Sunday, June 3, 2007
ச: தினமலரில் சற்றுமுன்....& சென்னையில் "போட்காஸ்டிங்' கலந்துரையாடல்
வெப்சைட்களில் எழுதி போரடித்துப் போனவர்கள்... இப்போது தங்கள் குரல் ஒலிபரப்பவும், பதிவு செய்த நிகழ்ச்சிகளை ஒளிபரப்பவும் விருப்பப்படுகின்றனர்.
ஒரு ரேடியோ ஸ்டேஷன் செய்ய வேண்டிய வேலையை இப்போது இன்டர்நெட் எளிதில் செய்துவிடுகிறது. ஒவ்வொரு வரும் தங்களது நிகழ்ச்சிகளை ஒலிபரப்ப (போட்காஸ்டிங்) அல்லது ஒளிபரப்ப (வீடியோ பிளாக்) இன்டர்நெட் உதவியை நாடுகிறார்கள். இலவசமாக எளிதில் ஒவ்வொருவருவரும் ஒரு வெப்ரேடியோ உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு சென்னையில் ஜூன் 910ம் தேதிகளில் டைடல் பார்க்கில் கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதில் போட்காஸ்டிங் தொடர்பான சந்தேகங்களை தெளி வாக்கிக் கொள்ளவும், விவாதித்துக் கொள்ளவும் முடியும். நாலெட்ஜ் பவுண்டேஷன் சார்பில் இந்நிகழ்ச்சி நடக்கிறது. மேலும் விபரங்களுக்கு: http://podworks.in/
[இந்தச் செய்தி தினமலர் இணைய தளத்தில் வெளியிடப் பட்டுள்ளது. இந்த செய்தியுடன் பின்வரும் சற்றுமுன் குறித்த செய்தியும் அதே பக்கத்தில் வெளியிடப் பட்டுள்ளது.]
"சற்றுமுன்' செய்திகள்
இப்போது பத்திரிகைகள் செய்ய வேண்டிய வேலைகளை எல்லாம் இதுபோன்ற பிளாக்கர்கள் வலைப்பதிவர்களும் செய்யத் துவங்கிவிட்டனர். பத்திரிகையாளர்களுக்கு இணை யாக போட்டி போட்டுக்கொண்டு ஒவ்வொரு நாளும் செய்தி, கட்டுரைகள் எழுதுவோர் அதிகரித்துவிட்டனர். http://satrumun. blogspot.com இந்த தளத்தில் ஹெல்மட் போன்ற அன்றாட நாட்டு நடப்பு முதல் அரசியல் வரை அலசப்படுகிறது.
Posted by
✪சிந்தாநதி
at
9:12 PM
2
comments
25 பூங்காக்களில் இசை நிகழ்ச்சிகள்
சென்னை மாநகராட்சியில் 25 பூங்காக்களில் வாத்தியக்குழுவின் இசை நிகழ்ச்சிகள் நாள்தோறும் மாலை 5 மணி முதல் 7 மணி வரை நடைபெறுகிறது என மாநகராட்சி அறிவித்துள்ளது.
மாநகராட்சிக் கூட்டத்தில் அண்மையில் இது குறித்து மேயர் மா. சுப்பிரமணியன் அறிவித்திருந்தார்.
இதையடுத்து இப்பூங்காக்களில் வாத்தியக்குழுவின் இசை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
1. 2வது மண்டலத்தில் 22வது வார்டில் 3ந்தேதி சிமெண்ட் சாலையில் உள்ள அண்ணா பூங்கா,
2. 30வது வார்டில் 4ந்தேதி ஸ்ரீராமுலு பூங்கா,
3. 3வது மண்டலம் 47வது வார்டில் 7ந்தேதி மைலேடிஸ் பூங்கா,
4. 37வது வார்டில் 8ந்தேதி மாதவரம் நெடுஞ்சாலை மகாத்மா காந்தி பூங்கா,
5. 42வது வார்டு 9-ந்தேதி பேசின் யானை கவுனி சாலை நியூபூங்கா,
6. 4வது மண்டலத்தில் 51வது வார்டில் 10ந்தேதி சஜ்ஜாத் உசேன் பூங்காவிலும்,
6. 55வது வார்டில் 11ந்தேதி ஜீவா பூங்காவிலும் இந்த இசை நிகழ்ச்சிகள் நடைபெறும்.
