.

Tuesday, July 3, 2007

இஸ்லாமாபாதில் செம்மசூதிக்கு வெளியில் இடம்பெற்ற மோதலில் பலர் பலி

பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் உள்ள செம்மசூதிக்கு வெளியே இஸ்லாமிய மாணவர்களுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையிலான மோதலின் போது வெடித்த துப்பாக்கிச் சூட்டில், குறைந்தது 8 பேர் கொல்லப்பட்டதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன. இறந்தவர்களில் இரு மாணவர்களும், ஒரு சிப்பாய் மற்றும் ஒரு செய்தியாளர் ஆகியோர் அடங்குவர்.

அந்த மசூதியைச் சுற்றி பாதுகாப்புப் படையினர் முட்கம்பிகளை கொண்டு தடைகளை ஏற்படுத்தியதாகக் கூறப்படுவதை அடுத்து, வெடித்த மோதல்களில் பலர் காயமடைந்தனர். அந்தக் கட்டிடத்துக்கு மிக நெருக்கமாகச் சென்றுள்ள பாதுகாப்புப்படையினர், கேந்திர முக்கியத்துவ வாய்ந்த இடங்களை கையகப்படுத்தியுள்ளதுடன், கண்ணீர்ப்புகைக் குண்டுகளைச் வீசி வருகிறார்கள்.

பல மாதங்களாக அரசாங்கத்தை பகிரங்கமாக நிராகரிக்கும் மாணவர்களுக்கு, கடும்போக்கு இஸ்லாத்தைப் போதிக்கும் இடமாக இந்த செம்மசூதி மாறியுள்ளது. பல பொதுக் கட்டிடங்களைப் பிடித்துள்ள இவர்கள், பாலியல் தொழிலாளர்கள் என்று குற்றஞ்சாட்ட்டப்பட்டவர்களை கடத்தியவர்களாவர்.

- BBC Tamil

BBC NEWS | South Asia | Clashes erupt at Pakistan mosque

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...