முங்கர், ஏப். 11: பிகார் மாநிலம் முங்கர் மாவட்டத்தில் பனஹரா என்ற கிராமத்தில் உள்ள பள்ளிக்கூடம் ஒன்றின் மீது செவ்வாய்க்கிழமை அதிகாலை மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதல் நடத்தப்பட்டபோது பள்ளிக்கூடத்தில் யாரும் இல்லை என போலீஸ் வட்டாரம் தெரிவித்துள்ளது. மாவோயிஸ்டுகள் என சந்தேகிக்க கூடிய சிலர் நடுநிலைப் பள்ளியின் சில அறைக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தினர்.
பள்ளி அறைகளுக்குள் இருந்து சில வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டன என முங்கர் மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் ரவீந்திர சங்கரன் தெரிவித்தார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை பிகாரில் ஹௌரா-கயா ரயிலிலும், மத்திய ரிசர்வ் போஸீசார் முகாமிலும் மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தினர். இந் நிலையில் பள்ளிக் கூடத்தில் தாக்குதல் நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Dinamani
Wednesday, April 11, 2007
பிகாரில் பள்ளிக்கூடம் மீது மாவோயிஸ்டுகள் திடீர் தாக்குதல்
Labels:
இந்தியா,
சட்டம் - நீதி,
சமூகம்
Posted by
Boston Bala
at
10:24 PM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
No comments:
Post a Comment