Dinamani
Posted by
Boston Bala
at
9:08 PM
1 comments
குத்தம்பாக்கம் இளங்கோவுக்கு "அறம்' விருது: ஜூன் 6-ல் ஆளுநர் வழங்குகிறார்
2006-ம் ஆண்டுக்கான "அறம்' விருது, திருவள்ளூர் மாவட்டம் குத்தம்பாக்கத்தைச் சேர்ந்த ஆர். இளங்கோவுக்கு (47) வழங்கப்படுகிறது. இவர், குத்தம்பாக்கம் கிராமத் தன்னாட்சி அறக்கட்டளையின் தலைவராக உள்ளார்.
ஸ்ரீராம் இலக்கியக் கழகத்தின் சார்பில் வழங்கப்படும் இந்த விருதுடன், ரூ. 1 லட்சம் ரொக்கப் பரிசும் அடங்கும்.
வேதிப்பொறியியலில் பட்டம் பெற்ற இளங்கோ, விஞ்ஞானி பணியை விட்டுவிட்டு கிராமச் சேவையில் ஈடுபடத் தொடங்கினார். குத்தம்பாக்கம் ஊராட்சித் தலைவராக இருந்த காலத்தில் பல்வேறு மக்கள் நலப்பணிகளை மேற்கொண்டார். தற்போது, தொடர்ந்து அப்பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
இளங்கோவுக்கு விருதுத் தொகை ரூ. 1 லட்சத்துடன், மேலும் ரூ. 1 லட்சம் மானியமாக அளிக்கப்படுகிறது. இந்தத் தொகை அவரின் 'வலைய வளர்ச்சிப் பொருளாதாரம்' என்ற திட்டத்தைச் செயல்படுத்த உதவும். மேலும், வட்டியில்லாமல் ரூ. 2 லட்சம் கடனுதவி அளிக்கப்படுகிறது என்று கூறினர்.
Dinamani
Posted by
Boston Bala
at
8:45 PM
3
comments
கருணாநிதி 84
தமிழக முதல்வர் கருணாநிதியின் 84-வது பிறந்தநாள் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 3) கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பெரும்பாலான நிகழ்ச்சிகளில் கருணாநிதி பங்கேற்கிறார்.
காலை 7 மணிக்கு அண்ணா, பெரியார் நினைவிடங்களில் கருணாநிதி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்துகிறார்.
காலை 8 மணிக்கு கோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதியை முக்கிய பிரமுகர்களும், கட்சி நிர்வாகிகளும் சந்தித்து வாழ்த்து கூறுகின்றனர்.
காலை 8.45 மணிக்கு நெடுஞ்சாலைத் துறை சார்பாக தமிழகமெங்கும் மரக்கன்று நடும் திட்டத்தின் கீழ் சென்னை அண்ணா மேம்பாலம் அருகில் மரக்கன்றை கருணாநிதி நடுகிறார்.
காலை 9 மணிக்கு அண்ணா அறிவாலயத்திலும், மாலை 4 மணிக்கு சி.ஐ.டி. காலனியில் உள்ள அவரது இல்லத்திலும் முக்கியப் பிரமுகர்களும், கட்சி நிர்வாகிகளும் சந்தித்து வாழ்த்து கூறுகின்றனர்.
வாழ்த்து பெறும் இடங்களில், உண்டியல் மூலம் பிறந்த நாள் நிதி வசூலிக்கப்பட்டு பல்வேறு நலப் பணிகளுக்கு பயன்படுத்தப்படும்.
