.

Sunday, September 2, 2007

ஊனமுற்றோர் இட ஒதுக்கீட்டில் சாதி உள் ஒதுக்கீட்டுக்கு நீதிமன்றம் மறுப்பு

மத்திய பிரதேசத்தில் பள்ளிக்கூட ஆசிரியர் பணியில் மூவர் சேர்த்துக் கொள்ளப்பட்டதை அந்த மாநில அரசு விலக்கம் செய்திருந்தது. உடல் ஊனமுற்றோருக்கான சிறப்பு ஒதுக்கீட்டில் பழங்குடி மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கென உள் ஒதுக்கீடு செய்து இவர்கள் நியமிக்கப்பட்டது செல்லாது என்றும் அரசு அறிவித்தது. இதை எதிர்த்து 3 ஆசிரியர்களும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை உச்சநீதிமன்ற அமர்வொன்றின் நீதிபதிகள் எஸ்.பி. சின்கா, எச்.எஸ்.பெடி ஆகியோர் விசாரித்து தீர்ப்பு கூறினார்கள்.

அவர்கள் தங்கள் தீர்ப்பில்

"உடல் ஊனமுற்றோருக்கு என்று ஒதுக்கப்பட்ட இடங்களில் சாதி அடிப்படையில் தனியாக உள் ஒதுக்கீடு அளிக்க முடியாது. பெண்களுக்கான கோட்டாவிலும் தனியாக சாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு அளிக்க முடியாது. 50 சதவீதத்துக்கு மேல் இருக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. உடல் ஊனமுற்றோருக்கான இட ஒதுக்கீட்டில் எந்த பாதிப்பும் இப்போது ஏற்படவில்லை
என்று கூறியுள்ளனர்.

மாலைமலர்

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...