.

Friday, June 1, 2007

ஜனாதிபதி தேர்தல்.

கருணாநிதியுடன் ஜார்ஜ் பெர்ணான்டஸ் சந்திப்பு.

ஜனாதிபதி தேர்தல் குறித்து முதல்வர் கருணாநிதியை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அமைப்பாளரும், முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சருமான ஜார்ஜ் பெர்ணான்டஸ் நேரில் சந்தித்துப் பேசினார்.


கருணாநிதியின் கோபாலபுரம இல்லத்தில் நடந்த இச் சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய பெர்னான்டஸ், ஜனாதிபதி தேர்தல் உள்பட பல விஷயங்கள் குறித்துப் பேசினோம். ஜனாதிபதி வேட்பாளரை எங்கள் கூட்டணி இன்னும் இறுதி செய்யவில்லை (ஷெகாவத் சுயேச்சை வேட்பாளராம்). தமிழகத்தில் பனை, தென்னை மரத்தில் இருந்து கள் இறக்க அனுமதி தர வேண்டும் என்று கோரினேன். இது குறித்து ஆராய கமிட்டி அமைக்கப்பட்டுள்ளதாக கருணாநிதி கூறினார் என்றார்.

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...