.

Wednesday, July 4, 2007

ஒரு படத்தால் 3 மாதம் பீதி : "சிவாஜி' குறித்து நாசர்

தமிழ்த் திரையுலகில் ஒரு படத்தால் கடந்த 3 மாதங்களாக பீதி ஏற்பட்டது. இதனால் மற்ற படங்களைத் திரையிடுவதில் பாதிப்பு நீடிக்கிறது என "சிவாஜி' பற்றி நடிகர் நாசர் தெரிவித்தார்.

தஞ்சாவூரில் திங்கள்கிழமை நடைபெற்ற நியூ டவுன் ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழாவில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற நாசர் பேசியதாவது: தமிழ் சினிமாவில் வன்முறை குறித்து ஆய்வு செய்யப்பட்டால் குறைந்தபட்சம் 1,000 பக்கங்களுக்கு மேல் எழுதலாம்.

சுதந்திரப் போராட்டக் காலத்தைவிடவும் மிக முக்கியமான ஒரு நெருக்கடியில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்; அதிகமான பிரச்னைகள் நம்மைச் சூழ்ந்திருக்கின்றன. ஆனால், இங்கு சினிமா என்பது வியாபாரம் மட்டுமே. பணத்தைப்போட்டு பணத்தை அள்ளுவதற்கான ஒரு கருவி.

ஒரு சினிமா முழுமையாக கலைஞனுடைய ஆளுமைக்குள் வரும்போதுதான் அவனால் சாதிக்க முடியும். சில பேர் சேர்ந்து இதற்காக முயற்சி செய்து வருகிறோம். நான் ஒட்டுமொத்த சினிமா உலகத்தைப் பிரதிபலிப்பவன் அல்லன். இதற்கு மாறாக ஏதேனும் செய்தால் என்னை சாதியைவிட்டு (சினிமா) விலக்கி வைத்து விடுவார்கள்.

சிறந்த படங்கள் கேன்ஸ் விருது பெற வாய்ப்புள்ளது. விருதுக்காக படம் எடுக்க முடியாது. நல்ல படமாக இருந்தால் விருது கிடைக்கும். 'அவதாரம்' நல்ல படம் என்று என்னால் தைரியமாக சொல்ல முடியும். ஆனால், அந்த ஆண்டு சிறந்த படத்துக்கான விருதை 'அருணாசலம்' படத்துக்கு கொடுத்தார்கள். சொந்த மண்ணிலேயே தரமான படம் மதிக்கப்படவில்லை. அதைப்பற்றி நாம் யாரும் பேசவில்லை. ஆனால், ஆஸ்கரைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம்.

கடந்த 3 மாதங்களாக ஒரு படம் வருகிறது என்று ஏற்படுத்தப்பட்ட பீதியால் மற்ற படங்களை வெளியிட முடியவில்லை. அந்தப் படம் வெளியான பின்னரும் இதுவரை எந்த படத்தையும் திரையிட முடியவில்லை.

தமிழ் சினிமாவில் நடிப்பதையே விட்டுவிட்டோம். பாதி நேரம் சண்டை, மீதி நேரம் பாட்டு... நடிப்பதற்கு ஏது நேரம்?

சினிமா எப்படி இருக்க வேண்டும் என்பற்கு உலகளாவிய கோட்பாடு இருகிறது. உலக அளவில் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய சினிமா கோட்பாடுகள் எல்லாம் பொய்த்து - தோற்றுப் போகக்கூடிய ஓர் இடம் தமிழ் சினிமாதான்.

தினமணி

82 comments:

Sivakumar said...

பாவம் நாசர்! நல்ல மனிதர்களை, நடிகர்களை நாம் எப்போது ஆதரித்திருக்கிறோம்!!!

G.Ragavan said...

போச்சு போச்சு...இப்படியெல்லாம் உண்மையப் பேசலாமா? பேசுனா சும்மா விடுவாங்களா!

Sivakumar said...

குமுதம் கருத்துப்படம் சூப்பர்!

Anonymous said...

தமிழ் சினிமாவை தாங்கள் தான் ரட்சிக்க வந்தவர்கள் என்பது போன்ற பில்டப்பை வைத்துக் கொண்டு ஜல்லியடிக்கும் நான்கைந்து பேர் தமிழ் திரையுலகில் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களில் நம்ம நாசரும் ஒருவர். தமிழை வைத்துக் கொண்டு பம்மாத்து பண்ணும் அரசியல்வாந்திகளுக்கு சற்றும் குறைந்தவர்களில்லை இவர்கள்.


//சினிமா எப்படி இருக்க வேண்டும் என்பற்கு உலகளாவிய கோட்பாடு இருகிறது.//

முதலில் சினிமா என்றால் என்ன என்பதை விளக்கச் சொல்லுங்கள் இவர்களை. யாரைக் கேட்டுக் கொண்டு உலகளாவிய கோட்பாடுகளை உருவாக்கினார்கள்? அல்லது அவற்றுக்கு யாரெல்லாம் அதாரிட்டி?

சினிமா என்பது ஒரு பொழுது போக்கு அம்சம். எனக்கு என்ன பிடித்திருக்கிறதோ, அதை என்னுடைய காசைக் கொண்டு நான் பார்க்கப் போகிறேன் என்னுடைய நேரத்தை செலவழித்துக் கொண்டு. எனவே, அந்த 'என்னுடைய நேரத்தை, என்னுடைய பணத்தை' யார் 'எனக்குப் பிடித்த மாதிரி' பயன்படுத்திக் கொள்கிறார்களோ அவர்களைத் தேடித் தான் நான் மீண்டும் மீண்டும் போவேன். அதை விட்டு விட்டு, "நாங்கள் தான் கலை சேவை செய்கிறோம். ஆனால் மக்கள் கண்டு கொள்ளவே மாட்டேன் என்கிறார்கள்" என்று வயிற்றெரிச்சலில் புலம்புபவர்களுக்கு என்ன சொல்வது? அதாவது மக்கள் எல்லாம் முட்டாள்கள். இவர்கள் மட்டும் தான் புத்திசாலிகளாம். சிரிப்பாக இல்லை?

theevu said...

//அந்த ஆண்டு சிறந்த படத்துக்கான விருதை 'அருணாசலம்' படத்துக்கு கொடுத்தார்கள். //

:)

இதைப்பற்றி ஒன்றும் சொல்லவில்லையே அநானி?

Unknown said...

நாசர் டிரக்ட் செய்த தேவதை அவதாரம் முகம் போன்ற படங்கள் பாக்ஸ் ஆபிசில் அடைந்த 'வெற்றியை' மனதில் கொண்டு இந்த மாதிரி பேசி இருக்கிறார் போல.

முதலில் தயாரிப்பாளர் தலையில் துண்டை போடாத படங்களை நாசர் எடுத்து பழகட்டும்.அப்புறம் சிவாஜியை குறைகூற வரட்டும்.கஷ்டப்பட்டு கந்துவட்டியில் கடன் வாங்கி படம் எடுக்கும் தயாரிப்பாளர் காசில் அவார்டுக்கு படம் எடுத்துவிட்டு தயாரிப்பாளர் தலையில் பெரிய துண்டை போட்டு அனுப்பிவிட்டு பெரிய டைரடக்கர் என்று பெயர் வாங்கும் கம்ப சூத்திரம் எங்களுக்கு தெரியாதாக்கும்?

அவதாரம் போன்ற ஒப்பாரி படங்களுக்கு விருது வேறு வேண்டுமாக்கும்?வில்லன் நடிகர் என்பது சரியாகத்தானிருக்கிறது

வவ்வால் said...

அவதாரம் ,தேவதை , முகம் , பாப்கார்ன் போன்ற படங்களில் முகம் தவிர மற்றதை தயாரித்து இயக்க்கியது நாசர் என்றே நினைக்கிறேன். முகம் படத்தின் இயக்குனர் ஞான ராஜசேகரன்(பெரியார்,பாரதி)

தயாரிப்பாளர் என்றவகையில் நாசரே துண்டை போட்டுக்கொண்டார்!

இதில் அவதாரம் நீங்களாக மற்றவை குப்பை படங்கள் அதற்கு நாசர் என்ன சொல்கிறார்?

இதை விட கொடுமை ,அவதாரம் வந்தபோது அருணாச்சலம் வெளிவரவில்லை , இரண்டும் வேறு வேறு ஆன்டுகளில் வந்த படம், பினாத்துவது என்றால் இது தானோ?

G.Ragavan said...

செல்வன், எப்பொழுதும் கீரைக்குழம்பை விட உருளைக்கிழங்கு வறுவல் மொறுமொறுவென்றும் இருக்கும்..நன்றாகவும் விற்கும். நாசர் கீரைக்குழம்பு வைக்காம இருந்தாலும் பிரச்சனையில்லை...அவரையும் வறுவலு வறுக்கச் சொல்றீங்களே...கொழுப்புப்பு! நெஞ்சுக்கு நல்லதில்லையே.

நாசரு நல்லபடம் எடுக்கலைங்குறதுக்காக அவர் சொல்ல வர்ரது தப்பாயிராது. அவர் சரியான ஆளாங்குற விட...அவர் சொன்னது சரியான்னு மட்டுந்தான் நான் இங்க பாக்குறேன். அந்த வகைல அவரு சொன்னது எனக்குச் சரீன்னுதான் படுது.

Unknown said...

நாசர் வைப்பது கீரை குழம்பு இல்லை, ராகவன்.கீரை ஃப்ளேவர் கொண்ட அதே உருளை வருவல்தான். மோசமான மசாலா படத்தை எடுத்துவிட்டு அதை கலைப்படம், அவார்டு படம் என சொன்னால் அது உண்மையாகி விடுமா? நாசரின் தேவதை படம் சகிக்க முடியாத அறுவை.ஆனால் அதே மாமூல் மசாலா தான்.அவதாரம் வழக்கமான பழிவாங்கும் கதை. ஓரளவு ரஜினியின் 'கை கொடுக்கும் கை' படம் மாதிரிதான் இருந்தது.

Anonymous said...

nasar sollura maathiri padam edukkirathunna...Vijay, Ajith, Sombu, ellam enna seiyarathu???
konjamaavathu josingappa....

this is why Rajnia said about the "deaf frog" story....

moviku ponaa enna ore "azhithu" kondaa irukonum...??

மாயாவி said...

இந்தப் பின்னூட்டங்களைப் பார்க்கும் போதே தெரிகிறது, சிவாஜி ஏன் இந்தப்போடு போடுகிறது என்று.

வாழ்க தமில்(ழ்) சினிமா!

Anonymous said...

Do you know? Nasar has decided not to act in Rajni's film? That's why he didn't act in Sivaji

Anonymous said...

Actually Avatharaaram should be compared with Poorkaalam. There was lot of controversy when Poorkalam was selected for film fare award (or something). At that time itself, Nasar criticised Poorkaalam (and also Arunachalam).

Anonymous said...

நல்ல படங்களைப் பற்றிப் பேச தமிழ் பட உலகிலேயே மிக மோசமான படமான பாப்கார்னை எடுத்த நாசருக்குப் பேச யோக்கிதை கிடையாது.

ச.திருமலை

Anonymous said...

//"நாங்கள் தான் கலை சேவை செய்கிறோம். ஆனால் மக்கள் கண்டு கொள்ளவே மாட்டேன் என்கிறார்கள்" என்று வயிற்றெரிச்சலில் புலம்புபவர்களுக்கு என்ன சொல்வது? அதாவது மக்கள் எல்லாம் முட்டாள்கள். இவர்கள் மட்டும் தான் புத்திசாலிகளாம். சிரிப்பாக இல்லை?//

சரியா சொன்னின்ங்க சார். இவனுங்கெல்லாம் பெரிய ப... நெனப்பு. வயிதெரிச்சல்ல உளரான்.
டேய் நாசர் நீ டிரைடென்ட் ஹோட்டலில் டெபில் துடைத்துகொண்டிருந்ததை மறந்திட்டயா? பழச மறக்காதாப்பா.

அறிவியல் பார்வை said...

ஓட முடியாதவர்கள் சேர் ந்து ஓட்ட பந்தியதிற்கு விதி முறை வகுத்தால்... என்ன நடக்கும்?
அப்படி தான் இங்கு சினிமா, நடிப்பு, கலை பற்றியே அறிவில்லாதவர்கள் தான் சினிமா வை தீர்மாணிக்கிறார்கள்,
இதை தான் நாசர் பேசி யுள்ளார்.

Anonymous said...

//'என்னுடைய நேரத்தை, என்னுடைய பணத்தை' ///
ஷகிலா படம்கூட இப்படித்தானா? அவங்களுமா கலைச்சேவை பண்றாங்க?

Anonymous said...

தமிழ் சினிமா குப்பை தான். ஆனால் நாசர் கலைப்படங்கள் இயக்க தமிழ் சினிமா மட்டும் தான் உள்ளதா ? மலையாள, வங்காள, ஆங்கிலப் படங்களை எடுத்து சினிமாவை வாழ வைக்கலாமே.

Anonymous said...

ஏப்பா,
ஹேராம், சேது ஆகிய படங்களைத் தவிர்த்து படையப்பாவுக்கு சிறந்த படத்துக்கான விருது கொடுக்கப்பட்டது பற்றி என்ன சொல்றீங்க?
அந்த நேரத்தில் ஆட்சியிலிருந்த கலைஞரின் சித்து விளையாட்டு என்பதை மறுக்கிறீர்களா?

ஆஸ்கார் விருது பற்றி அலட்டிக் கொண்டிருக்கும் பேமானிகளைக் குறித்த நாசரின் ஆதங்கம் நியாயமானதே.

Anonymous said...

ஏப்பா,
ஹேராம், சேது ஆகிய படங்களைத் தவிர்த்து படையப்பாவுக்கு சிறந்த படத்துக்கான விருது கொடுக்கப்பட்டது பற்றி என்ன சொல்றீங்க?
அந்த நேரத்தில் ஆட்சியிலிருந்த கலைஞரின் சித்து விளையாட்டு என்பதை மறுக்கிறீர்களா?

ஆஸ்கார் விருது பற்றி அலட்டிக் கொண்டிருக்கும் பேமானிகளைக் குறித்த நாசரின் ஆதங்கம் நியாயமானதே.

அனானி -2

சீனு said...

//அவர்களில் நம்ம நாசரும் ஒருவர். தமிழை வைத்துக் கொண்டு பம்மாத்து பண்ணும் அரசியல்வாந்திகளுக்கு சற்றும் குறைந்தவர்களில்லை இவர்கள்.//

சும்மா இருங்க அனானி. தன்னால் இயன்ற வரையில் நல்ல படங்களை கொடுத்தவர் நாசர். பிரகாஷ்ராஜ் அளவிற்கு சோபிக்கமுடியாமல் போனதற்கு காரணம் பிரகாஷ்ராஜ் போன்று காம்பிரமைஸ் செய்துகொள்ளாததே.

//"நாங்கள் தான் கலை சேவை செய்கிறோம். ஆனால் மக்கள் கண்டு கொள்ளவே மாட்டேன் என்கிறார்கள்" என்று வயிற்றெரிச்சலில் புலம்புபவர்களுக்கு என்ன சொல்வது?//

இது வயிற்றெரிச்சல் இல்லை. ஆதங்கம்.

//முதலில் தயாரிப்பாளர் தலையில் துண்டை போடாத படங்களை நாசர் எடுத்து பழகட்டும்.//

அவதாரம் அவர் சொந்தப்படம் என்று நினைக்கிறேன்.

//கடன் வாங்கி படம் எடுக்கும் தயாரிப்பாளர் காசில் அவார்டுக்கு படம் எடுத்துவிட்டு தயாரிப்பாளர் தலையில் பெரிய துண்டை போட்டு அனுப்பிவிட்டு பெரிய டைரடக்கர் என்று பெயர் வாங்கும் கம்ப சூத்திரம் எங்களுக்கு தெரியாதாக்கும்?//

எப்படி? கமலின் ஆளவந்தான் மாதிரியா?

//அவதாரம் போன்ற ஒப்பாரி படங்களுக்கு விருது வேறு வேண்டுமாக்கும்?//

:) அவதாரம் படம் பார்த்தீங்களா?

தருமி said...

சீனு,
உங்களைப் போலவே //மக்கள் எல்லாம் முட்டாள்கள். இவர்கள் மட்டும் தான் புத்திசாலிகளாம். சிரிப்பாக இல்லை?// - என்று எழுதிய அனானிக்குப் பதில் சொல்ல நினைத்தேன். ஆனால் அதற்கு அடுத்து செல்வன் எழுதியிருந்ததைப் பார்த்ததும் எப்படி முகம் காண்பிக்கமுடியாமல் ஒரு ஆள் இப்படி எழுதும்போது முகம் காண்பித்தே இவ்வளவு மோசமாக ஒரு கருத்தை செல்வன் கூற முடிகிறது என்ற எண்ணத்தில் அந்த அனானிக்குப் பதில் சொல்லவில்லை.

நீங்கள் எழுதியதை வரவேற்கிறேன்.

அவர் எடுத்த படங்கள் நல்ல முயற்சிகள் (பாப்கார்ன் பார்க்க வில்லை; அப்படி ஒரு படம் எடுத்ததாலேயே அவருக்கு சினிமாவைப் பற்றி பேச தகுதியில்லையென்பது பற்றி என்ன சொல்ல?) இங்கே ரஜினி, விஜய் & அவர்க்ளது விசிறிகள் மட்டுமே தமிழ்நாட்டில் சினிமா பற்றி பேச வேண்டுமென்கிறார்களோ? அல்லது //பெரிய டைரடக்கர் என்று பெயர் வாங்கும் கம்ப சூத்திரம் எங்களுக்கு தெரியாதாக்கும்?// என்பவர்கள்தான் நம் தமிழ் சினிமாவை தூக்கி நிறுத்தப் போகிறார்களா?

Santhosh said...

//சரியா சொன்னின்ங்க சார். இவனுங்கெல்லாம் பெரிய ப... நெனப்பு. வயிதெரிச்சல்ல உளரான்.
டேய் நாசர் நீ டிரைடென்ட் ஹோட்டலில் டெபில் துடைத்துகொண்டிருந்ததை மறந்திட்டயா? பழச மறக்காதாப்பா.//
ஏம்பா அனானி அவரு டேபில் தொடைச்சா என்னா, எச்சி தட்டு கழுவினா உனக்கு என்ன? உருப்படியா எதாவது சொல்லு..

Santhosh said...

சீனு சரியா சொல்லி இருக்கிங்க.

செல்வன்

//நாசர் டிரக்ட் செய்த தேவதை அவதாரம் முகம் போன்ற படங்கள் பாக்ஸ் ஆபிசில் அடைந்த 'வெற்றியை' மனதில் கொண்டு இந்த மாதிரி பேசி இருக்கிறார் போல.//

நல்ல படங்கள் அனைத்தும் வெற்றி பெருவதில்லையே. எ.கா அன்பேசிவம், முகவரி இவை எல்லாம் மோசமான படங்களா என்ன. ஷகிலா படங்களுக்கு இருக்கும் வசூல் கூட சில படங்களுக்கு இல்லையே அதனால் ஷகிலா படம் நல்ல படம் ஆகிவிடுமா?


//முதலில் தயாரிப்பாளர் தலையில் துண்டை போடாத படங்களை நாசர் எடுத்து பழகட்டும்.//
அவர் எடுக்கும் படங்கள் பெரும்பாலும் சொந்த தயாரிப்பே என்று நினைக்கிறேன்.


//அப்புறம் சிவாஜியை குறைகூற வரட்டும்.கஷ்டப்பட்டு கந்துவட்டியில் கடன் வாங்கி படம் எடுக்கும் தயாரிப்பாளர் காசில் அவார்டுக்கு படம் எடுத்துவிட்டு தயாரிப்பாளர் தலையில் பெரிய துண்டை போட்டு அனுப்பிவிட்டு பெரிய டைரடக்கர் என்று பெயர் வாங்கும் கம்ப சூத்திரம் எங்களுக்கு தெரியாதாக்கும்?//

அவராவது ஒரு முதலாளி தான் பிச்சை எடுத்துகிட்டு இருக்காரு. சிவாஜி படத்தால் எத்தனை படம் முடங்கி இருக்கு, எத்தனை பேர் கோடம்பாக்கத்தில் தலையில் துண்டு போட்டுகிட்டு இருக்காங்கன்னு கேட்டுப்பாருங்க..

//அவதாரம் போன்ற ஒப்பாரி படங்களுக்கு விருது வேறு வேண்டுமாக்கும்?வில்லன் நடிகர் என்பது சரியாகத்தானிருக்கிறது//

அவதாரம் படம் பாத்திங்களா?

Anonymous said...

அதெப்படிங்க!

நிஜமாலுமே நல்ல படம் எடுத்திருந்தால் எத்தனை போட்டிகள் இருந்தாலும் எல்லாத்தையும் தாண்டி நல்லா ஓடாதா?

இதுல எதுக்கு அடுத்த படத்தை குறை சொல்லிகிட்டு!

Unknown said...

கமர்ஷியல் படங்களை எடுக்க தேவையான தகுதி 'முதலில் தயாரிப்பாளருக்கு நஷ்டம் வராமல் படம் எடுக்க வேண்டும்' என்பதே.

ஆர்ட்,அவார்டு,டாகுமெண்டரி படங்களுக்கு அந்த சிரமம் எல்லாம் இல்லை.அவர்களை வேண்டுமானால் கிடைக்கும் அவர்டுகளை வைத்து மதிப்பிட்டு கொள்ளலாம்.

கமர்ஷியல் சினிமா என்பதே வியாபாரம் தான் , கடைசிதுட்டூ வரை முதல்போட்டு கழுத்துக்கு மேல் கடன்வாங்கி தயாரீப்பாளர் எடுக்கும் ரிஸ்க் எனும்போது "சினிமா என்பது வியாபாரம் மட்டுமே. பணத்தைப்போட்டு பணத்தை அள்ளுவதற்கான ஒரு கருவி" என்று புலம்பி என்ன ஆகப்போகிறது?

கமர்ஷியல் சினிமா விதிகளை அறியாதோர் அல்லது ரொம்ப லேட்டாக புரிந்த்துகொண்டோர், அதை வெற்றிகரமாக உணர்ந்தவரை குறைகூறுவது இன்னமும் அவருக்கு பல விஷயங்கள் புரியவில்லை என்பதையே காட்டுகிறது.

ரஜினியை குறைகூறினால் இன்று பெரிய அறிவுஜீவியாகலாம் எனும் நிலை தமிழ்சினிமா உலகில் காணப்படுகிறது.பொதுமக்கள் ரசனை என்பது மிக இழிவானதாக இவர்களால் பார்க்கப்படுகிறது.

பைசைக்கிள் தீவ்சை பார், 7 சாமுராயை பார் நம்ம சிவாஜியையும் பார்..தூ இதெல்லாம் படமா என ஒரு கூட்டம் சுற்றிக்கொண்டிருக்கிறது.
அதெல்லாம் நமது படம் அல்லவே?

இன்று இந்திய அளவில் முதலிடம் பெற தமிழ்சினிமா ஒன்றால் முடிகிறது என்றால், ஜப்பான் கொரியா என புதிய மார்க்கெடுகளை திறக்க தமிழ்சினிமா ஒன்றால் முடிகிறது என்றால் அது ஒட்டுமொத்த தமிழ்னும் பெருமைப்படும் விஷயம்தான்.அந்த சாதனையை பாராட்ட மனமில்லாதோர் "பீதி ஏற்படுகிறது" என்றால் பரிதாபப்படத்தான் முடிகிறது.

பிராட்மன் அணியில் இருப்பதால் எனக்கு இடம் கிடைக்கவில்லை என்று ஒருவர் புலம்புவத்ற்கு சமமாக இருக்கிறது இது.

Unknown said...

//நல்ல படங்கள் அனைத்தும் வெற்றி பெருவதில்லையே. எ.கா அன்பேசிவம், முகவரி இவை எல்லாம் மோசமான படங்களா என்ன.//

தெரியலை சந்தோஷ்.....அன்பே சிவம் எடுத்து அதோடு திரைப்பட தொழிலுக்கு முழுக்கு போட்ட வெங்கடேஸ்வரா பிக்சர்சை கேட்டால் அது நல்ல படமா இல்லையா என்பது தெரியவரலாம்:)

//அவர் எடுக்கும் படங்கள் பெரும்பாலும் சொந்த தயாரிப்பே என்று நினைக்கிறேன்.//

வினியோகிஸ்தர் என்று பல பாவப்பட்ட ஜென்மங்கள் தரும் அட்வான்சை வைத்து தயரிக்கப்படுகிறவைதான் திரைப்படங்கள்.

//அவராவது ஒரு முதலாளி தான் பிச்சை எடுத்துகிட்டு இருக்காரு. சிவாஜி படத்தால் எத்தனை படம் முடங்கி இருக்கு, எத்தனை பேர் கோடம்பாக்கத்தில் தலையில் துண்டு போட்டுகிட்டு இருக்காங்கன்னு கேட்டுப்பாருங்க..//

சிவாஜி வந்திருக்காவிட்டால் நாசர் எடுக்கும் படங்கள் 500 நாள் ஓடிருமா?இதென்ன கலாட்டா?

இவர்களுக்கு தில் இருந்தா இப்பவே ரிலீஸ் பண்ன வேண்டியதுதானே?நல்லா இருக்கும் படம் எப்பவும் ஓடும்.அதுக்கு தில் இல்லாம சிவாஜி, எம்ஜிஆர்ன்னு புலம்பிட்டே இருந்தா புலம்பிட்டே இருக்க வேண்டியதுதான்..

மன்சூர் அலிகான் உழைப்பாளி ரிலீசானப்ப தில்லா அவரோட 'காத்தவராய கிரிஷ்ண காமராஜன்.." ரிலீஸ் பண்ணார்.படமும் நல்லாதான் ஓடுச்சு.அந்த தைரியம் இவர்களுக்கு எங்கே போச்சு?

//அவதாரம் படம் பாத்திங்களா? //

பார்த்தேன்.(டிவில)

சன்னாசி said...

செல்வன், உலக சினிமா குறித்த உங்கள் சில பொன்மொழிகளை இதற்கு முன்பும் படித்திருக்கிறேன். உலகத் திரைப்படம் பார்ப்பவனெல்லாம் ஏதோ தோஷிரோ மிஃபுனேவும் லிவ் உல்மனும் திரையில் வந்ததும் பேப்பர் கிழித்து பறக்கவிடும் கான்ஃபெட்டி கந்தசாமிகள் மாதிரியான உங்களது இதுபோன்ற கருத்துக்களை இதற்கு முன்பும் உங்களது ரஜினி என்ற நடிப்புக் கடவுள் பதிவில் பார்த்த நினைவு. உலகத் திரைப்படங்களிலும் குப்பைகளைத் தாண்டித்தான் நல்ல படங்கள் என்று முடிவெடுக்கவேண்டியிருக்கிறது. ஜோல்னா ஜிப்பா, -5 லென்ஸ் வைத்த சோடாபாட்டில் கண்ணாடி, பரட்டைத் தலை என்று
மேம்போக்கான புளித்துப்போன சீச்சீ இந்தப் பழம் புளிக்கும் ரேஞ்சிலான வாதங்களை வைப்பது மாதிரி, கல்லூரிகளிலும் இதே மாதிரி ஒரு ஹெல்மெட் கோஷ்டி இருக்கும் - ஏ, இங்லீஸ் படம் மட்டுந்தான் பாப்பாருய்யா இவுரு, நம்ம படம் எல்லாம் புடிக்காது இவுருக்கு ஏ, ஏ - இதே ட்யூனை கொஞ்ச நாள் போடுவார்கள், பிறகு மெதுவாக அருணாக்கயிறு சுச்சுமேக்கர், சிலுவைஸ்டார் சுல்டான், ஜூம்பலீனா ஏலி படமெல்லாம் பாக்க ஆரம்பித்து விஜயகாந்த்தின் ஸ்பின்னிங் வீல் கிக்கில் குறைகண்டுபிடிக்க ஆரம்பித்து அப்படியே மெல்ல மெல்ல வரும், அதெல்லாம் அப்படியே காலப்போக்கில வர்றதுதான் இல்ல? என்ன, டப்பிங் படமெல்லாம் பார்த்து ராமிரெட்டி தொந்தி என்ன சைஸுக்கு இருக்குன்னு படம் படமா அளக்குறதும் ஒரு ஜாலி தான? இதுதாண்டா போலீஸ் படத்துல ராமிரெட்டி தொந்தியும்தான் பெரும் மிரட்டு மிரட்டும் (சண்டி, வண்டிய எட்றா அப்படிங்கிறப்ப கிலுக் அப்படின்னு சின்னதா ஒரு குலுங்கு குலுங்கும் பாருங்க தொந்தி, என்னாமா யோசிச்சு யோசிச்சு அந்த காட்சிய வைச்சுருப்பாரு நம்ம கோடி ராமகிருஷ்ணா) - தொந்திக்காக சிறந்த வில்லன் அவார்டு அவருக்குக் குடுக்கணும்னு நானுங்கூடத்தான் எழுதலாம். ஹெரான் ராமசாமி என்னமா டப்பிங் குடுத்திருக்கான் பாருய்யான்னு நான்தாண்டா எம்.எல்.ஏ படத்தையும் போட்டு தேச்சிட்டு உக்காந்திருக்கலாம். உக்காந்து இருக்கத்தான செஞ்சம்? உலகத் திரைப்படம்னா ஜகஜகஸ்தான் படம்தானான்னு உங்களை மாதிரி ஆட்கள் கேட்கிறதுக்கு முன்னாடி எம்.எஸ்.சத்யு, அடூர், குருதத், ஷ்யாம் பெனகல்னு பார்க்கவேண்டியதுதானே? இவுங்க எல்லாருங்கூட லோக்கல் லவங்கமாத்தான எடுத்து வச்சிருக்காங்க? இல்ல குருதத் ஹம்ப்ரி போகார்ட்டைப் போட்டுத்தான் ப்யாசா எடுத்தாரா? அதுவும் நம்ம படம் இல்லையோ ஒருவேளை? பதெர் பாஞ்சாலி பார்த்தா என்னய்யா ரே கூனிக் கிழவி நடக்கிறதை அரை மணி நேரம் காட்டுறாரு, இதுதான் ஆர்ட் பிலிமாக்கும்னு ஒரு விமர்சனம் வைக்கிறதும், உரைநடையை உரல்ல போட்டு உலக்கையால இடிச்சு எடுத்து அடுக்கினா புதுக்கவிதைன்னு இன்ஸ்டண்ட் அப்பம் சுடுறதும் அரதப்பழசான ஸ்டைல்.

உலகத் திரைப்படங்களைக் குறித்து எத்தனையோ வலைப்பதிவர்கள் வலைப்பதிவுகளில் எழுதியுள்ளார்கள் - இவர்கள் யாரும் இலக்கிய வட்டம் உள்வட்டம் வெங்காயத்தில் பதப்படுத்தப்பட்ட தலைவீங்கிகள் இல்லை என்றே நினைக்கிறேன் - சாமானியனின் ரசனைக்கு எந்த விதத்திலும் மேலானதல்ல உலகத் திரைப்படங்கள் என்பதற்கு, ஒரு முழு விமர்சனம் தேவையில்லை - எழுதப்பட்ட சில பத்திகளிலோ வரிகளிலோ இருக்கும் அடிப்படையான நேர்மை போதுமானது, இப்படி எழுதப்பட்ட எத்தனையோ பதிவுகளை இதே தமிழ் வலைப்பதிவுகளில் நானும் படித்ததுண்டு. இந்தியாவில் உலகத் திரைப்படங்களைப் பார்க்கவேண்டுமெனில், திருவனந்தபுரம் திரைப்பட விழா போன்றவற்றில் இருபது இருபத்தைந்து படங்களை கண் எரிய எரியப் பார்க்கவேண்டும், இல்லை ரஷ்யக் கலாச்சார மையம் போன்றவற்றிலோ ஃபிலிம் சொசைட்டியிலோ உறுப்பினராகி காத்திருந்து பார்க்கவேண்டும், இல்லை எவனாவது ஒரு இலக்கிய விரும்பி தன் மாதச் சம்பளத்திலிருந்து ஐந்தாயிரம் ரூபாயைப் போட்டு சின்ன ப்ரொஜக்டரில் தார்க்கோவ்ஸ்கி ரெட்ராஸ்பெக்டிவ் காட்டினால் பஸ் பிடித்து நூற்றுக்கணக்கில் கிலோமீட்டர்கள் பிரயாணித்துப் பார்த்து வரவேண்டும், இல்லை சென்னை போன்ற பெருநகரங்களில் குப்பை கொட்டவேண்டும். நீங்கள் அமெரிக்காவில் இருக்கிறீர்களென்று நினைக்கிறேன் - அங்கே இந்த லோலாயெல்லாம் கிடையாது - மாதத்துக்கு பத்து டாலருக்கு நெட்ஃப்ளிக்ஸ் உறுப்பினராகி, பெரிதாக வேண்டாம், ஒரு ஐம்பது டாலருக்கு ஒரு டிவிடி ப்ளேயர் வாங்கி சந்தர்ப்பம் இருக்கும்போது உலகப் படங்களைப் பார்க்க முயற்சி செய்யுங்கள் - இல்லை, த்ரூஃபோவிலிருந்து கொதாரிலிருந்து கேஸ்பர் நோவிலிருந்து மியாசாக்கி வரை தலைகீழ் பாடம் என்றால் மன்னிக்க (நாலு நேம் ட்ராப்பிங் பண்ணி நமச்சிவாயம் அப்படின்னு காலே அரைக்கால் பிட்டையாவது போடாட்டி எப்பிடி? நமக்கும் பொழுது போகணுமுல்ல?)!

இதெல்லாம் சரிப்படலைன்னா இருக்கவே இருக்கு, ஜில்லாங்கோ ஜுல்லாலங்கடி ஜிம்தலக்கா ஜும்ஸ் சொன்ன குய்யாங்கோ கும்தலக்கா ட்ரிங்யுங்குரோஷி ஜம்புருட்டபுரோஸ்ட்ரொம்ங்கிற தத்துவத்தை மிங்ஹோல்ஸ்ட்டொர்டோட்டிர் அப்படிங்கிற ஐஸ்லாந்து நாட்டு ஃபெமினிஸ்டு ஷப்ராஷமோஜில்க்ஸ் அப்படிங்கிற மாகஜின்ல விளக்கியிருக்கார்ங்கிற ரேஞ்சிலதான் இங்க எல்லாரும் அள்ளி விடறாங்க அப்படிங்கற ரேஞ்சுல செமி-விர்ச்சுவல்-கல்ச்சுரல்-மாயா-மனோரஞ்சித-மெலட்ராமா-Noeffortneedednoholdsbarred அங்கத பீரங்கி சல்யூட். கபீர் கபீர்னு வச்சுரலாம் ஒன் டு ட்வெண்டிஒன் சலூட். ஏதோ செவன் சாமுராயையும் வெட்டியோரியோ புசிக்காவையும் ரெபரன்சு போட்டாச்சு, அடுத்து அப்படியே வந்து பெர்க்மன் ஒரு பொர்க்கிமேன், ஐசன்ஸ்டைன் ஒரு ஐஸ்வண்டிக்காரன், மைக்கேல் விண்டர்பாட்டம் ஒரு அண்டர்லெஸ்பாட்டம், டேவிட் லிஞ்ச் ஒரு கோழிக்குஞ்ச், கோவிந்து நிகலானி யாரோட நகலோ நீ அப்படின்னு போட்டுட்டா இன்னும் காரம் மணம் குணமெல்லாம் சேர்ந்து ஒரே தூக்கா தூக்கிருமே தூக்கி?

Sridhar V said...

சன்னாசியின் பின்னூட்டம் மிகவும் அருமை.

நான் நல்ல படம் எடுத்தாத்தான் மற்ற படங்களை பற்றி விமர்சிக்கலாம் என்றால் என்ன சொல்வது?

மகேந்திரன் கூடத்தான் பூட்டாத் பூட்டுக்கள், ஜானி போன்ற படங்களை எடுத்தார். அதற்காக அவரை உனக்கு மற்ற படங்களை விமர்சிக்க தகுதியில்லை என்றா கூற முடியும்?

நாசர் நல்ல படம் எடுக்க ஆசைப்பட்டார். இன்னும் ஆசைப் படுகிறார். பிரகாஷ்ராஜ் போல அவருக்கு அது நிறைவாக வரவில்லை. அதற்காக ஆசைப் படுவதை குற்றம் சொல்ல முடியுமா?

சிவாஜி ரிலீஸ் செய்யப்பட்டபோது... சென்னையில் எல்லா தியேட்டரையும் புக் செய்து விட்டார்கள். இது அபிராமி இராமநாதனின் மார்கெட்டிங் ஸ்ட்ராடஜி. வீடியோ பைரசியினால் வரும் நட்டத்தை குறைக்க இப்படி ஒரு யுக்தி. இதனால் வேறு பல படங்களுக்கு தியேட்டர் கிடைக்காமல் அந்த தயாரிப்பாளர்களும் கந்து வட்டி கடனைத்தான் கட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

அட பைசைக்கிள் தீவ்ஸ்-ஐ விடுங்க...ஒரு money train, die hard போன்ற ஆக்ஷன் படங்கள் கூடவா எடுக்க முடியவில்லை நம்ம ஆக்ஷன் ஹீரோக்களுக்கு... அப்பப்ப சின்ன கதையை கொண்டு (logic பூச்சுற்றல் இருந்தாலும்) flight plan, terminal போன்ற படங்களை நேர்த்தியாக எடுக்கிறார்களே...அந்த திரைக்கதை முனைப்பையும், செய்நேர்த்தீயையும்தானே ஐயா கேட்கின்றோம்...

இப்ப எல்லா ஆங்கில மொழி படங்களும் மொழிமாற்றம் செய்யப்பட்டு தமிழகத்தில் திரையிடப்படுகின்றன. இது நிச்சயம் படம் பார்ப்பவர்களின் மத்தியில் ஒரு மாற்றத்தை கொண்டு வரத்தான் செய்யும். என்ன கொஞ்சம் நாட்களாகலாம்.

Thekkikattan|தெகா said...

தருமி - நேர்மையான ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.

சன்னாசி - சபாஷ், நிறைய விசயங்களை அருமையா சொல்லியிருக்கீங்க. மார்க்கெட்ல கருவாடும் விக்கிது, கேரட்டும் விக்கிது. அவன் அவன் நாக்கு ருசிக்கு, ரசனைக்கு அந்த கடைக்கு முன்னாடி இருக்கான். தனக்கே தெரிஞ்ச "அறிவு'டன் :-))

எஸ். வெங்கட் - சூப்பர்ப்.

இதில நான் சொல்ல என்ன இருக்கு. கருமம் பிடிச்சவனுங்க. எதுக்காகவெல்லாம் சூப்பர்ப் இயக்குனர்கள் என்று அக்கீகரிக்கிறதுன்னு விவஸ்தை இல்லாம போச்சு :(

Unknown said...

குட்டிக்கதை ஒன்று சொல்கிறேன்.

ரஷ்யாவின் முதலாம் பத்திரிக்கையை ஜார் பீட்டர் 18ம் நூற்றாண்டில் கொண்டுவந்தார். பலநூராண்டுகள் முன்பே மற்ற ஐரோப்பிய மொழிகளில் பத்திரிக்கைகள் வெளியாகியிருந்தன. ஆனால் ரஷ்யாவில் ஜார் பீட்டர் ஆட்சியில் தான் முதல் பத்திரிக்கை வெளியானது. அதற்கு வேடமோஸ்தி என்று பெயர். மட்டப்பேப்பரில், கேவலமான அச்செழுத்துக்களில் அச்சடித்திருந்த அந்த பத்திரிக்கையை பீட்டர் ஆவலுடன் படித்தார். அரசவையில் அனைவருக்கும் அதை காட்டினார்."ரஷ்ய மொழியின் முதல் பத்திரிக்கை" என்று பெருமிதத்துடன் சொன்னார்.

"இதுவா பத்திரிக்கை?" என்று முகம் சுளித்தார் இளவரசர்."ஹாம்பர்க்கில் குப்பையில் கிடக்கும் பேப்பர் கூட இதை விட நன்றாக இருக்கும்."

"நீ சரியான ஆள்.உனக்கு இளவரசன் என்ற பட்டம் ஒரு கேடு" என்றார் பீட்டர்."ஹாம்பர்க்கில் நல்ல பத்திரிக்கைகள் வருவது எனக்கு தெரியும்.ஆனால் அவை நமது அல்லவே? முதல் முதலில் அவர்களும் பத்திரிக்கை அடித்தபோது அதுவும் இதைப்போல் தான் மோசமாக இருந்திருக்கும்.கொஞ்ச நாள் கழித்து தான் நமதும் நல்ல தரத்துடன் வரும்.அதுவரை மோசமாகவே வரட்டுமே? இப்போது அதனால் என்ன கெட்டுப்போனது?"

Unknown said...

நாசர் சொன்ன "சொந்த மண்ணிலேயே தரமான படம் மதிக்கப்படவில்லை. அதைப்பற்றி நாம் யாரும் பேசவில்லை. ஆனால், ஆஸ்கரைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம்" என்ற பாயிண்டில் தான் விவாதமே...

அப்படி என்ன தரமான படத்தை இவர் கொடுத்து அதை மதிக்காமல் போய்விட்டார்கள் என்பதுதான் கேள்வி. நாசர் உளறுவதுபோல் அவதாரத்துக்கு பதில் அருணாச்சலத்துக்கு விருது தரவில்லை. அவதாரம் வந்தது 1995ல்.அருணாசலம் வந்தது 1998 அல்லது 1999.மனிதர் எந்த உலகில் வாழ்கிறார் என்பதே தெரியவில்லை.

Boston Bala said...

---தமிழ் சினிமாவில் நடிப்பதையே விட்டுவிட்டோம். பாதி நேரம் சண்டை, மீதி நேரம் பாட்டு... நடிப்பதற்கு ஏது நேரம்---

மேடைக்கேற்ற மாதிரி பேசுவது என்பதற்கேற்ப, ரோட்டரி கோட-சூட்டுக்கள் கேட்க விரும்புவதை சொல்லியிருக்கிறார். 'சந்திரமுகி' வெற்றி விழாக்களில், இதே கருத்தை வெளியிட்டிருந்தால் அவரின் கருத்து பரவலாக சென்றிருக்கும்.

Anonymous said...

oruththan vetti pettal eththanai naatharinga pechchai ella keedka veendi irukku,,,,
nalla Tamilarkal.....vazhka velka

Boston Bala said...

அண்மையில் படித்தது...

I have achieved what I wanted: Kay Kay Menon : Star Talk

Q: Why did you move from art cinema to commercial cinema?

A: What is art cinema? There is nothing called art, commerce or science cinema. I know only cinema. If today people are appreciating Sivaji, they are appreciating it. There would be no point asking them why they are liking it?

Apart from Haazaron Khwahishey Aisi, all my films were so-called commercial films. According to you Bhopal Express or Black Friday might be art movies, but I differ. I would not be able to distinguish between films. Someone first has to explain to me the meaning of an art film.

Sridhar V said...

அவதாரம் / அருணாச்சலம் காலக் குழப்பங்கள் தவிர ஒப்பீட்டளவில் அவதாரம் மிக நல்ல முயற்சியே.

இன்றைக்கு பருத்தி வீரனில் நாம் பார்க்கும் மண் சார்ந்த 'நேட்டிவிடி' அவதாரத்தில் ஓரளவு இருக்கத்தான் செய்தது.

இதில் நாம் பார்க்க வேண்டியது ரஜினி என்ற ஒரே ஒரு ஆதாரத்தை மட்டும் நம்பி படம் எடுக்கும் தயாரிப்பாளர், இயக்குநர்களுக்கு கொடுக்கும் ஊக்குவிப்பை ஒரு பயனீட்டாளராக நாம் நல்ல படம் எடுக்க விழையும் ஒருவருக்கு கொடுப்பதில்லை.

நாசர் தன்னை அங்கு அடையாளப் படுத்திக் கொண்டது அவருடைய தற்பெருமையாக இருக்கலாம். ஆனால் அவருடைய குற்றச்சாட்டில் நியாயம் இருக்கத்தான் செய்கிறது.

//eththanai naatharinga pechchai ella keedka veendi irukku//
ஹ்ம்ம்... நல்லா வேணும் நமக்கு...

G.Ragavan said...

// கேள்வி. நாசர் உளறுவதுபோல் அவதாரத்துக்கு பதில் அருணாச்சலத்துக்கு விருது தரவில்லை. அவதாரம் வந்தது 1995ல்.அருணாசலம் வந்தது 1998 அல்லது 1999.மனிதர் எந்த உலகில் வாழ்கிறார் என்பதே தெரியவில்லை. //

யாரது? செல்வனா? செல்வனா சொல்லைப் பிடித்து பொருளை விடுத்து விவாதம் செய்வது!

தில்லானா மோகனாம்பாளை அனுப்பல....ரிக்ஷாக்காரனை அனுப்பீருக்காங்கன்னு சொன்னா..அட கதாநாயகன் போட்டிக்கு....தேசீய விருது குடுத்தாங்களே....அப்படிச் சொன்னா தில்லான மோகனாம்பாள் வந்த வருசம் என்ன..ரிக்ஷாக்காரன் வந்த வருசம் என்னன்னு கேப்பீங்களோ! itz an agony about the attitue which is not changing even after decades. நல்லதைச் செய்யலைங்குறது வேற...ஆனா நல்லது செய்யனும்னு நெனைக்குறதே இல்லைங்குறதுதான் இங்க வருத்தம். அதுக்கு ஒரு வழி செய்யக்காணோம். தமிழ் சினிமாவ ஒரு எட்டு முன்னாடி நகத்த ஏதாவது செஞ்சாங்களா..இவங்க மட்டும் நூறு கோடீன்னு முன்னால நகந்துட்டாங்க...அவனவன் தெருவுல கெடா வெட்டுறான்..பாலூத்துறான்.

Anonymous said...

/If today people are appreciating Sivaji, they are appreciating it. There would be no point asking them why they are liking it?/

பாலாஜிண்ணா, இதேய்த்தாண்ணா "ஏண்டா ப்ளூம்ப்லிம் எடுக்குறானுங்கோ?"ன்னு கேக்குறவனுக்கெல்லாம் சொல்லறேண்ணா. ஒரு பய நம்ம ஸைட்டு நியாயத்த புரிஞ்சுகுறதா தெர்யல்ல? ஆனா, அடுத்த நிமிசத்துல அநியாயத்துக்கு வெஸ்டு ஹாலிவுட்டு வன்னு வாணம், அஸல் ஈஸ்டு பாலிவூட்டு காஸெட்டு எங்கே கிடைக்குமுன்னு கேக்குறானுங்கண்ணா

சன்னாசி said...

//குட்டிக்கதை ஒன்று சொல்கிறேன்.//

இந்தக் குட்டிக்கதையும், இருப்பதும் இல்லாததும் ரஷ்யாவின் எந்தப் பின்னணியில் நடந்திருக்கும் என்றும், கூடவே குட்டிக்கதைகளின் அபாரமான வீச்சையும் சற்று விரிவாகச் சொல்லியிருக்கலாமே?. நீங்கள் குறிப்பிட்டுள்ள காலம், தனக்கென்று தத்துவ மரபு எதையும் பெற்றிராத ரஷ்யக் கலாச்சாரம், அதி தீவிரமான Germanizationக்கு ஆளாகிக்கொண்டிருந்த காலம். சாரி சாரியாக ரஷ்யக் கல்விக்கூடங்களில் போதிக்க வந்தவர்கள், அறிவு'சீவி'களில் பெரும்பாலானோர் ஜெர்மானியர். அக் காலகட்ட ரஷ்யா கிட்டத்தட்ட ஹெகலிய இஞ்சின் பொருத்தப்பட்ட ஒரு கலாச்சாரமாகத்தான் இயங்கியது. இப்படி இருக்கும் காலகட்டத்திலே செருமனி குறித்தும் செருமாத மணி குறித்தும் சோக்குகளும், Jar மன்னர்கள் சொன்னதான a-neck-doteகளும் இருக்கத்தான் செய்யும். இந்தியாவுக்குள்ளிருக்கும் முட்டாள் சர்தார்ஜி சோக்குகள் ஐரோப்பாவுக்குப் போனா முட்டாப் போலக்குகள் குறித்த சோக்காகும், அமெரிக்க யாங்க்கிகளுக்கு 'inbred southerners' குறித்த சோக்காகும். பொப் கல்ச்சர் வித்துவான்கள் இதைப்பற்றியெல்லாம் தெளிவாக சொல்லி வைத்திருப்பார்களே? அமெரிக்க எட்கர் ஆலன் போ காலத்தில், தற்போதைய 'உலக மொழி'யான ஆங்கிலத்தில் எழுதப்பட்ட படைப்புக்களுக்குள் அவர் அப்போதைய மேட்டிமை மொழியான ஃப்ரெஞ்சைத் தெளித்ததும், அக்காலகட்டத்திய போதலேர் போன்ற ஃப்ரெஞ்சுப் படைப்பாளிகள் அதே எட்கர் ஆலன் போவை ஆங்கிலத்திலிருந்து ஃபிரெஞ்சு வாசகர்களுக்கு அறிமுகம் செய்து, அமெரிக்காவில் பிரபலமடையுமுன் ஃபிரான்சில் அவர் பிரபலமடைந்தது என்று கல்ச்சுரல் இன்டராக்ஸன்ஸ் பற்றி சீரியஸ் குட்டிக்கதைகள் பல சொல்லி, அதே மாதிரி, கிணற்றுத் தவளையாக இல்லாமல் ஏன் உலகத் திரைப்படங்களும் பார்க்கவேண்டுமென்று முழ நீளத்துக்கு போதனை போடலாம். ஷோப்பன்ஹார் வளர்த்த நாயின் பெயர் ஆத்மா என்பதை வைத்துக்கொண்டு ஒரு குட்டிக்கதை பின்னலாம் - The world as Will and Idea எழுதக் காரணம், தூங்கிக்கொண்டிருக்கும்போது ஆத்மா அவரது கெண்டைக்கால் சதையில் கடித்தது என்பதால்தான் என்று ஒரு நீட்டு நீட்டலாம். ஆத்மா கடிக்குமா என்று ஒரு ஜோக்கையும் சொருகி வைக்கலாம். ஆத்மா ஸ்பாண்டெக்ஸ் பேண்ட் போட்டுக்கொண்டு கோத்திக் ராக் குழு ஒன்றில் இணைந்துகொண்டது என்று இன்னொரு தத்துவ-Piksan-'A-neck-dote' போட்டு, ஆத்மாவுக்கு ஆவி இருக்கிறதா என்று ஒரு அஹத்தோண்டிக் கேள்வி எழுப்பலாம். இல்லை, விளாதிமிர் விளாதிமிரேவிச் விளக்குமாறேவ் இப்படித்தான் தன் அவையில கூடியிருந்த மந்திரிகள் ராஜகுருக்கள் போன்றவர்களுக்கு என்ன சொன்னாருன்னா என்று ஆரம்பித்து ஒரு லைட்ஹார்ட்டட் எஸ்கப்பேடு ஜெனரேட் பண்ணலாம். Factorrhea by demand; notify in times of necessity. குட்டிக்கதைகளை விட்டுவிட்டு, வெகுஜனத் திரைப்படக் கலாச்சாரம் என்பது, தரம் என்பதை ஒரு கறாரான அளவீடாக வைக்காமல், 'குத்துமதிப்பா உனக்கு இவ்வளவு குடுத்தா போதும்' என்ற ரீதியில் இயங்குவதை (ரஜினி வேலை எறிந்தால் வேல் சர்ரென்று ஒரு லட்சுமண ரேகை போட்டு மாஜிக்கல் ரியாலிச எஃபெக்டு காட்டுமே, இல்லை மர்து பட ரீமேக்குல ஜீப் சர்ருன்னு போயிட்டே இருக்கும், டபார்னு நின்னுரும் பாத்தா பம்பர்ல கயிறு, மறு நுனி ரஜினிகாந்து கால்ல, இல்ல, இய்யா ஆஆ அப்படின்னு ஒரு ஜெர்க் மட்டும் ஃப்ரேம் மூலையில வரும், தலைவர் மார்ஸில இருந்து மன்னார்குடி வரைக்கும் தொண்ணூற்றேழு குட்டிக்கரணம் அடிச்சு வந்து நிப்பாரே, இது மாதிரி) சுட்டிக் காட்டுவது தவறாமா?