இரவு 7 மணிக்கு கிண்டி ஹால்டா சந்திப்பு அருகே நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கருணாநிதி பங்கேற்றுப் பேசுகிறார். கூட்டத்தில் பலருக்கு நிதி உதவிகளும், தொழில் கருவிகளும் வழங்கப்பட உள்ளன.
பொதுக்கூட்டத்தில் அமைச்சர்கள் க. அன்பழகன், மு.க. ஸ்டாலின், ஆர்க்காடு வீராசாமி, துரைமுருகன், பரிதி இளம்வழுதி ஆகியோர் பங்கேற்கின்றனர்.
Dinamani
Posted by
Boston Bala
at
8:33 PM
0
comments
இடைத்தேர்தல்: உல்லால் தொகுதியில் 62% வாக்குப்பதிவு
மங்களூர் மாவட்டம் உல்லால் சட்டப் பேரவைத் தொகுதிக்கு சனிக்கிழமை இடைத்தேர்தல் நடந்தது. இத்தொகுதியில் யூ.டி.காதர் (காங்கிரஸ்), சந்திரசேகர உசில் (பாஜக), அபுபக்கர் நடேகல் (மதச்சார்பற்ற ஜனதா தளம்), பாலகிருஷ்ண ஷெட்டி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்) மற்றும் பரத்ராஜ் ஷெட்டி (சுயேச்சை) ஆகியோர் போட்டியிட்டனர்.
சுயேச்சை வேட்பாளர் பரத்ராஜ் ஷெட்டியைத் தவிர மற்ற நான்கு வேட்பாளர்களும் இத் தொகுதியில் வாக்களித்தனர். பரத்ராஜ் ஷெட்டிக்கு இத் தொகுதியில் வாக்கு இல்லை.
வாக்குச்சாவடிக்குள் செல்போன் எடுத்துச் செல்லக் கூடாது என்ற உத்தரவு இருந்தும் காதர் செல்போன் எடுத்துச் சென்றதற்கு ஆட்சேபம் தெரிவித்து ஏராளமானோர் அந்த வாக்குச்சாடி முன் கூடி, அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி குரல் எழுப்பினர்.
இத்தொகுதியில் பதிவான வாக்குகள் ஜூன் 5-ம் தேதி எண்ணப்படுகின்றன.
Dinamani.com
Posted by
Boston Bala
at
8:29 PM
0
comments
ரஜினியின் இமேஜை கண்டு பயந்தேன்
சென்னை, ஜூன் 3-
சிவாஜி படப்பிடிப்பின்போது ரஜினியின் இமேஜை கண்டு பயந்தேன் என்றார் இயக்குனர் ஷங்கர்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
சிவாஜி படத்துக்காக 22 மாதங்கள் உழைத்திருக்கிறோம். ஒவ்வொரு காட்சியையும், சிற்பி சிலை செதுக்குவது போல கவனத்துடன் உருவாக¢கி உள்ளேன். ரஜினி ரசிகர்களையும், எனது படம் இப்படித்தான் இருக்கும் என நம்பி வருபவர்களையும் இந்தப் படம் சந்தோஷப்படுத்தும். எனது வாழ்நாளின் சிறந்த படைப்பு இது. படத்தை முடித்துவிட்டேன். இப்போது மக்களின் தீர்ப்புக்காகக் காத்திருக்கிறேன்.
சிவாஜி கதையை உருவாக்கியதும் நான் பயந்தது, ரஜினியின் இமேஜை கண்டுதான். எந்த ஒரு இடத்திலும் அவரது ஸ்டைலான இமேஜை, படக் கதை உடைத்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தேன். படப்பிடிப்பின்போதும் அதையே மனதில் வைத்திருந்தேன். படம் முடிந்து இப்போது பார்த்தால், இந்த கதைக்கு ரஜினியின் ஸ்டைலான அந்த இமேஜ்தான் தூணாக உள்ளது.
