இந்திய வானிலை அலுவலக அறிக்கையின்படி அந்தமானின் போர்ட் ப்ளையரிலிருந்து 116 கி,.மீ தூரத்தில் ஹட் பே யில் நேற்று இரவு ( இன்று காலை)1.20 க்கு 5.9 ரிச்டர்அளவுள்ள நிலநடுக்கம் ஏற்பட்டது. அமெரிக்க நிலவியல் துறை 6.1 என்று கணக்கிட்டுள்ளது. ராய்டர்ஸ் செய்தியின்படி அந்தமான்வாசிகள் தங்கள் வீடுகளைவிட்டு ஓடியதாக தெரிகிறது. 2004 சுனாமியின் நினைவுகள் அவர்களை பயமுறுத்தியிருக்க வேண்டும். பொருட்சேதமோ ஆட்சேதமோ இதுவரை தெரியவில்லை.
Quake hits India's Andaman islands, revives fears - Yahoo! India News
Saturday, June 23, 2007
ச: அந்தமானில் நிலநடுக்கம்:சுனாமி பயமில்லை
Posted by
மணியன்
at
12:33 PM
0
comments
அட்லாண்டிஸ் விண்கலம் பூமிக்கு திரும்பியது .
அட்லாண்டிஸ் விண்கலம் வீராங்கனை சுனிதா உள்பட 7 நிபுணர்களுடன் பத்திரமாக தரை இறங் கியது.விண்வெளியில் அமைக்கப் பட்டு வரும் சர்வதேச மிதக் கும் ஆய்வுக்கூடத்துக்கு அமெரிக்காவின் நாசா நிறுவனம்கடந்த 8-ந்தேதி அட்லாண்டிஸ் விண்கலத்தை அனுப்பியது. விண்வெளி ஆய்வுக்கூடத்தில் 6 மாதங் களுக்கு மேல் தங்கி ஆய்வு நடத்திய இந்திய வீராங்கனை சுனிதாவை அழைத்து வரவும் அங்கு தளவாடங்களை பொருத்தவும் இந்த விண்கலம் அனுப்பபட்டது. சுனிதா மற்றும் 6 விண் வெளிநிபுணர்களுடன் அட்லாண்டிஸ் ராக்கெட் கடந்த 19-ந்தேதி மீண்டும் பூமிக்கு புறப்பட்டது.ஏற்கனவே அட்லாண்டிஸ் விண்கலம் பூமியில் இருந்து புறப்பட்ட போது அதன் வெப்ப தடுப்பு தகடு சேதம் அடைந்தது.ஆய்வுக் கூடத்தில் கம்ப்ïட் டர்களும் பழுதடைந்தன. இதனால் சுனிதா பூமிக்கு திரும்புவதில் சிக்கல் எழுந்தது. இந்த கோளாறுகள் சரி செய் யப்பட்டு அட்லாண்டிஸ் விண்கலம் பூமிக்கு புறப்பட் டதும் புளோரிடா மாநிலம் கேப்கனவரால் கென்னடி தளத்தில் தரை இறங்க திட்ட மிடப்பட்டு இருந்தது.ஆனால் புளோரிடா மாநிலத்தில் மோசமான வானிலை காணப்பட்டது. பலத்த காற்று வீசியது. இதனால் விண்கலம் தரை இறங்குவது மேலும் தாமதமானது.இதைதொடர்ந்து கலி போர்னியா மாநிலத்தில் மொஜாவ் பாலைவனப்பகு தியில் உள்ள கென்னடி விமானபடை தளத்தில் விண் கலத்தை தரைஇறக்க முடிவு செய்யப்பட்டது.
