நடுவண் அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சர் அர்ஜுன்சிங் உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடையை நீக்க மறுத்தது அரசிற்கான தோல்வியல்ல என்று கூறினார். தமது அமைச்சு உடனடியாக நிதிசாரா கல்வியகங்களிலும் இடஒதுக்கீட்டை கடைபிடிக்கும் சட்டவரைவினை தயாரித்துள்ளது எனக் கூறினார். அரசு இடஒதுக்கீட்டின் மூலம் சமூகநீதியை நிலைநிறுத்துவதில் உறுதியாக உள்ளது என்றும் அவர் கூறினார். உச்சநீதிமன்றம் இடைக்கால தடையை நீக்காவிடினும் தனது இறுதி தீர்ப்பை விரைவில் வழங்கும் என எதிர்பார்ப்பதாக மற்றொரு கேள்விக்கு பதிலிறுத்தார்.
மேலும்...IBNLive.com > Arjun says SC order not a setback, new Bill ready :
Wednesday, August 8, 2007
உச்சநீதிமன்ற தீர்ப்பு: அரசிற்கு தோல்வி அல்ல : அர்ஜுன் சிங்
Posted by
மணியன்
at
7:44 PM
0
comments
2005க்கான தேசிய திரைப்பட விருதுகள்
Best feature film
Kaalpurush (Bengali), Director Buddhadeb Dasgupta
Indira Gandhi Award for Best First Film of a Director
Prodip Sarkar, Parineeta (Hindi)
Best Director
Rahul Dholakia, Parzania (English)
Best Actress
Sarika, Parzania
Best playback singer (Male)
Naresh Iyer, Roo ba roo, Rang De Basanti
Best playback singer (Female)
Shreya Ghoshal, Apne aansoo peene ke liye (Paheli)
Best music direction
Lalgudi Jayaraman (Sringaram)
Best Popular Film
Rang de Basanti (Hindi)
Nargis Dutt Award for Best Feature Film on National Integration
Daivanamathil (Malayalam)
Best Actor
Amitabh Bachchan, Black
Best supporting actor
Naseeruddin Shah, Iqbal
Best supporting actress
Urvashi, Achhuvinte Amma
Best child artiste
Sai Kumar, (Bommalata)
Best cinematography
Madhu Ambat, Sringaram
Special jury award
Anupam Kher, Maine Gandhi Ko Nahin Mara
நன்றி: Indian Express
Posted by
சிறில் அலெக்ஸ்
at
7:39 PM
2
comments
புக்கர் ் பரிசு: பட்டியலில் இரண்டு இந்தியர்கள்
இங்கிலாந்தில் வழங்கப்படும் எழுத்தாளர்களுக்கான புக்கர் பரிசுக்கான தேர்வுப் பட்டியலில் இருக்கும் 13 பேரில் இரண்டு இந்தியர்கள் இடம் பெற்றுள்ளனர்.
நிகிட்டா லால்வானியின் கிப்ஃடட்(Gifted) நாவலும் இந்த்ரா சின்ஹாவின் அனிமல்ஸ் பீப்பிள் (Animal's People) புத்தகமும் 50,000 பவுண்ட் பரிசுக்கான பட்டியலில் இடம்பெற்றுள்ளன. தேர்வு முடிவுகள் அக்டோபரில் அறிவிக்கப்படும்.
Two Indian writers in 13-strong Booker Prize longlist - the Hindu
Posted by
சிறில் அலெக்ஸ்
at
7:18 PM
0
comments
123 உடன்பாடு: மைய அரசு முன்னெடுத்துச் செல்லும்
பிஜேபியும் இடது கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்திருக்கும் நிலையிலும் நடுவண் அரசு அமெரிக்காவுடனான அணுஆயுத உடன்பாட்டுடன் மேற்கொண்டு செல்வதென தீர்மானித்திருக்கிறது. நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெறவேண்டியதில்லை என்றும் அமெரிக்காவுடன் மேற்கொண்டு பேரம் பேசபோவதில்லை என்றும் பிரதமரின் அலுவலகம் CNN/IBN க்கு தெரிவித்துள்ளது. திங்களன்று பிரதமர் மன்மோகன்சிங் நாடாளுமன்றத்தில் இதனை அறிவிப்பார் என்றும் அப்போது பிஜேபி மற்றும் இடது கட்சிகளின் கவலைகளுக்கு பதிலளிப்பார் என்றும் பிரதமர் அலுவலகத்தினர் கூறினர்.
