.

Thursday, July 26, 2007

கனிமொழிக்கு மந்திரி பதவி; ராகுலுக்கும் முக்கியத்துவம்.

விரைவில் மத்திய மந்திரி சபையில் மாற்றம் இருக்கும் என்று கூறப்படுகிறது. தற்போது டெல்லி மேல்சபை தலைவராக இருக்கும் ரகுமான்கான் அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு மத்திய மந்திரியாக நியமிக்கப்படுகிறார்.

துணை ஜனாதிபதி பதவிக்கு காங்கிரஸ் கூட்டணி சார்பில் ஹமீத் அன்சாரி போட்டியிடுகிறார். அவர் துணை ஜனாதிபதியானால் டெல்லி மேல்சபை தலைவர் மற்றும் துணை தலைவர் ஆகிய இரு பதவிகளிலும் முஸ்லிம் இருப்பதை தவிர்க்கும் வகையில் ரகுமான்கானை மத்திய மந்திரியாக நியமிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

ரகுமான்கானுக்கு பதில் மேல் சபை துணை தலைவர் பதவிக்கு பலரது பெயர்கள் சிபாரிசு செய்யப்பட்டு உள்ளன. இதில் சுரேஷ் பச்சவுரிக்கு துணை தலைவர் ஆகும் வாய்ப்பு உள்ளது.

மத்தியமந்திரி மணிசங்கர் அய்யரின் இலாகா மாற்றம் செய்யப்பட உள்ளது. அவர் பஞ்சாயத்து ராஜ் மற்றும் விளையாட்டு இளைஞர் விவகாரத்துறையை கவனித்து வருகிறார். ஆசிய விளை யாட்டு போட்டி தொடர்பாக மணிசங்கர் அய்யர் தெரிவித்த கருத்துகள் காரணமாக அவரிடம் இருந்து விளையாட்டு இளைஞர் விவகாரத்துறையை எடுத்து விட்டு பஞ்சாயத்து ராஜ் மந்திரியாக மட்டும் இருப்பார் என்று தெரிகிறது.

மத்திய மந்திரிசபை மாற்றத்தின்போது கனிமொழி எம்.பி.யும் மத்திய மந்திரியாக நியமிக்கப்படுகிறார். அவருக்கு தொலை தொடர்பு மற்றும் தகவல் தொழில் நுட்ப இலாகா வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

முன்பு தயாநிதி மாறன் வசம் இருந்த இந்த இலாகாவை அவர் நீக்கத்திக்கு பிறகு மத்திய மந்திர ராசா கவனித்து வருகிறார்.

கர்நாடகத்தைச் சேர்ந்த தேஜாஸ்வானி ரமேசும், மத்திய மந்திரி ஆகிறார். இவர் ஹாசன் எம்.பி. தொகுதியில் முன்னாள் பிரதமர் தேவே கவுடாவை தோற்கடித்தவர்.

ராஜஸ்தான் கவர்னராக இருந்த பிரதீபாபட்டீல் ஜனாதிபதி ஆகிவிட்டதால் அவருக்கு பதில் காங்கிரஸ் கட்சியைக் சார்ந்த மூத்த தலைவர்களில் ஒருவர் கவர்னராக நியமிக்கப் படுகிறார்.

இது குறித்து சோனியாகாந்தி தீவிரமாக பரிசிலித்து வருகிறார். இது தவிர கட்சியில் முக்கிய பொறுப்புகளில் மாற்றம் செய்யும், புதிதாக சிலரை நியமிக்கவும் முடிவு செய்துள்ளார்.

கட்சியில் இளைஞர்களை ஊக்கு விக்கும் வகையில் ராகுல்காந்திக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்படுகிறது. தற்போது எம்.பி.யாக மட்டுமே இருக்கும் ராகுல் காந்தி கட்சியில் தீவிரமாக பணியாற்றும் வகையில் அவருக்கு பொது செயலாளர் போன்ற முக்கிய பொறுப்பு வழங்கப்படும் என்று தெரிகிறது.

ராகுலுக்கு கட்சியில் முக்கியதுவம் அளிக்க வேண்டும் என்று சோனியா விடம் தலைவர்கள் பலர் வற்புறுத்தி வருகிறார்கள். இதற்கு சோனியாவும் சம்மதித்து விட்டதாக கூறப்படுகிறது.

இது போல் உத்தரபிரதேச மாநில காங்கிரசிலும் அதிரடி மாற்றங்கள் செய்ய சோனியா முடிவு செய்துள்ளார். மாநில காங்கிரஸ் தலைவராக இருக்கும் சல்மான் குர்ஷித் மாற்றப்பட்டு அவருக்கு பதில் புதிய தலைவர் நியமிக் கப்படுகிறார். சல்மான் குர்ஷித்துக்கு தேசிய அளவில் கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட உள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன

மாலைமலர்

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...