விண்கலம் வானவெளி மண்டலத்தில் இருந்து புவி மண்டலத்துக்குள் நுழையும் போது விண்கலத்துக்கு ஆபத்து ஏற்படுமோ என்ற பரபரப்பு 3நிமிடங்களுக்கு ஏற்பட்டது. விண்கலம் பூமியில் தரை இறங்குவது மேலும் தாமதப்படுத்த முடியாத நிலையும் ஏற்பட்டது. இதில் உள்ள எரிபொருள் ஞாயிற்றுக்கிழமை வரைதான் போதுமானாகதான் இருந் தது.ஆனால் மிகுந்த பர பரப்புக்கு இடையே நேற்று நள்ளிரவு 1.19 மணிக்கு அட்லாண்டிஸ் விண்கலம் கலிபோர்னியாவில் எட்வர்ட் கென்னடி விமானப்படை தளத்தில் பத்திரமாக தரை இறங்கியது.அப்போது `நாசா' நிறு வனத்தில் கட்டுப்பாட்டு நிலைய விஞ்ஞானிகள் கைதட்டி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.விண்வெளியில் 195 நாட் களுக்கு மேல் தங்கி இருந்த பெண் என்று சாதனை படைத்த சுனிதா பூமிக்கு எந்த ஆபத்தும் இன்றி திரும்பியது அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
அட்லாண்டிஸ் விண்கலத் தில் இருந்து இறங்கிய சுனிதாவுக்கும் மற்ற 6 வீரர்களும் பல்வேறு மருத் துவசோதனைகள் நடத் தப்பட்டன. விண்வெளியில் 6 மாதங் களுக்கு மேல் தங்கி இருந்த சுனிதாவுக்கு இந்த பூமி இப் போது ஒரு புதிய உலகம் போல் தோன்றுகிறது. அவர் சகஜ நிலமைக்கு திரும்ப இன்னும் 45 நாட்கள் ஆகும்.
சுனிதாவுக்குப்பதில் இப்போது மிதக்கும் விண் வெளி ஆய்வுக்கூடத்தில் ஆன்டர்சன் என்ற வீரர்தங்கி இருக்கிறார்.அட்லாண்டிஸ் விண்கலம் தரை இறங்கும் இடம் எட்வர்ட் கென்னடி விமானப்படை தளத்துக்கு மாற்றப்பட்டதால் நாசா நிறுவனத்துக்கு கூடுதலாக 17 லட்சம் டாலர் செலவு பிடித்துள்ளது.
Posted by
Adirai Media
at
10:57 AM
0
comments
அஸ்ஸாமில் குண்டு வெடிப்பு 4 பேர் பலி.
அசாம் தலைநகர் கௌகாத்தியில் இன்று காலை உல்பா தீவிரவாதிகள் நடத்திய குண்டுவெடிப்பில் 4 பேர் கொல்லப்பட்டனர். 20 பேர் படுகாயம் அடைந்தனர். அங்குள்ள பரபரப்பான வியாபார பகுதியான மக்கோவாவில் ஒரு மசூதி முன்பு இன்று காலை 7.30 மணிக்கு இந்த குண்டு வெடிப்பு நடத்தப்பட்டது. இந்த மசூதியை ஒட்டி காய்கறி மார்க்கெட் இருப்பதால் பொதுமக்கள் அலறி அடித்துக்கொண்டு ஓடினர். இதில் காயமடைந்தவர்கள் உடனடியாக அருகில் உள்ள மார்வாரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
Posted by
Adirai Media
at
10:26 AM
0
comments
பயங்கர காற்று : 4படகுகள் கடலில் மூழ்கின.