வெகுஜனப் பத்திரிகைகளின் நேர்க்கோட்டுச் சித்திரிப்புக்களை மாற்றிய மருது நாசரின் தேவதை படத்தில் ஆர்ட் டைரக்டராகப் பணியாற்றியிருக்கிறார். ஜீன்ஸ் படத்தில் கடைசியில் டைனசார் வருமே (படத்தை முடிக்கப் போறோம்யா, ஸ்பீல்பெர்கு மாதிரி இந்தா இந்த கிராபிக்சு எபெக்டையும் எங்களால காட்டமுடியும்னு காம்பிச்சுக்குறோம், ஒரு டபிள்சு கதை, அதுல ஒரு டைனசார் - படம்னா லாஜிக்லாம் பார்க்கக் கூடாது, அமெரிக்காவில டபிள்ஸ் மெடிக்கல் காலேஜில படிக்கிறாங்க, ஐஸ்வர்யா ராயை லவ் பண்றாங்க, படம் முடியறப்ப டைனசார் வந்து வாழ்த்துது. கப்பிரியேல் கரியப்பா மரியமுட்டைக்கோசு சொல்ற மாயா யதார்த்தவாதம் மரக்குடுக்கை தந்திரவாதம்ங்கிறதெல்லாம் இதுதான் கேட்டுட்டேங்களா சரியா? இதுக்கு மேல கிராபிக்சு அடுத்த படத்துல மிச்சம் சொச்சம் வச்சதையெல்லாம் வழிச்சு வாழை இலையில சுருட்டித் தந்துர்ரோம் - சும்மா நொய் நொய்ங்கப்படாது, புதுசா வந்ததையெல்லாம் அள்ளி வச்சு செஞ்ச கிராபிக்ஸெல்லாம் வேஸ்டாப் போவுதுல்ல? எங்கயாவது பொருத்திரலாம்னு பார்த்தோம், முடியலியே?) அந்த மாதிரியெல்லாம் இல்லாம கலை நிர்மாணம் வெகு நேர்த்தியாகச் செய்யப்பட்ட படங்களுள் தேவதை யும் ஒன்று. அரசவை என்பது சுல்தான்கள் மாதிரி பாவாடை, நுனியில பட்டு ஜரிகை, கூர்மையான கிரீடம் (ஜகஜக கோல்டு தாள் வேற அதுல) என்று சக்கா சக் டெம்ப்ளேட் போடாமல் ஒரு அசல் தமிழ்க் குறுநில மன்னனின் சுற்றுப்புறம் எப்படி இருக்கும் என்று அந்தக் காலகட்டத்தில் போடப்பட்ட செட்டுகளில் இருந்து, கே.ஏ.குணசேகரன் போன்றவர்களை சினிமாவுக்குள் அறிமுகப்படுத்தவாவது செய்ததில் இருந்து, ஞான.ராஜசேகரனின் முகம் படத்திலிருந்து, மலையாள தகராவின் ரீமேக்கான ஆவாரம்பூ வில் நேர்த்தியான பாத்திரப்படைப்பிலிருந்து (கடற்கரையில சர்ஃப் நுரை அப்பிக்கிட்டு நடிகை வைதேகியக்காவோட தங்கச்சி நந்தினி புரள்றதையும், மாட்டுக்கு தீவனம் கலக்கறப்ப வினித்தோட தொட்டியில அண்டர்வாட்டர் ஹாண்டு எலக்ட்ரிக் சாக் அட்டாக் குடுக்கிறதையும் கவனிக்கிறது தவிர நாசரையும் கவனிக்கலாமுல்ல), தேவர் மகனில் மாயத்தேவரிலிருந்து தலைவாசலின் பீடா சேட்டிலிருந்து என்று லோக்கல் ஃபிளேவரை சீன விஸிறி மாதிரி விஸிறிட்டே இருந்தாத்தான் தமிழ் ஸினிமா பத்தி சொல்ல அருகதை இருக்குமோ? நாசர் பாப்கார்ன் எடுத்ததுக்கும் பாண்டியன் பட கிளைமாக்சுல ரஜினிகாந்தோட மோட்டார் சைக்கிள் எக்ஸாஸ்ட் பைப்புலருந்து தீ வர்றதுக்கும் (எரியுதுல்ல ;-)) சரியாப் போச்சுன்னு வச்சுக்கலாமா. எக்ஸாஸ்ட் பைப்புல தீ வர்றதுக்கு அது என்ன Ghost Rider படமா இல்லை பேய்ப்படமா? ஓ, மாயா குதர்க்கவாதமில்ல அது, சரி சரி. ஏன், ஹாலிவுட் படங்களில இது இல்லியா? Slasher படங்களிலயும் Khaa:lej chicks go on fun trip - car breaks down - chicks check out a haunted house - there lives a slasher dude with a mouth full of half-eaten babies ங்கிற மாதிரி ஸ்டோரிபோர்டுகளில வரும். வில்லன் நடிகர் பேச்சு வில்லன் நடிகர் மாதிரி இருக்குங்கிற மாதிரி பொதுவா ஒரு டயலாகைப் போடுறப்ப, சரி தமிழ்ப் படமாவது பாத்திருக்கீங்களான்னுதான கேக்கவேண்டியிருக்கு? என்ன ஆவாரம் பூ படத்துல வினித்தை தராசுத் தட்டால வெளுத்து எடுக்கிற மாதிரியா நாசர் வெளுத்து எடுத்துட்டெர்? ஸ்ரீதர் வெங்கட் சொல்லியிருக்கிற மகேந்திரனோட பூட்டாத பூட்டுக்கள் பார்த்ததுண்டா? ஜெயபாரதியோட குடிசை பார்த்ததுண்டா? அதெல்லாம் பொட்டிக்குள்ள சுருண்டுகிச்சு அதனால அது டப்பா படமாத்தான் இருக்கும், விடுங்க. ஏன், ரஸினியோட றாணுவ வீறன் படத்தில வில்லனா ஆக்டு குடுத்த சிறஞ்ஸீவி (Chow Yun Fatடுக்கு நீலக் கண்ணு வைக்கிறது மாதிரி சிரஞ்சீவிக்கு அப்பவே வச்சிருப்பாங்க, கலக்கல் இல்ல?) கூடத்தான் இன்னிக்கு ஆந்திராவுல ஒரு படம் றெட்டி (Reddy Freddy ன்னு அடுத்து ஒரு படம் தான் பாக்கி ;-)), ஒரு படம் நாயுடு ஒரு படம் பலிஜாங்கிற ரேஞ்சுக்கு வால் அட்டாச்டு ரோல்ஸ் பண்ணி வரிசையா ஹிட் குடுத்துகினு இருக்காரு. தேவைன்னா மாப்பிள்ளை படத்தில ஒரு ஸ்டைல் ஸண்டை போட்டு சிக்கா சிக் அப்படின்னு முட்டியில இருக்கிற தூஸைத் தட்டிக்கிட்டே படியில இறங்கி வருவாரு பாருங்க (ஸிறஞ்சீவி)? சேச்சே, அப்படியே அமலாவைப் பாலத்து மேல சாச்சு தொண்ணுத்தேழு மொழியில ஐலவ்யூ சொல்லுவாரு பாருங்க, அதுல்ல மொரான்ஸு, அடச்சே ரொமான்ஸு.

கல்ச்சுரல் கொரிச்சான்ச (அதான், horizons) ப்ராடண் பண்ணணும்னா என்ன பண்ணலாம்? முதல்ல, பொழுதுபோக்குக்கு சினிமா பார்க்குறதிலர்ந்து தொடங்கலாம். போட்ட காசை எடுக்கமுடியிறதுதான் சினிமான்னா அதே லாஜிக்கை எல்லாருக்கும் வைக்கலாம். வின்செண்ட் வாங்கோவும் அவர் சகோதரர் புண்செண்ட் போங்கோவும் வரைஞ்ச ஓவியங்களில ஒண்ணு கூட விக்க முடியலையாம். கித்தானுக்கும் ப்ரைமருக்கும் சட்டத்துக்கும் ஆணிக்கும் தூரிகைக்கும் போட்ட துட்டைக்கூட திருப்ப முடியாத இவனெல்லாம் என்ன மனுசன், என்னத்தை வரைஞ்சிருக்கான் பொழப்பத்த பய. கோழி விட்டையப் போட்டு பொறவு நட்டு கழண்டு அதுல வுழுந்து பொரண்டது மாதிரி. மார்க் ஷகால் த ஃப்ளையிங் கேரேஜ் வரைஞ்சதுக்கும் அவனோட யூத டுபுக்குக்கும் என்னத்தை சம்பந்தம் இருக்க முடியும். தாஸ்தாவிஸ்கிக்கும் போட்ட துட்டைப் புரட்ட முடியலை. அவனோட அப்பனை அடிச்சே கொலைசெஞ்சாங்களாம். தானா.விஸ்கி கடைசி வரைக்கும் துட்டு இல்லாமத்தான் இருந்தாரு, செத்தாரு, இவனெல்லாம் என்னத்தைப் புத்தகம் எழுதி என்னத்தைக் கிழிச்சான், எழுதினா அப்படியே வைக்கப்போர் மாதிரி துட்டு சேர்ந்துரணுமில்ல Buplisserக்கு.

நிற்க. பிபிசி ரஜினியைக் குறித்து எழுதியிருக்கும் cult hero என்று விளித்துத் தொடங்கும் இந்தக் கட்டுரையை வாசித்துப் பார்க்கவும். பிபிசி அவ்வப்போது ப்ராட்காஸ்டிங்குடன் புல்ஷிட்டிங்கும் செய்வதால், ப்ரீத்தி ஜிந்தாவைப் பத்தி எழுத்தாளினியாக வைத்துக்கொண்டு ரஜினிகாந்தை cult hero என்று குறிப்பிடுவதிலுள்ள அரைவேக்காட்டுத்தனம் என்ன என்று புரியவில்லை என்று ரஜினிகாந்தை விட்டுவிட்டு, ரஜினிகாந்தை ரசிப்பவர்களின் ரசனையில் ஊசி ஏற்றுவதிலுள்ள அரசியலைக் கவனிக்கவேண்டிய அதே நேரத்தில், வெகுஜனக் கலாச்சாரம் எந்தெந்தக் காரணங்களால் கட்டமைக்கப்படுகிறதென்பதன் வெகு அடிப்படையான புரிதலும் இன்றி, வெகுஜனக் கலாச்சாரத்தை விமர்சிக்கும் அது தவிர்த்த (..தாக நாம் கருதும்) கலாச்சாரம் எதைக் குறிவைத்து இயங்குகிறது என்பதைக் குறித்த புரிதலும் இன்றி, இங்கே கொஞ்சம் அங்கே கொஞ்சம் என்று உலக சினிமாவை விமர்சிக்கிறேன், அதைப் பார்ப்பவனெல்லாம் ஏதோ pseudo சீவிகள் என்ற ரேஞ்சில் செல்வன் போன்றவர்கள் முன்வைப்பது வெகுஜனப் பத்திரிகைகளும் அந்துமணி போன்ற வாரமலர் அரைவேக்காட்டு அறிவுசீவிகளும் உருவாக்கி வைத்த பிம்பங்கள். அசலில் பார்த்தால் உலகத் திரைப்படங்கள் என்ற ரீதியில் முன்மொழியப்படுபவை அனைத்தும், வெகுஜனப் பார்வைக்கு தன் கலாச்சாரத்துக்கு வெளியிலுள்ள பார்வைகளை அறிமுகப்படுத்தும் முயற்சியே தவிர, பீற்றலோ பிரஸ்தாபங்களோ அல்ல. படம் பார்க்க வருபவர்களை யாரும் கழுத்தைப் பிடித்துத் தள்ளுவதில்லை. இப்படிப் பீற்றித் திரியும் Snobகள் யாரென்று அசலில் பார்த்தால், B-rated ஹாலிவுட் தகரடப்பாக்களையும் லோக்கல் பெரிய பட்ஜெட் டப்பாக்களையும் பார்த்துவிட்டு பீட்டர் விடும் அரைகுறைகள் - இவர்களுக்கு, தங்களது உடனடி எல்லைக்கு வெளியிலிருக்கும், எளிதில் மேற்கோள் காட்டக்கூடிய (டபடபடபன்னு க்ளைமாக்ஸுல சுடுவானே, அந்தப் படம்தான என்பான் என் ஒரு பள்ளித் தோழன். அப்போது, சரி பெரிய ஹாலிவுட் பட மேதாவி என்று நினைத்துக்கொள்வோம். நாலைந்து முறை இதையே கேட்டபிறகு மடக்கியபோது தெரிந்தது ஒரு இழவையும் பார்த்திருக்கவில்லை என்று. எப்படிரா பிறகு என்றால், அதான் எல்லாப் படத்திலயும் கிளைமாக்ஸுல டபடபன்னு மெஷின்கன்னுல சுடுறான் தான என்றான் கூலாக. உண்மைதான், அப்போது பார்த்துக்கொண்டிருந்த படங்கள் அனைத்திலும் கிளைமாக்ஸில் மெஷின்கன் சண்டைகள் இருக்கத்தான் செய்தன) எதுவுமே எளிதில் அப்பீல் ஆகும். புதுப் பணக்காரனை குற்றால அருவியில் எளிதாக அடையாளம் கண்டுகொள்ள முடிவதுபோல, இவர்களை அடையாளங்காண்பதும் கடினமான விஷயமல்ல ;-). B rated ஐடியாக்களை அற்புதமான படமாக்கும் டாரண்டினோ போன்றவர்களும் ஹாலிவுட்டில் உண்டு, படத்தில் சம்பாதித்து துட்டு பார்த்துவிட்ட ராபர்ட் ரெட்ஃபோர்ட் போன்றவர்கள் Sundance திரைப்பட விழா நடத்துகிறார்கள். தனது கலாச்சாரத்தை மையமாக வைத்து இயங்காத எந்த ஒரு துறையும் உருப்பட வாய்ப்புக்கள் குறைவு - இல்லையென்றால் மலிவான ஈயடிச்சான் காப்பிகளாகத்தான் போய் முடியும். உலகின்மீதான அமெரிக்காவின் பெரும் தாக்கத்திற்கு அதன் வெகுஜனக் கலாச்சாரத்துக்கு பெரும் பங்கு உண்டு என்பதை யாரும் மறுக்கமுடியாது - Cars என்று ஒரு படம் வருவதும், Spongebob Squarepants என்று படம் வருவதும் அதன் அபரிமிதமான கலாச்சார யந்திரம் நகரும் பாதையில் அமெரிக்கக் கலாச்சாரத்தின் தும்பு தூசியும்கூட தடங்களை விட்டுப்போகமுடியும் சாத்தியமே. மோட்டார்சைக்கிள்ஸ் என்றும் அரிவாள்மணை என்றும் நாம் ஏன் படம் எடுக்காமல், ரஜினிக்கு பொன்னிற டோப்பா வைத்து முகத்தில் சுண்ணாம்பு அடிப்பது ஏன் என்று கேட்கலாமா? ரஜினிக்கு 'cool pigment challenged dude' கெட்டப்பில் blonde டோப்பாவும் வெள்ளைத் தோலும் வைக்கலாம், ஆனால் அங்கே இருந்து வரும் ஜகஜகஸ்தான் கிர்கிஸ்தான் குர்திஸ்தான் ஃபிலிம் சரக்கு மட்டும் சரிப்பட்டு வராது. புதிதாக எதையும் அறிமுகப்படுத்த முயலும்போதெல்லாம் வந்து குதிக்கும் இந்த ஓட்டல் அதிபர்கள் ஓட்டும் ஓட்டில் நொண்டியாவது வெகுஜனக் கலாச்சாரத்தின் சாத்தியப்பாடுகளுமே. இந்த ஓட்டலைத் தாண்டி கடைசியாகச் செய்யமுடிவது ஈயடிச்சான் காப்பி மட்டுமே (அவஞ் செஞ்சிருக்கான்யா, நாங் கிடையாது முதல்ல பண்ணது) - அது ஜெகஜோதியாக நடந்துகொண்டிருக்கிறது. இங்கே சீவுவது என்னத்தையோ அறிவு'சீவி'யின் தலை என்று பார்த்தாலும், மற்றவன் வேலையை முடித்தபின் மிச்சம் மீதி இருப்பதைக் கூட்டிப் பொறுக்குவதுதான் நடைமுறை லட்சணம். சினிமாவுக்கே இந்தக் கதி, இதிலே மிச்சம் மீதி இருப்பதெல்லாம் இன்னும் பெருங் காமெடிதான். சுயசிந்தனை என்று ஒன்று கூட வேண்டாம், அதற்கான முயற்சியாவது இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பது கூட பெரும் குற்றம்தான் போல!! வெகுஜனக் கலாச்சாரத்துக்கும் ஒரிஜினாலிட்டி உண்டு என்பதை விளக்கவேண்டுமென்ற நிலைமை இருப்பதே பெரும் அபத்தம்.


பாபா,

//What is art cinema? There is nothing called art, commerce or science cinema. //
//Apart from Haazaron Khwahishey Aisi, all my films were so-called commercial films.//
//Someone first has to explain to me the meaning of an art film.//

நாளைக்கு மீரா நாயரின் படத்தில் வாய்ப்புக் கிடைத்தால் இதே கேகே 'He has a complex personality' என்ற ரீதியில் தனது கதாபாத்திரம் குறித்த நாசூக்கான detachmentடுடன் படர்க்கையில் பேசுவதைப் பார்க்கமுடியும் :-) இதெல்லாம் புதிதா என்ன? 'காமர்ஸ் பட' ;-) ப்ரமோஷன் பேட்டிகளில் எந்த நடிகர்/நடிகையாவது தனது பாத்திரத்தைப் பற்றி படர்க்கையில் பேசிப் பார்த்திருக்கிறீர்களா?

சுவாமி said...

நல்ல கதையா இருக்கே!
எனக்கு தெருக்கூத்து பிடிக்கிற அளவுக்கு பரத நாட்டியம் பிடிக்காது. உருமி இழுக்கிற டப்பாங்குத்து கேட்கிற அளவுக்கு உண்ணிகிருஷ்ணன் கேட்கிறதில்லை. ஜேசுதாசோட அய்யப்பன் பாட்டு பிடிக்கிறது மாதிரி அவரோட மஹா கணபதிம் பிடிகிறதில்லை. புதுக்கவிதை படிக்கிற மாதிரி மணிமேகலை படிக்கிறதில்லை. ஒவ்வொரு media வுக்க்கும் ஒவ்வொரு audience. மக்களுக்கு பிடிக்குதோ இல்லையோ, என்னோட மனதிருப்திக்கு கலை அம்சத்தோட என்க்கு பிடிக்கிற மாதிரி படைக்க போறேன்னு சொல்றவங்க எப்பவும் இருக்காங்க. Their reward is their personal satisfaction. And the hope of being appreciated one day. ஆனா நாசர் எனக்கு persoanl satisfaction ம் வேணும். என் விருப்பப்படி எடுத்தாலும், எல்லா மக்களும், சிவாஜி பார்க்கிற மாதிரியே போட்டி போட்டுட்டு என்படத்தையும் பார்க்கணும்னு சொன்னார்ன்னா, பிண்ணூட்டத்தின் முதல் வரியை மறுபடியும் படித்துக் கொள்ளவும்!! நாசரோடது வயித்தெரிச்சலும் இல்லை. ஆதங்கமும் இல்லை. வெறும் புலம்பல்தான். (அவர் ஏக்கம் தப்புன்னு சொல்லலை. தான் நல்லதுன்னு நினக்கிற படைப்பை யாரும் appreciate பண்ணவில்லையேங்கிற ஏக்கம் யாருக்கும் இருக்கும். அதுக்கு வேற படைப்பையும், பார்க்கிற மக்களையும் குறை சொல்றப்ப தான் அது புலம்பலா மாறுது).

இன்னைக்கி ஒருத்தர் கீரை குழம்பு சாப்பிடுங்க, உடம்புக்கு நல்லதுன்னு சொல்வார். நாளைக்கு இன்னொருத்தர், வேப்பங்கொழுந்து இன்னும் நல்லதுன்னு சொல்லுவார். அப்புறம் பச்ச இஞ்சியை அரைச்சு கொண்டு வாரேன், கீரை குழம்பு கெடுதல்னு ஒருத்தர் வருவார்!! Please. Just get me a beer!

சன்னாசி ஏதோ பெரிய விஷயம் சொல்லிருக்கார்னு மட்டும்தான் தெரியுது. என்ன சொல்லிருக்கார்னுதான் புரியலை. கலைப் படங்கள் போலவே!

PS: இந்த பதிவ கூட பாருங்க. இதுக்குதான் ஒடி வந்து பிண்ணூட்டம் இட தோணுது. மா.சி serious ஆ பதிவா போட்டுட்டு இருக்கார். என் area வீலேயே பதிவு போடுறார். Feedback கொடுக்கலாம்னாலும், அதுக்கு ரொம்ப யோசிகணுமேன்னு தள்ளி போட்டுட்டே வரேன். அவர் என்ன அந்த பதிவுக்கு 200 பிண்ணூட்டம், எனக்கு 4 தானான்னு புலம்பவா செய்கிறார்?!

சுவாமி

Unknown said...

சன்னாசி,

தேவதையில் காட்சி அமைப்பும் செட்டிங்க்ஸும் நன்றாக இருக்கும் என்கிறீர்கள். இருக்கட்டும். ஆனால் படம் நன்றாக இல்லையே? என்ன செய்ய?:)

வினீத்தை தராசு தட்டால் வெளுத்து எடுக்கிறார்..சரி..ஆனா மக்களுக்கு பத்து பேரை பறந்து பறந்து அடிப்பதுதானே வேண்டியிருக்கிறது?

பிரச்சனை துவங்குவதே இங்குதான்....அந்தகால குறுநில மன்னன் எப்படி இருந்தான் என்பதை தத்ரூபமாக கொண்டுவருவது ஒரு திரைப்படத்தின் வெற்றிக்கு தேவையற்றது.வேட்டையன் பிரெஞ்சுதாடியுடன் வந்து லக்கலக்கலக்கா சொன்னால் ஜனங்களுக்கு அதுபோதும்..அவனை குறுநில மன்னன் என ஏற்றுகொள்வார்கள்.அந்த திறமை வராதவரை எந்த மேக்கப்பும், செட்டிங்க்சும் ஒரு படத்தை ஜெயிக்க வைக்க முடியாது.

நீங்கள் சொல்லும் காப்பியடிப்பது தமிழ்சினிமாவில் ஏராளமாக நடக்கிறது..அதை ஒரு குறைபாடாக வைத்தால் கமலும், நாசருமே முதலில் குற்றவாளி கூண்டில் ஏறவேண்டும். மருதநாயகம் ட்ரெய்லர் அப்படியே க்ளாடியேட்டர் மாதிரியே இருக்கிறது:)தேவதை எந்த ஆங்கிலபடத்து காப்பி என மறந்துவிட்டது...ரஜினிபடத்துக்கு எல்லாம் காப்பி பிரச்சனையே இல்லை. (ரீமேக் தவிர்த்து) சீன்களை டிரக்டர்கள் சுட்டிருக்கலாம்..ஆனால் ஒரு நடிகனை அதற்காக குற்றம் சொல்ல முடியாது.டிரக்டர் சொல்கிறமாதிரி நடிப்பது அவர் வேலை.குற்றம் சொல்வதென்றால் டிரக்டரைதான் சொல்லவேண்டும்.

ஒரிஜினாலிட்டி இல்லையென்பது பெரிய குறையாக படவில்லை.அது நம்ம ஊர் கலாச்சாரம்:) ஜப்பான்/கொர்யா/தாய்வான் எதையும் கண்டுபிடிக்கவில்லை என்றாலும் காப்பி அடித்தே அமெரிகக்னை ஜெயித்தார்கள்.ஆசியநாடுகளில் சாஃப்ட்வேர் பைரசி 97%. நமூரில் இன்டலக்சுவல் பிராபர்ட்டி ரைட்ஸ் பில் பாஸ் செய்வதற்குமுன் எத்தனை எதிர்ப்பு வந்தது என்பது உங்களுக்கு தெரியும்:) அறிவுசார் திருட்டு இங்கே ஒரு தேசிய கலாச்சாரமாகி விட்டது. அரசியல் சட்டத்தையே பிரிட்டிஷ்காரனிடமிருந்து காப்பி அடித்த ஊரில் திரைப்படத்துறையை தனித்து குறைசொல்ல எதுவுமிருப்பதாக தெரியவில்லை.

உலக சினிமா? அது வேறுதளம். இது வேறுதளம், அது வேறு ஆடியன்ஸ் இது வேறு ஆடியன்ஸ். பெஞ்ச்மார்க்கிங் செய்யலாம்தான். அந்த அளவுக்கு நமது தொழில்களும் தொழிலாளிகளும் இன்னும் புரபஷனலிஸம் அடையவில்லையே? பெப்சியோடு காளிமார்க் போட்டி போட்ட கதைதான்.

சீனு said...

செல்வன்,

//அன்பே சிவம் எடுத்து அதோடு திரைப்பட தொழிலுக்கு முழுக்கு போட்ட வெங்கடேஸ்வரா பிக்சர்சை கேட்டால் அது நல்ல படமா இல்லையா என்பது தெரியவரலாம்:)//

அவருக்கு அது நல்ல படமாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், சினிமா ரசிகர்களை பொருத்தவரை அது ஒரு சிறந்த படம். மேலும், அந்த படம் தோல்வி அடைந்ததற்கு காரணம் படம் வெளிவந்த ஓரிரு வாரங்கள் பெரிய விளம்பரம் இல்லாததும். சேது படம் பார்த்து கற்றுக்கொள்ளவேண்டும். கூட்டம் இல்லை. ஆனால் படம் பார்த்தவர்கள் வரை நன்றாக இருப்பதாக கூறினார்கள். அதனால் பாலாவும் விக்ரமும் சொந்த காசை போட்டு போஸ்டர் அடித்து விளம்பரம் செய்தார்கள்.

//வினியோகிஸ்தர் என்று பல பாவப்பட்ட ஜென்மங்கள் தரும் அட்வான்சை வைத்து தயரிக்கப்படுகிறவைதான் திரைப்படங்கள்.//

அது ஓபனிங் உள்ள பெரிய ஹீரோக்கள் படங்களுக்கு மட்டும்தான். நீங்கள் சொல்வதின்படி பார்த்தால் ஏதோ நாசர் பெரிய ஓபனிங் உள்ள ஹீரோ/இயக்குனர் போல இருக்கு!!! வினியோகிஸ்தர் ஒரு படத்தில் இலாபம் பார்த்தால் அதில் கொஞ்சம் பங்கை அடுத்தவருக்கு கொடுத்துவிடுவாரா என்ன?

//மகேந்திரன் கூடத்தான் பூட்டாத் பூட்டுக்கள், ஜானி போன்ற படங்களை எடுத்தார். அதற்காக அவரை உனக்கு மற்ற படங்களை விமர்சிக்க தகுதியில்லை என்றா கூற முடியும்?//

பூட்டாத் பூட்டுக்கள் பார்க்கவில்லை. அதுசரி! ஜானியை ஏன் சேர்த்தீர்கள்?

//இன்றைக்கு பருத்தி வீரனில் நாம் பார்க்கும் மண் சார்ந்த 'நேட்டிவிடி' அவதாரத்தில் ஓரளவு இருக்கத்தான் செய்தது.//

அதே! அதே!!

//வினீத்தை தராசு தட்டால் வெளுத்து எடுக்கிறார்..சரி..ஆனா மக்களுக்கு பத்து பேரை பறந்து பறந்து அடிப்பதுதானே வேண்டியிருக்கிறது?//

அப்போ தமிழ் சினிமாவை அப்படியே வெஇத்திருக்கலாம், அடுத்த நிலைக்கு போகவேண்டாம்னு சொல்லுறீங்களா செல்வன்?

//அந்தகால குறுநில மன்னன் எப்படி இருந்தான் என்பதை தத்ரூபமாக கொண்டுவருவது ஒரு திரைப்படத்தின் வெற்றிக்கு தேவையற்றது.//

"அழுவதா? சிரிப்பதா? அம்மா. தாயே! தாயே!!"

Unknown said...

//மருதநாயகம் ட்ரெய்லர் அப்படியே க்ளாடியேட்டர் மாதிரியே இருக்கிறது:)//

செல்வன் என்ன இது பித்தலாட்டம் மருதநாயகம் எடுத்தது 1997 ல் கிளாடியேட்ட்ர் வந்தது 2000ல் இப்படியிருக்க மருதநாயகம் கிளாடியேட்டரை பார்த்து காப்பியடித்தது என்று எந்த மடயனும் சொல்லமாட்டான் நீங்கள் சொல்கிறீகள், கிளாடியேட்டர் பார்த்தீர்களா? இல்லை வேறு ஏதாவது பார்த்துவிட்டு உளறுகிறீகளா? வேண்டுமானால் நாளை இது குறித்து பதிவிடுகிறேன்

சீனு said...

//செல்வன் என்ன இது பித்தலாட்டம் மருதநாயகம் எடுத்தது 1997 ல் கிளாடியேட்ட்ர் வந்தது 2000ல் இப்படியிருக்க மருதநாயகம் கிளாடியேட்டரை பார்த்து காப்பியடித்தது என்று எந்த மடயனும் சொல்லமாட்டான் நீங்கள் சொல்கிறீகள்//

ஹி...ஹி...அவர் சொல்வது, மருதநாயகத்தின் ட்ரெயிலரை சுட்டு கிளேடியேட்டரரை எடுத்து விட்டார்கள் என்று. கரெக்ட் தானே செல்வன் சார்?

வவ்வால் said...

மருத நாயகம் , பிரேவ் ஹார்ட் என்ற மெல் கிப்ஸனின் படத்தை ஒற்றி எடுக்க முயற்சிக்கப்பட்டது. அதை தான் கிளாடியேட்டர் என்று சொல்லி இருக்கிறார் செல்வன் என நினைக்கிறேன்.

சன்னாசி said...

//தேவதையில் காட்சி அமைப்பும் செட்டிங்க்ஸும் நன்றாக இருக்கும் என்கிறீர்கள். இருக்கட்டும். ஆனால் படம் நன்றாக இல்லையே? என்ன செய்ய?:)//

படம் நன்றாக இல்லை என்றால், இந்த மாதிரி குப்பை படங்களை எடுக்காதீர்கள் நாசர் என்று தனது ரசனை முதிர்ச்சியை அடிப்படையாக வைத்து, சீனியர் ஆக்டர் என்ற முறையில் ரஜினி நாசருக்குச் சொல்லலாம் ;-). அவர் சொல்லவில்லை, இப்போது நாசர் சொல்கிறார். ராமராஜனுக்கு அடுத்தபடியாக (அவராவது கிராமத்துக் கதைகளில் என்ன புள்ள இப்படியெல்லாம் பேசலாமா நீ என்று லிப்ஸ்டிக் போட்டுக்கொண்டு சிவப்பு சிலுக்கு சொக்காயில் வெள்ளந்தியாக என்னத்தையாவது கேட்பார் - அதையாவது ஓரளவு ஒத்துக்கொள்ளலாம்) பக்கா காஸ்ட்யூம் ரசனை உள்ளது ரஜினிகாந்த் என்று சொல்லலாம் ;-) (தளபதி ஒரு விதிவிலக்கு). இது தவிர, படையப்பா, பாபா என்று சமீபத்தில் வந்த படங்களில் கூட, மேக்கப்பிலிருந்து காஸ்ட்யூமிலிருந்து ஒளிப்பதிவிலிருந்து, ஏன் - இசை தவிர்த்த பிற எந்த ஒரு தொழில்நுட்ப விவகாரமும் இப்படி மகா சொதப்பலாக இருக்கிறது என்று உங்களைப்போன்ற ரஜினி ரசிகர்கள்தான் சொல்லவேண்டும். சந்திரமுகியில் அமெரிக்கன் ரிட்டர்னாகி பிரபுவைக் காப்பாற்றி அடியாள்களை உதை விட்டுவிட்டு மேட்ரிக்ஸ் புகழ் ஃப்ரீஸ் ஃப்ரேமில் மோஷன் கேப்சர் கேமரா சுத்தி சுத்தி பிடிக்கும் போஸில் அசலில் ஒரு மனிதன் நின்றால் கப்பை டர்ரென்று இரண்டாகக் கிழிந்துவிடும் என்னும் யதார்த்தம் ஒருபுறம் இருக்க, அதே காட்சியை கப்பை கிழியாமலும் அடிக்க முடியும் என்ற மாதிரிக் குறைந்தபட்ச நேர்த்தியுடனாவது எடுக்க முடியாதா? மேட்ரிக்ஸ் எல்லாம் தேவையில்லை, என் ராசாவின் மனசிலே படத்தின் சண்டைக் காட்சிகளையும், அதற்கு இளையராஜாவின் இசை எங்கே தொடங்கி எங்கே crescendoவுக்குப் போகிறது என்றும் பார்த்திருக்கிறீர்களா? பிஷ்க்கா பிஷ்க்கா என்று ரஜினியின் alpha male கோமாளிச் சண்டைகளைப் பார்க்கும்போது ஒரு அளவுக்கு மேல் அப்படியே கூசுகிறது என்பதுதான் நிஜம். சண்டைக்காட்சிகளில் விடப்படும் குத்துக்களில் கூடவா ஐயா யதார்த்தம் இல்லாமல் இருக்கவேண்டும்? ரஜினிகாந்த்தின் சில குத்துக்களை அசலில் அதே கோணத்தில் விட்டால், அரைக் குத்திலேயே மணிக்கட்டு இரண்டாக முறிந்துவிடும். இந்த மாதிரி சொத்தை விஷயங்களே நூறு சொல்லலாம்.

மெதுவாகத்தான் முன்னேறி வரும் என்கிறீர்கள். வெகுஜனக் கலாச்சாரத்தில் யாரும் தன் இஷ்டப்படி படம் எடுக்கலாம், ரஜினி உட்பட. அரசியல் என்று வந்தால் காமராஜ், கக்கன் மாதிரி இருக்கணும் என்று உதாரணப் பட்டியல் கொடுப்பது தவறு என்றால், திரைப்படம் என்று வந்தால் பாடாவதியாக இல்லாமல் இது இது போல இருக்கவேண்டும் என்று திரைத்துறைக்கு உள்ளிருப்பவர்களும் வெளியிலிருப்பவர்களும் சொல்வது தவறுதான் என்று ஒத்துக்கொள்ளலாம்.

//ஒரிஜினாலிட்டி இல்லையென்பது பெரிய குறையாக படவில்லை.அது நம்ம ஊர் கலாச்சாரம்:) ஜப்பான்/கொர்யா/தாய்வான் எதையும் கண்டுபிடிக்கவில்லை என்றாலும் காப்பி அடித்தே அமெரிகக்னை ஜெயித்தார்கள்.//

என்கிறீர்களே, என்ன சொல்வதென்று தெரியவில்லை. ஸ்மைலி போட்டிருப்பதால் நம்ம ஊர் இப்படித்தான் இருக்கும், திருந்துற வழி கிடையாது என்று நக்கலடிக்கிறீர்களோ தெரியவில்லை. ஆனால் அசலாகவே, ஒரிஜினாலிட்டி இல்லையென்பது பெரிய குறையாக உங்களுக்குப் படவில்லையென்றால், அது குறித்து மெத்த மகிழ்ச்சி. இதே போல அனைவரும் நினைக்கத் தொடங்கினால் அப்துல் கலாம் ஐயா சொன்னதுபோல கி.பி 20020ல் இந்தியா வல்லரசாகி அனைவரது குடுமியையும் பிடித்து ஆட்டிவிடும்.

//நீங்கள் சொல்லும் காப்பியடிப்பது தமிழ்சினிமாவில் ஏராளமாக நடக்கிறது..அதை ஒரு குறைபாடாக வைத்தால் கமலும், நாசருமே முதலில் குற்றவாளி கூண்டில் ஏறவேண்டும்.//

கமல், நாசர் உட்பட அனைவரும்தான் காப்பியடிக்கிறார்கள். அதற்காக நாளைக்கு ரஜினிகாந்த் இல்லை, கமலஹாசன் போன்றவர்களும், National Lampoon's van Wilder 2: The rise of Taj ஐ எல்லாம் காப்பியடித்து தன்னை தாஜாகப் போட்டுப் படம் எடுத்தால் அதையும் யாராவது கேட்கத்தான் செய்வார்கள். அப்படி எதையாவது உருவவேண்டுமென்றால், Devil's Advocate ஐத் தமிழில் எடுத்து அதில் அல் பச்சீனோ வேடத்தில் ரஜினி நடிப்பது. நடக்காதே. கோட்டா சீனிவாசராவையோ குல்ஷன் குரோவரையோ சாத்தானாகப் போட்டுவிட்டு கீனு ரீவ்ஸ் வேஷத்தில் ரஜினியும் fade-outல் எத்தியோப்பியாவில் பாட்டும் என்று வைத்தால் கேள்வி கேட்கத்தான் தோன்றும்.

//வேட்டையன் பிரெஞ்சுதாடியுடன் வந்து லக்கலக்கலக்கா சொன்னால் ஜனங்களுக்கு அதுபோதும்..அவனை குறுநில மன்னன் என ஏற்றுகொள்வார்கள்.//

ரசிகனைக் கீழ்த்தரமாக நினைக்கும் சொத்தை மனோபாவம் திரைப்படம் எடுப்பவர்களுக்கு இருக்கலாம், பார்ப்பவனுக்கும் இருந்தால் டிக்கெட் வாங்கி உள்ளே போய் என்ன பஞ்சாமிர்தத்தைக் கொடுத்தாலும் வழித்துத் தின்றுவிட்டு வந்துவிடுவோம் என்றால் அதது அவரவர் விருப்பம். ஓட்டுப் போட்டேல்ல, அப்பப்ப வந்து போறேன், அது போதும் என்று அரசியல்வாதி சொன்னாலும் அப்படியே ஏற்றுக்கொள்ளலாம், ஜனங்களுக்கு அது போதும் என்பதும் அவரவர் விருப்பம். ரஜினி வளைஞ்ச செருப்பு போட்டி வேட்டையனாக வந்தால், குறுநில மன்னன் என்று ஏற்றுக்கொள்வார்களா. ரஜினிகாந்தின் screen presence வேறு, அவரது படங்களின் தொழில்நுட்பத்தின் கேவலமான 'நேர்த்தி' வேறு - சொல்லவேண்டுமானால் கேளுங்கள், நினைவிலிருப்பதை வைத்து இன்னொரு முக்காலடிக்கு ஒரு பின்னூட்டம் போடுகிறேன். எல்லா விஷயத்திலும் தீவிரமாக இருக்கத் தேவையில்லை எனினும், இந்த மாதிரி சோறு கண்ட இடமே சொர்க்கம் என்று கிடைப்பதற்கெல்லாம் சப்பைக்கட்டு கட்டி குப்பை மேல் செண்ட் தெளித்து முகர்ந்து பார்த்துக்கொண்டிருந்தால், நாளைக்கு ஒரு சமூகத்தின் அசல் ரசனைகள் எந்தச் சாக்கடையோடு அப்படியே அடித்துக்கொண்டு போயிற்று என்று ஆச்சரியப்படுபவர்களுடன் சேர்ந்து நாமும் ஆச்சரியப்பட்டுக்கொள்வதுதான் நடக்கும், சுய ரசனை என்று ஒரு சல்லியும் இருக்காது. பாபா மேற்கோள் காட்டி கேக்கே சொன்னது போல யாரும் ரஜினியை கலைப்படத்தில் நடிக்கச் சொல்லவில்லை, ஆர்ட் பிலிமுன்னா யாராவது எனக்கு எக்ஸ்பிளெய்ன் பண்ணுங்கப்பான்னு கேக்கிற கோராமைக்குள் அவரைப் பிடித்துத் தள்ளவும் அவசியம் இல்லை - எடுக்கும் படத்தை சிரத்தையாக எடுக்கவேண்டும் என்பதுதான் விஷயம். திரையில் வந்தால் ஒரு பவர் இருக்கு, அந்த பவர் எல்லாத்தையும் தூக்கி நிறுத்திடும் என்று எம்ஜியார் ரசிகன் மாதிரி சொல்கிறீர்கள் - அமெரிக்காவில் ஜிம் ஜோன்ஸ் என்ற சாமியாரும், போட்ட கோட் சூட்டோட சொர்க்கத்துக்குப் போயிரலாம் என்று தொள்ளாயிரம் பேரை விஷம்குடிக்க வைப்பதும் பவர் தான் ;-) - புறவயமான பவர் ரெட்டோரிக்கெல்லாம் கேட்க காமெடியாக வேண்டுமானால் இருக்கும்; அசலில் பார்த்தால், போட்டுப் பழகியாகிவிட்டது என்பதற்காக நாக்கு மழுங்கிப் போனபின்னும் பான்பராக்கை அதக்கிக்கொண்டு திரிபவர்களின் வாதம் அது.

//அறிவுசார் திருட்டு இங்கே ஒரு தேசிய கலாச்சாரமாகி விட்டது. அரசியல் சட்டத்தையே பிரிட்டிஷ்காரனிடமிருந்து காப்பி அடித்த ஊரில் திரைப்படத்துறையை தனித்து குறைசொல்ல எதுவுமிருப்பதாக தெரியவில்லை.//

இந்த 'செத்த பயல்' மனோபாவம் எங்கிருந்து வருகிறது என்று நினைக்கிறீர்கள்? புது விஷயங்களுக்குத் தங்கள் புலன்களைத் திறந்து வைக்காமல் சும்மா பேச்சுக்கு மட்டும் எட்டுத் திசையும் போய் லட்டு பாக்கெட் வாங்கி வரணும் என்று கூவிக்கொண்டே புது விஷயங்களுக்கு வெட்டுக்கால் கொடுக்கும் ஹிப்போகிரட்டுகளிடமிருந்துதான் வழிந்து வழிந்து உங்கள், என் காலடியிலென்று நாற்றம்பிடித்த குட்டையாகத் தேங்கியிருக்கிறது.

Boston Bala said...

சன்னாசி...

I truly, deeply, sincerely enjoyed your comments.

எண்ணங்களை விரிவாக்கும் விவாதம். நன்றி.

Unknown said...

// இது தவிர, படையப்பா, பாபா என்று சமீபத்தில் வந்த படங்களில் கூட, மேக்கப்பிலிருந்து காஸ்ட்யூமிலிருந்து ஒளிப்பதிவிலிருந்து, ஏன் - இசை தவிர்த்த பிற எந்த ஒரு தொழில்நுட்ப விவகாரமும் இப்படி மகா சொதப்பலாக இருக்கிறது என்று உங்களைப்போன்ற ரஜினி ரசிகர்கள்தான் சொல்லவேண்டும்.//

ரஜினி என்ற நடிகன் நடித்த படங்கள் அவை. இசை,ஒளிப்பதிவு,மேக்கப்,காஸ்ட்யூம் எல்லாவற்றுக்கும் ஒரு நடிகர் பொறுப்பாக முடியுமா? திரையுலகில் இருக்கும் அவைலபிள் பெஸ்ட் டேலண்டை வைத்து எடுக்கப்பட்ட படங்கள் தான் அவை (ஏ.ஆர்.ரஹ்மான், கே வி ஆனந்த்). இதற்குமேல் ஒரு நடிகர் இதற்கு எப்படி பொறுப்பாக முடியும்?

//சந்திரமுகியில் அமெரிக்கன் ரிட்டர்னாகி பிரபுவைக் காப்பாற்றி அடியாள்களை உதை விட்டுவிட்டு மேட்ரிக்ஸ் புகழ் ஃப்ரீஸ் ஃப்ரேமில் மோஷன் கேப்சர் கேமரா சுத்தி சுத்தி பிடிக்கும் போஸில் அசலில் ஒரு மனிதன் நின்றால் கப்பை டர்ரென்று இரண்டாகக் கிழிந்துவிடும் என்னும் யதார்த்தம் ஒருபுறம் இருக்க, அதே காட்சியை கப்பை கிழியாமலும் அடிக்க முடியும் என்ற மாதிரிக் குறைந்தபட்ச நேர்த்தியுடனாவது எடுக்க முடியாதா? //

ஒரு நடிகர் என்ற முறையில் சண்டைகாட்சி இயக்குநர் சொல்வதைத்தான் ரஜினி செய்ய முடியும். "தமிழ் திரைஉலகில் சண்டை காட்சிகளை மேம்படுத்துவது எப்படி" என்ற பொதுவிவாதத்தின் கீழ் வரவேண்டிய கேள்விகளை நீங்கள் ரஜினிமீது சுமத்துகிறீர்கள்..இதற்கு தமிழ் ஸ்டண்ட் கலைஞர்கள் தான் பொதுவில் பதில் சொல்ல வேண்டுமே அன்றி ரஜினி அல்ல.

//ரஜினிகாந்த்தின் சில குத்துக்களை அசலில் அதே கோணத்தில் விட்டால், அரைக் குத்திலேயே மணிக்கட்டு இரண்டாக முறிந்துவிடும். இந்த மாதிரி சொத்தை விஷயங்களே நூறு சொல்லலாம். //

சண்டைகாட்சியில் லாஜிக் எந்த மொழியிலும் இருப்பதாக தெரியவில்லை.தமிழ் திரையுலகில் ஒரு புரபஷனல் டச் குறைகிறதே தவிர லாஜிக் என்ற ஒன்று இல்லை என்பதை குறையாக சொல்ல முடியாது.

//வெகுஜனக் கலாச்சாரத்தில் யாரும் தன் இஷ்டப்படி படம் எடுக்கலாம், ரஜினி உட்பட. அரசியல் என்று வந்தால் காமராஜ், கக்கன் மாதிரி இருக்கணும் என்று உதாரணப் பட்டியல் கொடுப்பது தவறு என்றால், திரைப்படம் என்று வந்தால் பாடாவதியாக இல்லாமல் இது இது போல இருக்கவேண்டும் என்று திரைத்துறைக்கு உள்ளிருப்பவர்களும் வெளியிலிருப்பவர்களும் சொல்வது தவறுதான் என்று ஒத்துக்கொள்ளலாம்//

அரசியல்வாதிகளிடம் நேர்மையை எதிர்பார்ப்பது ஒரு நாட்டின் குடிமகனின் அடிப்படை உரிமை.இது பலரின் உயிர்,வாழ்வு, தேச முன்னேற்றம் சம்பந்தப்பட்ட விவகாரம்.திரைத்துறை அப்படி அல்ல.மோசமான படத்தை எடுத்தால் யாரும் சாகப்போவதில்லை:)

//ஆனால் அசலாகவே, ஒரிஜினாலிட்டி இல்லையென்பது பெரிய குறையாக உங்களுக்குப் படவில்லையென்றால், அது குறித்து மெத்த மகிழ்ச்சி. இதே போல அனைவரும் நினைக்கத் தொடங்கினால் அப்துல் கலாம் ஐயா சொன்னதுபோல கி.பி 20020ல் இந்தியா வல்லரசாகி அனைவரது குடுமியையும் பிடித்து ஆட்டிவிடும்.//

ஆசிய கண்டம் முழுவதற்கும் இருக்கும் அடிப்படை பிரச்சனை இது என்பதை தான் குறிப்பிட்டேன்.காப்பி அடித்து மெட்டுபோடும் இளையராஜா, கோக்ககோலா பாணியில் தம்ஸ் அப், காளிமார்க், அமேசான் மாடலில் இணைய பதிப்பகங்கள் என இது ஒரு ஆசிய கலாச்சாரமாகவே வளர்ந்துவிட்டது.ஒரு விதத்தில் இது ராயல்டி, காப்புரிமை கொடுக்க இயலாத ஏழைநாடுகளின் புரட்சி என்றே வைத்துக்கொள்ளலாம்.காப்பி அடிப்பதில் துவங்கிய ஜப்பானிய ஆட்டோமொபைல் துறை இன்று அமெரிக்காவையே அசைக்கும் அளவு வளர்ந்திருக்கிறது. திரைத்துறையும் அப்படி ஆகுமென எதிர்பார்க்கலாமே?இந்திய திரைத்துறைக்கு அமிதாப் தவிர ரஜினி என்ற இரண்டாவது பிராண்ட் கிடைத்திருக்கிறது. அதை ஒரு வளர்ச்சி என்று எடுத்துகொள்வோமே?

