடன் சேர்ந்தது முதல் டோனி ப்ளேருக்கு ஆதரவு குறைந்து வந்தது.
அறிவிப்பை வெளியிட்டு பேசிய ப்ளேர்,'நெஞ்சில் கையை வைத்துச் சொல்கிறேன் எது சரி என நம்பினேனோ அதையே செய்தேன்' எனக் கூறினார்.
கடந்த நூறு வருடங்களில் பிரதமராக 10 வருடம் பணிபுரிந்த இரண்டாம் நபர் டோனி ப்ளேர்.
Blair bows out after 10 years Reuters
Britain's Blair to step down on June 27 Los Angeles Times,
Blair in his own words Reuters
No jokes for Blair's likely heir CNN
Posted by
சிறில் அலெக்ஸ்
at
7:44 PM
0
comments
ச:தினகரன் தாக்குதல் - சிபிஐ விசாரணை
தினகரன் தாக்குதல்குறித்த விசாரணையை சிபிஐ செய்ய முதல்வர் கருணாநிதி ஆணையிட்டுல்ளார். தன் குடும்பத்தினர் இதில் ஈடுபட்டுள்ளதால் இதை தமிழக போலீஸ் விசாரிப்பது போதுமானதாகாது என சட்டசபையில் தெரிவித்துள்ளார் முதல்வர்.
மேலும் அவர் கலவரநேரத்தில் போலீஸ் செயல்படவில்லை என்பது உண்மையல்ல என்றும் 17பேர் அடங்கிய போலீஸ் குழு ஒன்று கலவரப் பகுதிக்கு விரைந்தது என்றார். கருத்துக்கணிப்புகள் குழப்பத்தை உண்டுபண்ணுகின்றன என்பதை வெவ்வேறு மேற்கோள்களுடன் தெரிவித்த முதல்வர் தான் பதவி விலகவேண்டும் என எதிர்கட்சிகள் வைத்த கோரிக்கைக்கு பதிலளிக்கையில் 'நீங்கள் விரும்பினால் நான் மகிழ்ச்சியாக ஓய்வுபெறுகிறேன் (Retire) ஆனால் பதவி விலகமாட்டேன்' என்றார்.
முதல்வர் பதவி விலகக் கோரி எதிர்க் கட்சிகள் வெளிநடப்பு செய்தன.
சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மொத்தம் 12 பேர் இதுவரை கைசெய்யப்பட்டுள்ளனர்.
தாக்குதலில் இரந்த தினகரன் ஊழியர்களின் குடூம்பத்திற்கு தலா ரூ 15 லட்சமும், குடும்பத்தில் ஒருவருக்கு சன் குழுமத்தில் வேலையும் தரப்படும் என்று தயாநிதி மாறன் அறிவித்துள்ளார்.
தமிழகத்தின் முக்கிய நகரங்களில் தினகரன் தாக்குதலை கண்டித்து பத்திரிகையாளர்கள் கண்டனக் கூட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் நடத்திவருகின்றனர்.
TN Govt. orders CBI probe into Madurai incidents The Hindu
12 held so far for attack on Dinakaran; Remanded to judicial custody The Hindu
Dikshit's remarks, TN violence derail Parliament The Hindu
DUJ deplores attack on media in Madurai The Hindu
Posted by
சிறில் அலெக்ஸ்
at
7:26 PM
1 comments
ச: தினகரன் பத்திரிக்கை தாக்குதல்- சன் செய்திகள் வீடியோ
வீடியோவைக் காண "இங்கே கிள்க் செய்யவும்."
Posted by
சிவபாலன்
at
5:29 AM
2
comments
அடுத்த குடியரசு தலைவர் பிரணப் முகர்ஜி: சோனியா, மன்மோகன் விருப்பம்
மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணப் முகர்ஜி அடுத்த குடியரசுத் தலைவராக வர வேண்டும் என காங்கிரஸ் தலைவர் சோனியாவும், பிரதமர் மன்மோகன் சிங்கும் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
ஏற்கெனவே 2004-ம் ஆண்டில் பிரதமர் பதவிக்கான போட்டியில் பின்தங்கிய பிரணப், இந்த முறை குடியரசுத் தலைவருக்கான போட்டியில் முன்னணியில் இருக்கிறார். எனினும், இடதுசாரி கட்சிகள் சம்மதித்தால் மட்டுமே அவர் வெற்றிபெற முடியும். உத்தரப் பிரதேச தேர்தல் முடிவுகள் வெளியான பிறகே, எதையும் உறுதியாகக் கூற முடியும்.