படத்தின் டிரெய்லரை எடிட்டர் ஆண்டனி சிறப்பாக தொகுத்துள்ளார். ரஜினியின் பஞ்ச் வசனங்கள், சென்டிமென்ட், காதல், ஆக்ஷன் காட்சிகள் என அனைத்தும் அதில் இடம்பெற்றுள்ளது. டிரெய்லரே ரசிகர்களை தியேட்டர் பக்கம் இழுக்கும் விதமாக உள்ளது.
சிவாஜியை மே 8ம் தேதி அல்லது 17ம் தேதி திரையிட நான் முயன்றதாகக் கூறுவது உண்மை அல்ல. எனக்கு 8ம் நம்பர¢ ராசி என்பதும் பொய்யான தகவல். எனக்கு ராசி போன்ற விஷயங்களில் நம்பிக்கை கிடையாது. ஏதேச்சையாக எனது கார் எண் 8 ஆக அமைந்தது. நான் இயக்கிய சில படங்களும் 8 என வரும் வ¤தமான தேதிகளில் ரிலீஸ¢ ஆனது. இதனால் எனக்கு எட்டு நம்பர் ராசி என வினியோகஸ்தர்கள் முதல் என¢னிடம் வேலை பார்ப்பவர்கள் வரை நினைக்கிறார்கள். இப்போது சிவாஜி படம் 15ம் தேதி திரைக¢கு வருகிறது. இதன் மூலம் எனக்கும் எட்டாம் நம்பருக்கும் தொடர்பில்லை என்பது அனைவருக்கும் தெரிந்துவிடும்.
நன்றி: "மாலைச் சுடர்"
Posted by
சிவபாலன்
at
7:37 PM
0
comments
Saturday, June 2, 2007
அமிதாப் நிலம் திரும்பப் பெறப்படுமா?
மோசடி வழிகளில் விவசாய நிலத்தை பெற்றது நிரூபணமானால், அமிதாப் பச்சனுடைய 20ஏக்கர் நிலம் அரசால் திரும்பப் பெறப்படும் என்று மஹாராஷ்ட்ர வருவாய்த்துறை அமைச்சர் நாராயண் ரானே தெரிவித்துள்ளார்.
மஹாராஷ்ட்ர மாநில சட்டத்தின்படி விவசாயியாக இல்லாதோர் வேளாண் நிலங்களை வாங்கிட இயலாது என்பது குறிப்பிடத்தக்கது.
உ.பியின் முந்தைய முலாயம் அரசு அமிதாப்பை விவசாயியாக அங்கீகரித்திருந்ததும் இதில் அறியப்பட வேண்டிய செய்தி.
ஹிந்துஸ்தான் டைம்ஸ்
Posted by
வாசகன்
at
10:37 PM
0
comments
புத்தகம் இல்லா கல்வித்திட்டம்!
தொடக்கப்பள்ளி மாணவர் களின் புத்தகச்சுமையை குறைத்து, அவர்கள் தானாக கல்வி கற்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. இதற்காக அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் பட அட்டை களுடன் கூடிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் மாணவர்கள் புத்தகங் கள் இல்லாமல் விளக்கப்படங்கள் அடங்கிய அட்டைகளை வைத்து கல்வி கற்கலாம்.
கடந்த ஆண்டில் தேர்வு செய்யப்பட்ட குறிப்பிட்ட பள்ளி களில் 1, 2-ம் வகுப்புகளுக்கு புத்தகம் இல்லாத பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. வருகிற புதிய கல்வி ஆண்டில் அனைத்து பள்ளிகளிலும் திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. 3, 4, 5-ம் வகுப்புகளுக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதைத்தொடர்ந்து பட அட்டைகளை வைத்து மாண வர்களுக்கு கல்வி கற்பிப்பது குறித்து, தொடக்கப்பள்ளி ஆசிரி யர்களுக்கு செயல் வழி கற்றல் பயிற்சி நேற்று தொடங்கியது. தமிழ்நாடு முழுவதும் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
தினத்தந்தி: ஜூன்2, 2007
Posted by
வாசகன்
at
10:21 PM
0
comments
சென்னை விமான நிலையத்தில் தீவிபத்து!