//ரசிகனைக் கீழ்த்தரமாக நினைக்கும் சொத்தை மனோபாவம் திரைப்படம் எடுப்பவர்களுக்கு இருக்கலாம், பார்ப்பவனுக்கும் இருந்தால் டிக்கெட் வாங்கி உள்ளே போய் என்ன பஞ்சாமிர்தத்தைக் கொடுத்தாலும் வழித்துத் தின்றுவிட்டு வந்துவிடுவோம் என்றால் அதது அவரவர் விருப்பம்//

தொழில்நுட்பத்தை தாண்டி திரையில் ஜெயிப்பது ஒரு கலைஞனின் திறமை.அது நாசருக்கு வரவில்லை. ரஜினிக்கு வந்திருக்கிறது. ரசிகனின் பாராட்டை பெற தத்ரூப செட்டிங் தேவையில்லை. நேர்த்தியான நடிப்பு போதும்.இது புரியாத நாசர் போன்றோர் நீங்கள் இப்போது செய்வது போல் ரசிகனை வசைபாடலாம்:) அது அவரவர் விருப்பம். ஆனால் ரசிகனுக்கு ஏற்ற படத்தை தரமறுப்பவன் திரையுலகில் திட்டியே காலத்தை கழிப்பான் என்பது உறுதி:))

//திரையில் வந்தால் ஒரு பவர் இருக்கு, அந்த பவர் எல்லாத்தையும் தூக்கி நிறுத்திடும் என்று எம்ஜியார் ரசிகன் மாதிரி சொல்கிறீர்கள் -//

நான் எம்ஜிஆர் ரசிகன் கூடத்தான்:).

ஒரு நடிகனின் ஆளுமை ஒரு திரைப்படத்தையே தூக்கி நிறுத்துவது எல்லோருக்கும் கைவரக்கூடியதல்ல. பொதுவாக ரஜினி எம்ஜிஆர் படங்களில் இவர்களை மையப்படுத்திவிட்டு "நீ ஆடு.நாங்கள் வேடிக்கை பார்க்கிறோம்" என மற்ற டெக்னிஷியன்கள் மேடை அமைத்து கொடுப்பது தான் வழக்கம். ரஜினி படத்துக்கு டெக்னிகல் நேர்த்தியை அதிகப்படுத்த வேண்டாம் என சொல்லவில்லை.அது தேவை இல்லை என்றுதான் சொல்கிறேன். ரஹ்மான், ஷங்கர், சுஜாதா என்று டீம் இருந்தாலும் ரஜினி படம் ஓடும். பிவாசு, தேவா என்று இருந்தாலும் ஓடும். இது உண்மையிலேயே ஒரு கலைஞனின் திறமையை தான் காட்டுகிறது என நம்புகிறேன்.

//அமெரிக்காவில் ஜிம் ஜோன்ஸ் என்ற சாமியாரும், போட்ட கோட் சூட்டோட சொர்க்கத்துக்குப் போயிரலாம் என்று தொள்ளாயிரம் பேரை விஷம்குடிக்க வைப்பதும் பவர் தான் ;-)//

அங்கே தொள்ளாயிரம், இங்கே ஐந்துகோடி என்கிறிரீகளா?:)

சிலரை பலநாள் ஏமாற்றலாம்,பலரை சிலநாள் ஏமாற்றலாம்,எல்லோரையும் எப்போதும் ஏமாற்ற முடியாது. திறமை இல்லாவிட்டால் 25 வருஷமாக ஒருத்தன் சூப்பர்ஸ்டாராக இருக்க முடியாது.

வெற்றிகரமான மனிதர்களிடமிருந்து கற்றுக்கொள்ள மறுப்பவர்கள் ஜெயிப்பது கடினம் என்பதற்கு நாசர் ஒரு உதாரணம்.

Unknown said...

மருதநாயகம் க்ளாடியேட்டர் பத்தி ஒரு பாசிங் ரெஃபரன்ஸுக்கு இந்த கலாட்டாவா?வவ்வால் சொன்னமாதிரி அது ப்ரேவ் ஹார்ட் இன்ஸ்பிரேஷனில் எடுக்கப்பட்ட காட்சி அமைப்பு.சினிமா துறையில் இல்லாத நான் ஒரு படத்தின் பெயரை மாற்றி சொல்வதற்கும் தனது சொந்த படத்துக்கு பதில் இன்னொரு படத்துக்கு விருது கிடைத்தது என நாசர் சொல்வதற்கும் வித்தியாசம் இல்லையா?

என்னவோ போங்க:)

Unknown said...

//யாரது? செல்வனா? செல்வனா சொல்லைப் பிடித்து பொருளை விடுத்து விவாதம்
செய்வது!?//

பொது அரங்கில் பெரிய குற்றச்சாட்டு ஒன்றை ஒரு அறிவாளி(!) என புகழப்படும் நடிகர்/இயக்குனர் முன்வைக்கும்போது அது தவறான குற்றச்சாட்டு என நிருபிக்க வேண்டியிருக்கிறது ராகவன்.அதனால் தான் வருட குழப்பத்தை குறிப்பிட வேண்டியிருக்கிறது

வவ்வால் said...

சன்னாசி எதற்கு இப்படி ஏக் தம்மில் யாகம் வளர்க்கிறீர்கள் ஒரே புகை மூட்டம் தான் கிளம்புகிறது !

செல்வன் சொல்வது ஒரு பக்கம் இருக்கடடும், நாசர் தமிழ் சினிமாவில் அசைத்த மாபெரும் காரியம் என்ன அல்லது அவர் புரிந்த அற்புதம் என்ன?

ரஜினி குறித்தான விவாதங்களை நான் தொடர்வது இல்லை ஏன் எனில் அவரைப்பற்றி பேசுதுவது ஒரு மலிவான விளம்பரததினை பேசுவோர் விரும்புகிறார் என்றே நான் நினைப்பேன்.

ரஜினியின் படங்களில் தொழில் நுட்பக்குறைபாடு எனில் அதற்கு யார் காரணம் இயக்குனர் தானே , இப்பொது ஷங்கர் அவரிடம் வேலை வாங்கவில்லையா, இல்லை தொழில்னுட்பங்களை புகுத்தவில்லையா. இயக்குனர்கள் எல்லாம் ரஜினி கால்ஷீட் கிடைத்துவிட்டால் அவர்களாகவே படத்திற்கு அவர் முகம் தவிர வேறு எதுவும் வேண்டாம் என்று முடிவுகட்டி விடுகிறார்கள் அது யார்க் குற்றம்?

சரி தமிழ் சினிமாவின் கலை ஞானி கமல் என்றே வைத்துக்கொள்வோம் அவரோடு பணி புரிய எத்தனை முன்னனி இயக்குனர்கள் தற்போது முன்வருவார்கள் சொல்லுங்கள். ஏனெனில் எந்த இயக்குனரையும் சுதந்திரமாக செயல்பட கமல் விட மாட்டார் , இல்லை என்று மறுக்க முடியுமா உங்களால்.

கமலின் படங்களில் 10 சதம் மட்டுமே குறிப்பிட தக்கவை , மீதி 90 சதம் சராசரிக்கும் வெகு கீழே தான்! என்னாலும் இப்படி கலைதாகம் கொண்டவர்கள் என்று சொல்லிக்கொள்வோரின் படங்களை கிழித்து தோரணம் கட்ட முடியும்!

தேவர்மகன் படத்தின் போது மலையாள இயக்குனர் பரதன் அடைந்த கஷ்டங்களை அறிவீர்களா? கமலின் தொல்லை தாங்காமல் பாதியில் ஓடிவிட்டார் பின்னர் சமரசம் செய்து அழைத்து வந்தார்கள். பரதன் மட்டுமல்ல பல இயக்குனர்களுக்கும் கமலின் தலையீடு பிடிக்காது.

ஒரு குறிப்பிட்ட வகுப்பினரின் பெருமையை பேசி அதன் மூலம் மலிவான விளம்பரம் தேடிக்கொண்டவர் தானே, மண்ணின் மணத்தைக்காட்ட வேறு களனே இல்லையா?

அதையெல்லாம் பார்க்கும் போது ரஜினி யாருக்கும் பிரச்சினை இல்லாமல் தனது வேலையை செய்கிறார். இயக்குனர் மொட்டை அடி என்றாலும் அடித்துகொள்கிறார்(கமலும் அப்படி செய்பவர் தான்), இப்போது உள்ள விஜய், சிம்பு போன்றவர்களை மொட்டை அடி என்று சொல்லிப்பாருங்கள் கொலை செய்து விடுவார்கள்.

ரஜினி ஒரு மிகப்பெரிய மாஸ் ஹீரோ ஆனாலும் அவர் இயக்குனர் விருப்பத்திற்கேற்ப நடிக்க தயாராக இருந்தாலும் இயக்குனர்கள் அவரை சரியாக பயன் படுத்த தயாரில்லையே!வணிக ரீதியில் இந்திய அளவில் ரஜினி அளவுக்கு ஒப்பிட கூட தற்போது ஆட்கள் இல்லை.

நடுனிலையோடு நான் கூறியவற்றை சிந்தித்து பாருங்கள் தோழர்களே!

Sridhar V said...

சன்னாசி எப்பொழுதும் 'பொடிமட்டையை' பிரித்து தும்ம வைப்பார்... இங்கு தூள் பரத்தி விட்டார்.

ஆரோக்கியமான விவாதத்திற்கு மிக்க நன்றி.

மேலே நான் குறிப்பிட்ட 'ஆரோக்கியமான' என்ற வார்த்தையே subjective-தான். 'எனக்கு ஆரோக்கியமானது' என்று தோன்றுவது எல்லாருக்கும் ஆரோக்கியமானதாக இருக்க வேண்டிய அவசியமில்லை.

இதே விவாதத்தை கொஞ்சம் சாதி முலாம் பூசி.... அரசியல் வண்ணம் பூசி திருப்பி கொண்டு செல்லலாம். அதற்கு நிறைய ஆதரவுகள் கூட கிடைக்கலாம். அது பலருக்கு 'ஆரோக்கியமானதாக' கூட படலாம்.

ஆக அதிகம் பேர்கள் விரும்புகிறார்கள் அதனால் அதைப் பற்றி மற்றவர்கள் விமர்சிக்க என்ன தகுதி என்று நாம் கேள்வி எழுப்பலாமா?

'ரம்யா கிருஷ்ணனுக்கு பதில் ஐஸ்வர்யா ராய் ஸ்டைலாக உக்காந்து 'என்ன படையப்பா' அப்படின்னு கேட்டா எப்படி இருக்கும்?' அப்படின்னு ஆசப்படறதுக்கும்,

'தாழ்த்தப்பட்ட சாதியில் பிறந்த்ததால் அவமானப்பட்டு வேறு மதத்துக்கு மாறும் ஒரு பாளயத்துக்காரனின் கதையை இந்திய சுதந்திர போராட்டகால பின்புலத்தில் படமாக எடுக்க' ஆசைப்படுவதற்க்கும், வித்தியாசம் இருக்கிறது.

திரைப்படம் என்பது வெறும் வணிகம்தான். அதன் வெற்றியை தீர்மானிப்பது நிகர லாபம் மட்டுமே என்ற 'ஒற்றை' பரிமாணத்தில் பார்த்தால்... மலையாள படவுலகின் மிகப் பெரும் நட்சத்திரமாக ஷகிலா-வைத்தான் சொல்லலாம். ஒரு 5-6 வருடங்கள் முன்பு வரை அவர் படங்கள் ஏனைய மலையாளப் படங்களை விட பெரும் வசூலை குவித்தன. அந்தப் படங்களும் வெற்றிப் படங்கள்தான்.

இங்கு நான் பாலியல் படங்களுக்கு எதிராகப் பேசவில்லை. பாலியல் படங்கள் என்ற போர்வையில் எடுக்கப் பட்ட அரைகுறை படங்களைப் பற்றித்தான் இந்த கருத்து.

ஜனரஞ்சகப் படங்களும் நேர்மையாக எடுக்கப் பட்டால் காலத்தை கடந்து நிற்கும். 'The Good, the bad, the ugly' போல.

கோபல்ல கிராமத்து மக்கள், மரப்பசு, கருவாச்சி காவியம் போன்ற புகழ்ப்பெற்ற கதைகள் சுவையில் ஒன்றுக்கொன்று குறைவில்லை.

இந்த கதையின் வெற்றிகளுக்கு மண் சார்ந்த எளிமையான எழுத்து நடை முக்கிய காரணம். ஆனால் அதன் 'உள்ளடக்கம்'தான் அந்த புத்தகங்களை காலத்தை தாண்டி நிற்க செய்கிறதூ.

அவதாரம், அன்பே சிவம் (லக்ஷ்மி மூவி மேக்க்கர்ஸ்), அருணாச்சலம், திருட்டுப் புருஷன், பூட்டாத பூட்டுக்கள், சிவாஜி, தேவதை, அஞ்சரைக்குள்ள வண்டி, ஆவாரம்பூ எல்லா படங்களும் பற்பல காரணங்களுக்காக வசூலை வாரி குவிக்கின்றன அல்லது வினியோகஸ்தர்களை நட்டமாக்குகின்றன.

ஆனால் அந்த படங்களின் நேர்மையும், உள்ளடக்கமும் அவைகளை காலம் கடந்து நிலைக்க செய்கின்றன அல்லது மறக்க வைக்கின்றன. ஒரு காலத்தில் அவை கலாச்சார அடையாளமாக மாறி விடுகின்றது.

அதற்கு விருதுகள் தூண்டுகோலாக, கிரியா-ஊக்கியாக இருத்தல் நலம்.

உண்மைத்தமிழன் said...

'அவதாரம்' வெளியானது 09.06.1995-ல். அந்த ஆண்டுக்கான சிறந்த படமாகத் தமிழக அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டது புதுமை யக்குநர் பாரதிராஜாவின் 'அந்திமந்தாரை'. நிச்சயம் இந்தப் படம் விருதுக்குரிய திரைப்படம்தான். இதில் சந்தேகமில்லை. இரண்டாவது சிறந்த திரைப்படமாக 'கோலங்கள்' என்ற திரைப்படமும், மூன்றாவது சிறந்த திரைப்படமாக 'அவதாரம்' திரைப்படமும் தேர்வு செய்யப்பட்டிருந்தது.

நாசர் சொல்ல வந்தது என்னவெனில் தனக்குச் சிறந்த நடிகருக்கான விருது கொடுக்காமல் ரஜினிக்கு கொடுத்துவிட்டார்களே என்பதாகத்தான் இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.

ஏனெனில் 1995-ம் ஆண்டு வெளி வந்த திரைப்படங்களில் சிறந்த நடிகருக்கான மாநில அரசின் விருதைப் பெற்றவர் ரஜினிதான். படம் 'முத்து'. இந்தக் கோபத்தில்தான் நாசர் இதை சொல்லியிருக்க வேண்டும்.

மற்றபடி 'அருணாச்சலம்' திரைப்படம் 10.04.1997-ல் வெளி வந்தது. 1997ம் ஆண்டுக்கான சிறந்த திரைப்படத்திற்கான மாநில அரசின் விருதை 'அருணாச்சலம்' திரைப்படம், 'சூர்யவம்சம்' திரைப்படத்தோடு இணைந்து பெற்றது.

Pot"tea" kadai said...

சன்னாசியின் பின் - ஊட்டத்தை ரசித்து படித்துக் கொண்டிருக்கிறேன். மிக சுவாரசியமாக இருக்கிறது. டாலர் செல்வன் அவர்களை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது. அவர் தன்னை அரைவேக்காடு என ஏன் இன்னமும் அறிவித்துக் கொள்ள மறுக்கிறார்? அவருக்கு 25 வயதுக்கு மேல் ஆகியிருந்தால் மூளை முதிர்ச்சியின் காரணமாக ஜகா வாங்கியிருக்கனும். ஆனாலும் குட்டிக் கதை சொல்கிறேன் பேர்வழியென்று வெற்றிலையை வெற்றுவாயில் மென்று துப்பிக் கொண்டிருக்கிறார்.

சன்னாசியின் பின்னூட்டங்கள் "எனக்கு" நிறைய வெளிகளை ஒரு இடத்தில் காட்டியது போன்றிருந்தது


Thanks Mate!

Anonymous said...

சன்னாசியின் பின்னூட்டங்கள் அருமை.......

சன்னாசி said...

//ரஜினி என்ற நடிகன் நடித்த படங்கள் அவை. இசை,ஒளிப்பதிவு,மேக்கப்,காஸ்ட்யூம் எல்லாவற்றுக்கும் ஒரு நடிகர் பொறுப்பாக முடியுமா?//

அதுதான் சில ரஜினி படங்கள் எப்படி பாடாவதியாக இருக்கிறது என்று சொல்வது - மற்றபடி ரஜினியின் நடிப்பு திறமை குறித்து என்றால், அதையும் விரிவாகப் பார்க்கலாம் :-). சந்திரமுகியில போர்வைக்குள் மூவ்ஸ் கொடுத்துக்கொண்டு, அப்பா என்று வேர்வையை வழித்தவாறு வெளியே வரும் ரஜினியைத் திரையில் பார்க்கும்போது, என்னய்யா காஜி ஷெரீஃப் மாதிரி இப்படி கேவலமான சீனையெல்லாம் வைக்கணுமான்னு கேட்கத் தோன்றவில்லை? பொம்ப்ளேன்னா என்று டைலாக் இழுப்பதை ரஜினிக்கு யார் டப்பிங் கொடுப்பது? ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்ததால் என்ன மாறிவிடுகிறது? எஸ்.பி.பியை வைத்து ஓப்பனிங் பாட்டு வைக்கும் செண்டிமெண்டிலிருந்து வெளிவர முடிகிறதா? குல்வால்லில்லே முத்து வந்த்ல்லோ என்று போயும் போயும் உதித் நாராயணை ரஜினிக்குப் பாடவைக்குமளவு ஏ.ஆர்.ரஹ்மானையும், குல்வால்லில்லேயின் அற்புதமான நடனக்காட்சிகளில் வெள்ளை மார்புக் கச்சைகள் கபக் கபக் என்று தூக்கி இறக்கி தூக்கி இறக்கி விடைத்துக் காட்டப்படுவதை க்ளோசப்பில் காட்டி ஏஸ்த்தடிக் அக்ரோபாட்டிக்ஸ் பண்ணும் கே.எஸ்.ரவிக்குமாரையும் (திரைப்படத்தில் எதைக் காட்டலாம் எதைக் காட்டக்கூடாது என்ற பஞ்சாயத்து இல்லை - அடுத்த முறை இந்தப் பாட்டை டிவி பொட்டியில் பார்க்கும்போது சற்றுக் கவனிக்கவும் - நான் சொல்வது ஒருவேளை சரியாகவும் இருக்கலாம் ;-)), சூப்பர் நாவலுக்கு அட்டைப்படம் எடுத்துக்கொண்டிருந்த சாதாரண நிலையிலிருந்து இன்றைக்கு மிக நேர்த்தியான இந்திய ஒளிப்பதிவாளர்களுள் ஒருவராக உருவெடுத்திருக்கும் கே.வி.ஆனந்த்தின் கேவலமான ஃபில்டர்களிலிருந்து (சைக்கிள் பேரணி ஒட்டுவேலை அடுத்து - என்னய்யா இது சினிமாவா இல்லை நியூஸ் ரீலா) என்று தொழில்நுட்ப வல்லுனர்கள் அனைவரும் சேர்ந்த மாதிரி ஒரே நேரத்தில் குழம்புவது ஏன் என்றுதான் தெரியவில்லை. ரஜினி என்ற pheNomன் (தமிழில் எழுதவில்லை, வேற மாதிரி அர்த்தம் வந்துரப்போவுது ;-)) வெயிட்டு தான் காரணமோ? படையப்பாவில் நண்பர் குழாம் என்ற தமிழ் சினிமா வழக்கப்படி (குறைந்தபட்சம் இளைய தளபதி படங்களிலாவது வயதையொத்த நண்பர்கள் வருவார்கள்) எதையாவது வைக்கவேண்டுமென்று சித்தப்பு கேங் ஒன்றைக் கூட்டிக்கொண்டு திரிவது ரசனையை வளர்க்கவேண்டாம், குறைந்தபட்சம் பொருந்தியாவது வருகிறதா? ரசனையை வளர்க்கவேண்டும் என்பது பெரிய கட்டாயம் இல்லை, பொழுதுபோக்குக்குப் பார்க்கிறோம் ரொம்ப அலட்டிக்கொள்ளக்கூடாது என்பதெல்லாம் சரி; பியர்ஸ் ப்ராஸ்னன் விமானத்துக்குப் பின்னால் விழுந்து பின் விமானத்தைப் பிடித்து சர்க்கஸ் காட்டுவதையெல்லாம் குதறி எடுத்திருக்கிறார்கள் தானே? Lord of the Ringsன் தொழில்நுட்பக் குறைபாடுகள்/காட்சித் தவறுகள் என்ன என்று பாகத்துக்குப் பாகம் குறித்து வைத்துக் கிழித்த வலைத்தளங்களை உங்களுக்குக் காட்டமுடியும் - இந்த மாதிரி அரைவேக்காட்டுத்தனமான விஷயங்களை மானாவாரியாகத் தெளித்து எடுக்கப்படும் ரஜினி படங்கள் மீதும் அதேமாதிரி விமர்சனங்கள் வைக்கப்படத்தான் வேண்டும். இத்தனை பேர் ரஜினியை விமர்சிப்பது அவருக்குக் கிடைத்த வெற்றி என்றெல்லாம் ஜல்லி அடித்தால், இத்தனை பேர் வயிற்றுப்போக்கு உருவாக்கும் E.coliயை ஆராய்ச்சி செய்வது E.coli க்குக் கிடைத்த வெற்றி என்று அதற்கு ஒரு ஈ.கோலையாண்டவர் கோவில் கட்டிக் கும்பிடுவதிலிருந்து தொடங்கலாம்.

//"தமிழ் திரைஉலகில் சண்டை காட்சிகளை மேம்படுத்துவது எப்படி" என்ற பொதுவிவாதத்தின் கீழ் வரவேண்டிய கேள்விகளை நீங்கள் ரஜினிமீது சுமத்துகிறீர்கள்..இதற்கு தமிழ் ஸ்டண்ட் கலைஞர்கள் தான் பொதுவில் பதில் சொல்ல வேண்டுமே அன்றி ரஜினி அல்ல.//

ஒத்தைக் கையால் ஒம்பது பேருக்கு சொண்டிச்சோறு குடுப்பது போன்ற கோமாளித்தனங்களைத்தான் இங்கே பேசுவது. தமிழ் திரைஉலகில் சண்டை காட்சிகளை மேம்படுத்துவது எப்படி என்பது மாதிரி நீங்கள் சொல்வதற்கெல்லாம் பதிலாய், அசலான நேர்த்தியுள்ள எத்தனையோ சண்டைக்காட்சிகளை தமிழ்ப்படங்களிலிருந்தே காட்டமுடியும் - கும் கும்மிலிருந்த் திப் திப்பென்று சண்டை சவுண்டு எந்தப் படத்தில் மாறியது என்பது வரை. காட்டிரலாமா? Phoren Fillum மாதிரி அவ்வளவு மேதாவிப் படமால்லாம் இருக்காது அது.

//சண்டைகாட்சியில் லாஜிக் எந்த மொழியிலும் இருப்பதாக தெரியவில்லை.தமிழ் திரையுலகில் ஒரு புரபஷனல் டச் குறைகிறதே தவிர லாஜிக் என்ற ஒன்று இல்லை என்பதை குறையாக சொல்ல முடியாது.//

சண்டைகாட்சியில் லாஜிக் எந்த மொழியிலும் இல்லை என்ற இந்த பொத்தாம்பொதுவான வாதத்தை கொஞ்சம் ஓரமாய்த் தூக்கி வைத்துவிட்டு, தோமா குருசு போன்ற காலிவுட் நடிகர்களின் பிரபலப் படங்களிலாவது பாருங்கள். தோமா குருசு என்னதான் பாட்பாயிலர் காப்பர் டீபாய்லர் படம் எடுத்தாலும் அவ்வப்போது வனில்லா ஸ்கை, eyes wide shut என்று படங்களையும் எடுக்கிறார். மைனாரிட்டி ரிப்போர்ட்டில் (எனக்குத் தெரிந்து) முதலில் பார்த்த touch screen computing நாளைக்கு உங்கள் வரவேற்பறை மேசையிலும் இருக்கக்கூடும். புருசு வில்லிசு ஃபைட்டர் ஜெட்டுடன் மேம்பாலத்தில் டிஷ்யூம் டிஷ்யூம் பூச்சுற்றிப் போட்டாலும், Sin City போன்ற க்ராஃபிக் நாவல் படங்களிலும் நடிக்கிறார். அமெரிக்கக் கலாச்சாரத்தில் John McClane பாத்திரம், அச்சு அசலான ஒரு pulp movie பாத்திரமாக காட்சிப்படுத்தப்படுகிறதே தவிர, அதன் தகுதிக்கு மீறிய எந்தவொரு விதத்திலும் காட்சிப்பொருளாக்கப்படுவதில்லை. அமெரிக்கன் இன்ஸ்டிட்யூட்டின் சிறந்த 100 படங்களில் டை ஹார்டு போன்றவை வந்தாலும், Die Hard 3யை, "They should have named it Thank God Jeremey Irons and Samuel L.Jackson were there" என்று ப்ரூஸ் வில்லிஸ் கிண்டலாகச் சொல்லுமளவு வெளிப்படையான ஒரு திரைப்படக் கலாச்சாரம், அதை உள்வாங்கிக்கொள்ளும் வெகுஜன ரசனை இருக்கிறது.

காராசேவா, லிஸ்கர் புஸ்கி, குஷ்கர் கிஸ்கி போன்றவர்கள் படமெல்லாம் 'அதெல்லாம் நம் படமில்லையே' என்கிறீர்கள். கொஞ்சம் அந்தாண்டை போய்ப் பார்த்தால், Darna mana hai போன்ற படங்கள்கூட ஹிந்தியில் வருகிறது, அனுராக் கஷ்யப் போன்றவர்கள் கீஷ்லாவ்ஸ்கியிடமிருந்து உருவுகிறார்கள் - மதுர் பண்டார்கர் போன்றவர்களின் சாந்தினி பார் போன்ற படங்களும் வெகுஜனத் தளத்தில் இருக்கின்றன. இதிலே குச்சி குச்சி ஹோத்தா ஹையின் ஷாருக்கான் excuse meயை squeeze me என்று ஆர்ச்சி-பெட்டி-வெரோனிகா ஸ்டைல் கரண் ஜோஹர் hipபாயாசத்தில் நீச்சலடிப்பதையும், ராமகோபாலவர்மாவின் நிஷப்தில் அமிதாப்பச்சனின் aby baby ரேஞ்சில் ஒரு baritone voice-over டார்ச்சர் கொடுத்து, ஜீயா ஹானின் purported cool-chick portrayalலின் 'அழகியல் ஜூமாக்ஸுகள்' வெறும் slutty nutcase பொரியலாய்ப் போவதும், Jesus of Montreal - மன்னிக்க, ரங்குத்தே ப-சந்தி படத்தில் Pirittiss ஹீரோயின் ரென்சனில் டேபிளுக்கு மேலிருக்கும் குப்பைகளை டிக்கிரி டிக்கிரி என்று ஆர்ட்டிஃபிஷியல்-டு-த-கோர் அம்மன் ரேஞ்சில் கலைத்துப் போடுவதும் என்று நிஜத்தில் ஒரு French doggie ரேஞ்சுக்கு நோண்ட ஆரம்பித்தால், சகல மொழிகளிலும் பொப் கல்ச்சரில் ரஜினிக்குப்பைகள் மாதிரி டன் டன்னாகக் கொட்டிக் கிடக்கத்தான் செய்கிறது - ராவவேண்டும் என்று நினைத்தால் எந்த மொழியிலிருந்தும் உருவி ராவலாம். சௌதாகர், ஆனந்த்தில் அமிதாப்பச்சன் நடித்ததற்காக குதா கவா, தூஃபான், ஜாதுகர் என்று கட்டிப்போட்டு ஒன்பது மணி நேரம் மொட்டை பிளேடை வைத்து அறுக்க இது என்ன Clockwork Orangeன் டார்ச்சர் டெக்னிக்கா?

//மோசமான படத்தை எடுத்தால் யாரும் சாகப்போவதில்லை:)//

ரசனை குறித்த அசிரத்தை இருக்கையில் இந்த மாதிரி சொத்தை வாதங்கள் வந்து விழுவதையும் தவிர்க்க இயலாது போல. இந்த அசிரத்தை ஏதோ சினிமாவில் மட்டும் தனித்து இருக்கும் குணாதிசயம் என்றா நினைக்கிறீர்கள்? அமெரிக்காவில் Creed இசைக்குழு தீர்த்தமும் லாகிரியும் ஏற்றிக்கொண்டு சொதப்பிய மேடைநிகழ்ச்சியில் கடுப்பான ரசிகர்கள் அவர்களை sue செய்ததை அப்போது தவறு எனலாமா? ரசிகர்கள் என்ன செத்தா போய்விட்டார்கள், அப்படியே போய்க்கினே இருந்தா என்ன குடியா முழுகிரப் போவுது? போதையைப் போட்டு கேவலமா கான்செர்ட் குடுக்கிறதும் உனக்கு இவ்வளவு குடுத்தாப் போதும் என்று மோசமாப் படம் எடுக்கிறதும் ஒண்ணு இல்லையோ அப்போ? மோசமான படத்தை எடுத்தால் யாரும் சாகப்போவதில்லை. அதேமாதிரி வேலைக்கு நேர்முகத் தேர்வுக்குப் போக பஸ்ஸுக்கோ ரயிலுக்கோ காத்திருக்கும் ஒருவனின் பஸ்ஸோ ரயிலோ ஏழரை மணி நேரம் தாமதமாக வந்தாலும்கூடத்தான் அவன் சாகப்போவதில்லைதான். அப்துல் கலாம் விட்டதென்று (உண்மையோ பொய்யோ) ஒரு ஈமெயில் சுற்றிக்கொண்டிருக்குமே - நம் ஊரிலென்றால் தெருவில் எச்சி துப்புவே, சிங்கப்பூரில் துப்புவியா என்ற ரீதியில் நமது சொத்தை குணாதிசயங்களை வைத்து, அதிலொன்றாக இந்த மோசமான படத்தையும் சேர்த்துக்கொள்ளச்சொல்லி அடுத்த ரவுண்டு ஈமெயில் வருவதற்குள் தகவல் அனுப்பலாம்.

//ஒரு விதத்தில் இது ராயல்டி, காப்புரிமை கொடுக்க இயலாத ஏழைநாடுகளின் புரட்சி என்றே வைத்துக்கொள்ளலாம்.காப்பி அடிப்பதில் துவங்கிய ஜப்பானிய ஆட்டோமொபைல் துறை இன்று அமெரிக்காவையே அசைக்கும் அளவு வளர்ந்திருக்கிறது. திரைத்துறையும் அப்படி ஆகுமென எதிர்பார்க்கலாமே?//

லூமியர் பிரதர்ஸ் கண்டுபிடித்த திரைப்படப் புரொஜெக்டரைக் காப்பி அடித்த அமெரிக்கா, அதை அப்படியே காப்பி அடித்து, இன்றைக்கு நான்கைந்து கறுப்பு வெள்ளை மோண்டாஜ், பிறகு FIN என்று சுபம் ஸ்லைடு வரை ஸ்லைட்டாகத் தட்டிவிட்டு ஃப்ரெஞ்சு New wave spoofஐத் தனது தொலைகாட்சிப் பொட்டிகளில் காமெடி நங்கூரங்கள் (அதான், anchors) வழி சுண்டிவிடுவது வரை வந்திருக்கிறதே? திரைப்பட உத்தியைக் கடன் வாங்கினார்களே தவிர, திரைப்படங்களையா கடன்வாங்கினார்கள்? ஃப்ரெஞ்சுக்காரர்கள் ஃபிரான்சில் நடப்பதுபோல Sphagetti western படமா எடுத்தார்கள்? ஏனப்பா, எதை எங்கே எடுக்கணும்னாவது ஒரு அடிப்படை லாஜிக் வேண்டாமான்னு கேட்கமாட்டார்களா, இல்லை அதுவும் கூடாதா?

//தொழில்நுட்பத்தை தாண்டி திரையில் ஜெயிப்பது ஒரு கலைஞனின் திறமை.அது நாசருக்கு வரவில்லை. ரஜினிக்கு வந்திருக்கிறது. ரசிகனின் பாராட்டை பெற தத்ரூப செட்டிங் தேவையில்லை. நேர்த்தியான நடிப்பு போதும்.இது புரியாத நாசர் போன்றோர் நீங்கள் இப்போது செய்வது போல் ரசிகனை வசைபாடலாம்:) அது அவரவர் விருப்பம். ஆனால் ரசிகனுக்கு ஏற்ற படத்தை தரமறுப்பவன் திரையுலகில் திட்டியே காலத்தை கழிப்பான் என்பது உறுதி:))//

தமிழில் திரைப்படங்கள் வரத்தொடங்கிய காலத்தில் திரைப்படங்கள் நாடகத்தைக் கொலை செய்தது என்பார்கள். நாடகம், பெரும் சாத்தியப்பாடுகள் கொண்ட ஒலி-ஒளி கொண்ட திரை வடிவத்தை அபரிமிதமான நாடகத்தன்மை கொண்டதாக ஸ்தம்பிக்க வைத்துப் பழிதீர்த்துக்கொண்டதாகச் சொல்வார்கள். திரைப்படத்துக்கு வசன கேசட் விற்கும் கொடூரம் நிகழ்ந்ததையெல்லாம் இந்தப் பின்னணியில்தான் வைத்துப் பார்க்கத் தோன்றும்.

என்ன சொல்லவந்தேனென்பதை மற்றுமொருமுறை தெளிவாகச் சொல்லமுயல்கிறேன் - இந்த விவாதமும் பின்னூட்டங்களும் தொடங்கியது, குரோசவா பைசைக்கிள் தீவ்ஸ் (THIEF) என்று மேட்டிமை ஜல்லி அடித்து ரஜினிகாந்தின் அதி உன்னத Fulp Piksanகளை சொத்தை என்கிறார்கள், உலக சினிமா என்பது ஒரு மேற்கண்ட மேற்கண்ட மானே தேனே பொன்மானேதான், நோ கவலைஸ் - ஹியர் ஆல் அண்டர் கண்ட்ரோல், அறிவுசீவி அய்யாக்கண்ணூஸ் கபாலத்துக்குள்ள பெட்ரோல் என்ற ரேஞ்சிலிருந்த உங்களது சில மேம்போக்கான தீர்ப்புக்கள் குறித்த வாதமாகத்தான் தொடங்கியது என்று நினைக்கிறேன். இப்போது, ரசிகனை வசைபாடுகிறேன் என்று செண்டிமெண்ட் அட்டாக் வைக்கிறீர்கள். வேள்டு ஃபில்லும் பார்க்கிறவனெல்லாம் வேஸ்ட்ராயன்னு ஜப்பானிய நடிகர் குய்யாங்கோ கும்தலக்கோ சான் ரசிகர்களையெல்லாம் இன்ஸல்ட் செய்துவிட்டீர்கள் என்று உங்கள்மேலும் ஒரு செண்டிமெண்ட் அட்டாக் வைத்துவிடலாமா? இல்லை, இன்னும் வேள்டு ஃபில்லும் எல்லாம் வேஸ்ட்டு, அவை நம் படங்கள் இல்லியே என்ற மாதிரி இன்னும் அடம் பிடிப்பீர்களானால், எங்கேயிருந்து தொடங்கலாம் சொல்லுங்கள். ஒரு நீண்ட ஃபில்லும் டிஸ்கஸன் செஷன் போட்டுரலாம் (நடுநடுவில் அண்ணே, சிட்டி ஹீரோவுக்கு காண்ட்ராஸ்டா கிராமத்துல தாவணி கட்டின ஹீரோயின் ங்கிற ரேஞ்சுல மினி தாளிப்புக்கும் உத்திரவாதம் உண்டு). மற்றபடி இந்த வெற்றிகரமான நடிகர் அது இது என்றெல்லாம் நீங்கள் சொல்லியிருப்பது குறித்து புதிதாக ஏதும் சொல்ல இருப்பதாகத் தோன்றவில்லை. இன்னும் சமாதானமாகவில்லையென்றால் சொல்லுங்கள், டிஸ்கஸன் சப்-டாப்பிக்கா இதையும் போட்டு வச்சுரலாம்.

-----------------------------

//சரி தமிழ் சினிமாவின் கலை ஞானி கமல் என்றே வைத்துக்கொள்வோம் அவரோடு பணி புரிய எத்தனை முன்னனி இயக்குனர்கள் தற்போது//

வவ்வால், நான் கமல் ரசிகன் அல்ல; சராசரித் தமிழன் போல, நானும் ஒரு சினிமா ரசிகன் - அவ்வளவே.

Ayyanar Viswanath said...

அட்டகாசமான விவாதம் மக்கா..வெளியில இருந்து வேடிக்கை பார்க்க நல்லா இருந்தது.செல்வனோட விடாப்பிடி இல்லாமலிருந்தா சன்னாசியிடமிருந்து இத்தனை தகவல்களை வாங்கியிருக்க முடியுமான்னு தெரியலை..அபத்தமா இருந்தாலும் ஹேட்ஸ் அப் செல்வன்..இந்த விவாதம் கொஞ்சமேனும் அடுத்த கட்ட நகர்வுகளைப் பற்றிய யோசனைகளை யாருக்கேனும் (குறிப்பாய் செல்வன்?) தந்திருந்தால் மகிழ்ச்சியே

Anonymous said...

தமிழக அரசின் சிறந்த நடிகர் விருதை இதுவரை 'சிவாஜி' (ஒரிஜினலைச் சொல்கிறேன்) பெற்றதேயில்லையாம்.

இதுக்கு என்னா சொல்றீங்க?

Unknown said...

//சந்திரமுகியில போர்வைக்குள் மூவ்ஸ் கொடுத்துக்கொண்டு, அப்பா என்று வேர்வையை வழித்தவாறு வெளியே வரும் ரஜினியைத் திரையில் பார்க்கும்போது, என்னய்யா காஜி ஷெரீஃப் மாதிரி இப்படி கேவலமான சீனையெல்லாம் வைக்கணுமான்னு கேட்கத் தோன்றவில்லை?//

இல்லை:)

அந்த சீனில் திரையங்கத்தின் செங்கல்லும் சிரித்ததாய் தான் ஞாபகம்.

//ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்ததால் என்ன மாறிவிடுகிறது? எஸ்.பி.பியை வைத்து ஓப்பனிங் பாட்டு வைக்கும் செண்டிமெண்டிலிருந்து வெளிவர முடிகிறதா?//

அந்த ஓப்பனிங் பாட்டு ஒவ்வொன்றும் பட்டையை கிளப்ப தவறாதபோது அதை ஏன் மாற்ற வேண்டும்? மக்கள் ஒன்றை தொடர்ந்து ரசிக்கும்போது 'அது சிலருக்கு பிடிக்கவில்லை' என்ற காரணத்தால் மட்டுமே மாற்ற வேண்டுமா?

//படையப்பாவில் நண்பர் குழாம் என்ற தமிழ் சினிமா வழக்கப்படி (குறைந்தபட்சம் இளைய தளபதி படங்களிலாவது வயதையொத்த நண்பர்கள் வருவார்கள்) எதையாவது வைக்கவேண்டுமென்று சித்தப்பு கேங் ஒன்றைக் கூட்டிக்கொண்டு திரிவது ரசனையை வளர்க்கவேண்டாம், குறைந்தபட்சம் பொருந்தியாவது வருகிறதா?//

செந்திலுக்கு பெண் பார்க்கப்போன காட்சியில் திரையரங்கமே அதிர்ந்த ஞாபகம் வருகிறது. நீங்கள் அந்த கேங்க் பொருந்தவில்லை என்கிறீர்கள். தவறு யார் மீது?

//ளொர்ட் ஒf தெ றிங்ச்ன் தொழில்நுட்பக் குறைபாடுகள்/காட்சித் தவறுகள் என்ன என்று பாகத்துக்குப் பாகம் குறித்து வைத்துக் கிழித்த வலைத்தளங்களை உங்களுக்குக் காட்டமுடியும்//

லார்ட் ஆஃப் த ரிங்க்ஸ் குவித்த சுமார் ஆயிரம் மில்லியன் டாலர் வசூல் மழைதான் அந்த வலைதளங்களுக்கு பதிலாக இருக்கும்.

குற்றமே கண்டுபிடிக்க முடியாத படைப்பு, கலை, இலக்கியம் என எதுவுமே கிடையாது."இது சரியில்லை, அது சரியில்லை, நொட்டை, நொள்ளை" என்று உட்கார்ந்து மணிக்கணக்கில் சீன் - பை- சீனாக ஆராய்ச்சி செய்து அதை வலைதளத்தில் போட்டு மகிழும் விமர்சகர்களின் 'விஷயஞானம்' அவர்களை ஜாலியாக ஒரு ரஜினி படத்தை பார்க்க விடாமல் செய்துவிடுகிறதே என்ற வருத்தம் எனக்கு எப்பவும் உண்டு:)

//இத்தனை பேர் ரஜினியை விமர்சிப்பது அவருக்குக் கிடைத்த வெற்றி என்றெல்லாம் ஜல்லி அடித்தால், இத்தனை பேர் வயிற்றுப்போக்கு உருவாக்கும் ஏ.cஒலியை ஆராய்ச்சி செய்வது ஏ.cஒலி க்குக் கிடைத்த வெற்றி என்று அதற்கு ஒரு ஈ.கோலையாண்டவர் கோவில் கட்டிக் கும்பிடுவதிலிருந்து தொடங்கலாம்.//

இத்தனை பேர் ரஜினியை விமர்சிப்பது அவருக்கு கிடைத்த வெற்றி அல்ல.

இத்தனை பேர் ரஜினியை பாராட்டுவதுதான் அவருக்கு கிடைத்த வெற்றி.

உலகமே கொண்டாடும் கலைஞனை சிலர் விமர்சிக்கத்தான் செய்வார்கள்.அந்த விமர்சனத்தின் மூலம் அவர்களுக்கும் சிறிதளவு பிரபலம் கிடைக்கும்.வைதாரையும் வாழவைக்கும் வரலாற்றுக்கு சொந்தக்காரர் எங்கள் சூப்பர்ஸ்டார்:)


//ஒத்தைக் கையால் ஒம்பது பேருக்கு சொண்டிச்சோறு குடுப்பது போன்ற கோமாளித்தனங்களைத்தான் இங்கே பேசுவது. //

அது கோமாளித்தனம் என்று யார் சொன்னது?

டூயட் பாட்டு கோமாளித்தனம், கனவுகாட்சி கோமாளித்தனம், பிரம்மாண்ட செட்டிங் கோமாளித்தனம், மேக்கப் போடுவது செயற்கை, கிலசரின் போடுவது இளிச்ச்வாய்த்தனம் ,அழுகை காட்சி சென்டிமென்ட்தனம் என்று சொல்லுவோருக்கு பயந்து ஒவ்வொன்றையும் மாற்றிக்கொண்டே இருந்தால் கடைசியில் அந்த படத்தில் என்னதான் மிஞ்சும்? தூர்தர்ஷனில் 2.15 மணிக்கு போடவேண்டிய தரத்தில் தான் அந்த படைப்பு இருக்கும்.

//சண்டைகாட்சியில் லாஜிக் எந்த மொழியிலும் இல்லை என்ற இந்த பொத்தாம்பொதுவான வாதத்தை கொஞ்சம் ஓரமாய்த் தூக்கி வைத்துவிட்டு, தோமா குருசு போன்ற காலிவுட் நடிகர்களின் பிரபலப் படங்களிலாவது பாருங்கள்.தோமா குருசு என்னதான் பாட்பாயிலர் காப்பர் டீபாய்லர் படம் எடுத்தாலும் அவ்வப்போது வனில்லா ஸ்கை, எயெச் நிடெ ஷுட் என்று படங்களையும் எடுக்கிறார்.//

நம் ஊரில் கமலும் அந்த மாதிரிதான் செய்கிறார்.குருதிப்புனல் கொடுப்பார்.அது அடி வாங்கியபிறகு அடுத்து தெனாலி எடுப்பார். அன்பே சிவம் எடுப்பார்.தயாரிப்பாளர் ஃபீலடை விட்டு ஓடியபிறகு பஞ்சதந்திரம் எடுப்பார்.நடுவே ஹே ராம் எடுத்து அவரே நஷ்டப்பட்டு கொள்வார். பிறகு விருமாண்டி எடுத்து கடன் கட்டுவார்.

அதனால் தான் பல ரசிகர்கள் கமல் படங்கள் என்றால் நன்கு விசாரித்துவிட்டு திரையரங்குக்கு போவது வழக்கம்:) இவரது சோதனை முயற்சிகளுக்கெல்லாம் நாங்கள்தானா கிடைத்தோம்?சரி..எங்கள் நஷ்டமாவது 50 ரூபாயுடன் முடிந்துவிடுகிறது. தயாரிப்பாளர் தாணு செய்த பாவம் தான் என்ன?

தோமா குரூசை பார், சத்யஜித்ரேயை பார்ன்னு சொல்லி சொல்லி கமலை எல்லோரும் சேந்து உசுப்பி உசுப்பித்தான் அவர் உடம்பு இன்னைக்கு ரணகளமா இருக்கு:)ரஜினிக்கும் அந்த மாதிரி நிலை வரத்தான் வேண்டுமா?

//ரசிகர்கள் என்ன செத்தா போய்விட்டார்கள், அப்படியே போய்க்கினே இருந்தா என்ன குடியா முழுகிரப் போவுது? போதையைப் போட்டு கேவலமா கான்செர்ட் குடுக்கிறதும் உனக்கு இவ்வளவு குடுத்தாப் போதும் என்று மோசமாப் படம் எடுக்கிறதும் ஒண்ணு இல்லையோ அப்போ? மோசமான படத்தை எடுத்தால் யாரும் சாகப்போவதில்லை. அதேமாதிரி வேலைக்கு நேர்முகத் தேர்வுக்குப் போக பஸ்ஸுக்கோ ரயிலுக்கோ காத்திருக்கும் ஒருவனின் பஸ்ஸோ ரயிலோ ஏழரை மணி நேரம் தாமதமாக வந்தாலும்கூடத்தான் அவன் சாகப்போவதில்லைதான்.//

போதையைப் போட்டதால் அவனை யாரும் அடித்திருக்க மாட்டார்கள். நிகழ்ச்சி நன்றாக இல்லை என்றுதான் அடித்திருப்பார்கள்.

கண்னதாசன் குடித்துவிட்டுத்தான் பாட்டெழுதுவார் என்பார்கள். அவர் பாட்டு நன்றாக இருக்கும்வரை அவர் குடித்துவிட்டு பாட்டெழுதினால் யாருக்கு என்ன நஷ்டம் வந்து விடப்போகிறது?

("மோசமான படத்தால் யாரும் சாகமாட்டார்கள் என்றது நீங்கள் அரசியலில் தரத்தை எதிர்பார்க்கும் ஒருவர் சினிமாவில் தரத்தை எதிர்பார்க்காதது ஏன் என்று கேட்டதற்கு..அரசியலில் தரம் என்பது முக்கியம். ஏன் என்றால் அது இல்லாவிட்டால் நாடு அழியும், உயிர் இழப்பு ஏற்படும். சினிமாவில் தரம் (என்று சிலர் சொல்வது )இல்லாவிட்டால் , அந்த சிலரின் விமர்சனம் நிற்காது என்பதைத்தவிர பெரிய நஷ்டம் ஏதும் ஏற்படப்போவதில்லை)

///உலக சினிமா என்பது ஒரு மேற்கண்ட மேற்கண்ட மானே தேனே பொன்மானேதான், நோ கவலைஸ் - ஹியர் ஆல் அண்டர் கண்ட்ரோல், அறிவுசீவி அய்யாக்கண்ணூஸ் கபாலத்துக்குள்ள பெட்ரோல் என்ற ரேஞ்சிலிருந்த உங்களது சில மேம்போக்கான தீர்ப்புக்கள் குறித்த வாதமாகத்தான் தொடங்கியது என்று நினைக்கிறேன். இப்போது, ரசிகனை வசைபாடுகிறேன் என்று செண்டிமெண்ட் அட்டாக் வைக்கிறீர்கள்.///

நான் அதை எல்லாம் சொல்ல காரணம் ரஜினி ரசிகனை இதை விட யாரும் கேவலப்படுத்த முடியாது என்ற ரேஞ்சுக்கு பலரும் திட்டியதால்தான். அதனால் ரஜினி ரசிகர் வலைதளம் தமிழ்மணத்தை விட்டு விலகியதும் உங்களுக்கு தெரிந்திருக்கும். அந்த அளவுக்கு கேவலமாக ரஜினி ரசிகனை விமர்சித்ததால் நானும் திருப்பி சில விஷயஙக்ளை சொல்ல வேண்டியதானது.

