.

Tuesday, August 21, 2007

இந்திரா காந்தி உயிரோடு இருந்திருந்தால் தமிழ் ஈழம் மலர்ந்திருக்கும்!

இந்திரா காந்தி உயிரோடு இருந்திருந்தால் தமிழ் ஈழம் மலர்ந்திருக்கும் என்று வைகோ தெரிவித்தார். மேல்மலையனூர் ஒன்றியம் செக்கடிகுப்பம் கிராமத்தில் மதிமுக கிளை சார்பில் தமிழ் மன்னர்களின் கலை இலக்கியப் பண்பாட்டு பெருவிழா நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் கலந்துகொண்டு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசினார். அப்போது, தமிழர்களின் மீது சிங்கள ராணுவம் குண்டு மழை பொழிகிறது. இதற்கு இந்தியா ஆயதங்களையும், விமானங்களையும், ரேடார்களையும் அளிக்கிறது. தமிழர்களுக்கு விரோதமான அரசு மன்மோகன்சிங் அரசு. தமிழர்கள் ஆண்ட ஈழத்தை தமிழர்களுக்கு அளிக்க வேண்டும் என்று முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியிடம் கோரிக்கைவைத்தேன். ஆலோசனை நடத்தி வருவதாக அவர் பதில் அளித்தார். ஆனால் அவர் இறந்து விட்டது துரதிர்ஷ்டமாக போய்விட்டது. அவர் உயிரோடு இருந்திருந்தால் கண்டிப்பாக தனி ஈழம் ஏற்பட்டிருக்கும் என்று வைகோ தெரிவித்தார்.

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...

Error loading feed.