அதிராம்பட்டினம், மல்லிப்பட்டினம் பகுதிககளில் இருந்து கடலுக்கு சென்ற 4 படகுகள் பயங்கர காற்றினால் கடலில் மூழ்கின. ஆனால் மீனவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி விட்ட னர். தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம், புதுப்பட்டினம், மல்லிப்பட்டினம் பகுதிகளை சேர்ந்த மீனவர் கள் சுமார் 250 பைபர் மற் றும் நாட்டுப்படகுகளில் நேற்றுமுன்தினம் இரவு கட லுக்கு மீன் பிடிக்க சென்றனர். நள்ளிரவு 1 மணி அளவில் கடலில் பயங்கர காற்று வீசியது. இதில் அதிராம்பட்டின், மல்லிபட்டினம் பகுதிகளில் இருந்து சென்ற தலா 2 படகுகள் கடலில் கவிழ்ந்தன. அதில் இருந்த 8 மீனவர்கள் அருகில் இருந்த படகுகளில் ஏறி உயிர் பிழைத்தனர். ஆனால் 4 படகுகளும் கடலில் மூழ்கி விட்டன. காற்று கடுமையாக வீசியதால் மீனவர்களால் படகுகளை செலுத்த முடியவில்லை. இதனால் அதிராம்பட்டினம், மல்லிப்பட்டினம் பகுதிகளில் இருந்து சென்ற படகுகள் அனைத்தும் கோடியக்கரை, முத்துப்பேட்டை, வேதாரண்யம் ஆகிய பகுதிகளில் கரை ஒதுங்கின. நேற்று காலை வெகு நேரமாகியும் மீனவர்கள் கரை திரும்பாததால் மீனவ கிராமங்களில் பதற்றம் ஏற்பட்டது. ஆனால் அனைத்து மீனவர்களும் உயிருடன் இருப்பதாக கூறப்பட்டதையடுத்து பதற் றம் தணிந்தது. மீன்வளத்துறை ஆய் வாளர் ராஜேஸ்வரன் கூறு கையில், காற்று வேகமாக வீசியதால் 4 படகுகள் மட்டும் கடலில் மூழ்கி விட்டன. மற்ற படகுகள் கரை ஒதுங்கி விட்டன. மீனவர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை. இன்னும் 2 நாட்களுக்கு காற்று வீசும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே மீனவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனகூறினார்
Posted by
Adirai Media
at
10:17 AM
2
comments
Friday, June 22, 2007
விரைவில் 30 மத்திய பல்கலைக்கழகங்கள்.
உலகளாவிய தரத்தில் நாட்டில் 30 மத்திய பல்கலைக்கழகங்களை நிறுவ உள்ளதாக பிரதம அமைச்சர் மன்மோஹன் சிங் தெரிவித்துள்ளார்.
மும்பை பல்கலைக்கழக விழாவொன்றில் அவர் இதனைத் தெரிவித்தார். "மனித வள மேம்பாட்டுத்துறையும், பல்கலைக்கழக ஆணையமும் மத்திய திட்ட ஆணையமும் இணைந்து இரண்டு மூன்று மாதங்களில் இதனைச் செயற்படுத்தும் என்றார் அவர்.
நாட்டின் 340 மாவட்டங்களில் உயர்கல்வி வாய்ப்புகள் மிகவும் குறைந்து காணப்படுவதாக அவர் மேலும் சொன்னார்.
மேலும்.....
Posted by
வாசகன்
at
9:23 PM
0
comments
மூன்று வயது குழந்தை மீது கிரிமினல் குற்றம்.
பீஹாரின் கத்திஹார் மாவட்டத்தில் இரு இனத்தவரிடையே மத ஊர்வலம் சம்பந்தமாக ஏற்பட்ட தகராறில், மூன்றே வயதான ராஜ் குமார் ஜா என்கிற குழந்தை மீது கலகம் விளைவித்தல், கொலை முயற்சி ஆகிய குற்றங்கள் காவல் துறையினரால் பதிவு செய்யப்பட்டுள்ளன.
குற்றங்கள் நிகழ்ந்ததாகச் சொல்லப்படும் காலக் கட்டத்தில் அக்குழந்தை தவழும் நிலையில் தான் இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மணிஹரி காவல் அதிகாரி "பெயர் குழப்பத்தால் இது நிகழ்ந்திருக்கும்" என்று சொல்லியுள்ளார்.