Posted by
Boston Bala
at
4:00 AM
0
comments
"விசா' விண்ணப்பங்களை "வடிகட்ட' அமெரிக்கத் தூதரகம் முடிவு
வெளிநாடுகளுக்கு ஆள்களைக் கடத்துவது அதிகரித்துள்ளது; அதில் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களுக்குக் கூட பங்கு இருக்கிறது என்றெல்லாம் செய்திகள் வரத் தொடங்கிவிட்டதால் அமெரிக்கத் தூதரகம் மட்டும் அல்ல எல்லா நாட்டுத் தூதரகங்களுமே கலவரம் அடைந்திருக்கின்றன. எனவே விசா கோரி விண்ணப்பிக்கிறவர்களின் ஆவணங்களைத் தீவிரமாகச் சரிபார்ப்பது என்று முடிவு செய்துள்ளனர்.
விசாவுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு நேர்காணலுக்கு நேரம் ஒதுக்கத் திணறும் அளவுக்கு விண்ணப்பங்கள் பலமடங்காகப் பெருகிவிட்டன. கடந்த மாதம் விசா கோரி விண்ணப்பித்துவிட்டு தில்லியிலேயே தங்கியவர்கள் செய்த செலவு மட்டும் ரூ.95 லட்சம் என்று ஒரு மதிப்பீடு தெரிவிக்கிறது. இதனால் அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் எச்சரிக்கை அடைந்துள்ளனர்.
Dinamani
Posted by
Boston Bala
at
3:54 AM
0
comments
ச:2007ல் இந்தியாவில் ஸ்டார்பக்ஸ் காப்பிக்கடை
அமெரிக்காவின் ஸ்டார்பக்ஸ் காப்பிக்கடை இந்தியாவிலும் கால்பதிக்கவிருக்கிறது. 2007 முடிவுக்குள் டெல்லி அல்லத்து மும்பையில் முதல் இந்திய ஸ்டார்பக்ஸ் காப்பிக்கடை துவங்கப்படும் என ஸ்டார்பக்ஸ் அறிவித்துள்ளது.
Starbucks to open first outlet in India by 2007-end
Posted by
சிறில் அலெக்ஸ்
at
2:32 AM
0
comments
Wednesday, May 9, 2007
ச:'அரசை டிஸ்மிஸ் செய்யவேண்டும்' - ஜெயலலிதா
சட்ட ஒழுங்கை காக்கத் தவறியதாற்காக தி.மு.க அரசு கலைக்கப்படவேண்டும் என ஜெயலலிதா அறிக்கைவிட்டுள்ளார். மதுரையில் நடந்த தினகரன் அலுவலகத் தாக்குதலின்போது போலீஸ் பாராமுகமாயிருந்ததைக் கண்டித்த அவர் கருணாநிதி குடும்பத்தில் பதவிக்காக சண்டை நடக்கிறது எனக் குறிப்பிட்டார்.
'தினகரன் எல்லாக் கட்சிகளுக்கும் பிரச்சனையை உருவாக்கிவருகிறது. முதலில் அதிமுகவிற்கு அடுத்த வாரிசு யார் என குழப்பத்தை உருவாக்கியது அதை நாங்கள் கண்டுகொள்ளவில்லை அதன்பின் பாமகவிற்கும் இப்போது திமுகவிற்கும் பிரச்சனையை உண்டுபண்ணியிருக்கிறது. தனது கட்சிக்காரர்களையே காப்பாற்ற இயலாத அரசால் பொதுமக்களை எப்படிக் காப்பாற்ற இயலும்?' என்றிருக்கிறார் ஜெயலலிதா.
