.

Wednesday, July 4, 2007

தண்ணீர் மாசு: சீனாவில் 2 இலட்சம் பேர் பாதிப்பு.

சீனாவின் கிழக்குப் பகுதி மாகாணமான ஜியாங்சூ மாகாணத்தில் உள்ளூர் ஆற்றில் அம்மோனியா மற்றும் அஸோட் கலந்ததால், சுமார் 2 லட்சம் பேர் பாதிப்புக்குள்ளாகினர்.

40 மணி நேரத்திற்கு தண்ணீர் வழங்குவது நிறுத்தப்பட்டதாக பீஜிங்கில் இருந்து வெளியாகும் பத்திரிகை செய்தி தெரிவிக்கிறது.

தண்ணீரின் மாசு எப்போது நீக்கப்படும் ஏன்று தெரியவில்லை என்றும், முழு அளவில் பணிகள் நிறைவடைந்த பின்னரே வெளியிடப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

குழாய்களில் வரும் தண்ணீர் மஞ்சள் நிறத்தில் வந்ததால், தண்ணீர் வரத்து நிறுத்தப்பட்டதாக உள்ளூரைச் சேர்ந்த ஒருவர் கூறினார்.

தொழிற்சாலை கழிவு ஆற்றில் கலந்ததால் மாசு பட்டதாக ஆரம்பக்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இச்செய்தியை MSN INDIA தெரிவித்துள்ளது

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...