//இன்னும் வேள்டு ஃபில்லும் எல்லாம் வேஸ்ட்டு, அவை நம் படங்கள் இல்லியே என்ற மாதிரி இன்னும் அடம் பிடிப்பீர்களானால், எங்கேயிருந்து தொடங்கலாம் சொல்லுங்கள்.//

இளநீர் சுத்த வேஸ்டு, பெப்சி மாதிரி சுவை அதில் இல்லை என்பதிலிருந்து தொடங்கலாம். இல்லை சீமைசரக்கில் இருக்கும் வெரெய்ட்டி லோக்கல் கள்ளில் இல்லை என்பதிலிருந்தும் துவக்கலாம். ஃபுட்பாலில் இருக்கும் ஆட்டத்திறன் கபடியில் கிடையாது என வாதிடலாம். ரீடர்ஸ் டைஜெஸ்டில் இருக்கும் பல்சுவை குமுதத்தில் கிடையாது எனலாம்.அல்லது விஜய் சொன்ன மாதிரி 'பம்பாய் பார்ட்டி ஷில்பா ஷெட்டியும் பாப்பம்பட்டி சின்னகுட்டியும் ஒன்றுதான்' என்ற அத்வைத நிலையையும் அடையலாம்.

பொன்ஸ்~~Poorna said...

//படத்தை எடுத்தால் யாரும் சாகப்போவதில்லை:)//
(இன்னுமொரு) தகவல் பிழை: கில்லி பார்த்து தான் எங்கூர்ல சமீபத்தில் சின்னப் பையன் அரவிந்தை கடத்திட்டுப் போய்க் கொலை பண்ணினாங்க..

Unknown said...

//கில்லி பார்த்து தான் எங்கூர்ல சமீபத்தில் சின்னப் பையன் அரவிந்தை கடத்திட்டுப் போய்க் கொலை பண்ணினாங்க..//

'மோசமான படத்தால் யாரும் சாவதில்லை' என்றது வேறு கான்டக்ஸ்டில். மத்தபடி ஷின்ட்லர்ஸ் லிஸ்டை பாத்துட்டு எவனோ எவனையோ போட்டு தள்ளினா ஸ்பீல்பெர்க்கையா குற்றம் சொல்வோம்?:)

-/பெயரிலி. said...

/இத்தனை பேர் வயிற்றுப்போக்கு உருவாக்கும் E.coliயை ஆராய்ச்சி செய்வது E.coli க்குக் கிடைத்த வெற்றி என்று அதற்கு ஒரு ஈ.கோலையாண்டவர் கோவில் கட்டிக் கும்பிடுவதிலிருந்து தொடங்கலாம்./

:-)))

Boston Bala said...

சன்னாசி...

ஃபுல் ஃபார்மில் இருப்பதால் என்னுடைய ஐயங்களையும் தெளிவுற வைத்தால் மகிழ்வேன் :)

1. முதலில் நாசர் குறித்து... நீங்க கேகே பற்றி சொன்னது நாசருக்கும் பொருந்தும் அல்லவா? 'தி மேகிங் ஆஃப் சந்திரமுகி'யில் ஆஹா... ஓஹோ என்று புகழ்ந்து விட்டு, இப்பொழுது இடம், பொருளறிந்து ஏவுவது 'மனித(பச்சோந்தி)த்தன்மை' என்று விட்டுவிட வேண்டியதுதானா?

2. உலக சினிமாவிலும் வாரிசு அரசியல் (சோஃபிய கொப்பொலா), பில்ட் - அப் (ஓசியன்ஸ் 12), திறனாய்வாளர்களின் துணையுடன் மட்டுமே புரிந்து கொள்ளக் கூடிய படம் (eyes wide shut), மறு-மறு-பதிப்புகள் எல்லாம் வந்து கொண்டுதானிருக்கிறது. சென்னை 600028 போல் புதிய முயற்சிகளும் (கொஞ்சம் நிறைய எண்ணிக்கையில்) வருகிறது. ஆனால், ஹாலிவுட்டுடன் proportionate-ஆக பார்த்தால், மசாலாப்படம், நாயக வணங்கல், காதல் தெய்வீகம், போன்றவையின் விகிதாச்சாரங்கள் கிட்டத்தட்ட சமனாக இருக்கும். சரியா?

3. சிவாஜி படம் பார்த்தாச்சா? உங்களின் விமர்சனத்துக்கு அருகதை இல்லாவிட்டாலும், எல்லாவித உயர்தர தொழில்நுட்பத்தில் பயன்படுத்திக் காட்டும் டெமோ திரைப்படமாக அதைக் கருதலாமா? பிக்ஸார் படங்களுக்கு முன் வரும் இரண்டு நிமிடத் துண்டுப் படம், 'ராட்டடூயி'யை விட நன்றாக இருக்கிறதாக, நண்பனின் மகள் சொன்னாள். அதைப் போல் 'சிவாஜி'யை ரசிக்கலாமா ;)

தருமி said...

partner,

//நான் எம்ஜிஆர் ரசிகன் கூடத்தான்:).//

என்னைப் பொறுத்தவரை உங்களோடு விவாதம் இதோடு முடிவடைந்து விட்டது.

// ரஜினி படத்துக்கு டெக்னிகல் நேர்த்தியை அதிகப்படுத்த வேண்டாம் என சொல்லவில்லை.அது தேவை இல்லை என்றுதான் சொல்கிறேன்.''

அதானே பிறகு நாமெல்லாம் எதுக்கு இருக்கிறோமாம்?

//இது உண்மையிலேயே ஒரு கலைஞனின் திறமையை தான் காட்டுகிறது என நம்புகிறேன்.//

நான் அப்படி நம்பலைங்க. அது நமது அதீத பக்தியைக் காட்டுகிறது என்றுதான் நான் நம்புகிறேன்.

சன்னாசி said...

பம்பாய் செட்டியும் பாப்புக் குட்டியும் ஒண்ணுதான் என்ற அத்வைத நிலையை அடையலாம், ஆம், இந்த கேடுகெட்ட நார்மன்கள் ஆங்கிலோ சாக்ஸன்களின் மொழியைக் குழப்பி த்வொ என்று இருக்கவேண்டிய Twoவை டூ என்று bastardized Anglicize செய்தார்கள் என குற்றஞ்சாட்டி வருந்தலாம் - அடடே த்வொத்வொத்வொங்கிறது தோவுக்கு இன்னும் நெருக்கமாய் இருந்திருக்குமே என்று குழையலாம். இல்லை நாசரும் ரஜினியும் ஒன்று என்று இன்னும் உங்கள் ஸ்டைல் அத்வைதத்தை நீட்டலாம் - அப்போது இருதலைப் பாம்பு ஒற்றை உடல் மாதிரி நாசரின் தலை ரஜினியின் தலையைத் திட்டுவது தலைக்கா வாலுக்கா என்று ஒரு கப்புளாஃப் அனுமான உபமான அஸ்திரங்களை விடலாம். அசலில், ரீடர்ஸ் டைஜஸ்டைவிட ஹூமுதம் ரொம்ப ஸ்வாரஸ்யமான பத்ரிகைதான். ஸுதேஸிக் கள்ளைக் குடித்துத்தான் ளோக்கள் ஃப்ளேவர் காட்டவேண்டுமென்றால், காலங்கார்த்தாலே ஆறு மணிக்கு இறக்கும் நேரத்துக்கு போய்க் குடிக்கவேண்டும், ஷுண்ணாம்பு வெய்த்துக்கு நழ்ழது இழ்ழை பாருங்க. கள்ளே கதின்னும் இல்லாம சீமைசரக்கு (எங்கே போசு ச்?) ம் எப்படித்தான் இருக்குன்னு பார்க்கலாமுல்ல? கள் என்ன தீர்த்தமா இல்லை சிங்கிள் மால்ட் விஷமா? குடிக்கிறது சாலிக்குன்னு ஆயிருச்சி, சும்மா கள்ளை மட்டும் குடிச்சு புளிச்ச ஏப்பம் விடாம, சீமைச்சரக்கை மட்டும் குடிச்சு மணப்பிரி பிரியாம ரெண்டையும் ருசி பார்க்கலாமுல்ல? சீமைஸ்சரக்கெல்லாம் வேஸ்ட்டு, நம்ம சுதேசிக் கள்ளுதான் டாப்புன்னா ஏன் சீமைஸ்சரக்கெல்லாம் வேஸ்ட்டுன்னு முதல்ல சொல்லணும். சீமைஸ்சரக்குதான் உஸத்திங்கிறவன் லோக்கல் சரக்கை அடிக்காம நேரா ரசிய வோட்கா (வாத்கான்னு போட்டுக்கலாமா ஒரு னாஸூக்குக்கு?) குடிச்சு பீருன்னாக்கூட snob's choice galore, baby அப்படின்னு, ஒன்லி கைநக்கன் (அல்லது) போத்தல் பீர் குடியேன்னு கழனித்தண்ணி மாதிரி இருந்தாலும் லோக்கல் ப்ரூ கொழாய்லர்ந்துன்னு குடிச்சு, Sidewaysல சொல்லிப்புட்டாங்கங்கிறதுக்காக மெர்லோ குடிக்காம இருந்துன்னு குறிப்பான குடற்பயிற்சி குடுத்து வளர்ந்த குடிதா(த்)தாக்க (குகுகுகு - போலமிக்குப் பொரிவண்டி கல்லுல தடுக்கிப் பொரிமூட்டை கவுந்து பொரியெல்லாம் சிதறினாக்கூட இப்பிடித்தான் லைனா சிதறும் ;-)) ரேஞ்சுலயா ஃபில்லும் காட்டுறான்? ரஸினி படத்தையோ வேறேதோ படத்தையோ பார்த்துட்டுத்தான ஸொல்றான்? இதே ரேஞ்சுல கள்ளுன்னு நீங்களும் ஸீமைஸ்ஸரஹ்ஹூன்னு ஓணமிட்டாப்பொயிக்குப்படவுல (oணமட்டோpoeic) வார்த்தைக் கடல்ல ஸறுக்கி போயுட்டே நானும் பொப்யூலர் குல்த்தூர் விவாதத்தைத் தொடக்கிரலாமா? நீங்க கள்-கருவாடு-குமுதம்-கபடி-குட்டி (கககுகக - ஓரளவுக்கு ஓக்கே) ங்கிற சைடுலர்ந்து பேசுங்க, நான் சீமைஸ்சரக்கு-போர்_பொக்கை_யூ-க்ரீப்பர்ஸ்_நோஜெஸ்ட்-ஃபுட்பால்ங்கிற மாரி பேசுறேன். (இங்கேயே கவுந்துட்டனே, சீபோக்ஃபு ங்கிறது ஒத்து வரலையே - ஒரு சாடைக்கு ஹப்போ குய்ஜலாய்னன் ங்கிற பின்னிஷ் பிலாசபர் (நோட் த போயிண்ட், ஃபின்னிஷ் இல்ல, பின்னிஷ், ஃபிலாஸஃபர் இல்ல, பிலாசபர் - Pilaa_sapar அப்படின்னு படிக்கணும். Pila_ZSafar அப்படின்னு என்னத்தையும் சொல்லிராதீங்க, வெஸ்ட் பேங்க் காஜா ஜ்ட்ரிப்பு நேம் மாதிரி இருக்குன்னு ப்ளாக்லிஸ்டுல டைவடிச்சுரப்போவுது பேரு) எழுதின பொஸ்தவம் பேரு மாதிரியில்ல இருக்கு. லாய்னன் அப்படின்னு அன் விகுதியோட முடியறதால அவரு னம்மளை விட, உங்களை மாதிரி, கந்தன் கடம்பன் கதிர்வேலன் கார்த்திகேயன் அப்படின்னு இருக்கிற அசல் தமிழ் மனங்களோட Fulse ஃபிடிச்சுப் பார்த்திருக்கிற, அழகியல் ஈடுபாடுகளுக்கு இன்னும் னெறுக்கமா இறுப்பாறுன்னு னினைக்கிறேன் - ஸோதிச்சுப் பாருங்க). மேலும் விரிவா இந்த மாதிரி hint development குல்த்தூர் பேப்பர் II க்வெஸ்சன்ஸ் குடுங்க செல்வன் - நம்ம பொப் ரஸனையையெல்லாம் கவுத்தி வைக்க ஸரியான இடம். NPK கூட்டுத் தொழுஉரம் போட்டு வளர்த்த பொப் குல்த்துர் அறிவுக் கிடங்கு இல்ல (விவசாயிகளுக்கு விளக்கவேண்டிய நேரத்துல NPKன்னா நெனப்புதான் பொழப்பக் கெடுக்குது உரம் அப்படின்னு கப்புன்னு விலாவாரியா விளக்கிடுவீங்க தான? ;-)) - அப்பிடியே பாஞ்சிராது வயலுக்குள்ள?

இப்பிடி மேட்டரை சொல்லாம முழ நீளத்துக்கு circumambulatory (பிரதோஷமாயிருந்தா ஆப்போசிட் டைரக்ஸன்ல சுத்திருங்க மீற்றர) மீட்டரைப் போட்டப்புறம், நிசத்துல என்னன்னு இப்ப பார்ப்பமா?

செவன் சாமுராய் பைசைக்கிள் தீவ்ஸுன்னீங்க - இந்த இரண்டு படத்துக்கும் நான் பி.ஆர்.ஓ ஏதும் கிடையாது. ரஜினி படங்களை திட்டிக் கிழிக்கிறாங்க அப்படிங்கிறீங்க. தப்புன்னே வச்சுக்கலாம்; ரஜினி படத்தை பார்த்துட்டு, என்ன இப்படி கந்தரகோளமா இருக்குன்னு கிழிச்சுத் தொங்கவிடுறாங்க. இந்த அறிவுசீவிகள் தூக்கிவைக்கிற படத்தைப் போட்டு நாறடிக்கணும்னா அந்தப் படத்தைப் பார்த்துட்டு உங்க விமர்சனத்தை எழுதலாமே? ரஜினி படத்தைத் தாக்கி யார் எழுதினதுன்னு பாருங்க, அவன் என்ன படத்தை நல்லாயிருக்குன்னு எழுதியிருக்கான்னு பாருங்க, அந்தப் படத்தைப் பாருங்க, பிடிக்கலேன்னா டார் டாராக் கிழிச்சு தொங்க விடுங்க. அது நேர்மையான அணுகுமுறை. மேலே சொன்ன இரண்டு படமும் உங்களுக்குப் பிடிக்கலைன்னா, ஏன் பிடிக்கலைன்னு எழுதுங்க. அவை நம் படங்கள் இல்லையே அப்படின்னு கவைக்குதவாத கல்ச்சுரல் சுதேசி ஸ்டேட்மெண்ட் விட்டீங்கன்னா, அவை நம் டூத்பேஸ்ட் இல்லையே, காலையில் உக்காரும் ஃப்ளஷ் டாய்லெட் இங்கிலாந்து மகாராணிக்காக வடிவமைக்கப்பட்டது, அது நமது இல்லையே, காரும் பஸ்ஸும் நமது இல்லையே, தார் ரோடு நமது இல்லையே, பேண்ட் சட்டை நமது இல்லையே, பால்பாயிண்ட் பேனா நமது இல்லையே, பச்சை எழுதுபலகை நமது இல்லையே, சட்டையில் இருக்கும் காலர் நமது இல்லையே, காலர் விறைப்பாக இருப்பதற்கு சொருகி வைத்திருக்கும் பிளாஸ்டிக் பட்டை நமது இல்லையே, ஹம்ப்யூட்டர் நமது இல்லையே, கீபோர்டு நமது இல்லையே, ரோமனைஸ்டு ஆங்கிலத்தில் தாய்மொழியை அடிப்பதுகூட நமது இல்லையே, சுருக்குப்பை போல இல்லாமல் இருக்கும் பையின், பேண்ட்டின் ஜிப் நமது இல்லையே, திரைப்படத்தில் புரொஜக்டர், அகேலா கிரேனிலிருந்து அவிட் எடிட்டிங் வரை எதுவும் நமது இல்லையே (blonde டோப்பா வேண்டுமானால் நமதாக இருக்கும் ;-)), ஏ.ஆர்.ரகுமானின் சின்தஸைஸர் நமது இல்லையே, அயல்நாட்டுக்கு சினிமாக் குழு போக உபயோகித்த விமானம் நமது இல்லையே, திரையரங்கில் டிக்கெட் கவுண்டர் என்று ஒன்று நமது இல்லையே, இடைவேளையில் போக உபயோகப்படுத்தும் மூத்திரப்பிறையின் வடிவம் நமது இல்லையே, இடைவேளையில் நம்மூருல குடிக்கும் நெஸ்கஃபே மெஷினோ ஐஸ்க்ரீம் மெஷினோ நமது இல்லையே, மெஷினில் இருக்கும் வனில்லா பிஸ்தா ஸ்ட்ராபெரி ஃப்ளேவர் நமது இல்லையே, பாப்கார்ன் நமது இல்லையெ (ஹொலிவூட் பொப்கார்னை சொல்லவில்லை, இந்த லிஸ்ட் எல்லாம் நமது லோக்கல் தியேட்டர்களில்தான்) - கடலைமிட்டாயும் வறுத்த கடலையும் இருந்தாலும், பஃப்ஸ் நமது இல்லையே, பஃப்ஸ் மிஷின் நமது இல்லையே, மைக்ரோவேவ் நமது இல்லையே, வீட்டுக்கு வந்து தண்ணீர் குடிக்கும் ஃப்ரிட்ஜ் நமது இல்லையே, மின்சாரம் நமது இல்லையே, ட்ரான்ஸ்ஃபார்மர் நமது இல்லையே என்று நீட்டலாமா? ஒரிஜினாலிட்டி தேவை இல்லை, படம்னா சும்மா குத்து மதிப்பா இவ்வளவு இருந்தாப் போதும் என்ற ரீதியில் போன பதிலில் நீங்கள் சொன்னது மாதிரிப் பொதுப்புத்தியில் அசிரத்தை, நேர்த்தியின்மை இருந்தால் கடைசி வரை இப்படித்தான் பக்கவாத்தியம் வாசித்துக்கொண்டிருக்கவேண்டும். இந்தியாவைத் தூக்கி லோகத்தின் தலைமேல் வைக்கவேண்டும் என்று சவடால் விட்டுக்கொண்டு சின்ன விஷயங்களில் போனாப் போகுது பொடவை பறக்குது புடிச்சுக்க என்று பாடிக்கொண்டிருந்தால் எதுவும் உருப்படியாக நடப்பது சாத்தியமில்லாத ஒன்று. இங்கே இவ்வளவு தோண்டு தோண்டுவது எவர் ரசனையையும் குறைத்து மதிப்பிடுவதற்காக அல்ல - ரஜினி படங்களுக்கு இடமே அளிக்கக்கூடாது என்பதல்ல விஷயம். எந்தவொரு புள்ளியிலும் தேங்கி நின்றுவிடக்கூடாது என்ற பொதுவான கருத்தாக்கத்தின் அடிப்படையில் எழும் விமர்சனங்களே அவை. ஹைஸ்கூலில் படித்த புத்தகத்தையா இப்போதும் படித்துக்கொண்டிருக்கிறீர்கள்? மேலும் மேலும் கற்றுக்கொண்டுதானே இருக்கிறோம்? ரசனை முதிர்ச்சி என்பதை ஊட்டி வளர்க்கவேண்டியதில்லை, புலன்களைத் திறந்து வைக்க யத்தனிப்பவர்களை நோண்டாமல் இருந்தாலே போதுமானது. தமிழ்நாட்டு ஜனம் மொத்தமும் ஐரோப்பிய, ஆஃப்ரிக்க, தென்னமெரிக்க, சீன, ரஷ்ய, அண்டார்டிக்க ஆர்க்கிடுக்க படங்களைப் பார்த்து கொலைகொலையா முந்திரிக்கா போடவேண்டும் என்று யாராவது சொன்னார்களா என்ன? கிஸ்கர் புஸ்கி டுஸ்கர் விஸ்கி படங்களெல்லாம் பார்த்து சீவுறவனெல்லாம் ரஸினிங்கிற மாமேதை பத்தி ஸொல்லலாமா என்று கேட்பதைத்தானே இங்கே கேட்பது? கிஸ்கர் புஸ்கி, டுஸ்கர் விஸ்கி போன்ற யூஸ்லெஸ்ராயர்களின் படங்களின்மேல் செல்வன் விமர்சனம் வைத்து நோண்டி நொங்கு எடுப்பதுதானே. மே-ஷ்டர் என்று குனிந்து கும்பிடு போடும் ஜாக்கிசான் படங்களில் இருக்கும் ஓட்டைகளையும் ஜப்பானிய Yakuza அடிதடி, கொலைப் படங்களைப்பற்றி கிழித்துத் தொங்கவிடலாமே. நிச்சயம் அங்கேயும் இதேமாதிரி ஒத்த சிந்தனையுள்ள ஆட்கள் இருப்பார்கள் - என்ன இருந்தாலும் சாக்கிஜான் மாதிரி வருமா என்று - அதில் தவறு ஏதும் இல்லை. லாஜிக் எல்லாம் பார்க்காமல், அடிதடிப் படத்தில் நூறு பிணம் விழுந்தால் கொடுத்த காசுக்கு திருப்தியாக இருந்தது என்ற மாதிரி. அது தவறு இல்லை; அதைச் செய்துவிட்டு பிறரை நொட்டை நொள்ளையும் சொல்லலாம். அதுவும் தவறு இல்லை. ஆனால் நொட்டை நொள்ளையை படத்தைப் பார்த்துவிட்டுச் சொல்லவேண்டும். எனவே, பைசைக்கிள் தீவ்ஸ் மற்றும் செவன் சாமுராய் இரண்டையும் செல்வன் பார்த்திருப்பார் என்ற நம்பிக்கையில், அவை குறித்த கிழித்துத் தொங்கவிடும் விமர்சனங்களை செல்வன் வைக்கவேண்டுமென்று பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். குறைந்த முதலீடு, நிறைந்த பணம் என்பதுதான் ஃபில்லும் குறித்த உங்கள் கண்ணோட்டம் எனில், அமெரிக்க ஃபில்லும் உலகத்தின் (திரையில் ஓடுவதெல்லாம் ஃபில்லும் தானே? டிவி திரையாக இருந்தாலும் சினிமா திரையாக இருந்தாலும்?) முதலீடு-லாவம் கணக்குப் போட்டுப்பார்த்தால் இருப்பதிலேயே மிகப்'பெரிய' ஹீரோ ரான் ஜெரிமியாகத்தான் இருக்கும். இனி ஜெரிமிராயரின் ரஸிகர்களுக்கும் Sweet Sweetback's Baadasssss Song ரஸிகர்களுக்கும் எங்கேயாவது விவாதம் வந்திருக்கிறதா என்று தோண்டிப் பார்க்கிறேன். இந்தமாதிரி ஸ்வீட் அண்டு இண்டரஸ்டிங் காண்ட்ராஸ்ட்டாக நாலு பிட்டுப் போட்டு Ambreekan குல்த்துரை நாழியில் அளந்து ஊற்றிவிட்டதாக, நானும் ஒரு Ambreekan குல்த்துர் எக்ஸ்பர்ட் என்ற ரேஞ்சில் அடுத்து ஒரு நாலரையடி நீளத்துக்கு நளினபயாஸ்கோப்புல செல்ஃப்-ஃபில்லும் காட்டிக்கலாம் பாருங்கள் ;-), பொர்க்கிமேன் ஐயா Magic Lantern எளுதின மேரி ரஸினியும் எளுதுவாரில்ல, அப்ப படிச்சு என் கருத்துக்களை 'மறுபரிஸீலனை' பண்ணிக்கறேன்.

ஏ மம்முட்டி எகிறிக் குதிச்சிண்டே வேட்டியை மடிச்சுக் கட்டிட்டாண்டா, பொறவு போய் மிதிப்பாம் பாரு மிதி என்று தள்பத்தி படங்களிலிருந்து ரஸிக்கணுங்கிறீங்க அப்ப. அந்த மாதிரி ஷிவாஜி படத்து ஃபைட் சீன்களை Shaolin Soccer மற்றும் Kung Fu Hustle போன்ற உலகத்தரம் வாய்ந்த படங்களுக்கு நிகரா எடுத்திருக்காங்க அப்படிங்கிறீங்க. அவர் கண்ணப் பாருயா, கலரப் பாருய்யா ஸ்ரைலப் பாருயான்னு சொம்படிக்கும் கூல் குப்புராயர் ரஸினிகாந்தை, அவுக் அவுக்கென்று மிளகாய்வத்தல் தின்றுவிட்டு அவாவ்வவ்வாவ்வாவ்வாஆவஹ்ஹாஹ்ஹான்னூன்னு சில்லி சூனியம் வைத்துக்கொள்ளும் ரஜினிகாந்தைப் பார்க்கையில் செங்கல் என்ன, அதுக்குள் ஒளிந்திருக்கும் தேரை கூட கெக்கேக்கே என்று இளித்தது னான் பாற்த்த தியேற்றரில். ஆமா, ஷ்ரேயா நைனாவுக்கு என்னதான் பிரச்னை, எப்பப் பார்த்தாலும் ரெண்டு லிட்டர் பர்கோலாக்ஸ் குடிச்ச மாதிரி அதெல்லாம் முடியாது அதெல்லாம் முடியாதுன்னு குதிச்சிட்டே இருக்காரு? அவரு மீசை மட்டும் ஒரு சைசா பார்க்கிறதுக்கு சுவாரஸ்யமா இருக்கு. அய்யா, றகுவறன் CPR பத்தி சொல்லி பின்னாடி defibrillator டயலாகை தட்டு, தட்டுக்குள்ள தண்ணி, பல்லுக்கிடையில குச்சின்னு தோமா குருசு மிசன் கும்பிசிபிள் 3ல டிஃபிகல்ட்டு டு சர்வைவ் சீனாவுல வச்சதை வள்ளு வதக்குன்னு அள்ளித் தின்னுட்டாய்ங்களாய்யா அப்படின்னா ஆதாரமில்லாத குற்றச்சாட்டை வைக்கிறேன். Khoooool. Check this out check this out ன்னு வர்ற Khooooool மூஜிக்குல யூரித்மிக்ஸ்/ஆனி லென்னாக்ஸோட Sweet dreams are made of these பீட்டை லைட்டா சொருவி ராவுறது ஏன் செல்வன்? யாரும் கண்டுபிடிக்க மாட்டாங்கோன்னா? ஒரு பீட்டுதான, மூணு மணி நேரப் படத்துல ஒரு பிட்டு லென்னாக்ஸில உருவுனா என்ன, மரிலின் மான்ஸன் ரீமிக்ஸுல உருவுனா என்ன, இந்தியன்ல டெலிஃபோன் மணிபோல்னு கிணிகிணின்னு Ace of Base பீட்டை உருவுனா என்ன, தேவா Dr.Albanஐயும் பாப் மார்லியையும் Khoooooooolaaaaa உருவுறப்ப ஏ.ஆர்.ரகுமான் அங்கங்க பல இடத்திலிருந்தும் உருவக்கூடாதுன்னா? ஒரிஜினாலிட்டி தான் தேவை இல்லியே, எங்கே இருந்து வருதுன்னு சொல்றதும் வேஸ்ட் ஒஃப் டைம் தானோ? சும்மா சொல்லக்கூடாது, Doors வால் கில்மர் மாதிரி இருக்காரு நம்ம blondie தல. (எதுக்கு ஆங்க்ஹிலப் படத்தை ஒப்பிடணும்னு கேட்டா, ஏனுங்க இந்தியாவின் ஒரு பில்லியன் தலைகளில blonde தல எங்க இருக்கு? வெள்ளைக்காரன் tanning செய்யிறான்னா நம்ம தல melanin knockout கில்மா பண்றாரே - சபாஷ், சரியான போட்டி. அட படம், ஸ்ரேயா சும்மா காமெடிக்கு சொல்லிட்டாங்க, இதெல்லாம் காமெடின்னா, காஸு குடுத்தா வாங்கிக்கோங்க, ஆனா ஓட்ட அங்கே போட்ருங்க அப்படின்னு லைவ் டெலிவிசன்ல சொன்னாரே ஐயா! ரியாலிட்டியை இப்பிடி மிக்ஸிக்குள்ள போட்டு அறைச்சா எது சீரியஸ் எது காமெடின்னே விளங்காமப் போயிருதே.) மீசை மட்டும்தான் எகஜ்ட்ரா. அது மறைக்குது இது மறைக்குதுங்கிறார், ஐஃபிள் டவரை இதயத்தில் நட்டாய் ங்கிறார். ஹீரோ ஹீரோ ஹீராதி ஹீரோ ஸ்றாரோ ஸ்றாரோ ஸ்றாராதி ஸ்றாரோ அப்படின்னு டிகசிக் டிகசிக் எப்போதும் பச்சைத்தமில் லன்ன்ன் இப்போனான் வெல்லைத்தமில் லன்ன்ன்ன்ன்ன் அப்படின்னு டிகுஜிக் டிகுஜிக் வெஸ்றன் ஸ்றைல்ல பாடிட்டு தமிழ்நாட்டு கலாஸ்ஸாரப்படி பொண்ணு வேணுங்கிறார் (சொன்னேனே காண்ட்றாஸ்டு, இந்த ஐடியா பக்காவா ஒர்க்கவுட் ஆகும் பாருங்க இங்க - வெளிநாட்டிலர்ந்து திறும்பி வற்ற ஹீரோ, நம்ம கலாச்சாரப்படி பொண்ணு - கிக் விக்குன்னு டூயட் பாட்ற நேரம் தவிர அழுதா போதும்). விவேக் ஸ்றைல்ல ஸொன்னா, கின்பச்சக் கில்மாஸ்ல யாரை வேணுமானாலும் கல்யாணம் பண்ணிரலாம். இண்டியா ரொம்ப முன்னேர்ரிச்சுரா.

செல்வனின் பிற 'கருத்து'களுக்கும் விரைவில் பதிலளிக்க முயல்கிறேன்.

பாபா, உங்கள் கேள்விகளுக்கும் பதிலளிக்க முயல்கிறேன். சிவாஜி பார்த்தாச்சா இல்லையா என்ற உங்கள் கேள்விக்கு பதில் இதிலும் இருக்கிறது என்று நினைக்கிறேன் :-)

Ohr Ruba Kaayin இருந்தால், இன்னும் போரடிக்காமலிருப்பவர்கள், நம்ம கை ராஸியான கை ஸ்ர்ர்ரிங்க் ஸ்ர்ர்ர்ர்ர்ரிங் ஸ்ர்ர்ர்ர்ர்ரிங்க் ஸ்ரிங் என்று நாலு திசைகளில் சுண்டிச்சுற்றிக் கொண்டிருக்க :-)

நாமக்கல் சிபி said...

//பம்பாய் செட்டியும் .
.
.
.
.
.
.
.
.
.

திசைகளில் சுண்டிச்சுற்றிக் கொண்டிருக்க //

ஸ்ஸப்பா! இப்பவே கண்ணைக் கட்டுதே!

Boston Bala said...

---ரோமனைஸ்டு ஆங்கிலத்தில் தாய்மொழியை அடிப்பதுகூட நமது இல்லையே,---

இது சுப்

---இடைவேளையில் போக உபயோகப்படுத்தும் மூத்திரப்பிறையின் வடிவம் நமது இல்லையே---

இது சூப்பர்

---பின்னிஷ் பிலாசபர் (நோட் த போயிண்ட், ஃபின்னிஷ் இல்ல, பின்னிஷ், ஃபிலாஸஃபர் இல்ல, பிலாசபர் - ---

இது சூப்பர் சுப்பராயன் :)

---ரஜினிகாந்தைப் பார்க்கையில் செங்கல் என்ன, அதுக்குள் ஒளிந்திருக்கும் தேரை கூட கெக்கேக்கே ---

இது சூப்புராயர் :))

---எதுக்கு ஆங்க்ஹிலப் படத்தை ஒப்பிடணும்னு கேட்டா, ஏனுங்க இந்தியாவின் ஒரு பில்லியன் தலைகளில blonde தல எங்க இருக்கு?---

---ரியாலிட்டியை இப்பிடி மிக்ஸிக்குள்ள போட்டு அறைச்சா---

வேணாம்... விட்டுடுங்க :)))

சன்னாசி said...

பாபா - ரொம்ப நீண்டுவிட்டதாகத் தோன்றுவதால், உங்கள் கேள்விகளுக்கு சுருக்கமாக:

1. நாசர் வெறும் மனிதன் தான் - ரஜினியைப் புகழ்ந்தால் என்ன இகழ்ந்தால் என்ன? படம் குப்பையாக இருந்தால் நாசரையும் உரலில் போட்டு யாரும் இடிக்கலாம். மனிதனாக இருக்கும் யாரும் பச்சோந்தியாக இருக்க வாய்ப்புள்ளது என்பதை நான் வேறு சொல்லவேண்டுமா? முகம் மாதிரிப் படங்களிலெல்லாம் ஏன் நடிக்கவேண்டும் அவர்? ஓடாது என்று தெரிந்தே தானே அதையெல்லாம் எடுக்கிறார்கள்? இப்படி இப்படி எடுத்தால் ஓடும் என்று எடுக்கப்படும் படங்கள் இருக்கையில், நினைப்பதை எடுப்போம், ஓடவும் ஓடாது என்று எடுக்கும் ஆட்களே இல்லையா என்ன? அப்படி எடுப்பவர்கள் அனைவரும் ஏமாற்றிப் படம் எடுப்பவர்களா என்ன அப்போது? முயற்சி செய்ததற்காக அதையும் தூக்கி வைத்துக் கொண்டாடவேண்டியதில்லை, சரியென்றால் தூக்கி வைத்து உதைக்கலாம் என்றிருக்கும்போது, ஓடவேண்டும் என்ற பிரதான (ஒரே அல்ல) நோக்கத்துடன் எடுக்கப்படும் படங்களுக்கு அதே அளவுகோலை (அதிகமாகக் கூட இல்லை) பொருத்துவதில் என்ன தவறு இருக்கிறது?

2. சோஃபியா கப்போலாவை ஒரு நடிகையாக Godfather 3யில் போட்டதற்கு பப்பா கப்போலாவை விமர்சகர்கள் கிழிக்காத கிழியா. இயக்குனராக சோஃபியா கப்போலா எடுத்த Virgin Suicides பிடித்திருந்தது, Lost in translation ஓக்கே, Marie Antoinette பரவாயில்லை. வாரிசு அரசியல், நம் ஊர் போலவே, சரக்கு சரியில்லை என்றால் சாவடிக்கு வெளியே போவதாகத்தானே நடக்கிறது? ஸ்டான்லி குப்ரிக்கின் படங்கள் பொதுவாக சற்றுக் காலம் கழித்தே அங்கீகாரம் பெற்றவை; Non-linear narrative இருக்கும் எதுவும், குறிப்பாய் அயல் மொழியில் புரிந்துகொள்ளச் சிரமமாகத்தான் இருக்கும். அது அவர்கள் தவறல்லவே - இந்தியாவில் இருந்து வந்தேகியுள்ள (ஏகி, ஏறி அல்ல :-)) demographicக்கு ஏற்றமாதிரி அவர்கள் எடுக்கமுடியாதல்லவா? அப்படிப் பார்த்தால், அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் அனைவரும் சராசரி அமெரிக்கனுக்குப் பல படிகள் கல்வியில் மேலேறி உள்ளவர்கள் - கல்விக்கும் கலாச்சாரத்துக்கும் சம்பந்தம் இல்லை என்றாலும், புது விஷயங்கள் குறித்தான ஆர்வம் (சினிமா என்று மட்டும் இல்லை) என்பது சற்று அதிகமாக இருக்க வாய்ப்புப் பெற்றவர்கள் நம்மைப் போன்றவர்கள் என்று எனக்குத் தோன்றுவதுகூட தவறோ?

உங்கள் கேள்வியிலுள்ள விகிதாச்சாரம் குறித்து: மசாலாப்படம், நாயக வழிபாடு, chick flicks, sorority duds எல்லாம் கிட்டத்தட்ட அதேதான். கலைப்படங்கள் என்றில்லை, சிரத்தையாகச் செய்யப்பட்ட காமெடி, ஆக்-ஷன், திகில் படங்கள் அனைத்தையும் பார்க்கமுடியத்தான் செய்கிறது. போலீஸ் ஆக்சன் படங்களில் fat cop accompanies the detective, who is sipping steaming coffee from a plastic cup என்று காஃபி-டிடெக்டிவ்-மழை என்று டிடெக்டிவ்களின் trenchcoat conventionல் தொடங்கி, டென்சல் வாஷிங்டன் ஏன் எப்போதும் பட்வைஸர் குடிக்கவேண்டும், ச்ப் ஹ என்று ஒரு பருகலுக்குப் பிறகு சப்தம் கொடுக்கவேண்டும் என்றும் கேட்கலாம், இங்கே ஹாலிவுட் படங்களிலும் குடையலாம். நம்மூரிலும் fat cops ஐ ராம்கோபால் வர்மாவின் சில படங்களில், அவர் பட்டறையில் வந்த சிலர் படங்களில் (Ab tak chhappan மாதிரி) மட்டும் பார்த்ததுண்டு. க்ளோசப் எங்கே பாபா போச்சு? க்ளோசப்பில் முகத்தோடு சேர்த்து சுண்டுவிரலோ வேறேதோ சாமானோ வராத டமிள் க்ளோசப்பைப் பார்க்கமுடிவது அபூர்வமா இல்லை போய்விட்டது? திரைப்பட ஃப்ரேம்கள் பட்டேல் புகைப்படங்கள் மாதிரி இருப்பதாக உங்களுக்குத் தோன்றவில்லை?

3. சிவாஜி விமர்சனத்துக்கு அருகதையில்லாதது என்று சொல்லி சீ தூ என்று ஒற்றை வரியில் விமர்சனம் போட நாமென்ன ஆவி கீவி மாதிரி அவ்வளவு கரைச்சுக் குடிச்ச மேதாவிகளா? நீங்கள் சொல்வதுமாதிரி demo திரைப்படம் என்றால், அப்படி ஒரு புது திரைப்பிரிவை உருவாக்கிய சிவாஜி குழுவினருக்கு நன்றி சொல்லியே ஆகவேண்டும். படத்துக்கு pilot shoot எடுப்பார்களென்று கேள்விப்பட்டிருக்கிறேன் - படமே டெமோ என்றால் திகிலாக இல்லை இருக்கிறது? டோட்டல் ரீகால் படத்தில் ஆள் வயித்துக்குள்ளிருந்து குட்டி ஆள் cum மூளை வருமே, அது மாதிரி இந்த டெமோவுக்கு அடுத்து ரியல் வாஜி வரப்போகிறதா? ராட்டடூயி பார்க்கவில்லை - ஆனால், எந்த துண்டுப் படத்தைச் சொல்கிறீர்கள்? கடவுச்சொல் கேட்கும் அனிமேஷனா? அப்படியெனில், ஜீன்ஸின் டைனோசார் மாதிரித்தான் இதுவும் (சிவாஜியை ஆக்ஷன் காமெடி என்ற வரையறைக்குள் அடைப்பீர்களா பாபா? ரஜினி படம் இதுக்குள்ளல்லாம் அடங்காது என்ற உலக நிதர்சனத்தைத் தவிர்த்துவிட்டால்). ஆனால் தமிழ்நாட்டுக் குழந்தைகளுக்கு ரஜினி படத்தில் ஏதாவது வேண்டுமே ;-). குழந்தைகளுக்காக அனிமேஷன் எடுத்தெல்லாம் செலவு செய்யாமல் (அதற்கு சிவாஜிக்கு ஆனதை விட அதிகம் செலவாகும் ;-)) பல்சுவையையும் கலந்து கட்டித் தருவது என்று புரிகிறது!!

அவரவர் ரசனை அவரவர்க்கு - எதுவும் மேலானதும் அல்ல கீழானதும் அல்ல. இருந்தும், வெகுஜன ரசனை மட்டும்தான் rule of the road, பிறதெல்லாம் நேரவிரயம் என்று இங்கே ரஜினி ரசிகர்கள் குதிப்பதுபோல 'மக்கள் இந்த சட்னிதான் கேக்கிறாங்க' என்று பாலச்சந்தர் நினைத்திருந்தால் சுருட்டை முடி வெள்ளைத் தோல் என்று ரஜினிக்கு அன்றைக்கே பெயிண்ட் அடிக்கவேண்டியிருந்திருக்கும். அன்றைய பொதுப்புத்திக்கு ரஜினியே ஒரு வெளியாள் தான் என்று புரியாமல்(லா?) ரசிகக்குஞ்சுகள் இன்றைக்கு ரஜினிக்கு வெளியிலிருக்கும் சினிமாவைப் பற்றிச் சொல்லும்போது அறிவுசீவியைப் பிடித்து அவன் தாடியைச் சீவணும் என்று குதிக்கிறார்கள்.

Unknown said...

//செவன் சாமுராய் பைசைக்கிள் தீவ்ஸுன்னீங்க - இந்த இரண்டு படத்துக்கும் நான் பி.ஆர்.ஓ ஏதும் கிடையாது. ரஜினி படங்களை திட்டிக் கிழிக்கிறாங்க அப்படிங்கிறீங்க. தப்புன்னே வச்சுக்கலாம்; ரஜினி படத்தை பார்த்துட்டு, என்ன இப்படி கந்தரகோளமா இருக்குன்னு கிழிச்சுத் தொங்கவிடுறாங்க. இந்த அறிவுசீவிகள் தூக்கிவைக்கிற படத்தைப் போட்டு நாறடிக்கணும்னா அந்தப் படத்தைப் பார்த்துட்டு உங்க விமர்சனத்தை எழுதலாமே?//

அந்த 'அறிவுசீவி'கள் தூக்கி வைக்கும் படத்தை நாறடிக்கணும்னு எனக்கு வேண்டுதலா என்ன? அப்படி செஞ்சா எனக்கும் அவங்களுக்கும் என்ன வித்தியாசம்? வெகுஜன ரசனை என்பது கீழ்த்தரமானது, வெகுசனங்களின் கலைஞன் கீழ்த்தரமானவன் என்று அவர்கள் சொல்வதை தகர்க்க அவர்கள் மதிப்பதை நான் மிதிக்க வேண்டும் என்பதில்லையே?

//ரஜினி படத்தைத் தாக்கி யார் எழுதினதுன்னு பாருங்க, அவன் என்ன படத்தை நல்லாயிருக்குன்னு எழுதியிருக்கான்னு பாருங்க, அந்தப் படத்தைப் பாருங்க, பிடிக்கலேன்னா டார் டாராக் கிழிச்சு தொங்க விடுங்க. அது நேர்மையான அணுகுமுறை.//

தாக்கி எழுதுகிறவனது விமர்சனத்தை கிழித்தெறிய ஒரு துளி லாஜிக் இருந்தாலே போதும். விமர்சனம் செய்கிரவனுக்கு எது பிடிக்கும், அதை நாம் எப்படி கிழிக்கலாம் என்பது தேவையற்ர அணுகுமுறை. ஏன் என்றால் அவன் மதிக்கும் படத்தை மோசம் என்று நிறுவினால் கூட அதனால் ரஜினிபடம் நல்லதென்று நிருபித்ததாக ஆகிவிடாது.ஒருவனது விமர்சனம் மோசம் என்பதை நிறுவ அவனது விமர்சனத்தை கிழித்தெறிந்தாலே போதும்.(இப்ப நாசருக்கு செய்தது மாதிரி)

//அவை நம் படங்கள் இல்லையே அப்படின்னு கவைக்குதவாத கல்ச்சுரல் சுதேசி ஸ்டேட்மெண்ட் விட்டீங்கன்னா, அவை நம் டூத்பேஸ்ட் இல்லையே, காலையில் உக்காரும் ஃப்ளஷ் டாய்லெட் இங்கிலாந்து மகாராணிக்காக வடிவமைக்கப்பட்டது, அது நமது இல்லையே, காரும் பஸ்ஸும் நமது இல்லையே, தார் ரோடு நமது இல்லையே, பேண்ட் சட்டை நமது இல்லையே, பால்பாயிண்ட் பேனா நமது இல்லையே.....மின்சாரம் நமது இல்லையே, ட்ரான்ஸ்ஃபார்மர் நமது இல்லையே என்று நீட்டலாமா? //

கல்ச்சரல் ஸ்வதேசி ஸ்டேட்மெண்ட்டை உடைக்க நீங்கள் கொடுக்கும் உதாரணம் எல்லாமே ஏன் விதேசி விஞ்ஞானமா இருக்கு?


வெளிநாட்டானின் விஞ்ஞானம் உயர்ந்தது என்பதற்கும் அவனது கலாச்சாரம் உயர்ந்தது என்பதற்கும் இருக்கும் வித்தியாசம் உங்களுக்கு தெரியாதா?
வெளிநாட்டின் கலைவடிவங்களை, படைப்புகளை நம் நாட்டு படைப்புகளுடனும் கலைவடிவுடனும் எந்த வகையில் ஒப்பிட முடியும்?அவனது படைப்பும் கலைவடிவமும் அவனது நாட்டு கலாச்சாரத்தை ஒட்டி அமைந்திருக்கும். நமது கலைகள் நமது பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் ஒட்டி அமைந்திருக்கும் எனும்போது இரண்டையும் எந்த அளவுகோலை பயன்படுத்தி ஒப்பிடுகிறீர்கள்? அப்படி நீங்கள் பயன்படுத்தும் அளவுகோலை ரஜினியும் பயன்படுத்த வேண்டும் என்பது ஏன்? சராசரி ரசிகனை விட உங்களின் அளவுகோல் எந்த விதத்தில் மேம்பட்டது? சராசரி ரசிகன் ஒரு கலையை அளக்க பயன்படுத்தும் அளவுகோல் அவனது தேவைகளை பூர்த்தி செய்வதாக அமையும்போது,அந்த அளவுகோல் ஒரு கலைஞனுக்கு முக்கியமா உங்கள் அளவுகோல் முக்கியமா? 'கலை முன்னேற்றம்" என்ற சப்ஜெக்டிவ், abstract entity காக pragmatic sense அற்ற முறையில் ரஜினி ஏன் தனது core competencyயை மாற்ற வேண்டும்?

//இங்கே இவ்வளவு தோண்டு தோண்டுவது எவர் ரசனையையும் குறைத்து மதிப்பிடுவதற்காக அல்ல - ரஜினி படங்களுக்கு இடமே அளிக்கக்கூடாது என்பதல்ல விஷயம். எந்தவொரு புள்ளியிலும் தேங்கி நின்றுவிடக்கூடாது என்ற பொதுவான கருத்தாக்கத்தின் அடிப்படையில் எழும் விமர்சனங்களே அவை.//

அது தேக்கம் என்று எப்படி சொல்கிறீர்கள்?உலக கமர்ஷியல் சினிமா மார்க்கட்டில் தமிழின் பொடன்ஷியல் என்ன என்பதை தமிழுக்கு உணர்த்திய முதல் கலைஞன் ரஜினிதான். ஹாலிவுட் ஆசிய சந்தைகளை பிடித்தது அப்பல்லோ 13யையும், சிடிசன் கேனையும் காட்டி அல்ல. ஓடும்விமானத்தில் எகிறிக்குதிக்கும் ஜேம்ஸ் பாண்ட் படங்கள் மூலமும், ராணுவத்தை தனிமனிதன் எதிர்க்கும் ராம்போக்கள் மூலமும்தான். ரஜினியை ஏசும் தமிழ் சினிமாவின் பீஷ்மர்களால் இப்படி ஒரு சாதனையை செய்ய முடிந்திருக்கிறதா? கும்மிடிப்பூண்டியையும் மார்த்தாண்டத்தையும் தாண்டி அவர்கள் என்றாவது சிந்தித்தது உண்டா?சினிமா தொழில்துறைககான அந்தஸ்தை பெறாமலேயே கந்துவட்டிக்கும் மீட்டர்வட்டிக்கும் கடன்வாங்கி படம் எடுக்கும் நிலையிலேயே இப்படி சாதனைகளை ஒரு முன்னாள் கண்டக்டர் படைப்பது தேக்கமா ?

தமிழ்சினிமாவை அடுத்த கட்டத்துக்கு எடுத்து சென்றவர் ரஜினிதான்.உலக அரங்கில் இன்று பேசப்படும் (அல்லது முணுமுணுக்கப்படும் என்றும் வைத்துக்கொள்ளுங்களேன்) இடத்துக்கு தமிழ் சினிமா ஒன்று உயர்ந்திருக்கிறது.இந்திய கமர்ஷியல் சினிமா துறை முழுக்க இன்று அரண்டு நின்று சிவாஜியின் வெற்றியை குறித்து பேசிக்கொண்டிருக்கிறது.இதேபோல் இன்னொரு வெற்றியை தமிழ்திரையுலகுக்கு அளிக்க மீண்டும் ரஜினியால்தான் முடியும்.அடுத்த தலைமுறை நடிகர் எவராலும் சிந்திக்க முடியாத ஒரு எவெரெஸ்டில் நிற்கிறார் ரஜினி.இதையா தேக்கம் என்கிறீர்கள்?ரஜினி கொண்டுவந்த மாற்றம் ஒரு தேக்கம் அல்ல.It's a gigantic leap.

//வெல்லைத்தமில் லன்ன்ன்ன்ன்ன் அப்படின்னு டிகுஜிக் டிகுஜிக் வெஸ்றன் ஸ்றைல்ல பாடிட்டு தமிழ்நாட்டு கலாஸ்ஸாரப்படி பொண்ணு வேணுங்கிறார//

வெஸ்டர்ன் ஸ்டைலில் (கனவில்) பாடுகிறவன் தமிழ்நாட்டு கலாசாரத்தில் பொண்ணெடுக்க கூடாது என்பது யார் வகுத்த விதி?

//எதுக்கு ஆங்க்ஹிலப் படத்தை ஒப்பிடணும்னு கேட்டா, ஏனுங்க இந்தியாவின் ஒரு பில்லியன் தலைகளில ப்லொன்டெ தல எங்க இருக்கு?//

ஆங்கிலோ இந்தியரிடம் இருக்கிறது. அவர்களும் நமது சமூகத்தை சேர்ந்தவர்கள் தானே?:))))

சன்னாசி said...