சென்னை விமான நிலையத்தில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. இதனால் பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள காமராஜர் உள்நாட்டு விமான நிலையத்தில் பயணிகள் தங்கள் உடைமைகளை எடுக்கும் பகுதி உள்ளது. இதன் அருகே தனியார் விமான நிறுவனத்தின் பாதுகாப்பு அறை இருக்கிறது.
இந்த அறையில் நேற்று காலை மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. இதனால் `ஒயர்'கள் தீப்பிடித்து எரிந்தன. அந்த அறை புகை மண்டலமாக காட்சி அளித்தது.
பயணிகள் ஓட்டம்
அங்கு தங்கள் உடைமைகளை எடுக்க வந்த பயணிகள் தீயைக் கண்டதும் ஏதோ விபரீதம் ஏற்பட்டதாக நினைத்து அலறியடித்து ஓடினார்கள். இந்த தீ விபத்து பற்றி விமானநிலைய அதிகாரிகளிடம் ஊழியர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து தீயணைப்பு படை வீரர்களுக்கு தகவல் தரப்பட்டது.
அவர்கள் அங்கு விரைந்து வந்து, தீப்பிடித்த இடத்தில் `ஸ்பிரே' உதவியுடன் மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தால் சென்னை விமான நிலையம் பரபரப்பாக காணப்பட்டது.
தினத்தந்தி
Posted by
வாசகன்
at
10:07 PM
0
comments
பாப் உல்மர்: இறுதி முடிவு என்ன?
இரண்டரை மாத விசாரணைக்குப் பிறகு பாப் உல்மர் மரணம் இயற்கையானது தான் என்று ஜமைக்கா காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர். அடுத்தவாரம் இதுபற்றி முறைப்படி அறிவிக்கப்படுமாம்.
உலகக்கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணி அயர்லாந்திடம் தொடக்கத்திலேயே தோல்வியைத் தழுவி வெளியேற, அதைவிட அதிர்ச்சியாய் அதன் பயிற்சியாளர் பாப் உல்மர் மரணம் அமைந்தது.
கொலை, மாஃபியா கும்பல், சூதாட்டம், விஷம், துணை பயிற்சியாளர் முஸ்தாக் அகமது, அல்காயிதா என்று பல அனுமானங்களை ஊடகங்களில் உலவவிட்டபடி இருந்த இம்மரணம், ஜமைக்கா காவல்துறையினரின் இந்தக் கருத்தால் முடிவுக்கு வரக்கூடும்.
டைம்ஸ் ஓஃப் இந்தியா
Posted by
வாசகன்
at
6:54 PM
0
comments
ச: இராஜஸ்தான் முதல்வர் பதவி விலக வேண்டும்: ஜஸ்வந்த் சிங் கோரிக்கை
கடந்த நாட்களாக இருந்துவரும் சாதிச்சண்டையையும் கலவரங்களையும் முடிவுக்குக் கொண்டுவர இராஜஸ்தான் முதல்வர் வசுந்தர ராஜேக்கு வழி காணையலாவிடில் அவர் பதவி விலக வேண்டும் என்று அவரது கட்சியின் மூத்த தலைவர் ஜஸ்வந்த் சிங் கூறியுள்ளார். இவரது மனைவி ராஜேயை தேவியாக சித்தரித்து வந்த போஸ்டருக்கு எதிர்ப்பு தெரிவித்தது நினைவிருக்கலாம். பிஜேபியின் தலைமை இதனை ஏற்கவில்லையெனினும் ராஜே மிகுந்த அழுத்தத்தில் இருக்கிறார். இந்நிலையில் இன்று குஜ்ஜர் இன மக்களுடன் அவர் நடத்தும் பேச்சு வார்த்தை மிகவும் முக்கியமானதாகும்.