மேலதிகாரிகள் விரிவான அறிக்கையை கோரியுள்ளனர்.
முன்னர் ஒருமுறை ஆறே வயதுடைய சிறுவன் மீது பாலியல் குற்றம் சுமத்தப்பட்டு, நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட நிகழ்வும் பீகாரில் நடந்துள்ளது.
மேலும் படிக்க....
Posted by
வாசகன்
at
9:12 PM
0
comments
குடியரசுத்தலைவர்:அப்துல்கலாம் திட்டவட்டமாக மறுப்பு
இரண்டாம் முறையாக குடியரசுத்தலைவராக வருவது பற்றிய யூகங்களை இன்று அப்துல்கலாம் திட்டவட்டமாக மறுத்துள்ளார். அரசியல் சர்ச்சைகளில் குடியரசுத்தலைவர் மாளிகை ஈடுபடுவதை விரும்பவில்லை என்பது காரணமாகச் சொல்லப்பட்டுள்ளது.
படிக்க..
Posted by
வாசகன்
at
9:07 PM
0
comments
இராட்டினத்திலிருந்து மாணவி விழுந்த வழக்கு: பூங்கா உரிமையாளர் தலைமறைவு.
சென்னை அருகே உள்ள எம்.ஜி.எம். டிஸ்ஸிவேர்ல்ட் தீம் பூங்காவில் மாணவி ஒருவர் ராட்சத ராட்டினத்திலிருந்து கீழே விழுந்தது தொடர்பான வழக்கில் அந்த பொழுதுபோக்குப் பூங்காவின் உரிமையாளர் ராஜன் தலைமறைவாகி விட்டார். அவரைப் போலீஸார் தேடி வருகின்றனர்.
சென்னை அருகே முட்டுக்காட்டில் எம்.ஜி.எம். டிஸ்ஸிவேர்ல்ட் பொழுது போக்குப் பூங்கா உள்ளது. இந்தப் பூங்காவுக்கு சமீபத்தில் வந்த அண்ணா பல்கலைக்கழக மாணவிகள் ராட்சத ராட்டினத்தில் ஏறி சுற்றினர்.
அப்போது இருக்கை பெல்ட் சரியாக இல்லாத காரணத்தால் ஒரு மாணவி 30 அடி உயரத்திலிருந்து தூக்கி வீசப்பட்டார். இதில் அவரது இடுப்பு மற்றும் விலா எலும்புகள் முறிந்து போய் ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
மேலும் சமீபத்தில் லட்சுமி என்ற தோட்டத் தொழிலாளி, ராட்டினத்தின் இறக்கை மோதி பரிதாபமாக இறந்தார். இந்த இரு சம்பவங்களிலும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவவோ, அவர்களை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லவோ பூங்கா ஊழியர்கள் முன்வரவில்லை.
மாணவி கீழே விழுந்த சம்பவம் தொடர்பாக இரு ஊழியர்களும், பூங்கா மேலாளரும் கைது செய்யப்பட்டுள்ளனர். பூங்காவுக்கு போலீஸார் சீல் வைத்துள்ளனர்.
தற்போது பூங்கா உரிமையாளர் ராஜன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் தலைமறைவாகி விட்டார். அவரைப் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
எம்.ஜி.எம். பூங்காவில் பாதுகாப்பு அம்சங்கள் படு மோசமாக இருப்பதாக போலீஸார் கூறியுள்ளனர்.
தட்ஸ்தமிழ்
Posted by
வாசகன்
at
7:48 PM
0
comments
ச: கேரளாவில் பலத்த மழை
இரண்டாவது நாளாக இன்று கேரளாவில் பலத்த மழை பெய்து வருகிறது. கடலோரப்பிரதேசங்களும் மலைப்பிரதேசங்களும் இந்த மழையால் கடும் சேதம் அடைந்துள்ளன. கடலரிப்பைத் தொடர்ந்து பலர் நிவாரண முகாம்களுக்கு மாற்றப் பட்டுள்ளனர். இடுக்கி மாவட்டத்தில் மலைச்சரிவு ஏற்பட்டது. ்...மேலும்...