கல்யாண வீடுன்னா நாந்தான் மாப்பிளை சடங்கு வீடுன்னா நாந்தான் குமரி (இடக்கரடக்கல்) ன்னு யெஜமான் நெஃப்ஃபூழியன் கணக்க இப்படி கோட் குடுத்து இதுதான் ஆக்கர்னு இம்ப்ளை பண்றீங்களே செல்வன். கோர்வையா எழுதலாம்னு பார்த்தா புல்லட் பாயிண்ட் புண்ணியகோடி மாதிரி வாய்க்காலோரமா பின்னூட்டத்தை சைடுஸ்டாண்டு போட்டு அ ஆ இ ஈ டிஸ்கி ஆல்ஃபா பீட்டா காமா சோமான்னு உங்க பதிலில் இருந்து பதிலுக்கு கோட்டை உருவி புல்லட் பாயிண்ட்டுதான் போடணும் போல.

//அந்த 'அறிவுசீவி'கள் தூக்கி வைக்கும் படத்தை நாறடிக்கணும்னு எனக்கு வேண்டுதலா என்ன? அப்படி செஞ்சா எனக்கும் அவங்களுக்கும் என்ன வித்தியாசம்? வெகுஜன ரசனை என்பது கீழ்த்தரமானது, வெகுசனங்களின் கலைஞன் கீழ்த்தரமானவன் என்று அவர்கள் சொல்வதை தகர்க்க அவர்கள் மதிப்பதை நான் மிதிக்க வேண்டும் என்பதில்லையே?//

அடடா; நீங்க ரசிக்கிறதை அவன் கேவலம் அப்படிங்கிறான், அப்ப அவன் ரசிக்கிறது கேவலமா இல்லையான்னு முடிவு பண்ணுங்கன்னுதானே நான் கேட்டது? வெகுசனங்களின் கலைஞன் கீழ்த்தரமானவன் என்று அவர்கள் சொல்வதை தகர்க அவர்கள் மதிப்பதை மிதிக்க ரசனைவாய்க்காலை தாண்டி குதிக்க லாவத்தில் ஜெயிக்க சகட்டுமேனிக்கு மறுக்க எல்லாம் சொல்லவில்லை. கேள்வி எளிதானது. சென்ற பதிலில் கேட்டதையே திரும்பக் கேட்கிறேன்: ரஜினி படத்தை மோசமென்று சொல்லும் அறிவுசீவிகள் நன்றாயிருக்கிறதென்று சொல்லும் படங்கள் உங்கள் பார்வையில் கேவலமாகப் படுகிறதா இல்லையா? எது கேவலம் எது கேவலம் இல்லை என்று முடிவுகட்டுவது முக்கியம் அல்ல, ஏன் கேவலம் எனப்படுகிறது ஏன் கேவலம் எனப்படவில்லை என்ற புரிதலே அறிவுச்சேகரத்துக்கோ சாமானிய வாழ்க்கைக்கோ முக்கியமானது என்ற நோக்கிலேயே கேட்கப்படுவது இது. சென்ற பதிலில் நான் கேட்ட அதே கேள்வி: செவன் சாமுராய், பைசைக்கிள் தீஃப் இரண்டு படங்களின் தரம் பற்றி உங்கள் கருத்து என்ன? (இதை இதை பார்த்தியா நீ என்ற சில்லறை பந்தா என்று இதை நினைக்காமல், இதுவரை நான் கேட்டு வந்திருப்பதின் contextல் பதில் சொல்லவும்) இவை இரண்டும் நீங்கள் உதிர்த்த படப் பெயர்கள் என்பதைத் தவிர எதுவும் தெரியாத ஒரு ஆரம்பகட்ட திரைப்பட ரசிகனுக்குச் சொல்வதாக நினைத்துக்கொண்டு இந்த இரு படங்களைப்பற்றிய உங்கள் கருத்துக்களைக் கூறவும். அசலாகவே மாற்றுக் கருத்திருந்து (திரைப்படம் குறித்த மாற்றுக் கருத்துக்கள்! ஒண்ணும் புரியலை, குப்பனுக்கு சுப்பனுக்கெல்லாம் உதவாது என்பதெல்லாம் சொத்தை வாதம். ஆங்கிலம் படிக்கத் தெரிந்த உங்களுக்கு ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருக்கும் அனைத்துப் புத்தகங்களையும் படித்துப் புரிந்துகொள்ளமுடியுமா என்ன?) அறிவுசீவிகளின் படத்தை மிதிப்பதால் உங்கள் தரம் ஒன்றும் தாழ்ந்துபோய்விடாது. எனவே, அவை இரண்டு குறித்து உங்கள் கருத்துக்களை தாராளமாக முன்வையுங்கள். சரியென்று பட்டால் முதல் பாராட்டு என்னுடையதாகத்தான் இருக்கும்.

//தாக்கி எழுதுகிறவனது விமர்சனத்தை கிழித்தெறிய ஒரு துளி லாஜிக் இருந்தாலே போதும். விமர்சனம் செய்கிரவனுக்கு எது பிடிக்கும், அதை நாம் எப்படி கிழிக்கலாம் என்பது தேவையற்ர அணுகுமுறை. ஏன் என்றால் அவன் மதிக்கும் படத்தை மோசம் என்று நிறுவினால் கூட அதனால் ரஜினிபடம் நல்லதென்று நிருபித்ததாக ஆகிவிடாது.ஒருவனது விமர்சனம் மோசம் என்பதை நிறுவ அவனது விமர்சனத்தை கிழித்தெறிந்தாலே போதும்.(இப்ப நாசருக்கு செய்தது மாதிரி)//

நாம் எப்படிக் கிழிக்கலாம் என்று யோசித்து ரூம் போட்டு உட்கார்ந்து யோசித்துக் கிழிக்குமளவு வேலையத்தவர்கள் இருக்கிறார்கள் போல, பால் பன்னீர் பாயாச அபிஷேகத்தை கட் அவுட் மேல் ஊற்றும் பிஸி பீப்புள் போல. அவன் படத்தை மோசம் என்று நிறுவினால்கூட ரஜினி படம் நல்லதென்று நிரூபித்ததாக ஆகிவிடாது என்பது வெள்ளிடை மலை. அதை விளக்க அவசியம் ஏதும் இல்லை. நாசர் விமர்சனத்தை நீங்கள் கிழித்தெறிய உபயோகித்த வாக்கியம் போல: அவதாரம் போன்ற ஒப்பாரி படங்களுக்கு விருது வேறு வேண்டுமாக்கும்?வில்லன் நடிகர் என்பது சரியாகத்தானிருக்கிறது : 'வில்லன் நடிகர் என்கிறது சரியாத்தான் இருக்கிறது' என்று. என்ன டைப்பான வாதம் இது? சும்மா மேம்போக்காக நகைச்சுவைக்குச் சொன்னதென்றால் பரவாயில்லை, ரஜினியை, ரஜினி படங்களை விமர்சிப்பவர்களெல்லாம் வில்லன்களா அப்போது?

//கல்ச்சரல் ஸ்வதேசி ஸ்டேட்மெண்ட்டை உடைக்க நீங்கள் கொடுக்கும் உதாரணம் எல்லாமே ஏன் விதேசி விஞ்ஞானமா இருக்கு?//

நீங்க கோட் குடுத்திருக்கிறதிலிருந்தே பார்க்கலாமா? காலங்காத்தால வேப்பங்குச்சில பல்விளக்கிட்டு கம்மாக்கரையில போய் காலைக்கடனை முடிச்சுட்டு வில்லுவண்டியில ஏறி மண்பாதையில போய், வேட்டிசட்டை கட்டிக்கிட்டு சாயங்காலமா திரிவிளக்குல எண்ணை ஊத்தி நசுக்கி விட்டு ஏத்தி மிச்சமிருக்கிற எண்ணையைத் தலையில தேச்சுட்டு ஓலைச்சுவடியில எழுத்தாணியால கீறி புறா வழியாவா அனுப்பிச்சீங்க இந்தப் பின்னூட்டத்தை? நான் அப்படிச் செய்யலை!! பேச்சுக்காகப் பேசுறது வேற, யதார்த்தம் வேற. அடுத்து வருது உங்க இந்த வாதம்.

//வெளிநாட்டானின் விஞ்ஞானம் உயர்ந்தது என்பதற்கும் அவனது கலாச்சாரம் உயர்ந்தது என்பதற்கும் இருக்கும் வித்தியாசம் உங்களுக்கு தெரியாதா? வெளிநாட்டின் கலைவடிவங்களை, படைப்புகளை நம் நாட்டு படைப்புகளுடனும் கலைவடிவுடனும் எந்த வகையில் ஒப்பிட முடியும்?//

வெளிநாட்டானின் கலாச்சாரத்துக்கு அவனது விஞ்ஞானமும் ஒரு பெரும் அடிப்படை, எந்தவொரு கலாச்சாரத்துக்கும் அதேதான். வெளிநாட்டின் கலைவடிவங்களை, படைப்புகளை நம் நாட்டு படைப்புகளுடனும் கலைவடிவுடனும் எந்த வகையில் ஒப்பிட முடியும்? : நிஜமாகவே கேட்கிறீர்களா, தெரிந்தும் தெரியாத மாதிரி கேட்கிறீர்களா? தாஜ்மஹாலையும் இந்தியக் கலைவடிவங்களையும் பார்க்கச் சுற்றுலா வரும் வெளிநாட்டுப் பயணிகளைப் பிடித்துக் கேளுங்கள் - உன் ஊரில் என்ன இல்லைன்னு இதையெல்லாம் பார்க்க வந்தே, தாஜ்மஹாலைவிட ஈஃபிள் டவர் உயரம் அதிகம்தானே, கங்கையைவிட அமேசான் பெரியது தானே, ரெண்டில் ஓடுவதும் தண்ணி தானே, எதில் அதிகமாகத் தண்ணி ஓடுகிறது, அமேசான் தானே, அப்ப அதுதானே பெரிய ஆறு, வெற்றிகரமான ஆறு, ஐஃபிள் தானே டாப் கட்டிடம் என்ற ரீதியில் சொல்லிப் பாருங்கள். கலைவடிவங்கள், படைப்புக்களுக்கு நாடு, மொழி, இன எல்லைகள் உண்டு என்ற மாதிரிக் கேட்பதற்கெல்லாம் என்னத்தைச் சொல்லி! பிறகு ஜப்பானியனுக்கு ரஜினியுடன் என்ன ஒற்றுமை இருக்கிறது என்று முத்து படத்தை ஹிட் ஆக்குகிறான்?

//சராசரி ரசிகனை விட உங்களின் அளவுகோல் எந்த விதத்தில் மேம்பட்டது? சராசரி ரசிகன் ஒரு கலையை அளக்க பயன்படுத்தும் அளவுகோல் அவனது தேவைகளை பூர்த்தி செய்வதாக அமையும்போது,அந்த அளவுகோல் ஒரு கலைஞனுக்கு முக்கியமா உங்கள் அளவுகோல் முக்கியமா? 'கலை முன்னேற்றம்" என்ற சப்ஜெக்டிவ், abstract entity காக pragmatic sense அற்ற முறையில் ரஜினி ஏன் தனது core competencyயை மாற்ற வேண்டும்?//

சராசரி ரசிகன் என்று எவனும் கிடையாது, எந்த சீவியினுடைய அளவுகோலும் எவனை விடவும் மேம்பட்டது கிடையாது. இன்றைக்குச் சராசரி ரசிகனாக இருப்பவன்தான் நாளைக்குத் தன் ரசனையைத் தானே விரித்துக்கொண்டோ, பிற அறிமுகங்களின் மூலமாய் விரித்துக் கொண்டோ, தனது பழைய ரசனையையும் கேள்விக்குட்படுத்தும் நிலையை அடைகிறான்; ஒரு கட்டத்தின்பின் தேங்கியும் போகிறான் - சமகாலத்தின் பிரக்ஞை எந்தவிதத்திலும் அற்றுப்போவது மேதாவிகளுக்கும் சாதாரணமாக நிகழும் ஒன்றுதான். சி.கே.பிரஹலாத் ஸ்டைலில் core competence, bottom of the pyramid என்று படம் எடுக்கட்டும் - அது தவறு அல்ல. அப் படத்துக்கான விமர்சனம் வைக்கப்படும்போது நீ என்ன பெரிய கொக்கா என்று கேட்பதும் தவறு அல்ல. நான் கொக்கு அல்ல, ஏன் இந்தப் படம் கேவலமாக இருக்கிறது என்று சொன்னால், ரிவர்ஸ் கியர் போட்டு சாமானியனுக்காகப் படம் எடுக்கிறார் ரஜினி அவரைப்போட்டு ஏன் நச்சி எடுக்கிறீங்க, படம்னா அப்படி இப்படித்தான் இருக்குமுன்னு கேர் ஃபார் தி பூர் மேன் அப்படின்னு நாசூக்கா எமோஷனல் பிளாக்மெயிலோ அரோகராவோ போடக்கூடாது. நானோ வேறு யாரோ எழுதி ரஜினிகாந்த் படம் எடுப்பதை நிறுத்திவிடப் போவதில்லை. அவனவன் ரசனை அவனவனுக்கு, உன்னை ஒருவன் கிழித்தால் பதிலுக்கு வீம்புக்குக் கிழித்தாலும் கிழி, நிசத்துக்குக் கிழித்தாலும் கிழி - ஆனால் இதுதான் லோக நியதி என்ற ரேஞ்சுக்கு சோம்பேறிவாதம் பேசுவது சரியில்லை என்றுதான் சொல்வது.

//அது தேக்கம் என்று எப்படி சொல்கிறீர்கள்?உலக கமர்ஷியல் சினிமா மார்க்கட்டில் தமிழின் பொடன்ஷியல் என்ன என்பதை தமிழுக்கு உணர்த்திய முதல் கலைஞன் ரஜினிதான். ஹாலிவுட் ஆசிய சந்தைகளை பிடித்தது அப்பல்லோ 13யையும், சிடிசன் கேனையும் காட்டி அல்ல. ஓடும்விமானத்தில் எகிறிக்குதிக்கும் ஜேம்ஸ் பாண்ட் படங்கள் மூலமும், ராணுவத்தை தனிமனிதன் எதிர்க்கும் ராம்போக்கள் மூலமும்தான். ரஜினியை ஏசும் தமிழ் சினிமாவின் பீஷ்மர்களால் இப்படி ஒரு சாதனையை செய்ய முடிந்திருக்கிறதா? கும்மிடிப்பூண்டியையும் மார்த்தாண்டத்தையும் தாண்டி அவர்கள் என்றாவது சிந்தித்தது உண்டா?சினிமா தொழில்துறைககான அந்தஸ்தை பெறாமலேயே கந்துவட்டிக்கும் மீட்டர்வட்டிக்கும் கடன்வாங்கி படம் எடுக்கும் நிலையிலேயே இப்படி சாதனைகளை ஒரு முன்னாள் கண்டக்டர் படைப்பது தேக்கமா ?//

இந்த முன்னாள் கண்டக்டர் என்ற செண்டிமெண்ட் எதற்கு? உழைத்து வந்தவனை இப்படி போட்டு வதைக்கலாமா என்று கழிவிரக்கத்துக்கா? கமர்ஷியல் படங்களை எடுப்பது தவறு என்று எங்கேயாவது சொன்னேனா? இல்லை ரஜினி படம் எடுப்பது தவறு என்று சொன்னேனா? இண்டர்நேஷனல் ரேஞ்சில் உலுக்கிட்டார் என்றால்? இல்லை வெளிநாட்டில் எவரும் பாடாவதிப் படங்களையே பார்ப்பதில்லை, அமெரிக்கர்களும் மேற்கத்தியர்கள் அனைவரும் காலையில் எழுந்திரித்து மூளையைப் பிரட்டி ஃப்ரேக்ஃபாஸ்ட் சாப்பிட்டு புத்திசாலியாக வளர்பவர்கள் என்று சொன்னேனா? ராம்போ ஜேம்ஸ்பாண்ட் என்கிறீர்கள், அதை வைத்து நமது சந்தையைப் பிடித்தார்கள் என்கிறீர்கள், பிறகு என்ன வெளிநாட்டின் கலைவடிவங்களை, படைப்புகளை நம் நாட்டு படைப்புகளுடனும் கலைவடிவுடனும் எந்த வகையில் ஒப்பிட முடியும்? என்று முன்னே கேட்ட கேள்வி? இல்லை நான் ஜேம்ஸ்பாண்டும் ராம்போவும் படைப்புக்கள் இல்லை என்றேனா? Please don't speak so that you can hear yourself!! முன்னுக்குப் பின் முரணாகச் சொல்லுமுன் இந்தப் பதிவில் நீங்கள் எழுதியுள்ளதையே மற்றொருமுறை கோர்வையாக வாசித்துப் பார்க்கவும். அப்புறம் கந்துவட்டி மீட்டர்வட்டி செண்டிமெண்ட்: செல்வன்!! ரஜினி படம் எப்படி எடுக்கப்படுகிறதென்று அனைவருக்கும் தெரியும். பூஜை போட்டவுடன் ஏரியாக்கள், NRI ரைட்ஸ் எல்லாம் விற்றுப் பணம் கொட்டத் தொடங்கியபிறகுதானே படப்பிடிப்பே ஆரம்பிக்கிறது? ஏ.வி.எம் ஏதோ சோற்றுக்கு வழியில்லாமல் கஷ்டப்பட்டதுபோல ஏன் ஃபிலிம் காட்டவேண்டும்? திரையிட வழியில்லாமல் தயாரிப்பாளரே சொந்தமாக ரிலீஸ் செய்த சேது மாதிரியா ரஜினி படம் ரிலீஸ் ஆகிறது? அது ஒரு பணம் பண்ணும் யந்திரம் - அதில் ஒன்றும் தவறு இல்லை, கந்துவட்டிக்கும் மீட்டர் வட்டிக்கும் எடுத்து சமுதாயத்துக்கு கக்கூஸா கட்டுகிறான்? லாபத்துக்கு எடுக்கப்படும் வணிகரீதியான படங்களுக்குக் கடன் வாங்குகிறான். கந்துவட்டிக்குப் பணம் வாங்கி கடைவைத்த அண்ணாச்சி அழுகிப்போன காய்கறி விற்றால் மீட்டர்வட்டி கந்துவட்டிக்கு வாங்கிட்டாருப்பா என்று அழுகிய காய்கறிகளை வாங்குவீர்களா என்ன? சிவாஜியைக் குறை சொல்பவன், படம் பிடிக்காததால் குறை சொல்கிறான். தயாரிப்பாளருக்கு அவ்வளவு கந்துவட்டி மீட்டர்வட்டி கஷ்டம் என்றால் இருக்கும் காசை வைத்து படம் எடுக்கவேண்டியதுதானே? பெரிய மீனைப் போடுவது இன்னும் பெரிய மீன் கிடைக்கும் என்றுதானே? என்ன பிறகு கந்துவட்டி மீட்டர் வட்டி?

வெகுஜனப் படங்கள் எடுக்கப்படுவது தவறல்ல, அது மட்டும்தான் உலகம் என்று நினைத்திருப்பது அடிமுட்டாள்தனம். இதே ரேஞ்சில் போனால் ஒரு 'ஸாதாரண ரஸிகனால்' தனது அயல் மாநிலப் படங்களைக்கூட பார்க்கத் தேவையில்லை, அவை நமது படங்கள் இல்லையே என்று சொல்லலாமா? வடிவேலு காமெடி மலையாளத்தில் ஒத்துவராது, இன்னசெண்டின் காமெடி தெலுங்கில் ஒத்துவராது, பிரம்மானந்தத்தைத் தமிழ்ப்படங்களில் பார்த்தால் வில்லன் மாதிரி இருக்கும் என்று குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டிக்கொண்டிருக்க வேண்டியதுதான், வணிகப் படங்களில் கூட.

//வெஸ்டர்ன் ஸ்டைலில் (கனவில்) பாடுகிறவன் தமிழ்நாட்டு கலாசாரத்தில் பொண்ணெடுக்க கூடாது என்பது யார் வகுத்த விதி?//

கிண்டலுக்கும் சுண்டலுக்கும் இன்னின்ன வித்தியாசம் என்று அடிக்குறிப்பு கொடுக்கவேண்டிய நிலைமை வேறா? ஸ்டீரியோடைப்பைச் சொன்னது ஐயா, guns girls and gadgets என்று ஜேம்ஸ்பாண்டு படங்களில் வால்த்தர் பிபிகேயையும் ஷேக்கன் நாட் ஸ்டிர்டையும் ஜி ஸ்ட்ரிங்கையும் அஸ்டன் மார்ட்டினையும் சொல்வது மாதிரி. ரிலாக்ஸ்.

//ஆங்கிலோ இந்தியரிடம் இருக்கிறது. அவர்களும் நமது சமூகத்தை சேர்ந்தவர்கள் தானே?:))))//

ம்க் ம்க் ம்க் - ம்ஹூம், சிரிப்பு வரலை. Sorry, ஆனால் மெசேஜ்போர்டு ஸ்டைலில் ஜாலி கமெண்ட்ஸ் வேணும்னா அடுத்த பின்னூட்டத்தில் வச்சுக்கலாம். (தயவுசெய்து இந்த வாக்கியத்தை அடுத்த பின்னூட்டத்தில் கோட்டடித்துவிடவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன் ;-))

பின்குறிப்பு: பைசைக்கிள் தீஃப் மற்றும் செவன் சாமுராய் குறித்த உங்கள் விமர்சனத்தை எதிர்பார்க்கிறேன். படம் மறந்துவிட்டிருந்தாலும், சமீபத்தில் பார்த்திராவிட்டாலும் பரவாயில்லை, விமர்சனத்தை வையுங்கள் பிறகு பார்த்துக்கொள்ளலாம் ;-)

Unknown said...

//கேள்வி எளிதானது. சென்ற பதிலில் கேட்டதையே திரும்பக் கேட்கிறேன்: ரஜினி படத்தை மோசமென்று சொல்லும் அறிவுசீவிகள் நன்றாயிருக்கிறதென்று சொல்லும் படங்கள் உங்கள் பார்வையில் கேவலமாகப் படுகிறதா இல்லையா?//

'ஆம்' 'இல்லை' என்று பொத்தாம்பொதுவாக சொல்லும் கேள்வி அல்ல இது.அந்தந்த திரைப்படத்தை பொறுத்தது இது என்றாலும் 'அறிவுசீவிகள் என்ற வகையறா ரசிக்கும் படம் அனைத்தும் கேவலமானவை' என்ற மட்டையடியை நான் முன் வைக்க விரும்பவில்லை.

//எது கேவலம் எது கேவலம் இல்லை என்று முடிவுகட்டுவது முக்கியம் அல்ல, ஏன் கேவலம் எனப்படுகிறது ஏன் கேவலம் எனப்படவில்லை என்ற புரிதலே அறிவுச்சேகரத்துக்கோ சாமானிய வாழ்க்கைக்கோ முக்கியமானது என்ற நோக்கிலேயே கேட்கப்படுவது இது//

அன் எதிகலாக இல்லாத ஒரு கலை ஒருவனுக்கு கேவலமாக தெரிய காரணம் மற்றவரின் ரசனையை அவன் மட்டமாக எடைபோடுவதுதான்.இதுபோன்றவர்களை தாண்டித்தான் ஒவ்வொரு கலைஞனும் ஒவ்வொரு கலையும் ஜெயிக்கிறதே அன்றி இவர்களால் அல்ல.

//சென்ற பதிலில் நான் கேட்ட அதே கேள்வி: செவன் சாமுராய், பைசைக்கிள் தீஃப் இரண்டு படங்களின் தரம் பற்றி உங்கள் கருத்து என்ன?//

பார்த்து விட்டுத்தான் எழுத முடியும். அதை உடனடியாக செய்யும் உத்தேசம் இல்லை.

//நாசர் விமர்சனத்தை நீங்கள் கிழித்தெறிய உபயோகித்த வாக்கியம் போல: அவதாரம் போன்ற ஒப்பாரி படங்களுக்கு விருது வேறு வேண்டுமாக்கும்?வில்லன் நடிகர் என்பது சரியாகத்தானிருக்கிறது : 'வில்லன் நடிகர் என்கிறது சரியாத்தான் இருக்கிறது' என்று. என்ன டைப்பான வாதம் இது? சும்மா மேம்போக்காக நகைச்சுவைக்குச் சொன்னதென்றால் பரவாயில்லை, ரஜினியை, ரஜினி படங்களை விமர்சிப்பவர்களெல்லாம் வில்லன்களா அப்போது?//

ரஜினியே முன்னாள் வில்லன் நடிகர்தான். மற்றபடி "வில்லன் நடிகர்" என்றது நகைச்சுவைக்கு என்பது படித்தாலே தெரியுமே?

//நீங்க கோட் குடுத்திருக்கிறதிலிருந்தே பார்க்கலாமா? காலங்காத்தால வேப்பங்குச்சில பல்விளக்கிட்டு கம்மாக்கரையில போய் காலைக்கடனை முடிச்சுட்டு வில்லுவண்டியில ஏறி மண்பாதையில போய், வேட்டிசட்டை கட்டிக்கிட்டு சாயங்காலமா திரிவிளக்குல எண்ணை ஊத்தி நசுக்கி விட்டு ஏத்தி மிச்சமிருக்கிற எண்ணையைத் தலையில தேச்சுட்டு ஓலைச்சுவடியில எழுத்தாணியால கீறி புறா வழியாவா அனுப்பிச்சீங்க இந்தப் பின்னூட்டத்தை? நான் அப்படிச் செய்யலை!! பேச்சுக்காகப் பேசுறது வேற, யதார்த்தம் வேற.//

வேப்பங்குச்சி - டூத்பேஸ்ட்
வில்லுவண்டி - கார்
மண்பாதை - தார்ரோடு
வேட்டி சட்டை - பேண்ட்
ஓலைசுவடி - கணிணி

மீண்டும் எல்லாமே விஞ்ஞான உதாரணமாகவே வருகிறது...ஏன்?:)

பேண்ட்சட்டையை வேண்டுமானால் கலாச்சாரத்தின் ஒரு உதாரணமாக சொல்லலாம். ஆனால் நான் இப்போது பேண்ட் சட்டை போடுவதால் வேட்டி கட்டினவன் எல்லாம் கிறுக்கன் ரசனை கெட்டவன் என்றோ சொல்வது எத்தனை அபத்தம்?பேண்டும் போடுவேன், வேட்டியும் கட்டுவேன்.இரண்டில் இது மோசம் இது உயர்ந்தது என்று சொல்லமாட்டேன்.அப்படி சொல்வதும் அபத்தம்..

//தாஜ்மஹாலையும் இந்தியக் கலைவடிவங்களையும் பார்க்கச் சுற்றுலா வரும் வெளிநாட்டுப் பயணிகளைப் பிடித்துக் கேளுங்கள் - உன் ஊரில் என்ன இல்லைன்னு இதையெல்லாம் பார்க்க வந்தே, தாஜ்மஹாலைவிட ஈஃபிள் டவர் உயரம் அதிகம்தானே, கங்கையைவிட அமேசான் பெரியது தானே, ரெண்டில் ஓடுவதும் தண்ணி தானே, எதில் அதிகமாகத் தண்ணி ஓடுகிறது, அமேசான் தானே, அப்ப அதுதானே பெரிய ஆறு, வெற்றிகரமான ஆறு, ஐஃபிள் தானே டாப் கட்டிடம் என்ற ரீதியில் சொல்லிப் பாருங்கள்.//

தாஜ்மகாலை பார்க்க வந்தால் அவன் அதை ஈஃபிள் டவரை விட உயர்வாக நினைக்கிறான் என்று அர்த்தமா? அல்லது கங்கையில் அவன் குளிப்பதால் அதை அமேசனை விட உயர்வாக அவன் கருதுகிரான் என்று அர்த்தமா? இவற்றை எல்லாம் எப்படி ஒப்பிட முடியும்?கங்கையையும் அமேசனையும் ஆற்றில் ஓடும் நீரின் டி.எம்.சி அளவை வைத்து ஒப்பிட முடியுமா?அதிகமாக தண்ணீர் வருகிறதென்றா கங்கை நம் நாட்டில் புனிதமாக கருதப்படுகிறது?ஈஃபிள் டவரையும் தாஜ்மகாலையும் எதை வைத்து ஒப்பிட்டு 'ஒன்று உசத்தி, ஒன்று தாழ்த்தி?" என்று சொல்லுவீர்கள்? விளக்குங்களேன்.

//கலைவடிவங்கள், படைப்புக்களுக்கு நாடு, மொழி, இன எல்லைகள் உண்டு என்ற மாதிரிக் கேட்பதற்கெல்லாம் என்னத்தைச் சொல்லி! பிறகு ஜப்பானியனுக்கு ரஜினியுடன் என்ன ஒற்றுமை இருக்கிறது என்று முத்து படத்தை ஹிட் ஆக்குகிறான்?//

மண்ணின் மணத்தையும், இனத்தின் பெருமையையும், மொழியின் சிறப்பையும் பிரித்தால் அந்த கலையில் உயிர் போய் செத்த பிணமாக அல்லவா ஆகிவிடும்? திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தால் தமிழில் படிப்பதை போன்றே சுவையாகவா அது இருக்கிறது?

கம்பனையும், இளங்கோவையும், வள்ளுவனையும் தமிழில் நுகர்வதும் ஸ்பானிஷில் நுகர்வதும் ஒன்றா? அல்லது இந்த மண்ணின் கலாச்சாரத்தை புறக்கணித்துவிட்டு அவர்களின் படைப்பை நுகர நினைப்பது தான் சாத்தியமா?

//நான் கொக்கு அல்ல, ஏன் இந்தப் படம் கேவலமாக இருக்கிறது என்று சொன்னால், ரிவர்ஸ் கியர் போட்டு சாமானியனுக்காகப் படம் எடுக்கிறார் ரஜினி அவரைப்போட்டு ஏன் நச்சி எடுக்கிறீங்க, படம்னா அப்படி இப்படித்தான் இருக்குமுன்னு கேர் ஃபார் தி பூர் மேன் அப்படின்னு நாசூக்கா எமோஷனல் பிளாக்மெயிலோ அரோகராவோ போடக்கூடாது. நானோ வேறு யாரோ எழுதி ரஜினிகாந்த் படம் எடுப்பதை நிறுத்திவிடப் போவதில்லை. அவனவன் ரசனை அவனவனுக்கு, உன்னை ஒருவன் கிழித்தால் பதிலுக்கு வீம்புக்குக் கிழித்தாலும் கிழி, நிசத்துக்குக் கிழித்தாலும் கிழி - ஆனால் இதுதான் லோக நியதி என்ற ரேஞ்சுக்கு சோம்பேறிவாதம் பேசுவது சரியில்லை என்றுதான் சொல்வது.//

ஐவரி டவரில் ஏறி நின்று கீழே இருக்கும் உலகை பார்த்தால் அது கேவலமாகத்தான் தெரியும். அது நாம் கடந்துவந்த உலகமாக இருந்தாலும் கூட.கீழே இருக்கும் உலகை கீழே இருப்பவன் ரசிக்கும் விதம் வேறு..டவரில் நிற்பவன் அணுகும் முறை வேறு.இருவரின் ரசனையும் வேறுபட்டிருக்கிறது என்பதைத்தவிர இதில் கேவலம், ஆபாசம் என்று எங்கே இருக்கிறது?மூன்று ரூபாய் கொடுத்து காப்பிகடையில் சிங்கிள் டீ குடிக்கிறவன் "சூப்பர் டேஸ்ட்" என்று பாராட்டிவிட்டு போவான். ஸ்டார்பக்ஸில் 3 டாலருக்கு காபி குடிக்கிறவன் டீக்கடை காபி என்றாலே கேவலம் என்பான். இதில் எவன் ரசனை உயர்ந்தது? எவன் ரசனை கேவலமானது? இவனை விட அவன் எப்படி உயர்ந்த ரசனை கொண்டவனாகிறான்? ரோட்டோரா டீக்கடையில் டீ குடிக்கிறவனுக்கு ஸ்டார்பக்ஸ் காப்பி மோச்சா பிடிக்கவில்லை என்றால் அவன் ரசனை கெட்டவனாகி விடுவானா? அல்லது காப்பி மோச்சாதான் மோசம் என்றாகிவிடுமா? இதில் தனிப்பட்ட விருப்பு வெறுப்பை தாண்டி வேறு என்ன கேவலம் இருக்கிரது என்பதுதான் புரியவில்லை.

//இந்த முன்னாள் கண்டக்டர் என்ற செண்டிமெண்ட் எதற்கு? உழைத்து வந்தவனை இப்படி போட்டு வதைக்கலாமா என்று கழிவிரக்கத்துக்கா?//

முன்னாள் கண்டக்டர் என்றது ரஜினியின் பின்புலத்தை விளக்க. நீங்கள் ரஹ்மான் காப்பி அடித்ததாக சொல்லும் மெட்டை எல்லாம் கண்டுபிடித்து, சீன் பை சீனாக ஒரு படத்தை உலகப்புகழ் பெற்ற படங்களுடன் ஒப்பிட்டு ஆராயும் திறன் ரஜினிக்கு இல்லாமல் இருக்க அவரது சாதாரண பின்புலமும் ஒரு காரணமாக இருக்கலாம் என்பதை உணர்த்த....சாதாரன மனிதன ஒருவன் சூப்பர் ஸ்டாராக ஜொலிப்பதென்ரால் அது திரமை இல்லாமல் சும்மா வரவில்லை என்பதி சொல்ல...உலகெங்கும் ஏன் கொண்டாடப்படுகிரது என்பதை அறியாதவரா நீங்கள்? நம் கண்முன்னே அப்படி ஒரு உதாரனம் நிற்கிரது.நம்முள் ஒருவன் எந்த தமிழ் கலைஞனும் தொட முடியாத உயரத்தை எட்டியிருக்கிறான் சாதித்திருக்கிறான் என்பதால் அவன் பாராட்டப் பட வேண்டியவனாகிறான் என்பதை குறிக்க....

//ராம்போ ஜேம்ஸ்பாண்ட் என்கிறீர்கள், அதை வைத்து நமது சந்தையைப் பிடித்தார்கள் என்கிறீர்கள், பிறகு என்ன வெளிநாட்டின் கலைவடிவங்களை, படைப்புகளை நம் நாட்டு படைப்புகளுடனும் கலைவடிவுடனும் எந்த வகையில் ஒப்பிட முடியும்? என்று முன்னே கேட்ட கேள்வி? //

சந்தையை பிடிப்பதும் கலையை ஒப்பிடுவதும் வேறு வேறு விஷயம்.

"சினிமா வந்து கரகாட்டத்தின் சந்தையை பிடித்துவிட்டது. அதனால் கரகாட்டத்தை விட சினிமாதான் பெட்டர்" - இப்படி ஒரு ஒப்பிடு தவறில்லையா என்ன?

///அப்புறம் கந்துவட்டி மீட்டர்வட்டி செண்டிமெண்ட்: செல்வன்!! ரஜினி படம் எப்படி எடுக்கப்படுகிறதென்று அனைவருக்கும் தெரியும். பூஜை போட்டவுடன் ஏரியாக்கள், ண்றீ ரைட்ஸ் எல்லாம் விற்றுப் பணம் கொட்டத் தொடங்கியபிறகுதானே படப்பிடிப்பே ஆரம்பிக்கிறது? ஏ.வி.எம் ஏதோ சோற்றுக்கு வழியில்லாமல் கஷ்டப்பட்டதுபோல ஏன் ஃபிலிம் காட்டவேண்டும்? திரையிட வழியில்லாமல் தயாரிப்பாளரே சொந்தமாக ரிலீஸ் செய்த சேது மாதிரியா ரஜினி படம் ரிலீஸ் ஆகிறது?///

ரஜினிபடம் ஆரம்பத்தில் இருந்தேவா இந்த நிலையில் இருந்தது?ஆரம்பகட்டங்களில் சேது மாதிரி ரஜினிபடமும் கஷ்டப்பட்டுத்தான் ரிலிசாயிகியிருக்கும். ரஜினியும் ஒரு கட்டத்தில் சோற்றுக்கில்லாம வாய்ப்ப ுவருமா என தெரியாமல் போராடித்தான் இந்த நிலையை அடைந்தார்.இப்போது அவருக்கு கிடைத்திருக்கும் அங்கீகாரம் நெருப்பாற்றில் நீந்தி அடையப்பட்ட வெற்றி.கந்துவட்டிக்கு கடன்வாங்கி படமெடுக்கும் சூழலில் இருந்து பேரை சொன்னாலே பணம் கொட்டும் சூழலுக்கு அவரது படங்கள் வந்தது அவரது உழைப்பால்..

//சிவாஜியைக் குறை சொல்பவன், படம் பிடிக்காததால் குறை சொல்கிறான். தயாரிப்பாளருக்கு அவ்வளவு கந்துவட்டி மீட்டர்வட்டி கஷ்டம் என்றால் இருக்கும் காசை வைத்து படம் எடுக்கவேண்டியதுதானே? பெரிய மீனைப் போடுவது இன்னும் பெரிய மீன் கிடைக்கும் என்றுதானே? என்ன பிறகு கந்துவட்டி மீட்டர் வட்டி?//

படம் பிடிக்கவில்லை என்று குறை சொன்னால் பரவாயில்லை.கோடிகளில் புரளும் ஹாலிவுட்டுடனும், 2 லட்சம் செலவில் எடுக்கப்படும் லோக்கல் தூர்தர்ஷன் படங்களுடனும் ஒப்பிட்டு நன்றாக இல்லை என்பதைத்தான் மறுக்க வேண்டியிருக்கிறது.இவை மூன்றும் இயங்கும் தளங்கள் வேறு வேறு.

//வெகுஜனப் படங்கள் எடுக்கப்படுவது தவறல்ல, அது மட்டும்தான் உலகம் என்று நினைத்திருப்பது அடிமுட்டாள்தனம். இதே ரேஞ்சில் போனால் ஒரு 'ஸாதாரண ரஸிகனால்' தனது அயல் மாநிலப் படங்களைக்கூட பார்க்கத் தேவையில்லை, அவை நமது படங்கள் இல்லையே என்று சொல்லலாமா?//

ஒருவனது உலகம் என்ன என்பதை அவன் தான் முடிவு செய்யமுடியும். ஒருவனது உலகில் இடம்பெறும் பொருட்கள் அவனது நேரம், காலம், வேலை, விருப்பு வெருப்பு ரசனை போன்ர பல காரணிகளை கொண்டு நிர்னயிக்கப்படுகிறது.அதை நாம் எப்படி முட்டாள்தனம் என்று சொல்லமுடியும்? உலக சினிமா பார்க்காதவனெல்லாம் பைத்தியக்காரனா? அல்லது ரஜினிதான் உலகசினிமா பார்க்கிரவன் கையை எல்லாம் பிடித்து தடுத்து கொண்டிருக்கிறாரா என்ன?

Anonymous said...

என்ன நடக்குது இங்க? பிரின்ட் போட்டா ஒரு புக் அளவுக்கு வரும் போலருக்கு.

சன்னாசி said...

//'ஆம்' 'இல்லை' என்று பொத்தாம்பொதுவாக சொல்லும் கேள்வி அல்ல இது.அந்தந்த திரைப்படத்தை பொறுத்தது இது என்றாலும் 'அறிவுசீவிகள் என்ற வகையறா ரசிக்கும் படம் அனைத்தும் கேவலமானவை' என்ற மட்டையடியை நான் முன் வைக்க விரும்பவில்லை.//

உங்கள் பெருந்தன்மைக்கு ஒரு சலாம். சட்டியில் இருப்பதை அகப்பையில் அள்ளிப் போடவேண்டியதுதானே? ரஜினியின் சட்டியில் இருப்பதை எல்லாம் தோண்டி வெளியில் போட்டப்பிறகு, குரோசாவா விட்டோரியா டிசிக்கா சட்டியில் ஏதாவது இருக்கிறதா இல்லையா தெரியவில்லை, நான் தோண்டவும் இல்லை, ஆனால் அந்த சட்டியில் இருப்பதைத்தான் பைசிக்கிள் தீஃப், நைன் நிமுராய் என்று அறிவுசீவிகள் தோண்டிக்கொண்டிருக்கிறார்கள் என்று என்னத்துக்கு மட்டை அடிக்கவேண்டும். பார்த்து விட்டுத்தான் எழுத முடியும். அதை உடனடியாக செய்யும் உத்தேசம் இல்லை. என்கிறீர்கள் - ஆக, இதுவரை பார்த்ததில்லை என்று வைத்துக்கொள்ளலாமா? Loose endedஆக வாக்கியத்தை 'பார்த்து விட்டுத்தான்' என்று விட்டிருப்பதால், சமீபத்தில் பார்க்கவில்லையோ என்றும் விளக்கியிருக்கலாம் ;-). எத்தனை புத்தகத்தைப் படித்தாய் என்பது எவ்வளவு முக்கியமோ, அதைவிட முக்கியம் எத்தனை புத்தகங்களைத் திரும்பப் படித்தாய் என்பது முக்கியம் என்பது போல. ஆக, இதுவரை பார்க்கவில்லை என்று வைத்துக்கொண்டால், இதுவும் நமது தோஸ்து டபடபடபடபடபன்னு கிளைமாக்சுல சுடுவானே இங்கிலீஸ் படத்துல, அதுமாதிரி ஜல்லி தானா? இதைத்தானே முதலில் இருந்து கேட்கிறேன்? பிலிம் நேம்சை விடுமுன் (பிஸ்கோ டிசுக்கோரெல்லி எடுத்த லா விடா ஜிம்பலக்கா என்ற படம் ரேஞ்சில்) பிலிமைப் பார்த்திருக்க வேண்டாமோ? அப்பல்லோ 13 ஐயும் சிட்டிசன் கேனையும் என்கிறீர்கள். அப்பல்லோ 13ம் சிட்டிசன் கேனையும் ஒரே தராசுத் தட்டில் வைப்பீர்களா (ரசனைத் தனித்துவம் என்ற ஜெனரலைஸ்டு ஜல்லி எல்லாம் அப்புறம் இருக்கட்டும், எதை எங்கே வைக்கவேண்டுமென்று வீடியோக்கடைகள் போதிக்கும் பாடத்தைத் தாண்டி அவை இரண்டையும் ஒரே தளத்தில் வைக்கமுடியுமா என்று சொல்லுங்கள் - வேண்டுமானால் அவை இரண்டையும் சேர்த்து விவாதித்துவிடலாம். அப்படிப் பார்த்தால் ஜ்பேஜ் கதைகள் என்று அப்போலோ 13 ஐயும் 2001: A Space Odesseyயையும் சேர்த்தாற்போல் வைப்பீர்கள் போல?) ஆக, செவன் சாமுராயையும் பைசைக்கிள் தீஃபையும் பார்த்த சீவிகள் சீவியது என்ன, அவர்கள் ரஜினி என்ற நடிகரின் படத்தை எப்படிக் குறைசொல்லலாம் என்ற ரீதியில் நீட்டி முழக்கியதற்கு என்ன அடிப்படை உள்ளது? இது மட்டையடியா இல்லையா?

//அன் எதிகலாக இல்லாத ஒரு கலை ஒருவனுக்கு கேவலமாக தெரிய காரணம் மற்றவரின் ரசனையை அவன் மட்டமாக எடைபோடுவதுதான்.இதுபோன்றவர்களை தாண்டித்தான் ஒவ்வொரு கலைஞனும் ஒவ்வொரு கலையும் ஜெயிக்கிறதே அன்றி இவர்களால் அல்ல.//

ஒருவேளை எனக்குத்தான் தமிழ் படிக்கத் தெரியவில்லை போல? சரியாகப் புரிந்துகொள்ளப் பார்க்கிறேன்: ஒருவன் மற்றவனின் ரசனையை மட்டமாக எடைபோடுகிறானாம், அதனால்தான் அன் எதிகலாக இல்லாத கலை அவனுக்கு கேவலமாகத் தெரிகிறதாம். வேறு யாருக்காவது இதில் என்ன சொல்ல வருகிறார் என்பது புரிந்தால் விளக்குங்கள் ஐயா. சரி, நாமதான் புலவர் குழந்தை அளவுக்கு டமில்ல எழுதப்படிக்கத் தெரியாத தற்குறி, ஆங்கிலத்தில மொழிபெயர்த்துப் பார்க்கலாம். One views non unethical art with disgust because he chooses to denigrate the tastes of others - இது சரியாக வருகிறதா நீங்கள் எழுதியுள்ள பொன்மொழிக்கு? இதிலே non unethical art என்று டபுள் நெகடிவ் போட்டதுதான் குழப்பிவிட்டதென்று நினைக்கிறேன்? ரஜினி படங்கள்தான் ethical art என்று சொல்லிவிடலாமே. (ஆமாம், அதுதான் நிசம் விளக்கியதற்கு நன்றி என்று ஒரு கோட் அடித்துவிடுங்கள் அடுத்த பதிலில் ;-)) நிற்க: இங்கே திரைப்படங்களில் ethics எங்கே வந்தது? திரைப்படங்களில் ethical, non ethical என்பவை என்ன என்ன என்பது பற்றி உங்கள் கருத்துக்களைச் சற்றுக் கூற முடியுமா?

//சென்ற பதிலில் நான் கேட்ட அதே கேள்வி: செவன் சாமுராய், பைசைக்கிள் தீஃப் இரண்டு படங்களின் தரம் பற்றி உங்கள் கருத்து என்ன?//

பார்த்து விட்டுத்தான் எழுத முடியும். அதை உடனடியாக செய்யும் உத்தேசம் இல்லை.


சபாஷ். இந்த மாதிரி விஷயத்துக்கெல்லாம் என்னத்தைச் சொல்வது! No comments.

//ரஜினியே முன்னாள் வில்லன் நடிகர்தான். மற்றபடி "வில்லன் நடிகர்" என்றது நகைச்சுவைக்கு என்பது படித்தாலே தெரியுமே?//

தகவலுக்கு நன்றி. நாங்கள் முன்னே பின்னே ரஜினி படம் பார்த்ததில்லை பாருங்கள் ;-). செல்வன், ஏதோ இங்கே யாரும் ரஜினி படங்கள் முன்னைப் பின்னே பார்த்திராத மேனாமினுக்கிகள் என்று நினைத்துக்கொண்டு எதையெதையோ சொல்ல முயல்கிறீர்கள், பேக்கிரவுண்டு கொடுக்கிறீர்கள் ரஜினி கண்டக்டர் சத்யநாராயணா அவரு மேனேஜர் ரஜினிக்கு திருப்பதியில் திருமணம் நடந்தது, மனைவி பெயர் லதா, நடத்தும் பள்ளி பெயர் ஆஷ்ரம் என்று ட்ரிவியாபேட்டையை ஓரமாக வைத்து விட்டுவிட்டு, இங்கே பேசும் விஷயத்தைப்பற்றி விவாதிக்கலாமா? வேண்டுமென்றால் டிஸ்கர் புஸ்கி கிஸ்கர் விஸ்கி படங்களை அலசுவதற்கு பதில் பில்லா ரங்கா படிக்காதவன் பாண்டியன் ஆறிலிருந்து அறுபது வரை ஜானி அண்ணாமலை பாச்சா உருண்டை Bubbaa என்று அலசுவோமா? பொழுது போகவேண்டுமானால் சொல்லுங்கள் - பாச்சா உருண்டை படத்துல தலைவர் அப்படியே வந்து நக்மாவை மண்டபத்துலர்ந்து கூட்டிட்டுப் போவாரே, மயிரெல்லாம் அப்பிடியே நட்டுக்குத்தா நின்னுக்கிச்சு, மாப்பிள்ளை படத்துல புல்லட்டுல கமாண்டோ மாதிரி மூஞ்சில பெயிண்டு அடிச்சிட்டு வந்து அதுரவெப்பாரேங்கிற ரேஞ்சுல பின்னொரு சந்தர்ப்பத்துல பேசுவம். இப்ப விஷயத்துக்கு வரலாமா? பொதுவாக ரஜினி படங்களைக் கிண்டலடிப்பதில்லை, அதுவும் ஒரு வணிகப் படம் என்ற ரீதியில் பெரிதாக ஏதும் சொல்வதுகூட இல்லை நண்பர்களிடையில். இப்போது உங்களது மேம்போக்கான ஜல்லிகளைப் பார்க்கும்போது, சரி அறிவுசீவிகள் சீவிக் கிழிக்கும் படங்கள், குப்பன் சுப்பனுக்கு உதவணும், இதுதான் ஜனங்க விரும்புறாங்க என்ற மாதிரி காலகாலமா தேஞ்சுபோன ரெக்கார்டை திரும்பப் போட்டு ஏதோ இதை விட்டா எதுவுமே இல்லை, நம்ம தலைய நோண்டுனா விட்டுருவமா என்னும் ரீதியில் அறிவுசீவிகளைச் சீவணும்னு பார்க்கிறீங்களே, சரி அப்படி என்னதான் ரஸினி படங்களில இருக்குன்னு நோண்டி நொங்கெடுத்துரலாம். வசூல் ஆறதுதான் வெற்றிக்கும் தரத்துக்கும் ஒரே விஷயம்னா ராஜேஷ்குமார் வீட்டு முன்னாடி சுந்தர ராமசாமி, ஜெயமோகனிலிருந்து எஸ்.ராமகிருஷ்ணனினிலிருந்து பல சாமிகள் வரிசையா நாண்டுகிட்டுத் தொங்கணும். அந்தக்காலத்துல வடுவூர் துரைசாமி அய்யங்கார் வூட்டு முன்னாடியும் தேவன் வூட்டு முன்னாடியும் பலர் தொங்கியிருக்கணும். தேவா வீட்டு முன்னாடி வேணும்னா டி.என்.ஆர், காருகுறிச்சின்னு வித்வான்கள் கல்லறையத் தோண்டி தொங்கவிட்டுரலாம். என்ன சொல்லவருகிறார்களென்று புரிந்துகொள்ள விரும்பாமல் (புரியாமல் அல்ல) வீம்புக்காக ஜல்லி அடிக்கும் உங்களைப்போன்றவர்களுக்கு இயன்றளவு விளக்கம் கொடுக்கப் பார்க்கலாம். பார்க்கலாம், இது எங்கே போகிறதென்று!!