Dinakaran attack: Jayalalithaa demands dismissal of Govt.
கருத்துக்களை விவாதப் பதிவில் தெரிவியுங்கள்
Posted by
சிறில் அலெக்ஸ்
at
11:39 PM
6
comments
ச:'இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம்' - கருணாநிதி
தினகரன் அலுவலகத் தாக்குதலில் இறந்தவர்களுக்கு தலா ரூ. 2 லட்சம் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.
மேலும் தி.மு.க ஒரு ஜனநாயகக் கட்சி என்றும் அதில் வாரிசு அரசியலுக்கு இஅடமில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
சம்பவத்தில் ஈடுபட்டவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அவர், கருத்துக் கணிப்புக்களின்மேல் தனக்கு ஒருபோதும் நம்பிக்கை இருந்ததில்லை என்றும் இதைக்கொண்டு கட்சியில் விரிசலை ஏற்படுத்த யாரும் முயலவேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார்.
No room for dynastic politics in DMK: Karunanidhi
கருத்துக்களை விவாதப் பதிவில் தெரிவியுங்கள்
Posted by
சிறில் அலெக்ஸ்
at
10:18 PM
1 comments
ச: கருத்துக் கணிப்பு, தாக்குதல், கொலைகள் - விவாதம்
தமிழகத்தின் ஆளுங்கட்சியின் ஆளுமைகளாக திகழ்ந்த கருணாநிதியின் வாரிசுகளுக்குள் முன்னெப்போதும் இல்லாத அளவில் பகிரங்கமான மோதல் வெடித்திருக்கிறது. முதலாவதாக கருணாநிதியின் மனசாட்சி என்று வர்ணிக்கப் பட்ட முரசொலி மாறனின் புதல்வர்களின் எழுச்சியால் கருணாநிதியின் குடும்பத்துக்குள் ஏற்பட்ட சலசலப்பும் அதன் தொடர்ச்சியாக தயாநிதிமாறனை முன்னிலைப் படுத்தும் சன்டிவி, தினகரன் குழும ஊடகங்களின் செய்திகள், கருத்துக் கணிப்புகள், அடுத்து திமுக தலைவரின் மகன்களுக்குள் பிளவை உண்டாக்கும் விதமான இரண்டாவது கருத்துக் கணிப்பு இன்று பகிரங்கமான மோதலாக வெடித்து மூன்று உயிர்களைப் பலி கொண்டிருக்கிறது.
இதற்கு காரணமானவராக அழகிரியை நேரடியாக சுட்டி சன்டிவி கடுமையாக விமர்சித்திருக்கிறது. தா. கிருட்டிணன் கொலைவழக்கிலும் அழகிரியின் தொடர்பு குறித்து இன்று முதன்முறையாக சன்டிவி விமர்சித்தது.
ஸ்டாலின் அழகிரியை விட செல்வாக்கு உள்ளவர் என்ற கணிப்புக்கான எதிர்ப்பாக தினகரன் பத்திரிகை அலுவலகத்தின் மீது நடத்தப் பட்டுள்ள தாக்குதல் விளைவித்துள்ள சூழல் ஒரு புறம் இப்போது அத்தகைய ஒரு கருத்துக் கணிப்புக்கான அவசியம் என்ன என்பது ஒரு புறம் இதன் பின்விளைவுகளை எதிர்கொள்ளும் ஊடகத்தன்மை மறுபுறம் என நம் முன் கேள்விகள் பல நீண்ட வரிசையில் காத்திருக்கின்றன. இது பற்றி ஒரு அரசியல் அலசல், பொதுவிவாதத்தை முன்வைக்கிறோம்.
இன்றைய அரசியல் நிகழ்வுகள் தமிழக அரசியலில் நிகழ்த்தப் போகும் தாக்கங்கள் என்னென்ன? இந்த நிகழ்வுகளின் பின்னணி என்ன? இது அரசியல்ரீதியாக திமுகவுக்கு என்ன விளைவுகளை ஏற்படுத்தும்? இவை பற்றி விவாதிக்கலாம் வாருங்கள். உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்.