இன்று பிரதமர் மன்மோகன்சிங்கும் அனைத்துத் தரப்பினரும் அமைதி காக்க வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
Jaswant wants Vasundhara axed - Yahoo! India News
Posted by
மணியன்
at
4:06 PM
0
comments
ச:கேரளாவில் சிக்குன்குன்யா பரவுகிறது
கேரளவில் சென்ற வாரம் சிக்குன்குன்யாவா இல்லையா என்று எழுந்த விவாதம் இப்போது ஆயிரமானவர்கள் பாதிக்கப் பட்டிருக்கும் நோயாக பரவியிருக்கிறது. கொசுக்களினால் பரவும் இந்த நோயதிக சுரத்துடன் கை,கால்களை முடக்கிப் போடும் தன்மை கொண்டது. தென்மேற்கு பருவமழை ஆரம்பித்துள்ளநிலையில் இது மேலும் தீவிரமடைந்துள்ளது. முக்கியமாக இரப்பர் தோட்டங்களில் தொழிலாளிகள் பிளாஸ்டிக் கப் ்/ தேங்காய் ஓடு இவற்றை இரப்பர்பால் சேகரிக்க மரத்தினடியே கட்டுவதால் அவற்றில் மழைநீர் தேங்கி கொசுக்கள் பெருக வழிவகுக்கின்றனர்.
Chikungunya takes an epidemic shape in Kerala - Yahoo! India News
Posted by
மணியன்
at
3:57 PM
0
comments
ச: திருப்பதியில் திராவிட்டுக்கு விஐபி தரிசனம் இல்லை
சென்றமுறை ஐஸ்வர்யா-அபிஷேக்கிற்கு அளித்த வரவேற்பு சர்ச்சையில் முடிந்த நிலையில் இன்று திருப்பதிக்குச் சென்ற இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் ராகுல் திராவிட்டிற்கு தனி ஏற்பாடு எதுவும் கோவில் அதிகாரிகள் செய்யவில்லை.அவரும் அவர் குடும்பத்தாரும் ரூ500 சிறப்பு தரிசன டிக்கெட் வாங்கிக் கொண்டு 45 நிமிடம் காத்திருந்து தரிசனம் கண்டனர். ஆனால் கோவிலுக்கு வெளியே அவர்களுக்கு நல்ல தங்கும் வசதி செய்து கொடுத்திருந்தனர்.
DNA - Sport - No VIP treatment for Dravid - Daily News & Analysis
Posted by
மணியன்
at
3:38 PM
2
comments
எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட இந்தியர் துபாயிலிருந்து நாடு திரும்புகிறார்
இந்தியாவைச் சேர்ந்த கன்னியப்பன் மோகன்தாஸ் (37), கடந்த ஜனவரி மாதம் 26ம் தேதி டூரிஸ்ட் விசா மூலம் துபாய் சென்றார்.
ஒரு வாரத்திற்கு பின் இந்தியா திரும்ப துபாய் விமான நிலையத்திற்கு வந்தபோது அவருடைய பாஸ்போர்ட் தொலைந்துவிட்டது.
இதுகுறித்து காவல்துறையிடம் புகார் கொடுத்தார். அப்போது போலீசாருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் போலீஸாரை தாக்கியுள்ளார்.
இதையடுத்து இவர் கைது செய்து பின்னர் விடுதலை செய்யப்பட்டார்.
சிறையில் இருந்து வெளியே வந்த இவர் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்ய முயன்றார். இதில் படுகாயமடைந்த இவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அங்கு அவரை மருத்துவர்கள் சோதித்தபோது இவர் எச்ஐவி வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்தது.
இதையடுத்து அவருக்கு இந்தியா திரும்ப விமான பயண சீட்டும், தகுதி சான்றிதழும் உடனடியாக பெற்று தரப்பட்டுள்ளது.
Posted by
Adirai Media
at
12:56 PM
0
comments
b r e a k i n g n e w s...