//வேப்பங்குச்சி - டூத்பேஸ்ட்
வில்லுவண்டி - கார்
மண்பாதை - தார்ரோடு
வேட்டி சட்டை - பேண்ட்
ஓலைசுவடி - கணிணி

மீண்டும் எல்லாமே விஞ்ஞான உதாரணமாகவே வருகிறது...ஏன்?:)

பேண்ட்சட்டையை வேண்டுமானால் கலாச்சாரத்தின் ஒரு உதாரணமாக சொல்லலாம். ஆனால் நான் இப்போது பேண்ட் சட்டை போடுவதால் வேட்டி கட்டினவன் எல்லாம் கிறுக்கன் ரசனை கெட்டவன் என்றோ சொல்வது எத்தனை அபத்தம்?பேண்டும் போடுவேன், வேட்டியும் கட்டுவேன்.இரண்டில் இது மோசம் இது உயர்ந்தது என்று சொல்லமாட்டேன்.அப்படி சொல்வதும் அபத்தம்..//

விடிய விடிய ராமாயணங் கேட்டுங்கிற பழமொழிதான் நினைவுக்கு வருது. பேண்ட் சட்டையை வேணும்னா கலாச்சாரம்னு சொல்லலாமா? யம்மா! அப்ப மத்ததெல்லாம் கலாச்சாரம் இல்லையோ? விஞ்ஞான உதாரணமாகவே வருகிறது ஏனா? இன்னும் பேருகளைக் கொட்டி மேனாமினுக்கித்தனம் பண்றேங்கிற ரேஞ்சுல (கீழ வருது பதில்) நினைச்சுக்கிட்டாலும் சரி. Guns, germs and steel படிச்சிருக்கீங்களா அய்யா? பொப் குல்த்துர் பொஸ்தவம்தான் அது - பிரபலமான புஸ்தகந்தான் - ஐரோப்பியக் காலனியாதிக்கவாதிகள் அமெரிக்கப் பூர்வகுடிகளை அழிச்ச மாதிரி அமெரிக்கப் பூர்வகுடிகள் ஐரோப்பியர்களை ஏன் அழிக்கமுடியலை அப்படிங்கிற கண்ணோட்டத்தில் பல தரவுகளை வைத்து சுவாரஸ்யமாக எழுதப்பட்ட புத்தகம். ஏன் அப்படிங்கிறதுதான் கேள்வி. ஐரோப்பியர்களோட இயந்திரங்கள் அப்ப கலாச்சாரம் இல்லையோ, இயந்திரங்கிறது அப்ப வெறும் ஜைன்ஜுக்குள்ள மட்டும்தான் வரும், குல்த்தூருக்குள்ள வராது? எம்.சி.எஷர் வரைஞ்ச படங்கள், penrose triangle, devil's pitchfork எல்லாம் அப்ப கலைவடிவங்கள் கிடையாது? ஓ, ஒருவேளை பேப்பர்ல வரைஞ்சுட்டதால அது வெறும் குல்த்தூர் மட்டுந்தான், ஜைன்ஜுக்குள்ள வராது? ஒருவேளை ஜைன்ஜுன்னா 3Dதான்னு நினைச்சு என்னத்தையும் எகஜ்ட்ராபோலேட்டு பண்றீங்களோ? அப்ப பிரகதீஸ்வரர் கோயில் குல்த்தூரா ஜைன்ஜா? என்னது, ரெண்டுமே இருக்கா? சைன்சு உள்ளே போய் கட்டிடமாச்சு, குல்த்தூர் உள்ளே போய் கோயிலாச்சு, ஜ்பிரிஜ்ஜுவாலிட்டி உள்ளே போய் கடவுள் உறையும் இடமாச்சா? கணினிங்கிறது கலாச்சாரம் இல்லையாமில்ல? ஒரு தனிப்பட்ட கண்டுபிடிப்பு கலாச்சாரக் கூறாவது எப்படின்னு விளக்க வேற செய்யணுமா? இதுமாதிரி வாதத்திலெல்லாம் தூங்கிட்டே தூள் பறத்திருவீங்க போல செல்வன் ;-).

ஏன் விஞ்ஞான உதாரணமாவே வருகிறது? ஏன் இப்படியொரு கேள்வியை என்னால் (செல்வனால்) கேக்கமுடிகிறது என்று யோசித்துப் பார்க்கவும். அறிவியலும் கலாச்சாரமும் mutually exclusive அல்ல என்ற விஷயத்தையெல்லாம் உங்களுக்கு விளக்க வேண்டியளவு அவசியம் இருக்குமென்று நினைக்கவில்லை!! மன்னிக்க.

//கங்கையையும் அமேசனையும் ஆற்றில் ஓடும் நீரின் டி.எம்.சி அளவை வைத்து ஒப்பிட முடியுமா?அதிகமாக தண்ணீர் வருகிறதென்றா கங்கை நம் நாட்டில் புனிதமாக கருதப்படுகிறது?//

அதேதான் விஷயம் - இப்போதாவது புரிந்துகொண்டீர்களே! ரஜினி படம் துட்டு ஏகத்துக்குச் சம்பாதிக்கிறது என்பதால் மட்டும் அதைத் தூக்கி தலையில் வைத்துக் கொண்டாடவேண்டுமா? ரஜினி படம் ஓடினால் என்ன ஓடாவிட்டால் என்ன? பாடாவதி என்றால் பாடாவதிதான். படம் பாடாவதி என்று சொல்வது ரசிகனை கேவலப்படுத்துவது என்ற ரேஞ்சில் அடுத்து வாதிடுவீர்கள். கும்தலக்கா சான் ரசிகர்களை நீங்கள் அறிவுசீவிகள் என்று கிண்டலடிக்கிறீர்களே என்று கேட்டதற்கு இன்னும் பதில் இல்லை? பாக்ஸ் ஆஃபீஸில் பங்கி ஜம்பிங் அடிப்பதெல்லாம் அப்போது பாடாவதிப் படம் உங்க வாதப்படி? சரிதான்.

//தாஜ்மகாலை பார்க்க வந்தால் அவன் அதை ஈஃபிள் டவரை விட உயர்வாக நினைக்கிறான் என்று அர்த்தமா? அல்லது கங்கையில் அவன் குளிப்பதால் அதை அமேசனை விட உயர்வாக அவன் கருதுகிரான் என்று அர்த்தமா? இவற்றை எல்லாம் எப்படி ஒப்பிட முடியும்?கங்கையையும் அமேசனையும் ஆற்றில் ஓடும் நீரின் டி.எம்.சி அளவை வைத்து ஒப்பிட முடியுமா?அதிகமாக தண்ணீர் வருகிறதென்றா கங்கை நம் நாட்டில் புனிதமாக கருதப்படுகிறது?ஈஃபிள் டவரையும் தாஜ்மகாலையும் எதை வைத்து ஒப்பிட்டு 'ஒன்று உசத்தி, ஒன்று தாழ்த்தி?" என்று சொல்லுவீர்கள்? விளக்குங்களேன்.//

சுற்றுலாப் பயணி, என் ஊரில் கிடக்கும் பொட்டிக்கடையில் காராச்சேவு வாங்கித் தின்று பிரித்துக்கொண்டு கிடந்தால் போதும் என்று ஊருக்குள்ளேயே குண்டுச்சட்டியில் குதிரை ஓட்டிக்கொண்டிருக்கிறான்? தன் ஊரை விட்டு எதற்கு மெனக்கெட்டு பிற இடங்களுக்குப் போய்ப் பார்க்கவேண்டும்? இந்தியாவுக்கு வரும் பிறநாட்டவர் என்றல்ல - எங்கிருந்தும், தனது எல்லைகளைத் தாண்டிப் பார்க்க யத்தனிப்பவர்களைப் பற்றிச் சொன்னது அது. பிற விஷயங்களைக் கற்றுக்கொள்ள முனைப்புள்ளவன் என்னதைவிட இது உசத்தி என்னுடையதைவிட இது தாழ்ந்தது என்று முன்முடிவுகளை வைத்துக்கொண்டு எதையும் அணுகுவதில்லை. அடிப்படைவாதிகளுக்கு வேண்டுமானால் அந்தச் சிந்தனையோட்டம் உகந்ததாக இருக்கலாம். அவனுக்குத் தேவையெல்லாம், தனது சுய முன்னேற்றத்துக்கும் தன்னைச் சார்ந்துள்ளவர்களின் முன்னேற்றத்துக்கோ ரசனை விரிவுக்கோ தேவையான வெகு அடிப்படையான விஷயங்கள். புது விஷயங்களை அறிமுகப்படுத்தும்போதெல்லாம் ஊர் மந்தையில் உட்கார்ந்துகொண்டு பஞ்சாயத்துப் பண்ணி, டிஸ்கர் புஸ்கியைப் பார்த்தெல்லாம் என்னத்தைக் கிளிக்கப்போறே, நம்ம லோக்கல் லவங்கத்தை மெல்லு என்று குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டும் பஞ்சாயத்து கோஷ்டிகளுக்கு 'நம்ம லோக்கல் லவங்கம்' மேல் அசலாக அக்கறை இருக்கிறது என்றா நினைக்கிறீர்கள்? கிடையாது, அடிப்படையில், தனக்கு மேல் எவனுக்கும் தெரிந்துவிடக்கூடாது என்ற மறைமுகக் காண்டு தான் - யாரும் இதை ஒத்துக்கொள்ளப் போவதில்லை. தனக்குப் பழக்கமானதைத் தவிர எதையும் ஸ்வீகரித்துக்கொள்ள மனமின்றி இறுகிக் கெட்டித்துப்போன மூளையிலிருந்தும் மனதிலிருந்தும் சுற்றியிருப்பவர்களுக்கு என்ன இழவு கிடைக்குமென்று சொல்லுங்கள் பார்ப்போம்? பாரதி வேற்று மொழிப் பத்திரிகைகளைத் தருவித்துப் படித்தது, எழுத்தாளர்களும் ஓவியர்களும் திரைப்படக் கலைஞர்களும் தொழில்நுட்ப வல்லுனர்களும் தங்கள் எல்லைகளைத் தாண்டிப் பார்ப்பது, தான் சார்ந்த கலாச்சாரத்தை மேம்படுத்தவே. மேம்படுத்துவது தொழில்நுட்ப ரீதியாக மேற்பூச்சின்மேல் இன்னும் முப்பது லேயர் சுண்ணாம்படிப்பது என்ற ரீதியில் இன்றி, அந்தந்தக் கலாச்சாரங்கள் தன்னைத்தானே எப்படிக் கையாளுகின்றன, அவற்றுடன் ஒப்பிடுகையில் நாம் நம்மைக் கையாளும் முறை வேறுபட்டதாக இருக்கிறதா, நம்மை எப்படி மேம்படுத்திக்கொள்ளலாம் என்ற அடிப்படையில்தான் பெரும்பாலும் இருக்கும். சுயமுன்னேற்றம், வல்லரசாகிப் பிடுங்குவது எல்லாம், பூட்டிய அறைக்குள் இருந்துகொண்டு இதுதான் உலகம் என்று சொம்படிப்பவர்களால்தான் நிகழப்போகிறதா என்ன? காட்டமான விமர்சனங்கள் சும்மா குழிபறிப்பதற்காகவா வைக்கப்படுகின்றன? இல்லை பசுபதி மாதிரி அண்ணே நீங்கதான் தல, பின்னிட்டீங்கன்னு ரெக்கார்டு பண்ணி திரும்பத் திரும்பப் போட்டுக் கேட்டுக்கொண்டிருக்கவேண்டுமா? சாதாரண ரசிகன் என்கிறீர்களே, அந்த சாதாரண ரசிகனுக்கு பக்கா escapist மனப்பான்மையைப் போதிப்பது ரஜினி கூட இல்லை, படித்தும் பிடிவாதமாய் நான் பிடித்த முயலுக்கு மூணு கால் என்னும் உங்களைப் போன்ற துவாரபாலகர்கள்தான். ரஜினியைத் தாண்டிய படங்கள் அனைத்தும் (பிஷ்க்கா பிஷ்க்கா இல்லாதது, லோக்கல் குல்த்துரை ஃபிரதிஃபலிக்காதது, பொம்ப்ளேன்னா என்ற திராபைகள் இல்லாதது என்று சொல்லிக்கொண்டே போகலாம்) சும்மா ஜுஜுபி என்று உங்களைப் போன்ற படித்தவர்கள் சொல்லும்போது சாமானியன் இந்த 'பொழுது போனாப் போதும்' குப்பைகளைத் தாண்டி வெளியே வரவா முடியும்? காசு சம்பாதிப்பது என்பதுதான் இருப்பதிலேயே பெரிய வெற்றி, அதற்கடுத்துத்தான் எல்லாம் என்ற ரீதியில் கவிழ்ந்தடித்துக் கிடப்பவர்கள்தான் தூக்கி நிறுத்தப் போகிறார்களா நமது திரைப்படங்களை? ஒரு odd curiosity என்ற கட்டம் கடந்து போனதும், இதேபோல பிஷ்க்கா பிஷ்க்கா படங்கள் அடுத்து இருபது வருடங்களுக்கு வந்துகொண்டிருந்தால் மூட்டையைச் சுருட்டிக்கொண்டு போகவேண்டியதுதான். ஆங்கில மொழிமாற்றப் படங்களை யாரும் பார்த்து ரசிப்பதில்லை என்றெல்லாம் அடுத்து hypotheticalஆக ஆரம்பித்து விடாதீர்கள் - சிறு நகரங்கள் வரை அவை ஊடுருவத் தொடங்கியபின், தமிழிலும் அதே செய்நேர்த்தியுடன் படங்கள் வரத் தொடங்கவில்லையென்றால் கடைசியில் கோவிந்தா தான். டிஸ்கர் புஸ்கி படங்களில் என்ன இருக்கிறது என்று மொட்டை ஜல்லி அடித்துக்கொண்டிருந்தால் புஸ்கி சானின் மாங்கா காமிக்ஸும் அனிமேஷனும் நாளைக்கு நம் மேல் இன்றிருப்பதைவிட அதீத வீச்சுடன் கவியும்போது விரலைச் சப்பிக்கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கவேண்டியதுதான். வேண்டுமானால், பாபா சொன்னமாதிரி ஜப்பான்காரன் கொண்டுவரும் டெக்னாலஜிக்கு ஒரு டெமோ படம், ஜெர்மானியன் கொண்டு வரும் டெக்னாலஜிக்கு டெமோ காட்ட இன்னொரு படம் என்று வரிசையாக எடுத்துத் தள்ளிக்கொண்டிருக்கலாம் - பன்றி ஒரு பிரசவத்துக்கு வதவதவென்று குட்டிகள் போடுமென்றாலும், ஏன் பிரசவிக்கிறோம் எதற்குப் பிரசவிக்கிறோமென்று தெரியாமல் இருநூறு குட்டிகளை ஒரேயடியாகப் பிதுக்கித் தள்ளுவது மாதிரி.

//மண்ணின் மணத்தையும், இனத்தின் பெருமையையும், மொழியின் சிறப்பையும் பிரித்தால் அந்த கலையில் உயிர் போய் செத்த பிணமாக அல்லவா ஆகிவிடும்? திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தால் தமிழில் படிப்பதை போன்றே சுவையாகவா அது இருக்கிறது? கம்பனையும், இளங்கோவையும், வள்ளுவனையும் தமிழில் நுகர்வதும் ஸ்பானிஷில் நுகர்வதும் ஒன்றா? அல்லது இந்த மண்ணின் கலாச்சாரத்தை புறக்கணித்துவிட்டு அவர்களின் படைப்பை நுகர நினைப்பது தான் சாத்தியமா?//

வேறிடத்திலும் சொல்லியிருக்கலாம்: assimilation என்பதற்கும் unconditional surrender என்பதற்கும் வித்தியாசம் தெரியாத தற்குறிகள் எங்கே போனாலும் இருக்கத்தான் செய்யும். கலை என்பது ஏதோ வானத்திலிருந்து பொத்துக்கொண்டு வந்து கீழே விழுந்தது, விழுந்தபின் இந்த இந்த ஏரியாவைத் தாண்டிப் போய்விட்டால் நம்மளை நான்-கலை என்றுவிடுவார்கள் என்று உள்ளுக்குள்ளேயே ஒயிலாட்டம் ஆடுவது மாதிரி ஆடிக்கொண்டிருக்கிறது என்ற ரீதியிலான உங்கள் புரிதலுக்கு இந்தப் பதிலில் முன்பே கொஞ்சம் சொல்லியிருந்தேன் என்று நினைக்கிறேன். திருக்குறளின் காலம் என்ன? திருவள்ளுவர் உலகத்தைச் சுற்றிப் பர்க்கக் கிளம்புகிறேன் என்று நினைத்திருந்தால் எவ்வளவு தூரம் போயிருக்க முடியும்? சமகாலப் படைப்பு மனத்தின் பிரக்ஞையை கம்பன் வள்ளுவன் கபிலன் என்ற சட்டகத்துள் பொருத்திப் பார்த்து அதேபோல இருக்கவேண்டும்/முடியாதா என்ற உபயோகமற்ற nostalgiaவில் ஆழ்வதுபோன்ற அபத்தம் வேறு எதுவும் இருக்கமுடியாது. பிரதேசங்கள்/கலாச்சாரங்கள் நமது ஈகோ மியூசியத்தில் வைக்கப்படுவதற்கு வாகாக நமக்கு விருப்பமான காலகட்டங்களில் உறைவித்துக்கொள்ளத்தக்கத் தோதான ஐஸ்புரூட்கள் இல்லை - அதன் போக்கை அனுமானிப்பதும், அதன் போக்கில் தன்னை இணைத்துக்கொள்வதும், அதனை அலசுவதும், அதனிலிருந்து விலகிநின்று நோக்கி ஆவணப்படுத்துவதுமே மனிதகுலம் செய்துவந்திருப்பது - வாய்வழிக் கதைகள் மூலம், எழுத்துக்கள் ஓவியங்கள் இசை இன்னபிற கலைகள் மூலம். அந்தக் காலத்திலிருந்து இப்போது வரை நிகழ்ந்துவந்திருப்பதும் இதுவேதான். மரபை நிராகரிக்காமல், அதனைக் குறுக்காமல் மேலும் விரித்து அடுத்த தலைமுறைக்குக் கடத்துதல் குறித்துத்தான் இங்கே பேசுவது, நீங்கள் ஒப்புக்கொள்ள விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அதுதான் நிகழ்ந்து வந்திருக்கிறது. மரபு வழிவந்த படைப்பாளிகளையும் ரஜினி மாதிரி ஒரு திருவுருவாகப் பார்த்து விதந்தோதிக் கிடப்பதே சுகம் என்று கிடப்பவர்களால் யாருக்கும் எந்த உபயோகமும் இல்லை - தனக்குக் கொடுக்கப்பட்டதையே கிளிப்பிள்ளை மாதிரித் திரும்பத் திரும்பச் சொல்லும் இவர்களை சமகாலத்தில் ஒரு டேப்ரிக்கார்டர் வெகு எளிதில் இடம்பெயர்த்துவிடும். மொழிபெயர்ப்பு என்பதே transcreation என்ற கருத்தாக்கங்களை என்னளவில் எளிதில் ஒப்புக்கொள்ள முடிகிறது; இந்தப் பின்னணியில் உங்களுக்கு இன்னும் வேறேதாவது தோன்றுமே? சொல்லுங்கள், மேலும் விளக்கலாம்.

//ஐவரி டவரில் ஏறி நின்று கீழே இருக்கும் உலகை பார்த்தால் அது கேவலமாகத்தான் தெரியும். அது நாம் கடந்துவந்த உலகமாக இருந்தாலும் கூட.கீழே இருக்கும் உலகை கீழே இருப்பவன் ரசிக்கும் விதம் வேறு..டவரில் நிற்பவன் அணுகும் முறை வேறு.இருவரின் ரசனையும் வேறுபட்டிருக்கிறது என்பதைத்தவிர இதில் கேவலம், ஆபாசம் என்று எங்கே இருக்கிறது?மூன்று ரூபாய் கொடுத்து காப்பிகடையில் சிங்கிள் டீ குடிக்கிறவன் "சூப்பர் டேஸ்ட்" என்று பாராட்டிவிட்டு போவான். ஸ்டார்பக்ஸில் 3 டாலருக்கு காபி குடிக்கிறவன் டீக்கடை காபி என்றாலே கேவலம் என்பான். இதில் எவன் ரசனை உயர்ந்தது? எவன் ரசனை கேவலமானது? இவனை விட அவன் எப்படி உயர்ந்த ரசனை கொண்டவனாகிறான்? ரோட்டோரா டீக்கடையில் டீ குடிக்கிறவனுக்கு ஸ்டார்பக்ஸ் காப்பி மோச்சா பிடிக்கவில்லை என்றால் அவன் ரசனை கெட்டவனாகி விடுவானா? அல்லது காப்பி மோச்சாதான் மோசம் என்றாகிவிடுமா? இதில் தனிப்பட்ட விருப்பு வெறுப்பை தாண்டி வேறு என்ன கேவலம் இருக்கிரது என்பதுதான் புரியவில்லை.//

ஐவரி டவர் ஐசரிவேலன்னு பி.வாசு பட செண்டிமெண்டெல்லாம் இங்கே எதற்கு? யார் இப்போது தந்தக் கோபுரத்தில் ஏறி நின்று கீழே இருக்கும் உலகத்தைப் பார்க்கிறார்கள்? நானா? இந்த வாதமெல்லாம் அங்கே சுத்தி இங்கே சுத்தி இங்கேதானே வந்து நின்றாகவேண்டும் - ஏ பாப்பம்மா சுப்பம்மா குப்பம்மா எல்லாரும் ஓடியாங்கடி என்னா பேச்சு பேஸிட்டார் இவுரு அப்படின்னு? நடக்கட்டும். தந்தக் கோபுரத்தில் உட்கார்ந்துகொண்டுதானே சற்றுக்கூட அரசியல் முதிர்ச்சியோ பொது அறிவோ கூட இல்லாமல் பொதுத் தொலைக்காட்சியில் ஓட்டுப் போட காசு கொடுத்தா வாங்கிக்கோங்க என்று சொன்னது ரஜினிகாந்த் என்ற மேதாவிதானே? ஒருவேளை கோபுரத்தில் இருக்கும் தந்தம் தலைக்குள் என்னத்தையாவது பாய்ந்துவிட்டிருக்குமோ? இந்த டீக்கடை ஸ்டார்பக்ஸ் மூச்சா (மோக்கா ஐயா அது - சொல்லிட்டேன், அடுத்து ஒரு ரவுண்டு கட்டி அடிங்க, புரநவுஞ்சியேஜன் அட்டாக் பண்றாய்ங்கேன்னு) கதை மூலமா என்ன சொல்ல வர்றீங்க? ரோட்டோர டீக்கடையில டீ குடிக்கிறவன் ஸ்டார்பக்ஸ் காப்பியே குடிக்காம, அதில என்னய்யா பினாயில் வாசனை வருது அப்படின்னு பிலிம் காட்டுறதைத்தான இங்கே கேட்பது? இந்த உவமான உவமேயமெல்லாம் நானும் அள்ளிப் போடலாம் - ரூவாய்க்கு நாலு கிலோவுக்கு இவ்வளவுங்கிற மாதிரி - அடுத்தடுத்த பின்னூட்டங்கள்ள அதையும் பார்க்கலாம்.

அப்புறம் இந்த தந்தக் கோபுரம். சற்று அதையும் விளக்கவும். என்னைச் சொல்கிறீர்கள் என்றால், ரஜினி படங்கள் பல, சமீபத்திய ஜிவாஜி வரை பார்த்தாயிற்று - பிறகு என்னத்தை தந்தக் கோபுரம்? டூரிங்கு குட்டாயி பார்த்ததில்லையா நாமல்லாம், இல்லை, காலுக்கடியில சொய்ங்கின்னு தண்ணி போவுதே பாட்டில் கவுந்துருச்சா ஏதாச்சும்னு பார்த்தா பின்னால, புள்ளையை பாத்ரூமுக்குக் கூட்டிட்டுப் போனா பட சீன் போயிருமேன்னு அங்கேயே மூத்திரமடிக்கவச்சிருந்த தாய்க்குலங்களோட படம் பார்த்ததில்லியா? இந்த மாதிரி தந்த கோபுரம் சுந்து வீசுன சாமரமுன்னு 'இப்படித்தான் என்ர தாத்தனோட சினிமா போனப்ப என்ன நடந்ததுன்னா அப்படியே அவர் வேஷ்டி நுனி வந்து என் முகத்துல தடவிருச்சி'ங்கிற ரீதியில சொல்ல வந்த விஷயத்தை ஒரு டன் சில்வர் பேப்பருக்குள்ள போட்டு ஸ்வீட் விக்கிற யாவாரிங்க மாதிரி விக்க வச்சுராதீங்க, நிறைய தண்ணி குடிக்கவேண்டியிருக்கும்.

//முன்னாள் கண்டக்டர் என்றது ரஜினியின் பின்புலத்தை விளக்க. நீங்கள் ரஹ்மான் காப்பி அடித்ததாக சொல்லும் மெட்டை எல்லாம் கண்டுபிடித்து, சீன் பை சீனாக ஒரு படத்தை உலகப்புகழ் பெற்ற படங்களுடன் ஒப்பிட்டு ஆராயும் திறன் ரஜினிக்கு இல்லாமல் இருக்க அவரது சாதாரண பின்புலமும் ஒரு காரணமாக இருக்கலாம் என்பதை உணர்த்த....சாதாரன மனிதன ஒருவன் சூப்பர் ஸ்டாராக ஜொலிப்பதென்ரால் அது திரமை இல்லாமல் சும்மா வரவில்லை என்பதி சொல்ல...உலகெங்கும் ஏன் கொண்டாடப்படுகிரது என்பதை அறியாதவரா நீங்கள்? நம் கண்முன்னே அப்படி ஒரு உதாரனம் நிற்கிரது.நம்முள் ஒருவன் எந்த தமிழ் கலைஞனும் தொட முடியாத உயரத்தை எட்டியிருக்கிறான் சாதித்திருக்கிறான் என்பதால் அவன் பாராட்டப் பட வேண்டியவனாகிறான் என்பதை குறிக்க....//

ரஜினியின் பின்புலத்தை விளக்குறது இருக்கட்டும். பத்த வச்சிட்டியே பரட்டைன்னு பாரதிராசா பதினாறு வயதினிலேவை NFDCக்குத்தான் அனுப்புனாரு, பாவிப்பயலுக ரிஜெக்டு பண்ணிப்புட்டானுக, பிறகுதான் எஸ்.ஏ.ராஜ்கண்ணு வந்து புறட்டுயூஸ் பண்ணாரு, பத்த வஸ்ஸுட்டயே பறட்டை வந்தாரு, புட்டண்ணா கனகல்ல இருந்து பாரதிராஜாவுல ஆரம்பிச்ச வரிசை எங்கெங்கேயோ போறதை வுட்டுப்புட்டு மணிவண்ணன் பாக்கியராசு பாண்டியராசன் பார்த்திபன் விக்ரமன்னு தொடங்கி, 'மரத்துல இருந்து பூ உதுந்தா ........................ (ஒரு கேப்புங்க) ...................................... அத மறுபடி ஒட்டவக்க முடியுமா'ங்கிற மாதிரி வந்துடுஸ்ஸே அய்யா அப்படின்னு லைனப்புகளைப் போட்டுருவமா? பாரதி-வாசுன்னு பன்னீர் புஷ்பங்களை எடுத்த பி.வாசு பின்னாடி வந்து நாகிரெட்டி கோல்டு காயின் அபிசேகம் பண்ணி எடுத்த உழைப்பாளின்னு எடுத்தாரேன்னு பின்புலத்தைக் காட்டணுமா? சாதாரண மனிதன் சூப்பர் ஸ்டாராக ஜொலிப்பதென்றால் அது திறமை இல்லாமல் வருவதில்லை என்ற வாதம் எவனுக்கும் பொருந்தும் - முந்தைய பதில்களில் நான் சொன்ன ரான் ஜெரிமிக்குக் கூட - அவரும் கடின உழைப்பாளிதான் ;-). Porn தொழிலில் அப்படி ஒரு தகரடப்பா முகத்தையும் மூஞ்சூறு மீசையையும் வைத்துக்கொண்டு (எல்லாம் ஒரு செல்லத்துக்குத்தான், உடனே இப்பிடி ஜெரிமியைப் போட்டுக் குத்தலாமா என்று ஆரம்பித்துவிடவேண்டாம் ;-)) இவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார் ஆவதற்கும் ஒரு திறமை இருந்திருக்கவேண்Dஉம் இல்லையா? எந்த தமிழ் கலைஞனும் தொடமுடியாத உயரத்தை நம்முள் ஒருவன் தொட்டிருக்கிறான் என்று ரஜினி ரசிகன் பத்திரிகையில் எழுதவேண்டியதை இங்கே எழுதுவது உங்கள் உரிமை. சீன் பை சீனாக ஒரு சாதாரண சினிமா ரசிகன் ஆராய முடியும்போது, அதையே தொழிலாக வைத்திருப்பவனிடம் செய்நேர்த்தி இருக்கவேண்டாம்? அதுதானே தொழில், சொந்தமாகச் செய்து தொலைத்தால் என்ன? ஆராய்ச்சி செய்பவர்கள் எழுதும் ஆராய்ச்சிக்கட்டுரைகளில் அங்கே கொஞ்சம் இங்கே கொஞ்சம் என்று உருவிப் போட்டால் பிளேஜியரிஸம் என்று ரிவிட் அடித்துவிடமாட்டார்கள்? வெட்கமில்லாமல் உருவுவதற்கு வக்காலத்து வாங்கிக்கொண்டு அப்படி இப்படித்தான் இருக்கும் கொஞ்சம் அஜிஸ் பண்ணிக்கொண்டு போகவேண்டும், ரஜினிக்கு சாதாரணப் பின்புலம் என்று ஒரு இன்னொரு செண்டிமெண்டைப் போட்டுச் சொல்லிக்கொண்டு, உலகத்தைப் பொளந்துட்டார் என்று சொல்கிறீர்கள். மீடியாவுக்கு, நாய் மனிதனைக் கடித்தது என்பது செய்தி அல்ல, மனிதன் நாயைக் கடித்தான் என்பதுதான் செய்தி என்று புரியாத அளவு அப்பாவிகள் இன்னும் உலகத்தில் இருக்கிறார்களே!!

//சந்தையை பிடிப்பதும் கலையை ஒப்பிடுவதும் வேறு வேறு விஷயம்.

"சினிமா வந்து கரகாட்டத்தின் சந்தையை பிடித்துவிட்டது. அதனால் கரகாட்டத்தை விட சினிமாதான் பெட்டர்" - இப்படி ஒரு ஒப்பிடு தவறில்லையா என்ன?//

நீங்கள் சொன்ன ராம்போவின் முதல் பாகம் First Blood, போரிலிருந்து திரும்ப வரும் அமெரிக்க வீரர்கள் உள்ளூரில் எப்படி மூலைக்குத் தள்ளப்படுக்கிறார்கள் என்பதைச் சொன்ன ஒரு sleeper hit. இந்திய மக்கள் அதிலும் ராம்போவிலும் என்னத்தைப் பார்த்தார்கள்? ராம்போ கத்தி, அம்பில் விடும் குண்டு, கையைக் கிழித்துத் தையல் போடுவதை க்ளோசப்பில் காட்டுவது, ஹெலிகாப்டர் சண்டைகள் (தூங்குவதுபோலத் தூங்கி பின் ஹெலிகாப்டரைக் குண்டு குருமா போடுவதை டாக்குட்டர் ராஜசேகர், மோகன்லாலின் 'மூணாம் முற' வைத் தழுவி தன் பார்யாள் ஜீவிதாவுடன் எடுத்த 'மீசைக்காரன்' (தமிழ் டப்பிங் பேர் இப்பிடித்தான் இருக்கும்) படத்தில் ஸுட்டுட்டெர் அப்படின்னு இன்னுமொரு பொப்யுலர் குல்த்துர் பிட்டு போடவா செல்வன்?) என்பதைத்தானே ரஸித்தார்கள்? இல்லை இந்தியா ஏதாவது வியட்நாம் போருக்குப் போய் இந்திய ராணுவ வீரர்கள் திரும்பி வந்ததை ராம்போ எடுத்திருந்ததா? இதுபோன்ற படங்களோ, Jacob's ladder போன்ற படங்களோ, Full metal jacket போன்ற ராணுவம் சம்பந்தப்பட்ட படங்களோ ஏன் எடுக்கப்படுவதில்லை? ராணுவத்தில் வேலை பார்ப்பவனின் புழுக்கத்தைப் படத்தில் எடுக்கக்கூடாது, ஆனால் நம்ம ஸ்க்ரூட் அப்பு லோஜிக் படி ராணுவத்தான் போட்டுப் பார்க்க ஒலகத்தைப் பொளக்கும் ஜிவாஜி போன்ற படங்களை அனுப்பிட்டா போதும். ரஜினி எடுத்தா, ஊருக்குத் திரும்பி வர்ற ராணுவ வீறன் அப்படின்னு படம் எடுப்பாரு - ரோலை மட்டும் மாத்திட்டா, ஊருக்குத் திரும்பி வர்ற போஸ்ட்மாஸ்டர், பால் யாவாரி, பருப்பு யாவாரின்னு எந்த லேபிளை வேணுமின்னாலும் போட்டுக்கலாம், மித்த எல்லாம் அதே குட்டையில ஊறின மட்டைதான் - ஒரு ஹீரோயின், ரெண்டு வில்லன் அஞ்சு பாட்டு ஆறு பைட்டு தொறந்து காட்டும் சூப்பர் சைட்டு பதினார் ரீலு போயிப் பாரு (மகுடேசுட்ரன் கவுஜங்கோ, நான் ஸொன்னேன்னு அடிச்சுராதீங்க) அப்படிங்கிற ரேஞ்சுல உக்காரவச்சு ராவுறதைத் தவிர வேற என்னத்தை இருக்கு ஸொல்லுங்க. பால் யாவாரின்னா ஸைக்கிள்ள போவாரு, ஆட்டோக்காரர்னா ஆட்டோ ஓட்டுவாரு, மித்தபடி டெம்ப்ளேட்டுல மாத்தம் எதுவும் தெரியலிங்களே? ஆம்பூர் வாணியம்பாடி தோல் பெல்ட்டுல ஆத்துத்தண்ணி குடிச்சா, ஏன் சிலசமயம் போர் போட்டு எடுத்த தண்ணியைக் குடிச்சாக்கூட ரத்தங்கக்கித்தான் சாவணும் - தமிழ் கலாச்சாரத்தில அதையெல்லாம் படமா எடுத்துப் புடுங்குவாங்களா? கிடையாது. எரின் ப்ராக்கோவிச்சுன்னு ஜூலியா ராபர்ட்ஸைப் போட்டு எடுத்தா, அடடே நொள்ள ஐடியாவா இருக்கே, ஏல ரங்கா, எந்த ஈரோயினுக்கு 34 டபுள் டி சைசு இருக்குன்னு பாருய்யா, ஒரு சூப்பர் அய்டியா இருக்கு படமாக்கிரலாம்னு வந்துடுவாய்ங்க. அப்படி ராவினாலும் - அதுக்கும், நாம இன்னும் முன்னேறல, மூளையில ஒரு ஓரசமா கருகிக் கிடக்கு, இவ்வளவுதான் நொம்மளால முடியும் குத்துமதிப்பா கும்தலக்கா போடுறதுக்கு கைதட்டிட்டுப் போயிட்டே இருக்கணும்னு ஒரு கவைக்குதவாத வக்காலத்து வரும். இதையெல்லாம் படமா எடுக்க அம்பது கோடியா தேவை? இதுல நம்ம கலாச்சாரத்தை ரஜினி படங்கள்தான் தூக்கிட்டுப் போய் ஸ்ட்ராட்டோஸ்ஃபியருல லொஞ்ச்சு பண்ணுதாம். இதுல ஒரு கோட் அடிங்க செல்வன், அடுத்த பின்னூட்டத்துல இன்னும் புடிச்சு ராவலாம். அப்படி படங்கள் வரணுங்கிற அளவு (இதெல்லாம் ஹாலிவுட்டின் பக்கா கமர்ஷியல் படங்கள் - இதையே இன்னும் ராவக்காணோம், அதுக்குள்ள டிஸ்கர் புஸ்கியைக் குறைசொல்ற அளவுக்கு வந்துட்டாங்கப்பா. அறிவுசீவிகளின் தல கும்தலக்கா சான் சிலைய வீட்டுக்கு வெளிய நட்டு வச்சு தினமும் பீர் அபிஷேகம் பண்ணிட்டிருக்கோம் நாங்க ரஸிகக் குஞ்சுங்க, விட்டுருவோமா?) வாய்ப்பு இல்லையா? ஒரு மண்ணும் கிடையாது. ரஸிகர்கள் அதையெல்லாம் விறும்பலைன்னு தயாறிப்பாளற்கள் சொல்லுவாங்க, இங்கே ஒரு மூளை மழுங்கின கும்பல், எவன் செத்தா எனக்கென்ன, என் கலாச்சாரத்துக்குள்ள வேறென்ன பிரச்னை இருந்தா என்ன, தீப்பெட்டி ஒட்டியும் பட்டாசு ஃபாக்டரியிலும் எது செத்தா என்ன, படம் விறுவிறுப்பா இருக்கணும், நாலு பைட்டும் குத்துப்பாட்டும் இருக்கணும், சும்மா சீரியஸ் விசயத்தையெல்லாம் பேசக்குடாது, தியேட்டருக்கு கும்தலக்கா குருமா போடுறதுக்கு மட்டுந்தான் போவம் அப்படின்னு பாண்டுரங்கா பண்டரிநாதான்னு பஜனை பண்ணிட்டிருந்தா என்னத்தை விளங்கும்.

இது பத்தாதுன்னு, அப்புறம் இந்த சந்தை, கலை விசயம். நீங்கதானே சொன்னது ஜேம்ஸ்பாண்டுவும் ராம்போவும் வந்து நம்ம ஸந்தையைப் பிடிச்சாங்க என்று? சந்தையைப் பிடிப்பதும் கலாச்சாரமும் வேறு என்றால் அப்போ ரஜினி படம் எங்க நிக்குது? சந்தையப் பிடிச்சிருச்சாம், அப்ப ரஜினி படத்துல கலாச்சாரம் இருக்கா இல்லையா? இல்லை உங்க ஸ்டைல்ல கல்லா நிரம்பினாப் போதும்னு சொல்ற கல்லாசாரம்தான் ரஜினி படம் சொல்ற கலாச்சாரமா? இல்லை கலாச்சாரத்துக்கெல்லாம் அப்பாற்பட்ட திரிசங்கா நம்ம தல? ஷங்கர்ங்கிற சிவசிவாமித்திரரு ஜெய் ஜக்கம்மா அப்படின்னு ஜிவாஜிங்கிர ஒரு சொர்க்கத்தை லாஞ்ச் பண்ணி கன்வென்ஷனல் நார்ம் கருமத்தையெல்லாம் டுமீல் பண்ணிட்டாரா? உங்க கலை குறித்தான கற்பிதங்களை உங்க பின்னூட்டங்களில கீரை ஆயற மாதிரி ஆஞ்சி தீர்த்தப்புறம், ஏதாவது உருப்படியா இருந்தா மட்டும் சொல்றது, இந்த கம்பேர் அண்டு காண்ட்ராஸ்ட் கவர்டு இன் செண்டிமெண்ட்ங்கிற மாதிரி உங்க தத்துவச் சிதறல்கள் ஏதாவது வந்தா சும்மா ஜாலிலோ ஜிம்கானா பாடிட்டுப் போயிடறதுன்னு தற்போதைக்கு முடிவெடுத்திருக்கு. தப்பா நினைச்சுக்காதீங்க. நிஜமாவே விளக்கம் வேணும்னா சொல்லுங்க, கரகாட்டக்காரன்ல வயலுக்குள்ள நம்பர் டூ போன செந்தில் 'அண்ணே, ஆனது ஆச்சு இன்னொரு அஞ்சு நிமிசம்'ங்கிற ரேஞ்சில இன்னும் கொஞ்சம் இழுத்து வச்சு, கமண்டலத்து வாயை அடைச்ச சுக்கிராச்சாரி வண்டைக் குத்தி பஞ்சர் பண்ணின மாதிரி என்னத்தையாவது பண்ணினாலாவது அடைச்சுட்டிருக்கிற கமண்டலம் திறந்து என்னத்தையாவது வெளிய வருதான்னு பார்க்கலாம் ;-).

//ரஜினிபடம் ஆரம்பத்தில் இருந்தேவா இந்த நிலையில் இருந்தது?ஆரம்பகட்டங்களில் சேது மாதிரி ரஜினிபடமும் கஷ்டப்பட்டுத்தான் ரிலிசாயிகியிருக்கும். ரஜினியும் ஒரு கட்டத்தில் சோற்றுக்கில்லாம வாய்ப்ப ுவருமா என தெரியாமல் போராடித்தான் இந்த நிலையை அடைந்தார்.இப்போது அவருக்கு கிடைத்திருக்கும் அங்கீகாரம் நெருப்பாற்றில் நீந்தி அடையப்பட்ட வெற்றி.கந்துவட்டிக்கு கடன்வாங்கி படமெடுக்கும் சூழலில் இருந்து பேரை சொன்னாலே பணம் கொட்டும் சூழலுக்கு அவரது படங்கள் வந்தது அவரது உழைப்பால்..//

தற்போது பேசிக்கொண்டிருப்பது சிவாஜியைப் பற்றி. கந்துவட்டிக்குப் படம் எடுத்து நிலக்கடலை விவசாயி மாதிரி ஏ.வி.எம் நாண்டுக்கிட்டுத் தொங்கும் என்று காட்டிய ஃபிலிமைத்தான் கேட்டது. அது அன்னிக்கு இது இன்னிக்கு என்று ரஜினி டயலாக் தானா இதுக்கு?

//படம் பிடிக்கவில்லை என்று குறை சொன்னால் பரவாயில்லை.கோடிகளில் புரளும் ஹாலிவுட்டுடனும், 2 லட்சம் செலவில் எடுக்கப்படும் லோக்கல் தூர்தர்ஷன் படங்களுடனும் ஒப்பிட்டு நன்றாக இல்லை என்பதைத்தான் மறுக்க வேண்டியிருக்கிறது.இவை மூன்றும் இயங்கும் தளங்கள் வேறு வேறு.//

2 லட்சத்தில் எடுக்கப்படுவதெல்லாம் படம் இல்லையா அப்போது? இந்தமாதிரி மொண்ணைத்தனமான வாதத்தைத்தான் முதலிலிருந்தே குறிப்பிட்டு வந்திருக்கிறேன். கோடியில் எடுத்த படமும் கேவலமாக இருக்கக்கூடும், 10 லட்சத்தில் எடுத்த படமும் அற்புதமாக இருக்கக்கூடும் என்ற சாதாரண சாத்தியப்பாட்டைக்கூட நிராகரித்து, அதையும் இதையும் ஒப்பிடுவது தவறு என்கிறீர்கள்? நல்ல படங்கள் மோசமான படங்கள் என்பவை ரசனை அடிப்படையில் அமைபவை - செலவுக்கணக்கெல்லாம் ஒரு ரசனை அளவுகோலா? அப்போது 10 கோடிக்கு மேல் செலவழித்து எடுக்கப்படும் எந்தப் படமும் உங்களுக்குப் பிடிக்காமல் போகாதா? இவை மூன்றும் இயங்கும் தளங்கள் (இந்த தளங்கள் என்பது மிக சுவாரஸ்யமான வார்த்தை, பிரம்மாண்டம் என்பதையும், ப்ரம்மாண்டம் என்பதையும் ப்ரும்மாண்டம் என்பதையும் ஸ்கேலுக்கு ஏற்றவாறு நாஸூக்காகப் பிரயோகிப்பது போல) வேறு வேறா? அப்படி என்னதான் தளங்கள் வேறு வேறு. பாபா கோட் பண்ணியிருந்த கேகே சொல்லியிருந்தாரே, அவருக்கு ஆல் தி ஸேம்னு - அது ஒருவேளை தப்பா இருக்குமோ? ஒண்ணேமுக்காலுக்கு தூர்தர்ஷனில் போடும் பாடாவதிப் படம் என்ற மொட்டைப் புரிதல் உங்களுக்கு இருக்கையில் அதே தூர்தர்ஷணின் பாடாவதிகளில்தான் ஷத்ரஞ் சே கிலாரி போன்ற படங்களையும் நான் பார்த்திருக்கிறேன். உங்கள் கதவுகளை மூடிக்கொள்வது மட்டுமின்றி, உங்கள் தெருவிலிருக்கும் அனைவரின் கதவுகளையும் ஓடி ஓடி மூடுகிறீர்கள் - இதைத் தாண்டியும் ஒரு உலகம் இருக்கிறது என்று கதவைத் திறக்க முயற்சிப்பவர்களை சீவி சீவுறான் டிஸ்கர் புஸ்கி பேரைச் சொல்லி ஃபில்லும் காட்டுறான் என்று என்னென்னத்தையோ சொல்லி வைக்கிறீர்கள். நீங்கள் சொல்வதை நீங்களாவது நம்பினால் சரி. படம் பிடிக்கவில்லை என்று யெஸ் ஆர் நோ சொல்லிவிட்டுப் போனால் போதுமாக்கும் அப்போது? ஏன் எதற்கு எப்படி என்று கேள்விகேட்கும் பாரம்பரியத்தில் வந்தவர்கள் அல்லவே நாம்? போட்டதைத் தின்னுட்டு பொத்திட்டுப் படுத்துக்கோ ஸ்கூல் ஆஃப் ஃபிலாஸஃபி இல்ல நம்மளுது.

//ஒருவனது உலகம் என்ன என்பதை அவன் தான் முடிவு செய்யமுடியும். ஒருவனது உலகில் இடம்பெறும் பொருட்கள் அவனது நேரம், காலம், வேலை, விருப்பு வெருப்பு ரசனை போன்ர பல காரணிகளை கொண்டு நிர்னயிக்கப்படுகிறது.அதை நாம் எப்படி முட்டாள்தனம் என்று சொல்லமுடியும்? உலக சினிமா பார்க்காதவனெல்லாம் பைத்தியக்காரனா? அல்லது ரஜினிதான் உலகசினிமா பார்க்ன் கையை எல்லாம் பிடித்து தடுத்து கொண்டிருக்கிறாரா என்ன?//

ஒருவனது உலகம் அவனது ரசனைகளால் கட்டமைக்கப்பட்டிருப்பதில் எந்தத் தவறும் இல்லை; அதை நான் முட்டாள்தனம் எனவில்லை. இதுதான் தனது ரசனையின் எல்லை, இதற்கு மேல் எதுவும் கிடையாது என்று எண்ணுவது முட்டாள்தனம். தனது ரசனைதான் உலகத்து ரசனையின் எல்லை என்று எண்ணுவது முட்டாள்தனம். எத்தனையோ முறை இதற்கு முன்பு சொன்னது போல, ரஜினி படத்தைப் பார்த்துவிட்டு அதைக் கிழித்துத் தொங்கவிடுகிறார்கள். அதேபோல, டிஸ்கர் புஸ்கி படத்தைப் பார்த்துவிட்டு, அது குறித்தான விமர்சனத்தை வைப்பது நேர்மையான அணுகுமுறை. சும்மா மேம்போக்காக கும்தலக்கா சான் படங்களைப் பார்த்தால் சீவியா கூவியா என்று கேட்டால், எழுப்பப்படும் கேள்விகளுக்குப் பதில் சொல்லித்தான் ஆகவேண்டும்.

உலகசினிமா பார்க்காதவனெல்லாம் பைத்தியக்காரன் அல்ல. அதைப் பார்க்காமலே, அதில் ஒரு இழவும் இல்லை என்று சொல்பவனை வேண்டுமானால் பைத்தியக்காரன் எனலாம் - இன்னும் சற்று விலாவாரியாகப் பார்த்தால், அசலில் he/she is not mad, he/she is just a retard, sadly. There's only so much he/she can churn out. வெறுங் கையால் முழம் போடும் இவர்களால் யாருக்கும் எந்த விதத்திலும் உபயோகம் இருக்கமுடியுமென்று தோன்றவில்லை

Unknown said...

உங்கள் கடைசி quoteல் இருந்து ஆரம்பிக்கிறேன்.காரணம் விவாதத்தில் எதிராளி என்ன சொல்கிறான் என்பதே தெரியாமல் வார்த்தையை விடுவதை சுட்டிகாட்டத்தான்.

//உலகசினிமா பார்க்காதவனெல்லாம் பைத்தியக்காரன் அல்ல. அதைப் பார்க்காமலே, அதில் ஒரு இழவும் இல்லை என்று சொல்பவனை வேண்டுமானால் பைத்தியக்காரன் எனலாம் - இன்னும் சற்று விலாவாரியாகப் பார்த்தால், அசலில் he/she is not mad, he/she is just a retard, sadly. There's only so much he/she can churn out. வெறுங் கையால் முழம் போடும் இவர்களால் யாருக்கும் எந்த விதத்திலும் உபயோகம் இருக்கமுடியுமென்று தோன்றவில்லை//

உலக சினிமாவில் "ஒரு இழவும் இல்லை" என்று எங்கே/எப்போது சொன்னேன் என்பதை முதலில் சுட்டிகாட்ட முடியுமா? உலக சினிமாவை பற்றி நான் சொன்னது அடைப்பு குறிகளுல்

(உலக சினிமா? அது வேறுதளம். இது வேறுதளம், அது வேறு ஆடியன்ஸ் இது வேறு ஆடியன்ஸ். பெஞ்ச்மார்க்கிங் செய்யலாம்தான். அந்த அளவுக்கு நமது தொழில்களும் தொழிலாளிகளும் இன்னும் புரபஷனலிஸம் அடையவில்லையே? பெப்சியோடு காளிமார்க் போட்டி போட்ட கதைதான்.

பைசைக்கிள் தீவ்சை பார், 7 சாமுராயை பார் நம்ம சிவாஜியையும் பார்..தூ இதெல்லாம் படமா என ஒரு கூட்டம் சுற்றிக்கொண்டிருக்கிறது.
அதெல்லாம் நமது படம் அல்லவே?

'அறிவுசீவிகள் என்ற வகையறா ரசிக்கும் படம் அனைத்தும் கேவலமானவை' என்ற மட்டையடியை நான் முன் வைக்க விரும்பவில்லை.)