மேலும்....IBNLive.com > UPA won't turn Left, says N-deal on right track :
Posted by
மணியன்
at
3:13 PM
0
comments
இட ஒதுக்கீடு: உச்சநீதிமன்றம் இடைக்காலத்தடையை நீக்க மறுப்பு
உயர்கல்வி நிலையங்களில் இதர பிந்தங்கிய வகுப்பினருக்கு 27% இடஒதுக்கீடு அமலாக்குவதற்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீக்கக் கோரி நடுவண் அரசு கொடுத்த மனுவை உச்சநீதிமன்றத்தின் ஐவர் அடங்கிய பெஞ்ச் இன்று நிராகரித்தது. இதுபற்றிய சட்டத்தினை எதிர்த்து இடப்பட்டுள்ள வழக்குகளை தீர்மானிக்காமல் சட்டத்தை அமலாக்க இயலாது என நீதிமன்றம் கூறியது. கடைசி நிமிட சலுகையாக அரசு OBC இடஒதுக்கீட்டில் கிரீமி மட்டத்தை விலக்கி வைக்கவும் முன்வந்தது.
முழு விவரங்களுக்கு...IBNLive.com > SC turns down govt plea, OBC quota stays frozen :
Posted by
மணியன்
at
12:14 PM
0
comments
டென்னிஸ்: சானியா ஜொலிக்கிறார்
தன்னுடைய வெற்றிப் பயணத்தை தொடருமுகமாக சானியா மிர்சா லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடக்கும் $ 6 இலக்கம் முதற்பரிசுள்ள ஈஸ்ட்வெஸ்ட் வங்கி கிளாசிக் டென்னிஸ் போட்டியில் தரவரிசையில் ஏழாவது இடத்தில் இருக்கும் மார்டினா ஹிங்கிஸை 6-2,2-6,6-4 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி கட்டத்தை எட்டியுள்ளார். பல நல்ல வெற்றிகளைப் பெற்று தன் வாழ்நாளின் சிறந்த தரவரிசை எண் 30 ஐ அடைந்திருக்கும் சானியா ஆட்டம் ஜொலிக்கிறது.
கால் இறுதி ஆட்டத்தில் தனது இரட்டையர் கூட்டாளி பியரையோ அல்லது பிரெஞ்ச் ஆட்டக்காரர் விர்ஜின் ரஸ்ஸனோவையோ எதிர்த்து ஆடுவார்.
The Hindu News Update Service
Posted by
மணியன்
at
11:41 AM
3
comments
சென்னை நகரை அழகுபடுத்த சித்திர வேலைப்பாடுகளுடன் 300 சாலையோர பூங்கா
சாலையோரங்களில் காலியாக கிடக்கும் இடங் களை குப்பை கொட்டி அசிங்கப்படுத்துதல் மற்றும் தனியார் ஆக்கிரமித்தலில் இருந்தும் தடுக்க அந்த மாதிரியான இடங்களை பூங்காக்களாக மாற்ற மாநகராட்சி முடிவு செய்துள்ளது. சாலையோர பூங்கா அமைக்க 300 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
மேயர் மா.சுப்பிர மணியன் கூறியதாவது:-
பூங்காக்களை வடிவமைப் பது பற்றி 54 பேரிடம் இருந்து டிசைன்கள் வந்துள்ளன. அழகிய சித்திர வேலைப்பாடுகள், சிற்பங்கள் நிறைந்ததாக இந்த பூங்காக்கள் அமையும். மாதிரி வரை படங்கள் உறுதி செய்யப்பட்ட பிறகு அரசு அனுமதி பெற்று பூங்காக்கள் உருவாக்கப்படும்.