(விவாதத்தை திசை திருப்பும் விதமான கருத்துகள் வெளியிடப் படமாட்டாது.)
Posted by
✪சிந்தாநதி
at
9:37 PM
28
comments
ச:தினகரன் தாக்குதல் 'போராடுவேன்' - மாறன் - Update
மதுரை. மே 9. தினகரன் அலுவலகம் தாக்கப்பட்ட விவகாரத்தில் நீதி கிடைக்கும்வரை மத்திய மாநில அரசுகளுடன்ன் போராடுவ்வேன் என சன் நிறுவன இயக்குனர் கலாநிதி மாறன் தெரிவித்துள்ளார்.
இது பத்திரிகை சுதந்திரத்துக்கு எதிரான தாக்குதல் என அவர் கூறியுள்ளார்.
தாக்குதல் நடந்தபோது காவல்துறையினர் அமைதியாக பார்த்ஹ்துக்கொண்டிருந்தனர் என தினகரன் பணியாளர்கள் கூறியுள்ளதைப்பற்றி கேட்டபோது அவர்களின் கருத்தை நம்புகிறேன் என பதிலளித்தார்.
கருத்துக்கணிப்புக்கு எதிரான அழகிரியின் கருத்துக்களைப் பற்றி கேட்டபோது அதற்கு தினகரன் பணியாளர்கள் 3 பேரைக் கொல்வது முடிவல்ல என்றார்.
Kalanidhi to fight against state, Centre till justice rendered
பத்திரிகையாளர்கள் கண்டனம்
தினகரன் அலுவலகம் தாக்கப்பட்டு மூன்றுபேர் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு மெட்ராஸ் பத்திரிகையாளர் யூனியன் கண்டனம் தெரிவித்துள்ளது.
Journalists deplore killing of Dinakaran employees
இதனிடையே பத்திரிகைக்கு பேட்டியளித்த தமிழக காங்கிரசின் செய்தித் தொடர்பாளர் ஜெயந்தி நடராஜன் சம்பவம் குறித்த சரியான விபரம் தங்களுக்கு கிடைக்கவில்லை, உயிர் சேதங்கள் இருப்பின் அது கண்டிக்கத்தக்கது எனக் கூறியுள்ளார்.
Congress downplays incident of sibling rivalry in DMK
Posted by
சிறில் அலெக்ஸ்
at
9:20 PM
3
comments
ச:'சம்போவைக் காப்பாத்துங்கள்' லண்டனில் இந்துக்கள் கவலை
வேல்ஸில் அமைந்துள்ள இந்துக் கோவிலுக்குச் சொந்தமான சம்போ எனும் காளை மாட்டைக் கொல்லப்படுவதிலிருந்து காப்பாற்ற இங்கிலாந்தில் வாழும் இந்துக்கள் பலர் முயற்சி செய்து வருகின்றனர்.
மே 3ல் சுற்றுச் சூழல் அலுவலகத்திலிருந்து வந்த ஆணைப்படி சம்போவுக்கு டி.பி நோய் பிடித்துள்ளதால் அதை மே 14க்குள் கொல்லவேண்டும் என ஆணை பிறப்பித்தது. இதை அடுத்து சம்போவின் உயிரைக் காப்பாற்றக் கோரிக்கைகளும் கூட்டு முயற்சிகளும் தொடர்கின்றன.
சம்போவைக் கொல்வது தங்கள் மத நம்பிக்கைக்கையை காயப்படுத்தும் என இதற்காக அமைக்கப்பாட்டுள்ள குழுவின் தலைவர் கூறியுள்ளார்.
கோவில் நிர்வாகம் சம்போவுக்கு மருத்துவ உதவியை நாடியுள்ளதாகவும் மற்ற வளர்ப்பு மிருகங்களிடமிருந்து சம்போ தனிமைப் படுத்தப்பட்டுவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Save Shambo, Hindu groups urge UK Govt.
Posted by
சிறில் அலெக்ஸ்
at
9:10 PM
0
comments
b r e a k i n g n e w s...