இதில் "உலக சினிமாவில் ஒரு இழவும் இல்லை" என்று எங்கே சொல்லியிருக்கிறேன் என்பதை நீங்கள் முதலில் விளக்க வேண்டி வருகிறது.செய்வீர்கள் என எதிர்பார்க்கிறேன்

//ரஜினியின் சட்டியில் இருப்பதை எல்லாம் தோண்டி வெளியில் போட்டப்பிறகு, குரோசாவா விட்டோரியா டிசிக்கா சட்டியில் ஏதாவது இருக்கிறதா இல்லையா தெரியவில்லை, நான் தோண்டவும் இல்லை, ஆனால் அந்த சட்டியில் இருப்பதைத்தான் பைசிக்கிள் தீஃப், நைன் நிமுராய் என்று அறிவுசீவிகள் தோண்டிக் கொண்டிருக்கிறார்கள் என்று என்னத்துக்கு மட்டை அடிக்கவேண்டும்.//

இதில் மட்டை அடிக்க என்ன இருக்கிறது?'அறிவுசீவிகள்' அந்த படத்தை தோண்டுவது உண்மையா இல்லையா? (தோண்டுவது என்பதை விவாதிப்பது என்ற பொருளில் தான் பயன்படுத்துகிறேன்)...அவர்கள் அதை தோண்டுவது சரி..ஆனால் சிவாஜியுடன் அதை ஒப்பிடுவது தவறு என்றுதான் கரடியாய் கத்திக்கொண்டிருக்கிறேன்...(Re quote: பைசைக்கிள் தீவ்சை பார், 7 சாமுராயை பார் நம்ம சிவாஜியையும் பார்..தூ இதெல்லாம் படமா என ஒரு கூட்டம் சுற்றிக்கொண்டிருக்கிறது.அதெல்லாம் நமது படம் அல்லவே?)

//One views non unethical art with disgust because he chooses to denigrate the tastes of others - இது சரியாக வருகிறதா நீங்கள் எழுதியுள்ள பொன்மொழிக்கு? இதிலே non unethical art என்று டபுள் நெகடிவ் போட்டதுதான் குழப்பிவிட்டதென்று நினைக்கிறேன்? ரஜினி படங்கள்தான் ethical art என்று சொல்லிவிடலாமே.//

ஆங்கிலத்தில் எழுதியது சரியாகத்தான் வருகிறது.

"ரஜினிபடங்கள் தான் எதிகல் ஆர்ட்" என்று அதில் சொல்லவில்லை. "ரஜினி படங்கள் அன் எதிகல் அல்ல" என்றுதான் சொல்கிறேன். "நான் முட்டாள் அல்ல" என்பதற்கும் "நான் தான் புத்திசாலி" என்பதற்கும் வித்தியாசம் இருக்கிறதல்லவா?அந்த மாதிரிதான்.

//நிற்க: இங்கே திரைப்படங்களில் எதிcச் எங்கே வந்தது? திரைப்படங்களில் எதிcஅல், நொன் எதிcஅல் என்பவை என்ன என்ன என்பது பற்றி உங்கள் கருத்துக்களைச் சற்றுக் கூற முடியுமா?//

ஒரு கலைவடிவை கேவலம் என்று சொல்லவேண்டுமானால் அது அன் - எதிகலாக இருந்தால் மட்டுமே சொல்ல முடியும் என்பது என் கருத்து. OR "எதிகலாக உள்ள எந்த கலைவடிவும் இழிவானதோ கேவலமானதோ அல்ல"..எது எதிக்ஸ் எது அன் எதிகல் என்று எழுத ஆரம்பித்தால் விடிந்துவிடும் என்பதால் அதை இங்கே தவிர்க்கிறேன்.

//வசூல் ஆறதுதான் வெற்றிக்கும் தரத்துக்கும் ஒரே விஷயம்னா ராஜேஷ்குமார் வீட்டு முன்னாடி சுந்தர ராமசாமி, ஜெயமோகனிலிருந்து எஸ்.ராமகிருஷ்ணனினிலிருந்து பல சாமிகள் வரிசையா நாண்டுகிட்டுத் தொங்கணும். அந்தக்காலத்துல வடுவூர் துரைசாமி அய்யங்கார் வூட்டு முன்னாடியும் தேவன் வூட்டு முன்னாடியும் பலர் தொங்கியிருக்கணும். தேவா வீட்டு முன்னாடி வேணும்னா டி.என்.ஆர், காருகுறிச்சின்னு வித்வான்கள் கல்லறையத் தோண்டி தொங்கவிட்டுரலாம்//

கமர்ஷியல் சினிமாவில் வசூலைத்தவிர வெற்றிக்கு வேறென்ன அளவுகோல் இருக்கிறது என்பதை நீங்கள் முதலில் விளக்க வேண்டும்.மாதநாவல் எழுதி பப்ளிஷருக்கு நாலு காசு சம்பாதித்து கொடுக்கும் ராஜேஷ்குமார் நாவல்களை சுந்தர ராமசாமி, ஜெயமோகனுடன் ஒப்பிடுவது எந்த வகையில் சரி, அப்படிப்பட்ட ஒப்பீடு ஆ இல்லையா என்பதையும் நீங்கள் தான் சொல்லவேண்டும்...

நீங்கள் சொன்ன "என்ன சொல்லவருகிறார்களென்று புரிந்துகொள்ள விரும்பாமல் (புரியாமல் அல்ல) வீம்புக்காக ஜல்லி" என்பது இப்போது நீங்கள் செய்துகொண்டிருப்பது தான். 'கமர்ஷியல் சினிமா வேறு தளம், உலக சினிமா வேறு தளம்' - நான் பலமுறை சொன்ன இதை மறுத்து 'இல்லை எல்லா சினிமாவும் ஒரே தளம்தான், ராஜேஷ்குமாரையும் நபகோவையும் ஒப்பிடுவேன் என்று வல்லடியாக நின்றால் சொல்ல எதுவுமில்லை.

//அப்ப பிரகதீஸ்வரர் கோயில் குல்த்தூரா ஜைன்ஜா? என்னது, ரெண்டுமே இருக்கா? சைன்சு உள்ளே போய் கட்டிடமாச்சு, குல்த்தூர் உள்ளே போய் கோயிலாச்சு, ஜ்பிரிஜ்ஜுவாலிட்டி உள்ளே போய் கடவுள் உறையும் இடமாச்சா? கணினிங்கிறது கலாச்சாரம் இல்லையாமில்ல? ஒரு தனிப்பட்ட கண்டுபிடிப்பு கலாச்சாரக் கூறாவது எப்படின்னு விளக்க வேற செய்யணுமா? இதுமாதிரி வாதத்திலெல்லாம் தூங்கிட்டே தூள் பறத்திருவீங்க போல செல்வன் ;-)

ஏன் விஞ்ஞான உதாரணமாவே வருகிறது? ஏன் இப்படியொரு கேள்வியை என்னால் (செல்வனால்) கேக்கமுடிகிறது என்று யோசித்துப் பார்க்கவும். அறிவியலும் கலாச்சாரமும் mutually exclusive அல்ல என்ற விஷயத்தையெல்லாம் உங்களுக்கு விளக்க வேண்டியளவு அவசியம் இருக்குமென்று நினைக்கவில்லை!! மன்னிக்க.//

டெக்னாலஜி/சையன்ஸ் என்பதும் கலாச்சாரம் என்பதும் ஒன்றா?

இந்த இரண்டையும் சுருக்கமாக வித்தியாசப்படுத்தினால் "நடந்ததை விளக்கி நடக்கபோவதை துல்லியமாக பிரடிக்ட் செய்தால் அது சயின்ஸ். கலாச்சாரம் எதையும் பிரடிக்ட் செய்ய போவதில்லை என்பதால் அது சயின்ஸ் அல்ல..."

//ஐரோப்பியர்களோட இயந்திரங்கள் அப்ப கலாச்சாரம் இல்லையோ, இயந்திரங்கிறது அப்ப வெறும் ஜைன்ஜுக்குள்ள மட்டும்தான் வரும், குல்த்தூருக்குள்ள வராது?//

இயந்திரம் எப்படி அய்யா கலாச்சாரத்துக்குள் வரும்?அந்த இயந்திரத்தை உலகம் பூரா எல்லா கலாச்சராத்திலும் தானே பயன்படுத்துகிரார்கள்? பிரிண்டிங் பிரஸ்ஸை ஐரோப்பியன் கண்டுபிடித்தான், உலகம் பூரா பயன்படுத்துகிறார்கள்..இதில் கலாச்சாரம் எங்கிருந்து வந்தது?பிரிண்டிங் மெஷினுக்கு மாலை போட்டு ஆயுத பூஜை செய்வதை வேண்டுமானால் கலாச்சாரம் என்று சொல்லாமே தவிர அதுக்காக பிரிண்டிங் மெஷினையே கலாச்சாரம் என்பது டூ,திரீ மச்.

//அதேதான் விஷயம் - இப்போதாவது புரிந்துகொண்டீர்களே! ரஜினி படம் துட்டு ஏகத்துக்குச் சம்பாதிக்கிறது என்பதால் மட்டும் அதைத் தூக்கி தலையில் வைத்துக் கொண்டாடவேண்டுமா? //

கமர்ஷியல் சினிமாவில் வெற்றிக்கு வேறு என்ன அளவுகோல் இருக்கிறது?கமர்ஷியல் என்றாலே காசுதானே சாமி?வேறு எந்த அளவுகோலை கமர்ஷியல் சினிமாவில் பயன்படுத்தியும் பயனே கிடையாதே?

//ரஜினி படம் ஓடினால் என்ன ஓடாவிட்டால் என்ன? பாடாவதி என்றால் பாடாவதிதான். படம் பாடாவதி என்று சொல்வது ரசிகனை கேவலப்படுத்துவது என்ற ரேஞ்சில் அடுத்து வாதிடுவீர்கள்.கும்தலக்கா சான் ரசிகர்களை நீங்கள் அறிவுசீவிகள் என்று கிண்டலடிக்கிறீர்களே என்று கேட்டதற்கு இன்னும் பதில் இல்லை? பாக்ஸ் ஆஃபீஸில் பங்கி ஜம்பிங் அடிப்பதெல்லாம் அப்போது பாடாவதிப் படம் உங்க வாதப்படி? சரிதான்.//

கும்தலக்கா சான் ரசிகர்கள் அவரை ஆஸ்கார் உயரத்துக்கு கொண்டுபோய் உட்கார வைத்திருக்கிறார்கள்.அவர்கள் எல்லாம் லோக்கல் ரேஞ்சில் சிந்திப்பதே கிடையாது.ஸ்ட்ரைட்டாக ஆஸ்கார்தான்...அதே சமயம் சானை வைத்து படம் எடுப்பவர்கள் துண்டை காணோம், துணியை காணோம் என்று பீல்டை விட்டு ஓடிமறைந்து கொண்டிருக்கிறார்கள்.அப்புறம் கிண்டலடிக்காமல் என்ன செய்யமுடியும்?
தயாரிப்பாளருக்கு 16 கோடி நஷ்டம் ஏற்படுத்தி, திரையரங்கில் பாப்கார்ன் விற்பவன்முதல் வினியோகிஸ்தர் வரை தலையில் துண்டை போட்டு கவிழ்த்தி, சராசரி ரசிகனை திரையரங்கை விட்டு ஓடவைக்கும் படத்தில் என்னதான் கலைநுணுக்கம் இருந்தும் என்ன பிரயோசனம்?

//பிற விஷயங்களைக் கற்றுக்கொள்ள முனைப்புள்ளவன் என்னதைவிட இது உசத்தி என்னுடையதைவிட இது தாழ்ந்தது என்று முன்முடிவுகளை வைத்துக்கொண்டு எதையும் அணுகுவதில்லை. அடிப்படைவாதிகளுக்கு வேண்டுமானால் அந்தச் சிந்தனையோட்டம் உகந்ததாக இருக்கலாம். அவனுக்குத் தேவையெல்லாம், தனது சுய முன்னேற்றத்துக்கும் தன்னைச் சார்ந்துள்ளவர்களின் முன்னேற்றத்துக்கோ ரசனை விரிவுக்கோ தேவையான வெகு அடிப்படையான விஷயங்கள்.//

சினிமா வெகு அடிப்படையான விஷயமா?

சினிமாவில் சுயமுன்னேற்றம் என்பது "எம்ஜிஆர் படத்தை பார்த்துதான் சிலம்பம் கற்றுக்கொண்டேன்" என்று சொல்லும் லோக்கல் ரசிகனுக்கும் கிடைக்கத்தான் செய்கிறது.

//புது விஷயங்களை அறிமுகப்படுத்தும்போதெல்லாம் ஊர் மந்தையில் உட்கார்ந்துகொண்டு பஞ்சாயத்துப் பண்ணி, டிஸ்கர் புஸ்கியைப் பார்த்தெல்லாம் என்னத்தைக் கிளிக்கப்போறே, நம்ம லோக்கல் லவங்கத்தை மெல்லு என்று குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டும் பஞ்சாயத்து கோஷ்டிகளுக்கு 'நம்ம லோக்கல் லவங்கம்' மேல் அசலாக அக்கறை இருக்கிறது என்றா நினைக்கிறீர்கள்? கிடையாது, அடிப்படையில், தனக்கு மேல் எவனுக்கும் தெரிந்துவிடக்கூடாது என்ற மறைமுகக் காண்டு தான் - யாரும் இதை ஒத்துக்கொள்ளப் போவதில்லை.//

லோக்கல் லவங்கத்தை கேவலம், குப்பை எனும்போது லவங்கம் மெல்லுகிறவன் இல்லை என்று சொல்லத்தான் செய்வான்.'புது விஷயத்தை நன்றாக மென்று தின்று கொள், இருப்பதை ஏன் கேவலப்படுத்துகிறாய்?' கேள்வி இதுதான்..மற்றபடி லவங்கம் தின்பதை வைத்து ஒருவனின் புத்திசாலித்தனம் மதிப்பிடப்படுவதில்லை...அதையே தொழிலாக கொண்டவர்கள் மத்தியில் வேண்டுமானால் லவங்கத்தை பற்றிய அறிவு புத்திசாலித்தனமாக கருதப்படலாம்....ஒருவன் விரும்பி பார்க்கும் சினிமாவை வைத்தும் படிக்கும் நாவலை (மட்டும்) வைத்தும் அவனது அறிவை மதிப்பிடுவது முட்டாள்தனம்..

//தனக்குப் பழக்கமானதைத் தவிர எதையும் ஸ்வீகரித்துக்கொள்ள மனமின்றி இறுகிக் கெட்டித்துப்போன மூளையிலிருந்தும் மனதிலிருந்தும் சுற்றியிருப்பவர்களுக்கு என்ன இழவு கிடைக்குமென்று சொல்லுங்கள் பார்ப்போம்?//

எது எதுக்கு இந்த லாஜிக் பொருந்தும் என்று ஒரு விவஸ்தை இருக்கிறது.ஒருவர் தனது பொழுதை எப்படி போக்குவது என்பது அவரவர் விருப்பம்.(தன்னளவில்) காலணா பெறாத விஷயத்தில் எல்லாம் ஒருவர் எக்ஸ்பர்ட்டாக இருக்க விருப்பமின்றி இருப்பது குற்றம் அல்ல.

//வேற்று மொழிப் பத்திரிகைகளைத் தருவித்துப் படித்தது, எழுத்தாளர்களும் ஓவியர்களும் திரைப்படக் கலைஞர்களும் தொழில்நுட்ப வல்லுனர்களும் தங்கள் எல்லைகளைத் தாண்டிப் பார்ப்பது, தான் சார்ந்த கலாச்சாரத்தை மேம்படுத்தவே.//

அப்படி மேம்படுத்தும்போது லோக்கல் திறமைகளை ஊக்குவிக்க வேண்டுமே அன்றி அழிக்க நினைக்க கூடாது, கேவலம் எனக்கூடாது.

//காட்டமான விமர்சனங்கள் சும்மா குழிபறிப்பதற்காகவா வைக்கப்படுகின்றன? இல்லை பசுபதி மாதிரி அண்ணே நீங்கதான் தல, பின்னிட்டீங்கன்னு ரெக்கார்டு பண்ணி திரும்பத் திரும்பப் போட்டுக் கேட்டுக்கொண்டிருக்கவேண்டுமா?//

காட்டமான விமர்சனத்தை வைத்து (எல்லோரையும் திட்டினோம் என்ற திருப்தியை அடைவதைத் தவிர) எதுவும் கிடைக்க போவதில்லை.

//சாதாரண ரசிகன் என்கிறீர்களே, அந்த சாதாரண ரசிகனுக்கு பக்கா எச்cஅபிச்ட் மனப்பான்மையைப் போதிப்பது ரஜினி கூட இல்லை, படித்தும் பிடிவாதமாய் நான் பிடித்த முயலுக்கு மூணு கால் என்னும் உங்களைப் போன்ற துவாரபாலகர்கள்தான்.//

ரஜினி மீது வரம்பு மீறி வந்து விழும் விமர்சனங்களால் தான் கோபம் கொள்ள வேண்டி வருகிறது...எதிர்த்து எழுத வேண்டியிருக்கிறது. கன்ஸ்ட்ரக்டிவான விமர்சனங்களை யாரும் ஒன்றும் சொல்லப்போவதில்லை.அதையும் தாண்டி வரம்புமீறிய தாக்குதலாக வந்துவிழும்போது தான் திருப்பி பேச வேண்டியிருக்கிறது.....

//காசு சம்பாதிப்பது என்பதுதான் இருப்பதிலேயே பெரிய வெற்றி, அதற்கடுத்துத்தான் எல்லாம் என்ற ரீதியில் கவிழ்ந்தடித்துக் கிடப்பவர்கள்தான் தூக்கி நிறுத்தப் போகிறார்களா நமது திரைப்படங்களை?//

'தயாரிப்பாளன் செத்தால் என்ன பிழைத்தால் என்ன, கலைதான் முக்கியம்' என்கிறவனா தூக்கி நிறுத்த போகிறான் நமது திரைத்துறையை?...கந்துவட்டி வாங்கி படம் எடுப்பவன் வெற்றியை வேறு எப்படி அளவிடுவான்? அவன் என்ன அவார்டுக்கா படம் எடுக்க வருகிரான்? இது கமர்ஷியல் சினிமா சாமி...80 கோடி செலவு செய்த ஏவிஎம் கலையை ரசிக்கவா படம் எடுத்தார்? (ரஜினி பேரை சொன்னாலே பணம் கொட்டும் என சொல்லவேண்டாம்..சிவாஜி ஊத்தி மூடியிருந்தால் ஏவிஎம் அதோடு அம்போ தான்)

//ஒரு ஒட்ட் cஉரிஒசிட்ய் என்ற கட்டம் கடந்து போனதும், இதேபோல பிஷ்க்கா பிஷ்க்கா படங்கள் அடுத்து இருபது வருடங்களுக்கு வந்துகொண்டிருந்தால் மூட்டையைச் சுருட்டிக்கொண்டு போகவேண்டியதுதான். ஆங்கில மொழிமாற்றப் படங்களை யாரும் பார்த்து ரசிப்பதில்லை என்றெல்லாம் அடுத்து க்ய்பொதெடிcஅல்ஆக ஆரம்பித்து விடாதீர்கள் - சிறு நகரங்கள் வரை அவை ஊடுருவத் தொடங்கியபின், தமிழிலும் அதே செய்நேர்த்தியுடன் படங்கள் வரத் தொடங்கவில்லையென்றால் கடைசியில் கோவிந்தா தான்//

20 வருடத்துக்கு முன்பு அழுவாச்சி படமா வரும். டிவி பொட்டி வந்ததும் அந்த டிரெண்ட் மாறிவிட்டது.மசாலா படம் ஒரு டிரெண்ட்.இதுவே நீடிக்கவேண்டும் என்று சொல்லவில்லை. அந்தந்த காலகட்டத்துக்கு ஏற்ப திரைத்துறை தன்னை தானே மாற்றிக்கொள்ளும். ஆங்கிலப்படம் இங்கே வந்தால் பதிலுக்கு ஜப்பானுக்கும் கொரியாவுக்கும் நம்படம் போகும். வலிமையானது என்றும் ஜெயிக்கும்.திரமையான காலிஞன் எந்த போட்டியிலும் ஜெயிப்பான். கவலை வேண்டாம்.

ஸ்ஸப்பா..கண்ணை கட்டுது......மற்ர 'கருத்துக்களுக்கு' பிறகு பதில் போடுகிறேன்

Thekkikattan|தெகா said...

சன்னாசி,

அடிச்சி விளையாடுங்க. இன்னும் எவ்வளவோ தொலைவு போக வேண்டி இருக்கு :-). அமைதியா உட்கார்ந்து படிச்சிக்கிட்டுத்தான் இருக்கோம்.

ஒரு சின்ன வேண்டுகோல், எழுதும் பொழுதும் பாராக்களை சின்ன சின்னதாக் உடைச்சுப் போடுங்களேன், முடிந்த அளவிற்கு.

பிறகு இன்னொரு செய்தி திருத்தம்... //""""Guns, germs and steel படிச்சிருக்கீங்களா அய்யா? பொப் குல்த்துர் பொஸ்தவம்தான் அது - பிரபலமான புஸ்தகந்தான் '''// அந்த புத்தகத்தின் ஆசிரியர் Guns, Germs, and Steel: The Fates of Human Societies: Books: Jared M. Diamond by Jared M. Diamond. இங்கே நீங்க சொன்ன பொப் குல்த்தூர் என்ன புரியலையே...

இந்தப் புத்தகம் ஹால்ப்.காம் ல் மூன்று டாலருக்கெல்லாம் கிடைக்கிறது, என்பதனை ஆர்வத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

சன்னாசி said...

//அந்த புத்தகத்தின் ஆசிரியர் Guns, Germs, and Steel: The Fates of Human Societies: Books: Jared M. Diamond by Jared M. Diamond. இங்கே நீங்க சொன்ன பொப் குல்த்தூர் என்ன புரியலையே...//

தெகா: ஜேரட் டயமண்டின் Guns, Germs and Steel, Collapse இரண்டு புத்தகங்களையும் வாசித்திருக்கிறேன். பொப் குல்த்தூர் என்று கிண்டலுக்குச் சொன்னது, out of the box கருத்தாக்கங்களை சிக்கலற்ற மொழியில் விளக்கும் - ஏதோ underground புத்தகம் என்ற ரீதியில் அல்லாத, எவராலும், நீங்கள் சொன்ன மாதிரி ஐந்தாறு டாலர்களுக்கு வாங்கிப் படிக்க முடியும் புத்தகம் என்று சொன்னது. மற்றபடி அதைத் தவறாக ஏதும் கூறவில்லை. குழப்பியிருப்பின் மன்னிக்க.

செல்வன், உங்களது சமீபத்திய 'கருத்து'க்களுக்கும் பதில் வரும். பொறுமைக்கு நன்றி.

சன்னாசி said...

//உலக சினிமாவில் "ஒரு இழவும் இல்லை" என்று எங்கே/எப்போது சொன்னேன் என்பதை முதலில் சுட்டிகாட்ட முடியுமா? உலக சினிமாவை பற்றி நான் சொன்னது அடைப்பு குறிகளுல//

இதை முதலில் தெளிவாக்கிவிடலாம். சொல்லியிருப்பதை மற்றுமொருமுறை நிதானமாகப் படித்துப் பாருங்கள்: உலக சினிமா பார்க்காதவனெல்லாம் பைத்தியக்காரனா என்றீர்கள். இல்லை, பார்க்காதவன் பைத்தியக்காரன் இல்லை, பார்க்காமலே அதில் ஒரு இழவும் இல்லை என்று சொல்பவன் பைத்தியக்காரன் என்றேன். நான் எங்கே அப்படிச் சொன்னேன் என்று கேட்கிறீர்கள் - அப்படிச் சொல்பவர்களைத்தானே அங்கே சொல்லியிருக்கிறது? உங்களுக்கு ஏன் உறுத்தவேண்டும்? நீங்கள் ஏதாவது அப்படிச் சொன்னீர்களா என்ன? ;-) புஸ்கி டிஸ்கி, புய்ஸ் அம்முது புய்ஸ் அப்படின்னெல்லாம் பேரைப் போட்டீங்களே, படத்தைப் பார்த்திருக்கீங்களான்னு கேட்டதுக்கு, இன்னும் பார்க்கலைங்கிறீங்க - சரி, ரொம்ப நோண்டக்கூடாதுன்னு அதையும் அத்தோட விட்டாச்சு. இப்ப முறுக்கிட்டு வந்தா எப்படி? போன பதில்ல சொன்னதுக்கே பாதிக்கு மேல பதிலக் காணமே? கரெக்டா திங்கக்கிழமை காலையில பின்னூட்ட ரிலீஸ் அட்டாக்னு வச்சுராதீங்க செல்வன் - அப்படின்னாலும் பரவாயில்லை, ஆஃப் சீசன்னாலும் சட்டி நிறைய புண்ணூட்டப் பொங்கல் வச்சுரலாம். இப்ப கொஞ்சம் ரிவர்ஸ் எடுத்துப் போயி, ரஜினி என்ற நடிப்புக் கடவுள் என்ற உங்க பதிவுல என்னென்ன ஜல்லி லோடு இறக்கியிருக்கீங்கன்னு கொஞ்சம் பார்க்கலாமா? -கீழே தடிச்ச எழுத்தில உங்க சில பொன்மொழிகளைக் கொடுத்திருக்கேன். சாய்வெழுத்துக்களில் நம்ம ஜலபுல ஜங்ஸ்.

இருந்தாலும் இந்திய திரையுலகின் மிகச்சிறந்த படைப்பு வெளிவரும் நேரத்தில் காந்தாரிகளின் ஒப்பாரிகளும், மூளி அலங்காரிகளின் ஓலங்களும் ஒலிப்பது காதுக்கு இதமாகத்தான் இருக்கிறது

இந்த காந்தாரிகள் யார் என்று பார்த்தால் பொதுவாக இவர்களிடம் காணப்படும் ஒற்றுமை இவர்கள் பொதுவாக விரக்தி அடைந்த ஜென்மங்கள் என்பதுதான்.இந்த விரக்தி தான் இவர்களை வெற்றி அடைந்த மனிதர்களை இகழத்தூண்டுகிறது.இது புரிந்து கொள்ளக்கூடிய உணர்வுதான் என்பதால் பொதுமக்கள் இவர்களை சற்று அனுதாபத்துடனே பார்ப்பது வழக்கம்.இந்த விரக்தி ஏன் உருவானது என்று பார்த்தால் இவர்கள் மக்களால் கைவிடப்பட்டது தான் காரணம் என தெரியவருகிறது.

இந்த விரக்தி அடைந்த மனிதர்களில் முதல்வகையினர் அறிவுஜீவி ரசிகர்கள் என்று தம்மைத்தாமே அழைத்துக்கொள்ளும் வகையறாக்கள்.ரிலீசே ஆகாமல் டப்பாவுக்குள் முடங்கி தயாரிப்பாளரை முச்சந்தியில் நிற்கவைத்து பிச்சை எடுக்க வைத்த டப்பா தமிழ்படங்களை இவர்கள் விரும்பி ரசிப்பது வழக்கம்.இவர்கள் போகும் தியேட்டர்களில் பொதுவாக இவர்களும் கூட்டம் இல்லாத இடம் தேடி வந்த காதல்ஜோடிகளும் தான் இருப்பது வழக்கம்."ஈரான் படத்தை பார்", "கஜகஸ்தான் படத்தைப்பார்" என உலகமேப்பில் எங்கேயோ பதுங்கி இருக்கும் ஐநாசபை தலைவருக்கு மட்டுமே தெரியக்கூடிய தேசங்களின் படங்களை மட்டும் ரசிப்பது இவர்களின் வழக்கம்.ரஜினி, எம்ஜிஆர் என்ற பெயர்களைக் கேட்டாலே இவர்கள் பல்லை நற,நற என கடித்துக் கொண்டு "சிட்டிசன் கேன், பைசைக்கிள் தீவ்ஸ்" என்று தமிழ்நாட்டில் எவனுமே பார்க்காத படங்களை உதாரணம் காட்டி தமிழில் இந்தமாதிரி படங்கள் வராமல் இருக்க காரணம் ரஜினியும், எம்ஜிஆரும் தான் என்று உரைப்பது இவர்கள் வழக்கம்.(அகிரா குரொசோவா, செவன் சமுராய் என இவர்கள் புலம்ப,புலம்ப ஜப்பானில் ரஜினிபடங்கள் வசூலைக்குவிப்பது வேறுவிஷயம்.இவர்கள் தலையில் தூக்கி வைத்து ஆடும் மலையாள சூப்பர் ஸ்டார்கள் ஷகீலாவையும், ஷர்மிலியையும் போட்டிபோட்டு ஜெயிக்க முடியாமல் தோற்றவர்கள். இப்போது கேரளாவில் தமிழ் மசாலாப்படங்கள் தான் பட்டையை கிளப்புகின்றன)

இந்த அறிவுசீவிகளை அடையாளம் கண்டுபிடிப்பது அவ்வளவு கடினமல்ல. வாங்கிய நாளிலிருந்து இன்றுவரை துவைக்காத ஜிப்பா, தோளில் தொங்கும் ஜோல்னாபை (உள்ளே என்னதான் வைத்திருக்கிறார்களோ?), பிரதாப் போத்தன் போட்டிருப்பது போன்ற உருண்டை கண்ணாடி ஆகியவற்றை வைத்து இவர்களை எளிதில் அடையாளம் கண்டு கொள்ளலாம்.இவர்கள் ஊர் முழுவதுக்கும் அட்வைஸ் செய்யும் தகுதி உடையவர்கள் என்பதால் இவர்களுக்கு நமது அட்வைஸ் தேவைல்ல்லை. இருந்தாலும் "ஈரான் படஙளைப்பார், நைஜீரியப்படங்களைப்பார், டோக்கியோவைப்பார்" என உளறும் இவர்களைக்கண்டு இரக்கப்பட்ட வள்ளுவப்பெருந்தகை அன்றே ஒரு குறளை பாடிவைத்தார்.


மூளிகள், காந்தாரிகள், கிழிந்த சட்டை சோல்னாப்பை பார்த்துக்கொண்டு ஜகஜகஸ்தான், ஐநா சபை படம் மட்டும் பார்ப்பவர்கள், வாங்கிய நாளிலிருந்து துவைக்காத சட்டை. ஏன் செல்வன், ரஜினி ரசிகர்கள் என்ன சாக்ஸ் ஃபிஃப்த் அவென்யூவில் ஷாப்பிங் பண்ணி கோட் சூட் டை போட்டுக்கொண்டுதான் போய் ரஜினி கட்டவுட்டின் மொட்டைத் தலை மேல் போய் பால்பாயாசம் ஊற்றுகிறார்களா? ஈரான் படத்தைப் பார் ஜகஜகஸ்தான் படத்தைப் பார் என்று சீவிகள் சீவுகிறார்களாம், இதில் உங்கள் வக்காலத்துக்கு ஷர்மிலியையும் ஷகீலாவையும் கல்லாவை நிரப்பும் கதாநாயகிகள் என்று இழுக்கிறீர்கள். அட, அடுத்து அப்படியே நீலப்படங்களில் கூட ரசனை வேறுபாடு இருக்கத்தான் செய்யும், என்னய்யா எடுத்தவுடன இங்லீஸ் படத்துல பொசுக்குன்னு எல்லாத்தையும் கழட்டிர்ரான், ஒவ்வொண்ணா வெங்காயத் தொலி உரிக்கிற மாதிரி நம்ம கலாச்சாரப்படி பொறுமையா பதமா உரிக்கவேண்டாமா அப்படிங்கிற சில உதாரணங்களையும் ஏரணாதி தோரணங்களையும் தொங்கவிடறதுதானே? ஜிப்பா ஜோல்னாப்பை கேவலமாகத் தெரியும் அளவுக்கு ரஜினி ரசிகர்கள் பக்கத்தில் வந்தால் சந்தனமும் ஜவ்வாதும் மணக்கிறதோ? கந்துவட்டிக்கு தயாரிப்பாளர் கடன்வாங்குறானாம், சோத்துக்கு வழியில்லாத சொம்புராயன் பால்பாயாச அபிஷேகம் பண்ணுவதும் ஆயிரம் ரூபாய்க்கு டிக்கெட் விற்பதும் (சொல்றாய்ங்களேப்பா ஊர்ல இருக்கிறவனுக றிக்கெற் றேற் என்னன்னு, லஞ்சத்தை ஒழிக்கிறாய்ங்களாமுல்ல படத்துல) மட்டும் நாதிர் தின்னா நாதிர் தின்னா நாற நாற நன்னாயிருக்குன்னானு ட்யூன் போட்டு கைதட்டிப் பார்க்கணுமா? குமுதம் விகடன் போன்ற பத்திரிகைகள் 'நாங்கள் ரஜினி வீட்டுக்கு (விஜயகாந்த் பூந்தளிர் சுப்பாண்டி என்று யாரை வேண்டுமானாலும் போட்டுக்கொள்ளுங்கள்) போனோம், மணக்க மணக்க ஏலக்காய் டீ கொடுத்தார்கள், சீப்பி சீப்பிக் குடித்தோம்' என்று நாலு பக்கத்துக்கு முன்னுரை எழுதி ராவிவிட்டு, அறிவுசீவி இந்த புர்யாத ஃபிலும்மு பிக்ஜனு எல்லாம் டப்பான்னு அரசுவும் அந்துமணியும் அல்லியும் மென்னு துப்பின வெத்திலையை ரீசைக்கிள் பண்ணி மென்னு துப்பிட்டு இங்க ரஜினி படங்களைக் குத்தம் சொன்னா மட்டும் தப்பாமில்ல. ஷர்மிலி ஷகீலா உதாரணமாம், ஏன் படம் பேரை விட்டுட்டீங்கோ? ஆளிப்பழங்கள், அஞ்சரைக்குள்ள வண்டி, மாமனாரின் இன்ப வெறி, பாவாடைக்குள் பயங்கரம் அப்படின்னு படம் உதாரணங்களையும் போட்டு அறிவுசீவிகளை டைரக்டு அட்டாக் பண்ணி சீவியிருந்தா இன்னும் எஃபக்டு தூக்கலா இருந்திருக்குமுல்ல? (அடடா, அஸிங்கமான தலைப்பு ஸொல்றாங்கன்னு யாரும் மூக்கைச் சிந்தாதிங்கப்பா, ஷக்கீலா ஷர்மிலின்னு ஒயிலாலோ ஒயிலாலோ லபோ லபொ லப்ஜனக்கா அக்கா பிக்கா ஜாஞ்சனக்கான்னு ராகம் இழுத்தா பதிலுக்கு இழுக்கவேண்டாமா ராகத்த? இருக்கிற செண்டிமெண்ட் கொளத்துல தேங்கிக் கிடக்கிற சளியே டெர்மினேட்டர் T-1000 மாதிரி சுடுகாட்டு முனி வடிவம் எடுத்து வர்றவனையெல்லாம் ஒரே அறையா முதுகுல அறைஞ்சு கைலாச டிக்கெட் குடுத்து காலிபண்ணிரும் போல). ஈரான் படங்களைப்பார் நைஜீரியப் படங்களைப்பார் டோக்கியோவைப்பார் என்று கும்மியடிப்பதற்கு, வோலெ சோயிங்காவை தமிழில் மொழிபெயர்க்கிறானே, அவனை இழுத்துத் தெருவில் வைத்து செவுட்டுல அடிப்பதுதானே? ஆர்.மணிமாலா மாலைமதியில் எழுதுவது ஸாமான்யனுக்குப் புரியுது, வோலெ சோயிங்காவது வேலையத்த சொங்கித்தாத்தாவாவது எழுதுறது குப்பனுக்கும் சுப்பனுக்கும் (இந்த குப்பன் சுப்பன் எகனை மொகனை படு றேஸ்றான விஸயமுங்க, கந்தன் கருப்பன், குப்பன் சுப்பன் எல்லாம் அப்பப்ப ரைமிங்கா போட்டு ராவணும் தெரியுமில்ல?) புரியுதா, சோயிங்காவோ ஆப்பிரிக்காவிலிருக்கிற கூகி வா தியாங்கோவோ என்ன டுபுக்கை எழுதினாங்கன்னு கேக்கணும். ரியர் எண்டைத் துடைச்சுக்கக் கொடுத்த தாள்ல ஒளிச்சு வைச்சு ஒளிச்சு வைச்சு புஸ்தகம் எழுதற அவன் மாதிரியா நம்மல்லாம்? கோணலைன்ல வாங்க அம்மே ஜாணு இருக்கு, தடுக்கி விழுந்தா பப்ளிக் லைப்ரரி இருக்கு, போஸ்டுல படம் அனுப்புறான் பொசகெட்ட பய, இதெல்லாம் இருந்தாலும் நைஜீரியாவில நக்சிகு நக்சிகுவும் டோக்கியோவுல டொக்சிகு டொக்சிகுவும் மட்டும்தான் அறிவுசீவிகள் பாப்பேரோ, ரஸினி படமெல்லாம் பாக்க மாட்டேரோன்னு, பார்த்தாலும் குறை மட்ட்டுந்தான் சொல்வேரா, அவை நம் படங்கள் இல்லையே அப்படின்னு மட்டுந்தான் திரும்பத் திரும்பக் கேப்போம். அதையும் பார்த்தாச்சு, பாடாவதின்னா உனக்கு இந்த ஸாதாரண படங்களை ரஸீக்கமுடியாம போகுதேன்னு வருத்தமா இருக்குன்னு ஒரு கொமண்டு (அட, ஏன் செல்வன், இது எங்கேயோ கேட்ட மாதிரி இல்ல? இப்பிடி ரஜினி ரஜினின்னு குசினிக்குள்ள பூட்டிட்டுக் கிடக்கிறதாலதான் ரஜினி ரஸிகர்களால வேற எதையும் பார்க்கமுடியலைன்னு சீவிகள் சொல்ற மாதிரி இல்லை? நீங்களும் அப்ப அதே ட்யூன் தானா?) ஆசைய காத்துல தூது விட்டு பாட்டை ஆத்துல சேத்துல கால விட்டுன்னு ரீமிக்ஸ் பண்ணமுடியுமின்னும் அங்கங்க ரெண்டு பிட்டைப் போட்டு பொப்யுலர் குல்த்துரைக் குடைஞ்சு துருவிக் குடுக்கமுடியும்னு காட்டியாச்சு. காட்டினா தந்தக் கோபுரம், இல்லேன்னா, நான் எங்கே உலக சினிமாவில் "ஒரு இழவும் இல்லை" என்று எங்கே/எப்போது சொன்னேன்னு கேள்வி. மேலே சுட்டிக் காட்டியிருக்கிற பத்திகளில் செல்வன் வரையும் கோட்டுச்சித்திரத்தில் உருவாகும் விரக்தியடைந்த சோல்னாபையைப் போட்டுக்கொண்டு தட்டிக்கொண்டு திரியும் என்று (அப்ப 'அழகன்யா' புகழ் சுந்தர ராமசாமிக்காவது ஒரு விதிவிலக்கு இதில? அன்னார் Il Postinoவும் Fried green tomatoesம் தனக்குப் பிடித்த படங்கள் என்றிருக்கிறார். சுந்தர ராமசாமி என்ன பீர் குடித்து பர்கரா சாப்பிடுகிறார் வாட்டிய தக்காளி வெங்காயமென்று குச்சியில் சொருகி வாட்டிச் சாப்பிட என்று அவரையும் முழங்கைக்கும் முட்டிக்காலுக்கும் வித்தியாசமேதுறா கண்ணா ரெண்டும் வளைஞ்சுதான இருக்கு என்று போட்டு ரெண்டு நோண்டு நோண்டுவதுதானே. Il Postino பிடிச்சா தாவணிக்கனவுகளும் பிடிக்கணுமே என்று ஒரு டேஞ்சன்ஷியல் டண்டணக்காவையும் போட்டுவிடுவது) உருவாகும் சித்திரங்கள் முன்வைக்கும் விஷயங்களுடன் உங்களுக்கு எவ்வளவு பரிச்சயம் இருக்கிறது என்று கேட்டதற்கு, அவர்கள் படைப்பை விமர்சியுங்கள் என்றதற்கு 'ஆம் இல்லை என்ற இரண்டு வரியில் சொல்லமுடியாது என்று நழுவுவது எதற்கு? பரிச்சயம் இல்லாமலிருப்பது தவறல்ல, இவ்வளவு தூரம் ஸோடாபுட்டி ஸோல்னாப்பை என்று பிம்ப உருவாக்கம் செய்வதை, சும்மா அள்ளிப் போடுவதைத் தவிர்த்து கருத்தாக்க ரீதியிலும் எதிர்கொள்ள வேண்டுமல்லவா? பார்த்துவிட்டுத்தான் விமர்சனத்தை வைப்பேன் என்றிருக்கிறார். பார்த்துவிட்டு விமர்சனத்தை வைக்கட்டும். அடுத்த ரஜினி படம் வரும்போது இதே ட்யூனைப் போட, இன்னும் இரண்டு மூன்று படங்களை எடுத்து வைத்துக்கொள்ளட்டும்; ஸ்வீடன், இரான், ஆஃப்ரிக்கா என்று ஒவ்வொரு கண்டமாகப் போட்டு பொர்க்கிமென், கொக்குமல்பாஃப், அண்டார்டிக்காவில் படமெடுத்த பெங்குயினோவ்ஸ்கி என்று ஒரு நாலு பேரைச் சலித்துப் போட்டு, அவையெல்லாம் நமது படங்கள் இல்லையே இதுதான் நமது படம் என்று blondie டோப்பாவைக் காட்டட்டும். NRI களாக இருந்து 200 கோடி ரூபாயைக் கொண்டு போகிறவன் எப்படித் தொழில் நடத்தவேண்டுமென்று காட்டட்டும், ஒரு ஃபிளைட், வால்ஸ்ட்ரீட் பச்சை போர்டு ஒன்று, ஒரு SUVயைக் காட்டிவிட்டு, வேடிக்கை பார்க்க வந்த இருபது பேரை நிறுத்தி, பணம் கொடுத்திர்ரேன், அப்படியே இந்தியாவுக்கு டொனேஷன் எழுதிருங்கன்னு அம்ப்ச்சிட்டு வந்துவிடட்டும். ஷங்கர் படங்களில் இவ்வளவு பெரிய திரைக்கதை ஓட்டைகளை இதற்குமுன் பார்த்ததில்லை! சாமானியனைத் தகவல்களால் சாகடிக்க வேண்டியதில்லை எனில், இந்தப் படத்துக்கான இடம் எது என்பதை ஒத்துக்கொண்டு, தூர்தர்ஷன் பாடாவதி இண்டர்நேஷனல் வாராவதியெல்லாம் இதனோட கம்பேர் பண்ணக்கூடாது, தளம் வேறு தாயக்கட்டை வேறு என்று ஜல்லி அடிக்கக்கூடாது.

//இதில் மட்டை அடிக்க என்ன இருக்கிறது?'அறிவுசீவிகள்' அந்த படத்தை தோண்டுவது உண்மையா இல்லையா? (தோண்டுவது என்பதை விவாதிப்பது என்ற பொருளில் தான் பயன்படுத்துகிறேன்)...அவர்கள் அதை தோண்டுவது சரி..ஆனால் சிவாஜியுடன் அதை ஒப்பிடுவது தவறு என்றுதான் கரடியாய் கத்திக்கொண்டிருக்கிறேன்...(Re quote: பைசைக்கிள் தீவ்சை பார், 7 சாமுராயை பார் நம்ம சிவாஜியையும் பார்..தூ இதெல்லாம் படமா என ஒரு கூட்டம் சுற்றிக்கொண்டிருக்கிறது.அதெல்லாம் நமது படம் அல்லவே?)//

Re-quote கொடுப்பதற்கு முன்னால், நமது படம் அல்லவே டயலாக் குறித்து சென்ற பின்னூட்டங்களில் வதவதவென்று பேசியாகிவிட்டதென்று நினைக்கிறேன் - டூத்பேஸ்ட் ஃப்ளஷ் டாய்லெட் என்று சொன்னதையெல்லாம் மடக்கி அடித்து, பேண்ட் சட்டையை மட்டும் வேண்டுமானால் கலாச்சாரம் என்று ஒரு லாஜிக்கை வைத்தீர்களே ;-) - அங்கே போய்ப் பார்க்கவும். அதெல்லாம் நமது கலாச்சாரம் அல்லவே என்று குஷ்புவுக்கு துடைப்பக்கட்டை தூக்கிக்கொண்டு போன கோமாளிகள் மாதிரித்தானா இந்த 'அதெல்லாம் நமது கலாச்சாரம் அல்லவே'வும்?

//ஒரு கலைவடிவை கேவலம் என்று சொல்லவேண்டுமானால் அது அன் - எதிகலாக இருந்தால் மட்டுமே சொல்ல முடியும் என்பது என் கருத்து. OR "எதிகலாக உள்ள எந்த கலைவடிவும் இழிவானதோ கேவலமானதோ அல்ல"..எது எதிக்ஸ் எது அன் எதிகல் என்று எழுத ஆரம்பித்தால் விடிந்துவிடும் என்பதால் அதை இங்கே தவிர்க்கிறேன்.//

மேற்கண்ட விஷயங்களில் எந்தவொரு போயிண்டையும் விரித்து எழுதினாலும் விடிந்துவிடும் என்பதால், அதை விட்டுவிட்டு, இந்த அறம் என்னும் விஷயத்தைப் பார்ப்போமா? இந்த கலையில் எதிக்ஸ், அறம் என்பதெல்லாம் கொல்ச்சுரல் கொமிஸ்ஸார்களின் வேலை என்பது என் அபிப்ராயம், சந்தர்ப்பம் வாய்த்தால், விடியும்போது கலைவடிவில் அறம் குறித்த உங்கள் பார்வையை எழுதவும்.

//கமர்ஷியல் சினிமாவில் வசூலைத்தவிர வெற்றிக்கு வேறென்ன அளவுகோல் இருக்கிறது என்பதை நீங்கள் முதலில் விளக்க வேண்டும்.மாதநாவல் எழுதி பப்ளிஷருக்கு நாலு காசு சம்பாதித்து கொடுக்கும் ராஜேஷ்குமார் நாவல்களை சுந்தர ராமசாமி, ஜெயமோகனுடன் ஒப்பிடுவது எந்த வகையில் சரி, அப்படிப்பட்ட ஒப்பீடு ஆ இல்லையா என்பதையும் நீங்கள் தான் சொல்லவேண்டும்...

நீங்கள் சொன்ன "என்ன சொல்லவருகிறார்களென்று புரிந்துகொள்ள விரும்பாமல் (புரியாமல் அல்ல) வீம்புக்காக ஜல்லி" என்பது இப்போது நீங்கள் செய்துகொண்டிருப்பது தான். 'கமர்ஷியல் சினிமா வேறு தளம், உலக சினிமா வேறு தளம்' - நான் பலமுறை சொன்ன இதை மறுத்து 'இல்லை எல்லா சினிமாவும் ஒரே தளம்தான், ராஜேஷ்குமாரையும் நபகோவையும் ஒப்பிடுவேன் என்று வல்லடியாக நின்றால் சொல்ல எதுவுமில்லை.//

வசூலுக்காகப் படம் எடுப்பதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால் அதன்மேல் மாற்றுக் கருத்துள்ள விமர்சனங்கள் வைக்கப்பட்டால், சும்மா வெளிநாட்டான் படத்தை கொம்பேர் பண்ணி கொம்பேர் பண்ணி சொல்லக்கூடாது என்ற ரீதியில் முனகக்கூடாது. இரண்டையும் பார்க்க வாய்ப்புள்ளவன் ஒப்பிடத்தான் செய்வான், ஒப்பிடுவதில் எந்தத் தவறும் இருப்பதாகத் தெரியவில்லை. நபகோவை இங்கே குறிப்பிடுவது ஏன். வெகுஜன எழுத்துக்களுக்கும் highbrow எழுத்துக்களுக்குமான இடைமுகத்தைத் தளர்த்தியவர்களில் அவரும் ஒருவர். நபக்கோவின் பேட்டி ப்ளேபாய் பத்திரிகையில் கூட வந்திருக்கிறது ;-). நீங்கள் கூறும் இந்த 'தளங்கள்' குறித்தான வெற்றுக் கற்பிதங்களை நபக்கவ் போன்றவர்களின், அமெரிக்க ஜான் பார்த், பார்த்தெல்மெ, ரொனால்ட் சுகெனிக் போன்றவர்களின் எழுத்துக்களைக் கொண்டே தகர்க்க முடியும். ஜோஸஃப் ஹெல்லரின் Catch-22 போன்றவை வெகுஜனமா இல்லையா என்று கூறமுடியாதளவு இடையில் நிற்பவை; உம்பர்த்தோ ஈக்கோவின் சமீபத்திய The mysterious flame of queen Loana, semantic memory வழி கலாச்சாரக் கூறுகளை கார்ட்டூன்கள், ஜாடிகளிலுள்ள லேபிள்கள், சினிமாப் போஸ்டர்கள், புத்தகங்கள் வழி கண்டடைகிறது - நீங்கள் சொன்ன பேண்ட் சட்டை வேண்டுமானால் கலாச்சாரமாக ஒத்துக் கொள்ளலாம் என்பது சரி எனில், இவையெல்லாம் கலாச்சாரத்துடன் எந்த விதத்திலும் தொடர்பற்றவையா? நாலு காசு சம்பாதிக்கும் ராஜேஷ்குமார் நாவலை சுந்தர ராமசாமி நாவலுடன் ஒப்பிடுவதைக் குறித்துக் கேட்கிறீர்களா சுந்தர ராமசாமி நாவலை ராஜேஷ்குமார் நாவலுடன் ஒப்பிடுவதைப்பற்றிக் கேட்கிறீர்களா? புத்தகங்களைப் பொறுத்த வரையில், எந்த வரிசையில் புத்தகங்களைப் படிக்கிறோம் என்பதுதான் முக்கியமானது, திரைப்படங்கள் இன்னபிற என்பதற்கும் அதேதான். இரண்டையும் படிக்கும் வாய்ப்புள்ளவன், இரண்டையும் ஒப்பிடத்தான் செய்வான் - ஒப்பிடுவதில் என்ன தவறு இருக்கிறது? குதிரை குதிரையாக இருப்பது கழுதை கழுதையாக இருப்பதால்தானே?