பல்வேறு தலைவர்களின் பெயர்களில் பெரிய பூங்காக்கள் உள்ளன. அந்த தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றை எல்லோரும் அறிந்து கொள்ளும் வகையில் 38 பூங்காக்களில் தலைவர்களின் வாழ்க்கை வரலாறுகள் கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டு வைக்கப்படும்.
மகாத்மா காந்தி, நேரு, சர்தார் பட்டேல், சத்திய மூர்த்தி, திரு.வி.க., திருவள்ளு வர், பாரதியார், காமராஜர், அண்ணா, ராஜீவ், கருணாநிதி, சி.பா.ஆதித்தனார் உள்ளிட்ட தலைவர்களின் வாழ்க்கை வரலாறு இடம்பெற உள்ளது.
மாலைமலர்
Posted by
Boston Bala
at
5:01 AM
0
comments
ஊர்மக்கள் அனைவரையும் கூண்டோடு கொல்ல சதி: குடிநீர் கிணற்றில் விஷம்
குடிநீர் கிணற்றில் விஷத்தை கலந்ததுடன் பல்லிகளையும் கொன்று போட்ட மலைராஜை்(வயது 37) கைது செய்யப்பட்டார்.
போலீசில் அவர் கொடுத்துள்ள ஒப்புதல் வாக்குமூலத்தில் அவர் கூறியிருப்பதாவது:-
ராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோவில் அருகே உள்ள அரியகோட்டை பஞ்சாயத்தை சேர்ந்த அனிச்சகுடி காளியம்மன் கோவில் அருகே அந்த கோவிலுக்கு பூஜை நடத்தும் வேளார் வகுப்பை சேர்ந்த 15 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். என் தந்தை செல்வத்திற்கு 2 மனைவிகள். முதல் மனைவிக்கு நான் உள்பட 5 குழந்தைகளும், 2-வது மனைவிக்கு செந்தில், உடையான் உள்பட 4 குழந்தைகளும் உள்ளனர்.
நான் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு வேலை தேடி சவுதி அரேபியா சென்றேன். நான் வெளிநாட்டில் இருந்த போது உறவினர்கள் என்று சொல்லிக்கொண்டு செந்திலும், உடையானும் என் மனைவியிடம் பணத்தையும், நகையையும் கடனாக வாங்கியுள்ளனர். ஆனால் இதுவரை அதை திருப்பி கொடுக்கவில்லை. 5 லட்சம் பணத்தையும் என் மனைவி ஏற்கனவே போட்டிருந்த 5 பவுன் நகை உள்பட 30 பவுன் நகையையும் அவர்கள் மோசடி செய்து விட்டார்கள்.
இதனால் அவர்களையும், அவர்களுக்கு ஆதரவாக பேசிய 15 குடும்பத்தினரையும் கூண்டோடு கொலை செய்ய வேண்டும் என்று எனக்கு வெறி ஏற்பட்டது.
தேவிபட்டினத்தில் உள்ள ஒரு செங்கல் சூளையில் வேலை பார்த்த நான், அங்கு திரிந்த பல்லிகளை எல்லாம் கொன்று பாலிதீன் பையில் சேகரித்தேன். பின்பு ராமநாதபுரம் வந்து அரண்மனை அருகே உள்ள ஒரு பூச்சி மருந்து கடையில் அரை கிலோ போரோடாக்ஸ் என்ற குருணை மருந்தை வாங்கினேன். அதை கிணற்றில் ஊற்றி விட்டு என் மனைவி ஊரான சிறுவயலுக்கு வந்து விட்டேன். ஆத்திரத்தில் அறிவிழந்து விட்டேனே என்று இப்போது வருத்தமாக உள்ளது.
தினத்தந்தி
Posted by
Boston Bala
at
1:29 AM
0
comments
Tuesday, August 7, 2007
புதிய பெரிய கோள் கண்டுபிடிப்பு
அண்டவெளியில் இதுவரை இல்லாத அளவில் பெரியதொரு கோளைக் கண்டுபிடித்திருப்பதாக விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.
