.

Tuesday, May 29, 2007

9ம் நூற்றாண்டு நடுகல் கண்டுபிடிப்பு



மே 29: திருச்சி மாவட்டம், துறையூர் அருகே உள்ளது வைரிச்செட்டிப்பாளையம். இங்குள்ள வேடன்கலிங்கு அருகே, வேடன் சிற்பம் உள்ளதாக கீழக்கல்பூண்டி கல்வெட்டு ஆய்வாளர் பாண்டுரங்கனுக்கு தகவல் கிடைத்தது. அவர் தலைமையில் பழம்பொருள் சேகரிப்பாளர் பெரியசாமி, கல்வெட்டு ஆய்வாளர் எழிலரசு, தொல்பொருள்துறை ஸ்தபதி ராமன் ஆகியோர் அங்கு சென்று ஆய்வு செய்தனர். இரண்டரை அடி அகலம், மூன்றரை அடி உயரம் கொண்ட வீரனின் புடைப்பு சிற்பம் இருந்தது. இது 9ம் நூற்றாண்டை சேர்ந்த சோழர்கால நடுகல் என தெரியவந்துள்ளது. தன்னிடமுள்ள பசுக்கூட்டங்களை கவர்ந்து சென்றவர்களை மீட்கும்போது நடந்த சண்டையில் இறந்த வீரன் நினைவாக நடுகல் எழுப்பப்பட்டிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.




நன்றி: "தினகரன்"

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...