Posted by
மணியன்
at
6:09 PM
0
comments
ச:மதுரை இடைதேர்தல்: உண்ணாவிரத செய்தியை அமைச்சர் பாலு மறுப்பு
மதுரை இடைதேர்தலை தள்ளிவைத்தால் முதல்வர் கருணாநிதி உண்ணாவிரதம் இருப்பார் என்ற செய்தியை (சற்றுமுன்னில்) திமுக மறுத்துள்ளது. மத்திய கப்பல்துறை அமைச்சரும் நாளுமன்ற திமுக தலைவருமான டி ஆர் பாலு நிருபர்களிடம் இது முற்றிலும் ஆதாரமற்றது, உண்மைக்கு புரம்பானது என்று கூறினார். என் தலைவர் அவ்வாறு எந்த அறிக்கையும் வெளியிடவில்லை எனக் கூறினார்.
The Hindu News Update Service
Posted by
மணியன்
at
6:01 PM
0
comments
ச:பிரதிபா பாடிலின் சகோதரர் கொலைகாரரா ?
குடியரசுதலைவர் தேர்தலின் கண்ணியத்தைக் குறைக்கும் விதமாக இன்று தேசிய ஜனநாயகக் கூட்டணி இதழாளர் கூட்டம் ஒன்றில் ரஜனி பாடில் என்ற பெண் தனது கணவரை பிரதீபா பாடிலின் சகோதரர் கொன்றதாக குற்றம் சாட்டினார். மும்பையை சேர்ந்த ரஜனி யுபிஏ வேட்பாளர் தன் கொலைகார சகோதரருக்கு அடைக்கலம் கொடுத்துவந்ததால் தற்போதைய குடியரசுத் தலைவர் அப்துல் கலாமிடமும் மனு அளித்திருப்பதாகக் கூறினார்.
ஆளும்கட்சி இதனை தே.ஜ.கூ இனால் 'ஜோடிக்கப்பட்ட' வழக்கு என்று கூறினர். கண்ணியம் குறைந்துவரும் அரசியல், குடியரசுத் தலைவர் தேர்தலையும் விட்டு வைக்கவில்லை.
DNA - India - Backed by NDA, woman claims Pratibha's brother killed husband - Daily News & Analysis
Posted by
மணியன்
at
5:53 PM
1 comments
மதுரை தேர்தலை ஒத்திவைத்தால் உண்ணாவிரதம் : கருணாநிதி
மதுரை மேற்கு தொகுதி இடைத் தேர்தலை ஒத்தி வைத்தால் தமிழக முதல்வர் கருணாநிதி காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபடுவார், என மத்திய நிதித்துறை இணையமைச்சர் பழனிமாணிக்கம் தெரிவித்தார்.
வன்முறை, விதிமீறல், பணப்பட்டுவாடா உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக மதுரை மேற்கு தொகுதி இடைத் தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என பல்வேறு தரப்பிலும் கோரிக்கை எழுந்தது.
இந்நிலையில், தலைமைத் தேர்தல அதிகாரி நரேஷ் குப்தா, அவரசமாக டெல்லிக்கு அழைக்கப்பட்டுள்ளார். தலைமைத் தேர்தல் ஆணையத்திடம் மதுரை நிலவரம் குறித்து அவர் விவரிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், மத்திய அமைச்சர் பழனிமாணிக்கம் டெல்லியில் அறிக்கை வெளியிட்டார். அதில் கூறியிருப்பதாவது:
வரும் 26ம் தேதி மதுரை மேற்குத் தொகுதியில் சுமூகமான முறையில் வெளிப்படையான தேர்தல் நடத்த மாநில அரசு அனைத்து நடவடிக்கையும் எடுத்து வரும் நிலையில், தேர்தலை ஒத்திவைக்கக் கூடாது. அப்படி ஒத்திவைத்தால் முதல்வர் கருணாநிதி, தேர்தல் ஆணையம் முன்பு காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபடுவார்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(மூலம் - வெப்துனியா)
நன்றி: Yahoo! Tamil
இதன் முன் வந்த செய்தி:
தலைமைத் தேர்தல் ஆணையருடன் இன்று மதுரை நிலவரம் குறித்து குப்தா ஆலோசனை நடத்துகிறார். இதையடுத்து, மதுரை தேர்தல் அடுத்த மாதம் 4ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படலாம் என கூறப்படுகிறது.