புவியிலிருந்து 1,400 ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் ஹெர்குலஸ் எனப்படும் நட்சத்திரக் கூட்டத்தில் இந்தக் கோள் உள்ளது. நமது சூரிய மண்டலத்திலுள்ள வியாழனை விட புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த கோள் எழுபது மடங்கு பெரியது என கணக்கிடப்பட்டுள்ளது. இந்தக் கண்டுபிடிப்பு விண் பௌதிகப் பத்திரிகை ஒன்றில் வெளியாகியுள்ளது.
டிரெஸ்-4 எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தக் கோள்தான் மனித வர்க்கத்தால் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மிகப் பெரிய கோளாகும். மூன்று தொலை நோக்கிகளை கொண்டு இந்தக் கோள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இவற்றில் இரண்டு அமெரிக்காவிலும் ஒன்று கனேரித் தீவிலும் உள்ளன. இந்தக் கோள் அருகாமையிலுள்ள நட்சத்திரத்தை கடந்து செல்லும் போது, அந்த நட்சத்திரத்தின் ஒளியை எவ்வாறு மறைக்கிறது என்பதை அளந்து அதன் அடிப்படையில் இந்தப் புதிய கோளின் அளவை கணித்துள்ளார்கள்.
ஆனாலும் டிரெஸ்-4 எனப்படும் இந்தப் புதிய கோள் வியாழனிடமிருந்து பலவகையில் மாறுபடுகிறது. அது அளவில் பெரியதாக இருந்தாலும் எடை குறைந்தே காணப்படுகிறது. வியாழன் ஒரு குளிர்ந்த கோள். ஆனால் இந்தப் புதிய கோளின் வெப்பநிலை 1300 டிகிரி செல்சியஸ் அளவிலுள்ளது.
இந்தப் புதிய கோளானது அதனைச் சுற்றியுள்ள காற்று மண்டலத்தின் மீது குறைந்த அளவே ஈர்ப்பு சக்தியை வெளிப்படுத்துவதால், அந்தக் காற்றுப் பகுதி அண்டவெளியில் ஒரு வால் நட்சத்திரம் போன்று வளைந்து வெளியேறக் கூடும் எனவும் விஞ்ஞானிகள் ஊகிக்கிறார்கள்
தமிழ் பிபிசி
BBC NEWS | Science/Nature | Team finds largest exoplanet yet
ScienceDaily: Largest Transiting Extrasolar Planet Found Around A Distant Star
ABC News: Scientists Discover Largest Known Planet Outside of Solar System
Posted by
Boston Bala
at
11:06 PM
3
comments
குழந்தைப் பிறப்பைத் தள்ளிப்போட்டால் இரண்டாவது தேனிலவுக்கு சன்மானம்
இந்தியாவின் மாநில அரசு ஒன்று, புதுமண தம்பதிகள் தங்களின் முதல் குழந்தை பிறப்பை இரண்டு முதல் மூன்றாண்டுகள் தள்ளிப் போட்டால், அவர்களின் இரண்டாவது தேனிலவுக்காக ஐந்தாயிரம் முதல் ஏழாயிரத்து ஐநூறு ரூபாய் வரை நிதி உதவி அளிக்கப்போவதாக அறிவித்துள்ளது.
இந்தத் திட்டத்தின்படி, மேற்கிந்திய மாநிலமான மஹாராஷ்டிராவில் இருக்கும் சடாரா மாவட்டத்தில், தங்களின் முதல் குழந்தை பிறப்பை தள்ளிப்போடும் புதுமண தம்பதிகளுக்கு, இரண்டாவது தேனிலவுக்கான நிதி உதவி செய்யப்போவதாக அரசு அதிகாரிகள் அறிவித்திருக்கின்றனர்.
இந்த மாவட்டத்தில் முப்பது லட்சம் மக்கள் வசிக்கிறார்கள். ஆண்டுக்கு சுமார் இருபத்தையாயிரம் தம்பதிகள் புதிதாக திருமண பந்தத்தில் இணைகிறார்கள். இவர்களில் சுமார் 85 சதவீத புதுமண தம்பதிகள் திருமணமான முதல் ஆண்டு முடிவதற்குள்ளாகவே தங்களின் முதல் குழந்தையை பெற்றுக் கொள்கிறார்கள். இந்த போக்கை மாற்றவே இந்த புதிய திட்டம் முயற்சி செய்வதாக தெரிவித்தார் மாவட்ட சுகாதார அதிகாரி வி.எச்.மொஹிதே.
