.

Wednesday, July 4, 2007

15 எம்.பி.கள் விலக முடிவு: இலங்கை அரசுக்கு நெருக்கடி

இலங்கையில் ஆளும் கட்சியில் இருந்து 15 எம்.பி.க்கள் விலகி எதிர்க்கட்சிக்கு தாவுகிறார்கள். இதனால் அதிபர் ராஜபக்சே அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும் சிங்கள ராணு வத்துக்கும் போர் தீவிரம் அடைந்துள்ள நிலையில் அதிபர் ராஜபக்சேக்கு அரசியல் ரீதியாகவும் நெருக்கடி அதிகரித்துள்ளது.

இது குறித்து எதிர்க்கட் சியான ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் திசஅக்த நாயகா கூறியதாவது:-

அரசு தரப்பில் இருந்து 15 எம்.பி.க்கள் விலகி எதிர்க் கட்சியில் இணைய முடிவு செய்துள்ளனர். இது தொடர்பாக 17 எம்.பி.க்கள் எங்களுடன் தொடர்பு கொண்டு பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்கள். 15 பேர் கண்டிப்பாக எதிர் அணியில் இணைய உறுதி அளித்துள்ளனர்.

26-ந் தேதி எதிர்க்கட்சிகள் சார்பில் பிரமாண்ட பேரணி நடக்க உள்ளது. இந்த பேரணிக்கு பிறகு நாட்டில் முக்கிய அரசியல் மாற்றங்கள் ஏற்படும்.

இவ்வாறு திசஅக்த நாயகா கூறி உள்ளார்.

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...

Error loading feed.