இது தொடர்பான அறிவிப்பு இன்று பிற்பகலில் வெளியிடப்படலாம் எனத் தெரிகிறது.
(மூலம் - வெப்துனியா)
Posted by
மணியன்
at
12:51 PM
0
comments
ச:பேராசிரியருக்கு துணை குடியரசுத் தலைவர் பதவி ?
தமிழ்நாட்டின் குடிமகனொருவர் குடியரசுத் தலைவர் பதவி வகிக்க முடியாது போனாலும் துணை கு.தலைவர் பதவிக்கு முதன்முறையாக ஒரு தமிழன் பதவி ஏற்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுகவின் தமிழருக்கு ஆதரவு தர மறுத்த தமிழககட்சிகள் என்ற கூற்றை எதிர்க்கும் விதமாக முதல்வர் கருணாநிதி மாநில நிதியமைச்சர் பேராசிரியர் அன்பழகன் அவர்களை நாடாளுமன்ற மாநிலங்களவை தலைவராக தேர்ந்தெடுக்க ஐக்கிய முன்னேற்ற கூட்டணி தலைவர் சோனியா காந்தியிடம் எடுத்துரைத்ததாக தெரிகிறது. திக தலைவர் வீரமணிக்கும் பேராசிரியருக்கும் இடையே பின்னவர் பெயர் பரிந்துரைக்கப் பட்டுள்ளதாகத் தெரிகிறது.
மேல் விவரங்களுக்கு..DMK may bid for Anbazhagan as vice president - Yahoo! India News
Posted by
மணியன்
at
12:40 PM
2
comments
ச:தேசியக்கொடியை தவறாக பதிப்பித்ததற்கு கேரள அரசு வருத்தம் தெரிவித்தது
பள்ளி சிறுவர்களுக்கு சுற்றுச்சூழல் விப்புணர்ச்சியை வளர்க்கும் விதமாக கேரள அரசு வினியோகித்த நாட்குறிப்பு புத்தகங்களில் மூவர்ண கொடியாக இல்லாமல் தேசியக் கொடி ஐந்து வர்ணங்களில் வெளியானதற்கு கல்வி அமைச்சர் பேபி வருத்தம் தெரிவித்தார். இது ஆளும் இடது சாரி கூட்டணி ஆட்சிக்கு மிகவும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது.
இதுபற்றி மேலும்..The Hindu News Update Service
Posted by
மணியன்
at
12:04 PM
0
comments
ச:குடியரசுதலைவர் தேர்தல்: ஜெயலலிதா தில்லி பயணம்
அ இ அதிமுக தலைவர் செல்வி ஜெயலலிதா குடியரசுத்தலைவர் தேர்தலில் இரண்டாம் முறை பணியாற்ற திரு அப்துல் கலாம் அவர்களை வற்புறுத்த முகாமிட்டுள்ள மற்ற மூன்றாம் அணி தலைவர்களுடன் சேர்ந்துகொள்ள இன்று காலை பத்துமணியளவில் தில்லி பயணமாகிறார். அவர் தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைவர்களுடனும் பேச்சு வார்த்தை நடத்துவார்.
The Hindu News Update Service
Posted by
மணியன்
at
11:50 AM
0
comments
b r e a k i n g n e w s...