தமிழ் பிபிசி
BBC NEWS | South Asia | Honeymoon offer to delay babies
Delay a baby and win a second honeymoon - India - The Times of India
Honeymoon at state's expense - Pune
Posted by
Boston Bala
at
11:01 PM
0
comments
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு தொற்று நோய்களால் அபாயம்
தெற்காசியாவில் சமீபத்தில் பெய்த அடைமழை மற்றும் பெருவெள்ளத்தில் சிக்கித் தவிப்பவர்களுக்கு, அடுத்த சில நாட்களில் அவசரகால உதவிகள் கிடைக்காவிட்டால், பல லட்சக்கணக்கான மக்கள் மலேரியா, டெங்குக் காய்ச்சல் போன்ற பல விதமான நோய்களால் பாதிக்கப்படக்கூடும் என்று ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது.
வெள்ளத்தில் சிக்கியுள்ள பல கிராமங்கள், மிகப் பெரிய சுகாதார நெருக்கடியில் சிக்கியிருப்பதாக இந்தியாவில் இருக்கும் ஐ நா சபையின் குழந்தைகள் நிதியத்தின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கிறார்.
இந்திய மாநிலமான பீஹாரில் மட்டும், நிவாரணப் பணிகளைச் செய்வதற்கு மேலும் பல ஹெலிகாப்டர்கள் தேவைப்படுவதாகவும், வயிற்றுப்போக்கை தடுக்கக்கூடிய வாய்வழி திரவ மருந்துப் பாக்கெட்டுகள் குறைந்தது பத்து லட்சம் தேவை என்றும் ஐ நா சபை தெரிவித்துள்ளது.
வங்கதேசம் மற்றும் நேபாளத்தில் வெள்ளத்தின் உயரம் குறையத் துவங்கியிருந்தாலும், பல லட்சக்கணக்கான மக்கள் தொடர்ந்து மேடான பகுதிகளில் சிக்கித் தவித்து வருகிறார்கள்.
தமிழ் பிபிசி
U.N. sees health crisis risk from South Asia floods | Top News | Reuters
Monsoon health crisis 'days away' - Weather - MSNBC.com
South Asian Flood Death Toll Hits 311
India, Nepal bicker over cause of flood
Posted by
Boston Bala
at
10:54 PM
0
comments
மதுரை வன்முறை: டி.எஸ்.பி. உள்பட 17 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
தினகரன் நாளிதழ் அலுவலகம் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக ஊமச்சிகுளம் டி.எஸ்.பி. உள்பட 17 பேர் மீது சிபிஐ சார்பில், மதுரை தலைமை நீதித்துறை நடுவர் மன்றத்தில் திங்கள்கிழமை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
மே 9-ம் தேதி மதுரையில் நிகழ்ந்த வன்முறைச் சம்பவத்தில் 3 ஊழியர்கள் இறந்தனர். இதுதொடர்பாக ஒத்தக்கடை காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர், இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. இவ் வழக்கு தொடர்பாக 'அட்டாக்' பாண்டி உள்பட 19 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இவ்வழக்கில், 20-வது குற்றவாளியாக தலைமறைவாக உள்ள திருமுருகன் என்ற காட்டுவாசி முருகனும், 21-வது குற்றவாளியாக ஊமச்சிகுளம் டி.எஸ்.பி. ராஜாராமும் சேர்க்கப்பட்டனர். இவ் வழக்கில் சம்பந்தப்பட்ட ஊருஇருளாண்டி, டைகர் பாண்டி, மாரி, இருளாண்டி ஆகிய 4 பேர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை.
