'காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி பாமர மக்களிடையே செல்வாக்கை இழந்து வருகிறது; அதன் பொருளாதாரக் கொள்கையில் உடனடியாகத் திருத்தம் தேவை என மத்திய அமைச்சர் மணிசங்கர் அய்யர் கூறியுள்ளது, அவரது தனிப்பட்ட கருத்து' என காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
'அய்யரின் கருத்துக்கு மற்றவர்கள் சொல்லும் விளக்கத்தை ஏற்க முடியாது. ஆனால், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி கொள்கைகளை அய்யர் விமர்சனம் செய்திருந்தால் அதை நாங்கள் ஏற்க முடியாது' என காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி கூறியுள்ளார்.
சாமானியர்களுக்காக பொருளாதாரக் கொள்கையை உருவாக்கும் அரசின் முயற்சிகளுக்கு சாமானிய மக்களின் ஆதரவு கிடைக்காமலே போகலாம் என மத்திய அமைச்சர் மணிசங்கர் அய்யர் ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.
'நாம் இதைப் புரிந்து கொள்ள வேண்டிய கடமை இருப்பதுடன், அதில் மாற்றங்கள் செய்ய வேண்டும்' எனவும் மணிசங்கர் அய்யர் கூறியிருந்தார். தன்னுடைய கருத்துகளை பிரதமர் மிகுந்த அனுதாபத்துடன் கேட்டுக் கொண்டதாகவும், பொருளாதாரக் கொள்கையில் மாற்றங்கள் செய்வதற்கான சமயம் வந்து விட்டது என்பதை அவர் மிகச்சரியாக புரிந்துகொண்டுள்ளதாகவும் அய்யர் கூறியுள்ளார்.
தினமணி
Tuesday, May 22, 2007
'மணிசங்கர் அய்யரின் தனிப்பட்ட கருத்து': ஒதுங்குகிறது காங்கிரஸ்
Labels:
அரசியல்,
இந்தியா,
பொருளாதாரம்
Posted by
Boston Bala
at
9:27 PM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
Error loading feed.
1 comment:
அலைகள்: மணியான பேட்டி.
Post a Comment