இந்த 4 பேரைத் தவிர அட்டாக் பாண்டி உள்ளிட்ட 16 பேர் மீதும், மே 9-ம் தேதி சம்பவத்தின்போது பணியில் மெத்தனப் போக்குக் காட்டியது, கலவரத்தைத் தடுக்கத் தவறியது உள்ளிட்ட காரணத்தால் ஊமச்சிகுளம் டி.எஸ்.பி. ராஜாராம் மீதும் சிபிஐ அதிகாரிகள், மதுரை தலைமை நீதித்துறை நடுவர் மன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
இந்த குற்றப்பத்திரிகை 86 சாட்சியங்கள், 45 ஆவணங்கள், 32 பக்கங்கள் உள்ளடங்கியதாகும்.
முந்தைய சற்றுமுன்: கருத்துக் கணிப்பு, தாக்குதல், கொலைகள் - விவாதம்
தினமணி
IBNLive.com > Top cop, 15 others charged for Dinakaran attack
DNA - India - 16 chargesheeted in Dinakaran attack case - Daily News & Analysis
Posted by
Boston Bala
at
10:35 PM
0
comments
உலகின் தலைசிறந்த பல்கலை.கள் பட்டியலில் 4 இந்திய கல்வி நிறுவனங்கள்
உலகின் தலைசிறந்த 200 பல்கலைக்கழகங்கள் பட்டியலில் ஐஐடி (இந்திய உயர்தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள்), ஐஐஎம் (இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனங்கள்), ஜவாகர்லால் நேரு பல்கலைக்கழகம் மற்றும் தில்லி பல்கலைக்கழகம் ஆகிய 4 கல்வி நிறுவனங்களும் இடம்பிடித்துள்ளன.
ஹார்வார்டு, கேம்பிரிட்ஜ் மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகங்கள் முதல் 3 இடத்தைப் பிடித்துள்ளன.
ஐஐடி 57-வது இடத்தையும், ஐஐஎம் 68-வது இடத்தையும், ஜவாகர்லால் நேரு பல்கலை. 183-வது இடத்தையும் பிடித்துள்ளன.
உலகம் முழுவதும் உள்ள 3703 கல்வி நிறுவனங்களை கணக்கில் எடுத்துக்கொண்டு, தலைசிறந்த பல்கலைக்கழகங்களின் தரப் பட்டியல் தயாரிக்கப்படுகிறது. தலைசிறந்த தொழில்நுட்பப் பல்கலைக்கழகங்களின் பட்டியலில் 3-வது இடத்தையும், தலைசிறந்த 100 அறிவியல் பல்கலைக்கழகங்களின் பட்டியலில் 33-வது இடத்தையும் ஐஐடி பிடித்துள்ளது. கலைப் படிப்புகளைப் பொருத்தவரையில், தலைசிறந்த பல்கலை.கள் பட்டியலில் தில்லி பல்கலைக்கழகம் 75-வது இடத்தைப் பிடித்துள்ளது.
தினமணி
Deccan Herald - Four Indian institutions in world university rankings
IITs 57th in list of world's top varsities :: Economic Times
Posted by
Boston Bala
at
10:25 PM
0
comments
கங்கையில் படகு மூழ்கியது: 80 பேர் பலி
பிகாரில் கங்கை ஆற்றில் 130 பேருடன் சென்ற படகு திங்கள்கிழமை மூழ்கியது. இந்த விபத்தில் சிக்கியவர்களில் பலர் பத்திரமாக மீட்கப்பட்டனர். 2 பேர் பலியாகினர். இன்னும் 100 பேரைக் காணவில்லை. அவர்களின் நிலை என்ன என்பது தெரியவில்லை.
சைதாபாதிலிருந்து பதர்காட் நோக்கி படகு சென்று கொண்டிருந்தது. அப்போது கிழக்கு நோக்கி கடுமையான காற்று வீசியது. இதில் நிலைகுலைந்த படகு, நடு ஆற்றில் அப்படியே மூழ்கியது என சமஸ்திபூர் மாவட்ட ஆட்சியர் ஸ்ரவன் குமார் தெரிவித்தார்.
தினமணி
The Hindu : Front Page : 80 feared drowned in boat tragedy
Posted by
Boston Bala
at
10:21 PM
1 comments
b r e a k i n g n e w s...