//கும்தலக்கா சான் ரசிகர்கள் அவரை ஆஸ்கார் உயரத்துக்கு கொண்டுபோய் உட்கார வைத்திருக்கிறார்கள்.அவர்கள் எல்லாம் லோக்கல் ரேஞ்சில் சிந்திப்பதே கிடையாது.ஸ்ட்ரைட்டாக ஆஸ்கார்தான்...அதே சமயம் சானை வைத்து படம் எடுப்பவர்கள் துண்டை காணோம், துணியை காணோம் என்று பீல்டை விட்டு ஓடிமறைந்து கொண்டிருக்கிறார்கள்.அப்புறம் கிண்டலடிக்காமல் என்ன செய்யமுடியும்? தயாரிப்பாளருக்கு 16 கோடி நஷ்டம் ஏற்படுத்தி, திரையரங்கில் பாப்கார்ன் விற்பவன்முதல் வினியோகிஸ்தர் வரை தலையில் துண்டை போட்டு கவிழ்த்தி, சராசரி ரசிகனை திரையரங்கை விட்டு ஓடவைக்கும் படத்தில் என்னதான் கலைநுணுக்கம் இருந்தும் என்ன பிரயோசனம்?//

ஆஸ்கார் ரேஞ்சுக்கு வச்சிருக்காங்க, நம்மளையெல்லாம் கண்டுக்கிறதே கிடையாது, பீல்டை விட்டு ஓடுறாங்க - திரும்பத் திரும்ப, துட்டு சம்பாதிப்பவந்தான் நடிகன் என்ற ரேஞ்சுக்கு சொல்லிக்கொண்டிருப்பது ஏன்? தயாரிப்பாளர் நஷ்டமடைவது அனைவருக்கும் நடப்பதுதான். கும்தலக்கா சான் என்று நக்கலுக்குச் சொன்னதை Gamalkaasan என்று ஒருவேளை நினைத்துவிட்டீர்களோ? இதை வெற்று ரஜினி-கமல் சண்டையாக திருப்பவா இந்த 16 கோடி ட்விஸ்ட்? கேவலமான படம் என்றால் எதுவும் கேவலமான படம்தான் - இன்னார் இவர் என்று பார்த்து செலக்டிவ் கிரேடிங் பண்ணுவது ரசிகக்குஞ்சுகள் செய்யும் விஷயம்.

//அதையே தொழிலாக கொண்டவர்கள் மத்தியில் வேண்டுமானால் லவங்கத்தை பற்றிய அறிவு புத்திசாலித்தனமாக கருதப்படலாம்....ஒருவன் விரும்பி பார்க்கும் சினிமாவை வைத்தும் படிக்கும் நாவலை (மட்டும்) வைத்தும் அவனது அறிவை மதிப்பிடுவது முட்டாள்தனம்..//

அறிதலுக்கான சூழல் ஏற்பட உதவுகிறார்களா இல்லையா என்பதைப் பற்றிச் சொன்னது அது. அப்போது படிக்கும் புத்தகங்களும் பார்க்கும் திரைப்படங்களும் ஓவியங்களும் கேட்கும் இசையும் எந்த மாற்றத்தையும் படிப்பவனிடம் (மேதாவியோ முட்டாளோ) ஏற்படுத்தாது என்கிறீர்கள் - இந்தக் காது வழியாக நுழைந்து அந்தக் காது வழியாகவோ இந்த ஓட்டை வழியாக நுழைந்து அந்த ஓட்டை வழியாகவோ போய்விடும் அப்போ? ஆக, மனிதன் ஒரு நவதுவாரமுள்ள ஜடம், அவனது பட்டறிவும் பகுத்தறிவும் இதுபோன்ற விஷயங்களால் சற்றுக்கூட முதிர்ச்சியோ முறிவோ அடையாது?

//லோக்கல் லவங்கத்தை கேவலம், குப்பை எனும்போது லவங்கம் மெல்லுகிறவன் இல்லை என்று சொல்லத்தான் செய்வான்.'புது விஷயத்தை நன்றாக மென்று தின்று கொள், இருப்பதை ஏன் கேவலப்படுத்துகிறாய்?'//

இருப்பது கேவலமாக இருந்தால் கேவலம் என்றுதான் சொல்லமுடியும். உங்கள் வீட்டுக் குப்பை என்பதற்காக அதை சட்டைப் பாக்கெட்டில் போட்டுக்கொண்டு திரிவீர்களா என்ன? சிறுவர்கள் மூக்குச்சளியை நக்குவதும், மூக்கைத் தோண்டித் தின்பதும்தான் செய்வார்கள் - உடற்சுரப்பு, ஒன்றும் செய்யாது என்று விட்டுவிடுவீர்களா என்ன? இல்லை, மூக்கைத் தோண்டுவது சிறுவனின் தனிமனித உரிமை, அவன் ரசனை அது என்ற ரீதியில் சொல்வீர்களா? சிலருக்குக் கேவலமாகப் படுவது சிலருக்குக் கேவலமாகப் படாவிட்டால் அதற்கு என்ன செய்யமுடியும்? ஏன் கேவலம் இல்லை என்று நிரூபித்தால் சரியாகப் போகிறது.

//எது எதுக்கு இந்த லாஜிக் பொருந்தும் என்று ஒரு விவஸ்தை இருக்கிறது.ஒருவர் தனது பொழுதை எப்படி போக்குவது என்பது அவரவர் விருப்பம்.(தன்னளவில்) காலணா பெறாத விஷயத்தில் எல்லாம் ஒருவர் எக்ஸ்பர்ட்டாக இருக்க விருப்பமின்றி இருப்பது குற்றம் அல்ல.//

பொழுதைப் போக்குவது அவரவர் விருப்பம். எக்ஸ்பர்ட்டாக இருக்கத் தேவை என்று எவரும் சொல்லவில்லை இங்கே, ஆனால் அத்துறையில் நிபுணத்துவமோ அறிவோ உள்ளவர்கள் சொல்வதை என்ன ஏது என்றுகூட ஆராயாமல், ஈஸிசேரில் உட்கார்ந்துகொண்டு இது நொள்ளை அது நொட்டை என்று குதர்க்கம் பண்ணிக்கொண்டிருக்கக்கூடாது.

//காட்டமான விமர்சனத்தை வைத்து (எல்லோரையும் திட்டினோம் என்ற திருப்தியை அடைவதைத் தவிர) எதுவும் கிடைக்க போவதில்லை.//

இதைத்தான் போன பதிலிலேயே, போட்டதைத் தின்னுக்கிட்டு மூலையில் கிடக்கும் புத்திக்குப் பழக்குவது என்றேன். வீம்புக்காக விமர்சனம் செய்பவர்களை அடையாளம் காண்பதுகூட, காட்டமான விமர்சனங்களைக் கண்டிருந்தால்தான் முடியும். வெறுங் கையால் முழம் போடவேண்டுமென்கிறீர்கள். நல்லது.

Unknown said...

//உலக சினிமா பார்க்காதவனெல்லாம் பைத்தியக்காரனா என்றீர்கள். இல்லை, பார்க்காதவன் பைத்தியக்காரன் இல்லை, பார்க்காமலே அதில் ஒரு இழவும் இல்லை என்று சொல்பவன் பைத்தியக்காரன் என்றேன். நான் எங்கே அப்படிச் சொன்னேன் என்று கேட்கிறீர்கள் - அப்படிச் சொல்பவர்களைத்தானே அங்கே சொல்லியிருக்கிறது? உங்களுக்கு ஏன் உறுத்தவேண்டும்? நீங்கள் ஏதாவது அப்படிச் சொன்னீர்களா என்ன? ;-)//

'நான் அப்படி சொல்லவில்லை' என்று இப்போது சொல்கிறீர்கள்..ஒப்புதலுக்கு நன்றி. மற்ரபடி இருவர் மட்டும் விவாதிக்கும் ஒரு சூழலில் அந்த மறைமுக அட்டாக் யார் மீது வைக்கப்பட்டது, இப்போது அதற்கு வரும் விளக்கம் மழுப்பலா இல்லையா என்பதை எல்லாம் இந்த விவாதத்தை படிப்பவர்கள் முடிவு செய்துகொள்ளட்டும்:)..ஓவர் டு நெக்ஸ்ட் பாயிண்ட்

//புஸ்கி டிஸ்கி, புய்ஸ் அம்முது புய்ஸ் அப்படின்னெல்லாம் பேரைப் போட்டீங்களே, படத்தைப் பார்த்திருக்கீங்களான்னு கேட்டதுக்கு, இன்னும் பார்க்கலைங்கிறீங்க - சரி, ரொம்ப நோண்டக்கூடாதுன்னு அதையும் அத்தோட விட்டாச்சு. இப்ப முறுக்கிட்டு வந்தா எப்படி?//

ஷில்பா ஷெட்டி, தாஜ்மகால் பத்தியும் தான் எழுதினேன். அதுக்காக அதை பத்தியும் கேள்வி கேப்பிங்களோ என்னவோ?தாஜ்மகால் உலக அதிசயம்னு எழுத ஒருத்தன் அதை நேரில் பார்த்திருந்து விமர்சன கட்டுரை எழுதியிருக்கணுமா என்ன?அதே மாதிரிதான் சில உலக புகழ் பெற்ற திரைப்படங்களை ஒரு உதாரணத்துக்கு கோட் செய்தபோது அதையே பிடித்துக்கொண்டு தொங்கிக் கொண்டிருந்தீர்கள்.

//இப்ப கொஞ்சம் ரிவர்ஸ் எடுத்துப் போயி, ரஜினி என்ற நடிப்புக் கடவுள் என்ற உங்க பதிவுல என்னென்ன ஜல்லி லோடு இறக்கியிருக்கீங்கன்னு கொஞ்சம் பார்க்கலாமா? -கீழே தடிச்ச எழுத்தில உங்க சில பொன்மொழிகளைக் கொடுத்திருக்கேன். //

அந்த பதிவிலேயே நான் யாரை குறித்து விமர்சனம் வைத்திருக்கிறேன் என்பதை தெளிவாக குறித்திருக்கிறேன்.

(இந்த அறிவுசீவிகளை அடையாளம் கண்டுபிடிப்பது அவ்வளவு கடினமல்ல. வாங்கிய நாளிலிருந்து இன்றுவரை துவைக்காத ஜிப்பா, தோளில் தொங்கும் ஜோல்னாபை (உள்ளே என்னதான் வைத்திருக்கிறார்களோ?), பிரதாப் போத்தன் போட்டிருப்பது போன்ற உருண்டை கண்ணாடி ஆகியவற்றை வைத்து இவர்களை எளிதில் அடையாளம் கண்டு கொள்ளலாம்)

வாங்கிய நாளிலிருந்து துவைக்காத ஜிப்பாவை அணிபவர்களையும் காந்தாரி போல் வயிறெறிகிரவர்களையும் தான் திட்டியிருக்கிறேன். மற்றவர்கள் கவலைப்படத் தேவையில்லை:))

//ரஜினி ரசிகர்கள் என்ன சாக்ஸ் ஃபிஃப்த் அவென்யூவில் ஷாப்பிங் பண்ணி கோட் சூட் டை போட்டுக்கொண்டுதான் போய் ரஜினி கட்டவுட்டின் மொட்டைத் தலை மேல் போய் பால்பாயாசம் ஊற்றுகிறார்களா?//

புதரகத்தில் கோட் சூட் போட்ட நிறையபேர் ரஜினி ரசிகர்களாக இருக்கிறார்கள்.சமூகத்தின் அனைத்து தட்டு மக்களிலும் ரஜினி ரசிகர்கள் இருக்கிறார்கள்:)

//கந்துவட்டிக்கு தயாரிப்பாளர் கடன்வாங்குறானாம், சோத்துக்கு வழியில்லாத சொம்புராயன் பால்பாயாச அபிஷேகம் பண்ணுவதும் ஆயிரம் ரூபாய்க்கு டிக்கெட் விற்பதும் (சொல்றாய்ங்களேப்பா ஊர்ல இருக்கிறவனுக றிக்கெற் றேற் என்னன்னு, லஞ்சத்தை ஒழிக்கிறாய்ங்களாமுல்ல படத்துல) மட்டும் நாதிர் தின்னா நாதிர் தின்னா நாற நாற நன்னாயிருக்குன்னானு ட்யூன் போட்டு கைதட்டிப் பார்க்கணுமா//

சோத்துக்கு வழியிலாமலிருந்தும் இலக்கிய கூட்டங்களுக்கும், திரைவிழாக்களுக்கும் கடன் வாங்கிக்கொண்டு போகும் ஜோல்னாபை + ஜிப்பா பார்ட்டிகள் உண்டு...10 நாள் பொறுத்தால் டிக்கட் 50 ரூபாய்க்கு கிடைக்கும்..அல்லது ரசிகர் மன்றத்தில் இருந்தால் ஸ்பெக்சல் ஷோ கிடைக்கும்...பொறுப்பில்லாமல் பிளாக்கில் டிக்கட் வாங்கினால் அது யார் தவறு?

//குமுதம் விகடன் போன்ற பத்திரிகைகள் 'நாங்கள் ரஜினி வீட்டுக்கு (விஜயகாந்த் பூந்தளிர் சுப்பாண்டி என்று யாரை வேண்டுமானாலும் போட்டுக்கொள்ளுங்கள்) போனோம், மணக்க மணக்க ஏலக்காய் டீ கொடுத்தார்கள், சீப்பி சீப்பிக் குடித்தோம்' என்று நாலு பக்கத்துக்கு முன்னுரை எழுதி ராவிவிட்டு, அறிவுசீவி இந்த புர்யாத ஃபிலும்மு பிக்ஜனு எல்லாம் டப்பான்னு அரசுவும் அந்துமணியும் அல்லியும் மென்னு துப்பின வெத்திலையை ரீசைக்கிள் பண்ணி மென்னு துப்பிட்டு இங்க ரஜினி படங்களைக் குத்தம் சொன்னா மட்டும் தப்பாமில்ல.//

குமுதத்திலும் விகடனிலும் ரஜினியை பற்றி மட்டுமா எழுதினார்கள்?உலக சினிமாக்களை பற்றியும் தான் எழுதினார்கள்..அந்த வெத்திலை எச்சி இனிக்குது ரஜினியை பத்தி எழுதினா கசக்குது...இல்லையா?

//ஷர்மிலி ஷகீலா உதாரணமாம், ஏன் படம் பேரை விட்டுட்டீங்கோ? ஆளிப்பழங்கள், அஞ்சரைக்குள்ள வண்டி, மாமனாரின் இன்ப வெறி, பாவாடைக்குள் பயங்கரம் அப்படின்னு படம் உதாரணங்களையும் போட்டு அறிவுசீவிகளை டைரக்டு அட்டாக் பண்ணி சீவியிருந்தா இன்னும் எஃபக்டு தூக்கலா இருந்திருக்குமுல்ல?//

துக்கலாஅ தான் இருந்திருக்கும்...அப்புறம் அந்த படத்தை பற்றியும் விமர்சனம் எழுதுன்னு ஒத்தக்காலில் நின்னிருப்பீங்க..எதுக்கு வம்பு?

//கோணலைன்ல வாங்க அம்மே ஜாணு இருக்கு, தடுக்கி விழுந்தா பப்ளிக் லைப்ரரி இருக்கு, போஸ்டுல படம் அனுப்புறான் பொசகெட்ட பய, இதெல்லாம் இருந்தாலும் நைஜீரியாவில நக்சிகு நக்சிகுவும் டோக்கியோவுல டொக்சிகு டொக்சிகுவும் மட்டும்தான் அறிவுசீவிகள் பாப்பேரோ, ரஸினி படமெல்லாம் பாக்க மாட்டேரோன்னு, பார்த்தாலும் குறை மட்ட்டுந்தான் சொல்வேரா, அவை நம் படங்கள் இல்லையே அப்படின்னு மட்டுந்தான் திரும்பத் திரும்பக் கேப்போம்.//

ஏற்கனவே சொன்னமாதிரி உலக சினிமாக்களை ஒருவன் ரசிக்கிறானா இல்லையா என்பது அவனவன் நேரம், காலம், விருப்பம், தொழில் ஆகியவற்றை சார்ந்த விஷயம்.....உலக சினிமாவை பார்க்கும் ஒருவன் ரஜினி படத்தை அவற்றுடன் ஒப்பிடுவது அபத்தம். ஏன் என்றால் ஒன்று ஆப்பிள் மற்றொன்று ஆரஞ்சு...இரண்டின் ஆடியன்ஸ் புரொபைல் வேறு...ரஜினி ரசிகர்கள் பாதி பேர் ஏழ்மையான சூழலில்,கல்வி அறிவு அதிகம் அற்ற சூழலில் இருந்து வருகிறவர்கள்.இது புரியாமல் 'அந்த படத்தை பார், இந்த படத்தை பார்' என்றால் அப்புறம் அந்த அபத்தத்தை சுட்டிக்காட்டத்தான் செய்வார்கள்.

//அட, ஏன் செல்வன், இது எங்கேயோ கேட்ட மாதிரி இல்ல? இப்பிடி ரஜினி ரஜினின்னு குசினிக்குள்ள பூட்டிட்டுக் கிடக்கிறதாலதான் ரஜினி ரஸிகர்களால வேற எதையும் பார்க்கமுடியலைன்னு சீவிகள் சொல்ற மாதிரி இல்லை? நீங்களும் அப்ப அதே ட்யூன் தானா?//

இட்லி தோசைன்னு ஒண்ணு இருப்பதால் தான் பைவ் ஸ்டார் ஓட்டலுக்கு போய் மக்கள் நல்ல சாப்பாடு சாபிடமாட்டென் என்கிரார்கள்.ஃபைவ் ஸ்டார் ஓட்டலில் பிசினஸ் அதிகரிக்கணும்னா இட்லிமாவை தடை பண்னணும்கிர மாதிரி இருக்கு....

//மேலே சுட்டிக் காட்டியிருக்கிற பத்திகளில் செல்வன் வரையும் கோட்டுச்சித்திரத்தில் உருவாகும் விரக்தியடைந்த சோல்னாபையைப் போட்டுக்கொண்டு தட்டிக்கொண்டு திரியும் என்று உருவாகும் சித்திரங்கள் முன்வைக்கும் விஷயங்களுடன் உங்களுக்கு எவ்வளவு பரிச்சயம் இருக்கிறது என்று கேட்டதற்கு, அவர்கள் படைப்பை விமர்சியுங்கள் என்றதற்கு 'ஆம் இல்லை என்ற இரண்டு வரியில் சொல்லமுடியாது என்று நழுவுவது எதற்கு?//

விரக்தி அடைந்த ஜோல்னாபைகளுடன் நல்ல பரிச்சயம் இருக்கிறது.அதனால் *அவர்களை* விமர்சித்தேன்...அவர்கள் போற்றும் படைப்புகளை எங்கும் விமர்சிக்கவில்லையே? இவர்கள் செய்யும் முட்டாள்தனத்துக்கு அந்த படைப்பாளிகளை எப்படி குற்றம் சொல்ல முடியும்?..

//பரிச்சயம் இல்லாமலிருப்பது தவறல்ல, இவ்வளவு தூரம் ஸோடாபுட்டி ஸோல்னாப்பை என்று பிம்ப உருவாக்கம் செய்வதை, சும்மா அள்ளிப் போடுவதைத் தவிர்த்து கருத்தாக்க ரீதியிலும் எதிர்கொள்ள வேண்டுமல்லவா? பார்த்துவிட்டுத்தான் விமர்சனத்தை வைப்பேன் என்றிருக்கிறார். பார்த்துவிட்டு விமர்சனத்தை வைக்கட்டும்.//

பிம்ப உருவாக்கத்தை செய்ய காரனம் என்ன?ரஜினி ரசிகர்களை வரம்பு மீறி திட்டியது தான் காரணம்..அதற்கு பதிலடியாக ஒரே ஒரு பதிவு போட்டால் இந்த கோபம் வருகிறது..இந்த ஜிப்பாராயர்களை கருத்தாகக் அளவில் வேறு எதிர்கொள்ள வேண்டுமாக்கும்?ரஜினி படங்களுக்கு வரும் வசூலும் திரளும் கூட்டமும்தான் இவர்களுக்கு பதில். ரஜினிபட வசூலைக்கண்டு புலம்பியே இவர்கள் வாழ்வை கழிக்க வேண்டும் என விதி இருந்தால் அதை யாரால் மாற்ற முடியும்?

//ஷங்கர் படங்களில் இவ்வளவு பெரிய திரைக்கதை ஓட்டைகளை இதற்குமுன் பார்த்ததில்லை! சாமானியனைத் தகவல்களால் சாகடிக்க வேண்டியதில்லை எனில், இந்தப் படத்துக்கான இடம் எது என்பதை ஒத்துக்கொண்டு, தூர்தர்ஷன் பாடாவதி இண்டர்நேஷனல் வாராவதியெல்லாம் இதனோட கம்பேர் பண்ணக்கூடாது, தளம் வேறு தாயக்கட்டை வேறு என்று ஜல்லி அடிக்கக்கூடாது//

ரஜினி படம் பாமரர்களுக்கான படம்...படிக்காத ஏழை அடித்தட்டு மக்களுக்கான படம்.அதுதான் அந்த படத்துக்கான இடம்....தூர்தர்ஷன் படங்களுடன் இதை ஒப்பிட வேண்டியதில்லை...ரஜினிபடம் தூர்தர்ஷனில் இனிமேல் வெளிவராது...கலைஞர் டிவியில் அல்லது சன்டிவியில் தான் வரும்..தூர்தர்ஷன் படங்களுக்கான ஆடியன்ஸ் புரொபைல் வேறு...ரஜினிபடத்துக்கான ஆடியன்ஸ் புரொபைல் வேறு...

//அதெல்லாம் நமது கலாச்சாரம் அல்லவே என்று குஷ்புவுக்கு துடைப்பக்கட்டை தூக்கிக்கொண்டு போன கோமாளிகள் மாதிரித்தானா இந்த 'அதெல்லாம் நமது கலாச்சாரம் அல்லவே'வும்?//

குஷ்பு சொன்னது நமது கலாச்சாரம் அல்ல. ஃபாரின் படமும் நமது கலாச்சாரம் அல்ல. குஷ்பு காட்டிய வழியில் செல்வதும் ஜோல்னாபை பார்ட்டிகளின் படங்களை பார்ப்பதும் ஒருவரின் தனிப்பட்ட விஷயம்..அதற்கு எதிராக துடப்பகட்டை தூக்குவது கல்சுரல் ஃபாசிசம்...நான் கல்ச்சரை மதிப்பவன்..ஆனால் பாசிஸ்ட் அல்ல.

//இந்த கலையில் எதிக்ஸ், அறம் என்பதெல்லாம் கொல்ச்சுரல் கொமிஸ்ஸார்களின் வேலை என்பது என் அபிப்ராயம், சந்தர்ப்பம் வாய்த்தால், விடியும்போது கலைவடிவில் அறம் குறித்த உங்கள் பார்வையை எழுதவும்.//

அறம் குறித்தே நிறைய எழுதவேண்டும்..அறம் என்று ஒன்றுமே இல்லை என்ற கல்சுரம் ரிலடிவிசத்தின் பார்வையை நான் ஏற்கவில்லை....சாதா படங்களையும் ஸ்னஃப் படங்களையும் பிரிக்கவாவது கலைக்கு அறம் எனும் நோக்கு வேண்டும்...இதுபற்றி பின்னாளில் எழுதுகிறேன்.

//வசூலுக்காகப் படம் எடுப்பதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால் அதன்மேல் மாற்றுக் கருத்துள்ள விமர்சனங்கள் வைக்கப்பட்டால், சும்மா வெளிநாட்டான் படத்தை கொம்பேர் பண்ணி கொம்பேர் பண்ணி சொல்லக்கூடாது என்ற ரீதியில் முனகக்கூடாது. இரண்டையும் பார்க்க வாய்ப்புள்ளவன் ஒப்பிடத்தான் செய்வான், ஒப்பிடுவதில் எந்தத் தவறும் இருப்பதாகத் தெரியவில்லை.//

ஒப்பிடுவதில் தப்பில்லை...ஆனால் அந்த ஒப்பிடுதல் இரண்டு தளங்களில் இருக்கும் படைப்புகளை ஒப்பிடுவதற்கு சமம் என்று கூறுவது குற்றம் அல்ல...ராஜேஷ்குமார் நபகோவ் உதாரனம் சொன்னதும் அதற்குத்தான்....இருவரும் எழுதியது வேறு வேறு தளங்களில் என்பதையும் இருவரையும் ஒப்பிட முடியாது என்பதையுமாவது ஒத்துக்கொள்கிறீர்களா?..அதே போன்ர இரு வேறு தளங்களில் ரஜினி படமும் உலக சினிமாவும் இருப்பதையாவது ஒத்துகொள்கிறீர்களா? அல்லது அதவைத கோட்பாட்டில் உறுதியாக நிற்க போகிறீர்களா?

//புத்தகங்களைப் பொறுத்த வரையில், எந்த வரிசையில் புத்தகங்களைப் படிக்கிறோம் என்பதுதான் முக்கியமானது, திரைப்படங்கள் இன்னபிற என்பதற்கும் அதேதான். இரண்டையும் படிக்கும் வாய்ப்புள்ளவன், இரண்டையும் ஒப்பிடத்தான் செய்வான் - ஒப்பிடுவதில் என்ன தவறு இருக்கிறது? குதிரை குதிரையாக இருப்பது கழுதை கழுதையாக இருப்பதால்தானே?//

புத்தகங்களை பொறுத்தவரை ராஜேஷ்குமார், சுபா எல்லாம் ஏறிவந்த ஏணி.எல்கேஜி வாத்தியாருக்கு சமம்.இன்று ஜர்னல் ஆஃப் பிலாசபி படிக்கும்வரை ரசனை வளர அவர்களும் ஒரு காரனம் என்ற விதத்தில் தான் அவர்களை அணுகுகிறேனே ஒழிய இவர்கள் இருவரையும் ஒப்பிடும் தவறை செய்வதில்லை....இதில் ஒன்று குதிரை ஒன்று கழுதை என்றால் நீங்கள் குதிரையை உயர்வாக மதிப்பிடும் பயாஸ் கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம்:)

//திரும்பத் திரும்ப, துட்டு சம்பாதிப்பவந்தான் நடிகன் என்ற ரேஞ்சுக்கு சொல்லிக்கொண்டிருப்பது ஏன்? தயாரிப்பாளர் நஷ்டமடைவது அனைவருக்கும் நடப்பதுதான்.//

கமர்ஷியல் சினிமாவில் ஒருவன் மதிக்கப்படுவது ஏன்? எந்த திறமையை வைத்து?..நடிப்புதான் திறமை என்றால் ராமன் அப்துல்லா படத்தில் டைட்டுஇல் சாங்கில் தசரதன் என்று ஒரு கிழபிச்சைக்காரர் வருவார்.கமலுடன் சில நாடகங்களில் நடித்து கமலை விட சிறந்த நடிகர் அவர் என்று சொல்லப்பட்டவர் அவர்..அப்ப அவரைத்தான் சிறந்த நடிகர் என்று சொல்லவேண்டும்...

ஒரு ஆட்டத்தில் அந்த ஆட்டத்தின் விதிகளுக்குட்பட்டுத்தான் ஆடவேண்டும்.கமர்ஷியல் சினிமாவில் வெற்றிக்கு மக்கள் அங்கீகாரம் தான் முக்கியம்...அவார்டுக்கு படம் எடுப்பதென்ரால் அதை தயாரிப்பாளரிடம் சொல்லிவிட்டு எடுத்தால் பரவாயில்லை..கழுதை விற்கும் சந்தையில் கழுதையும் இல்லாமல் குதிரையும் இல்லாமல் கோவேறு கழுதையை கொண்டுவந்து நிறுத்திவிட்டு தயாரிப்பாளரிடம் 'இது கழுதை' என்றும் அவார்டு கமிட்டியிடம் 'இது குதிரை' என்றும் சொன்னால் தயாரிப்பாளர் கேள்விகேட்கத்தான் செய்வார்.

//அப்போது படிக்கும் புத்தகங்களும் பார்க்கும் திரைப்படங்களும் ஓவியங்களும் கேட்கும் இசையும் எந்த மாற்றத்தையும் படிப்பவனிடம் (மேதாவியோ முட்டாளோ) ஏற்படுத்தாது என்கிறீர்கள் - இந்தக் காது வழியாக நுழைந்து அந்தக் காது வழியாகவோ இந்த ஓட்டை வழியாக நுழைந்து அந்த ஓட்டை வழியாகவோ போய்விடும் அப்போ? ஆக, மனிதன் ஒரு நவதுவாரமுள்ள ஜடம், அவனது பட்டறிவும் பகுத்தறிவும் இதுபோன்ற விஷயங்களால் சற்றுக்கூட முதிர்ச்சியோ முறிவோ அடையாது?//

பொழுதுபோக்கு சினிமாவில் படிப்பறிவும் பட்டறிவும் டெவெலப் ஆகவேண்டும் என எதிர்பார்ப்பது வீண்...கலை கலைக்காகவே வாழவேண்டுமே அன்றி பள்ளிகூடத்தில் சொல்லித்தர வேண்டியதை எல்லாம் *கமர்ஷியல் சினிமாவில்* கற்றுத்தரவேண்டும் என எதிர்பார்க்ககூடாது.

///இருப்பது கேவலமாக இருந்தால் கேவலம் என்றுதான் சொல்லமுடியும். உங்கள் வீட்டுக் குப்பை என்பதற்காக அதை சட்டைப் பாக்கெட்டில் போட்டுக்கொண்டு திரிவீர்களா என்ன? சிறுவர்கள் மூக்குச்சளியை நக்குவதும், மூக்கைத் தோண்டித் தின்பதும்தான் செய்வார்கள் - உடற்சுரப்பு, ஒன்றும் செய்யாது என்று விட்டுவிடுவீர்களா என்ன? இல்லை, மூக்கைத் தோண்டுவது சிறுவனின் தனிமனித உரிமை, அவன் ரசனை அது என்ற ரீதியில் சொல்வீர்களா? சிலருக்குக் கேவலமாகப் படுவது சிலருக்குக் கேவலமாகப் படாவிட்டால் அதற்கு என்ன செய்யமுடியும்? ஏன் கேவலம் இல்லை என்று நிரூபித்தால் சரியாகப் போகிறது.///

அவனவன் மூக்கு சளியை அவனவன் நக்கித் தின்றுகொண்டு போகிறான். ஃபாரின் மூக்கு சளியை நக்கி தின்கிற ஜோல்னாக்கள் இதை பற்றி சொல்ல என்ன இருக்கு?

//பொழுதைப் போக்குவது அவரவர் விருப்பம். எக்ஸ்பர்ட்டாக இருக்கத் தேவை என்று எவரும் சொல்லவில்லை இங்கே, ஆனால் அத்துறையில் நிபுணத்துவமோ அறிவோ உள்ளவர்கள் சொல்வதை என்ன ஏது என்றுகூட ஆராயாமல், ஈஸிசேரில் உட்கார்ந்துகொண்டு இது நொள்ளை அது நொட்டை என்று குதர்க்கம் பண்ணிக்கொண்டிருக்கக்கூடாது.//

என்ன ஏது என்று ஆராய எழுத்தில் ஒரு தன்மை இருக்கவேண்டும்...எழுத்து நாகரீகம் இருக்கவேண்டும்.வசைபாடிவிட்டு அதை விமர்சனம் என்றால் அப்புறம் வரும் பதில் விமர்சனமும் அதே ஸ்டைலில் வந்தால் வருத்தப்படக்கூடாது


//இதைத்தான் போன பதிலிலேயே, போட்டதைத் தின்னுக்கிட்டு மூலையில் கிடக்கும் புத்திக்குப் பழக்குவது என்றேன். வீம்புக்காக விமர்சனம் செய்பவர்களை அடையாளம் காண்பதுகூட, காட்டமான விமர்சனங்களைக் கண்டிருந்தால்தான் முடியும். வெறுங் கையால் முழம் போடவேண்டுமென்கிறீர்கள். நல்லது.//

தெரு தெருவாக போய் கிடப்பதை தின்பதை விட போட்டதை தின்று மூலையில் கிடப்பது உடல்நலத்துக்கு நன்று.

Unknown said...

ஒரு கட்டத்துக்கு மேல் விவாதம் தொடர்வது வெறும் வீம்பில் தான் போய் முடியும்...அந்த கட்டத்தை இந்த விவாதம் எப்போதோ தாண்டி விட்டது.....இந்த விவாதத்தால் சம்பந்தப்பட்டவர்கள் யாரும் தமது நிலையை மாற்றிக்கொள்வார்கள் என்று தோன்றவில்லை....இந்த விவாதமும் எங்கும் செல்வது போல் தோன்றவில்லை.அதனால் இதை இத்துடன் முடித்துகொள்வதாக உத்தேசம்.

நன்றாக வாதம் புரிந்த சன்னாசிக்கு நன்றி.பொறுமையாக படித்த அனைவருக்கும் ஸ்பெஷல் நன்றி..மாடரேட் செய்த சற்றுமுன் குழுவினருக்கும் நன்றி

Kasi Arumugam said...

சுவையான, தரமான விவாதம். சன்னாசிக்கும் செல்வனுக்கும் சபாஷ்:-)

(ஜாக்கி சான் ரசிகன்)
-காசி

சன்னாசி said...

//அதே மாதிரிதான் சில உலக புகழ் பெற்ற திரைப்படங்களை ஒரு உதாரணத்துக்கு கோட் செய்தபோது அதையே பிடித்துக்கொண்டு தொங்கிக் கொண்டிருந்தீர்கள்.//

அப்போது உலக மகா குப்பை என்று சிவாஜியைப்பற்றிய விமர்சனங்களைப் படித்து படத்தைப் பார்க்காமலே ஒருவன் சிவாஜி குப்பை என்றாலும் ஒத்துக்கொள்ளலாம்; சரிதானே?

//புதரகத்தில் கோட் சூட் போட்ட நிறையபேர் ரஜினி ரசிகர்களாக இருக்கிறார்கள்.சமூகத்தின் அனைத்து தட்டு மக்களிலும் ரஜினி ரசிகர்கள் இருக்கிறார்கள்:)//

புதரகத்திலும் பிற அகப்பொந்துகளிலும் கோட் சூட் போன்ற சீவிகள் இல்லையா என்ன? ஜோல்னாப்பை ஜிப்பாவிலிருந்து ஹவாய் செருப்பு வரை போட்டுக்கொண்டு திரியும் சீவிகளும் சமூகத்தின் அனைத்து தளங்களிலும்தான் இருக்கிறார்கள். பிறகு என்ன ஜோல்னாப்பை ஜிப்பா ஸ்டீரியோடைப்? விட்டால் ப்ளீட் வைத்த பேண்ட் போட்டவனைப் பற்றிக்கூட கேரிகேச்சர் பண்ணிவிடலாம் போல? செய்வது என்ன என்று பார்க்காமல் என்ன டவுசருக்குள் ஜாக்கி போட்டிருக்கிறானா இல்லை அரைப் புட்டத்துக்கு பேண்டை இறக்கிவிட்டு டாமி ஹில்ஃபிகர் ஜட்டி பெயர் தெரியுமாறு போட்டிருக்கிறானா என்ற ரீதியில் ஆராய்வது எதற்கு? சாராய வியாபாரி கூடத்தான் தும்பைப்பூப்போல வேட்டியும் நெற்றியிலே பூச்சுமாய் போஸ் கொடுக்கிறான். சட்டையை உள்ளே சொருகிவிட்டு பெல்ட்டை Levis என்றிருந்தால் பட்டிக்குள் நுழைத்து லீவைஸுக்கு இலவச விளம்பரம் காட்டும் கோஷ்டிகள் என்று ஒவ்வொருவனையும் பற்றி ஆரம்பித்தால் உலகம் தாங்காது.

//குமுதத்திலும் விகடனிலும் ரஜினியை பற்றி மட்டுமா எழுதினார்கள்?உலக சினிமாக்களை பற்றியும் தான் எழுதினார்கள்..அந்த வெத்திலை எச்சி இனிக்குது ரஜினியை பத்தி எழுதினா கசக்குது...இல்லையா?//

சமீபத்திய சில வருடங்களுக்கும் முன்பு குமுதமும் விகடனும், அந்துமணி கோஷ்டிகள் இன்றுவரையும் என்னத்தைக் கிழித்துக்கொண்டிருந்தது என்று சகலருக்கும் தெரியும். வணிகப் பத்திரிகைகளென்பதால் அவர்கள் போக்கு அவர்களுக்கு - ஆனால் இந்த பிம்ப உருவாக்கலில் அதிலிருந்த/இருக்கும் தற்குறிகள் சிலதுக்கும் பெரும்பங்கு உள்ளதென்பது மறுக்கமுடியாத ஒன்று.

//துக்கலாஅ தான் இருந்திருக்கும்...அப்புறம் அந்த படத்தை பற்றியும் விமர்சனம் எழுதுன்னு ஒத்தக்காலில் நின்னிருப்பீங்க..எதுக்கு வம்பு?//

கிளைமாக்ஸுல டபடபடபன்னு சுடுவானே ஸ்டைல் கொமண்டுகள் போரடிக்கலை? கொலை பற்றிக் கதை எழுத கொலை செய்திருக்கவேண்டும் என்பதற்கும், இவற்றுக்கும் வித்தியாசம் உள்ளது. மோகன்லாலையும் நெடுமுடி வேணுவும் நிரப்பினதைவிட ஷகீலாவும் ஷர்மிலியும் அதிகமா கல்லா நிரப்பினாங்கன்னா எப்படி நிரப்பினாங்கன்னு தெரிஞ்சுக்கத்தான். ஒருவேளை கல்லா இன்னும் ஜாஸ்தியாகணும்னா ரஜினிகாந்த் படத்துல ஷகீலா 'சீன்களையும்' சொருகணுமோ என்னவோ?

//இட்லி தோசைன்னு ஒண்ணு இருப்பதால் தான் பைவ் ஸ்டார் ஓட்டலுக்கு போய் மக்கள் நல்ல சாப்பாடு சாபிடமாட்டென் என்கிரார்கள்.ஃபைவ் ஸ்டார் ஓட்டலில் பிசினஸ் அதிகரிக்கணும்னா இட்லிமாவை தடை பண்னணும்கிர மாதிரி இருக்கு....//

ஸ்டார்பக்ஸ்/டீக்கடை, ஃபைவ்ஸ்டார் ஓட்டல்/இட்லி - செல்வன், இந்த கம்பேர் அண்டு காண்ட்ராஸ்டுகளை விட முயற்சி செய்யுங்கள்!! நமது மனச்சாய்வுக்கு ஏற்ப எத்தனை இணைகளை வேண்டுமானாலும் வைத்து வாதம் செய்யலாம். கேட்பவனுக்குத்தான் பித்தம் கபம் எல்லாம் ஏறும் ;-) என்ன contextல் அந்தக் கேள்வி கேட்கப்பட்டதென்று ஒருமுறை மறுபடி படித்துப் பார்க்கவும். உங்கள் வாதமும் நீங்கள் விமர்சிப்பவர்கள் கூறுவதைப் போன்றே இருக்கிறதே என்று கேட்டது.

//ஏற்கனவே சொன்னமாதிரி உலக சினிமாக்களை ஒருவன் ரசிக்கிறானா இல்லையா என்பது அவனவன் நேரம், காலம், விருப்பம், தொழில் ஆகியவற்றை சார்ந்த விஷயம்.....உலக சினிமாவை பார்க்கும் ஒருவன் ரஜினி படத்தை அவற்றுடன் ஒப்பிடுவது அபத்தம். ஏன் என்றால் ஒன்று ஆப்பிள் மற்றொன்று ஆரஞ்சு...இரண்டின் ஆடியன்ஸ் புரொபைல் வேறு...ரஜினி ரசிகர்கள் பாதி பேர் ஏழ்மையான சூழலில்,கல்வி அறிவு அதிகம் அற்ற சூழலில் இருந்து வருகிறவர்கள்.இது புரியாமல் 'அந்த படத்தை பார், இந்த படத்தை பார்' என்றால் அப்புறம் அந்த அபத்தத்தை சுட்டிக்காட்டத்தான் செய்வார்கள்.//

திரைப்படத்துக்கு என்ன அளவுகோல் என்று கேட்கிறீர்கள், பிறகு ரஜினி ரசிகர்களின் புரொபைல் இது என்கிறீர்கள் - அதற்கு அளவுகோல் என்ன? அந்தப் படத்தைப் பார் இந்தப் படத்தைப் பார் என்பது அபத்தமா? ஏன், சினிமாவைத்தானே பார்க்கச்சொல்கிறார்கள்? ரஜினி சினிமா போல இதுவும் வேறொரு ரகமான சினிமா என்று - ராக்கெட்டா விடச் சொல்கிறார்கள்? பிடித்தால் பார்த்துவிட்டுப் போகிறான், பிடிக்காவிட்டால் போகிறது. ஏழ்மையான சூழலில், கல்வி அறிவு அதிகம் அற்ற சூழலில் இருந்து வருபவர்களால் பிற திரைப்படங்களை ரசிக்க முடியாது என்ற implicationஆ இது? இல்லை, அவனுக்கு அதெல்லாம் தேவை இல்லை என்ற உங்களது தீர்ப்பா/அனுமானமா? ஒன்றுக்கோ, அல்லது இரண்டுக்குமோ ஆம் எனப் பதில் வந்தால், அது பெரும் அபத்தம் என்று உறுதியாகச் சொல்லமுடியும். தேடிப் பிடித்துப் பார்க்கவேண்டிய அவசியம் இல்லை அவனுக்கு, ஆனால் இதெல்லாம் phoren fillum, arthouse அறுவை என்று பூச்சாண்டி காட்டாமலிருப்பது அவசியம். நான் சொல்லமுயல்வது அதைத்தான்.

//பிம்ப உருவாக்கத்தை செய்ய காரனம் என்ன?ரஜினி ரசிகர்களை வரம்பு மீறி திட்டியது தான் காரணம்..அதற்கு பதிலடியாக ஒரே ஒரு பதிவு போட்டால் இந்த கோபம் வருகிறது..இந்த ஜிப்பாராயர்களை கருத்தாகக் அளவில் வேறு எதிர்கொள்ள வேண்டுமாக்கும்?//

இந்த சோடாபுட்டி ஜிப்பா கிழிஞ்ச துவைக்காத சட்டை என்ற ரீதியிலான வாழைக்காய்மட்டை தத்துவத்தையும் கேரிகேச்சரையும் 'உலகத் தத்துவங்களிலேயே முதன் முறையாக' போடுவது நீங்களும் கிடையாது, பதிலுக்குப் பிடித்துப் பிறாண்ட முயலும் 'உலகப் பிறாண்டல்களிலேயே முதல் பிறாண்டல்' முதல் ஆள் நானும் கிடையாது என்பது படிக்கும் 'ஸாதாரண வாஸகன்' முதற்கொண்டு அனைவருக்கும் தெரிந்திருக்கும். பதிவு போட்டதற்காக கோபம் வந்தது என்று சொல்லுவதைவிட, இந்த வாழைக்காய்மட்டை கேரிகேச்சர்களை இன்னும் படிக்கவேண்டியிருக்கிறதே என்ற எரிச்சலும், சற்று அனுதாபமும் வேண்டுமானால் வந்ததென்று சொல்லலாம். ஜோல்னா ஜிப்பா என்று அடிக்கும் கிண்டலை, பாண்டியனில் சட்டையைவிட நீளமாக பனியனைப் போட்டு வெளியில் தொங்கவிட்டுக்கொண்டு அதுவும் ஒரு கெக்கேபிக்கே ஸ்டைல் என்று மரத்தைச் சுத்தும் மன்னாரு ரஜினிகாந்துக்கு அடிக்கலாமா, அவரது ட்றெஸ் றஸனையைப் பத்தி? ஓடிவர்றப்ப ஏன் கொல்லைக்குப் போயிட்டு கழுவாதவன் மாதிரி க்றாஸ்முட்டியோட ஓடிவர்றாருங்கிற ரீதியில கிண்டலடிப்பமா? ஜோல்னாப்பை, கிழிஞ்ச சட்டை, கையில பையி கழுத்துல டையி வாயில பொய்யிங்கிற ரேஞ்சுல நீங்க கிண்டலடிக்கிறப்ப? ஏன், ஜிப்பா போட்டிருக்கிறவன் கருத்தாக்க ரீதியில டப்பாவாத்தான் இருப்பானாமா? வலைப்பதிவுகள்ல யாராவது ஜிப்பாராயர்கள் இருக்காங்களா செல்வன்? சும்மா தைரியமா வெளிப்படையா சொல்லுங்க. *அவர்கள்* எழுதின விமர்சனத்தை நானும் படிச்சுப் பார்த்து நியாயங் கேக்கலாமில்ல, ஏனய்யா இப்படி ஆப்பாயிலா இருக்கீங்க, ஜுப்பாவ மாத்துங்கய்யான்னு? ;-)

//குஷ்பு சொன்னது நமது கலாச்சாரம் அல்ல. ஃபாரின் படமும் நமது கலாச்சாரம் அல்ல. குஷ்பு காட்டிய வழியில் செல்வதும் ஜோல்னாபை பார்ட்டிகளின் படங்களை பார்ப்பதும் ஒருவரின் தனிப்பட்ட விஷயம்..அதற்கு எதிராக துடப்பகட்டை தூக்குவது கல்சுரல் ஃபாசிசம்...நான் கல்ச்சரை மதிப்பவன். ஆனால் பாசிஸ்ட் அல்ல.//

சபாஷ். பாசிஸ்டாக இல்லாமலிருப்பதற்கு வாழ்த்துக்கள். அப்படியே உங்களது 'கலாச்சாரம்' குறித்த தெளிவுக்கும் வாழ்த்துக்கள்.

//அறம் குறித்தே நிறைய எழுதவேண்டும்..அறம் என்று ஒன்றுமே இல்லை என்ற கல்சுரம் ரிலடிவிசத்தின் பார்வையை நான் ஏற்கவில்லை....சாதா படங்களையும் ஸ்னஃப் படங்களையும் பிரிக்கவாவது கலைக்கு அறம் எனும் நோக்கு வேண்டும்...இதுபற்றி பின்னாளில் எழுதுகிறேன்.//

இந்த ஸ்னஃப் படங்கள் என்று நீங்கள் வேறெங்கோ எழுதியும் பார்த்ததுண்டு - எந்த அர்த்தத்தில் இதை உபயோகப்படுத்துகிறீர்களென்று சரியாக விளங்கவில்லை. நிற்க; UFOக்களைப் பார்த்ததாகக் கூறுபவர்கள் கண்டதாகக் கூறும் அனைத்து ஏலியன்களும் கை கால் தலை என்றும் (குறிப்பாக நகர்வு (locomotion)க்கு தேவையான அனைத்து அஸ்திரங்களையும் ஒருங்கேயொரு பெரும் அம்பறாத்தூணியிலே பெற்றவர்களாக), மனிதர்களைப்போலவே படையெடுக்கும் நோக்கம் மிகுந்தவர்களாக, மனிதர்களைப்போலவே 'வாழ்பவர்களாக', மனிதர்களைப்போலவே 'கட்டமைக்கப்பட்டவர்களாக' இருப்பது என்ற ரீதியில் தங்களது பிரத்தியேகப் பிரதிமைகளைச் சமைத்துக்கொள்வதுபோல, நமது மூக்கைச் சுளிக்க விரும்பும் திசைக்கேற்பக்கூட 'அறங்களை' வடிவமைக்கமுடியும் - எழுதுங்கள், cultural relativism என்று எழுதினாலும் சரி, moral pluralism என்று எழுதினாலும் சரி, வாய்ப்பும் சந்தர்ப்பமும் இருந்தால் படித்துப் பார்த்துவிடலாம்.

//ஒப்பிடுவதில் தப்பில்லை...ஆனால் அந்த ஒப்பிடுதல் இரண்டு தளங்களில் இருக்கும் படைப்புகளை ஒப்பிடுவதற்கு சமம் என்று கூறுவது குற்றம் அல்ல...ராஜேஷ்குமார் நபகோவ் உதாரனம் சொன்னதும் அதற்குத்தான்....இருவரும் எழுதியது வேறு வேறு தளங்களில் என்பதையும் இருவரையும் ஒப்பிட முடியாது என்பதையுமாவது ஒத்துக்கொள்கிறீர்களா?..அதே போன்ர இரு வேறு தளங்களில் ரஜினி படமும் உலக சினிமாவும் இருப்பதையாவது ஒத்துகொள்கிறீர்களா? அல்லது அதவைத கோட்பாட்டில் உறுதியாக நிற்க போகிறீர்களா?//

R.L.ஸ்டீவன்சனின் Dr.Jekyll and Mr.Hyde ஐ பல்ப் என்பீர்களா இலக்கியம் என்பீர்களா? ஸ்காட்டஸ் எரிஜீனா சொன்ன பல்வேறு உலகங்கள் ஒரே தருணத்தில் நிகழ்ந்துகொண்டிருப்பதை ராதை ருக்மணி இருவருடனும் வெவ்வேறு இடங்களில் ஒரே நேரத்தில் கிஸுணபஹவானைப் பார்த்த நாரதர் பார்த்ததுடன் ஒப்பிட்டுப் பார்ப்பதிலும், டெர்மினேட்டர் போன்ற படங்களில் கடந்தகாலத்திலிருந்து யந்திரங்கள் வந்து நிகழ்காலத்தில் 'மரணிப்பதும்' என்று எது pulp, எது அஹத்தோண்டி அற்புத அனுபூதி என்று கூறமுடியுமா? The man who was Thursdayயை எவரும் குறிப்பிடாமல் படித்து அதை இன்னதென்று வகைப்படுத்த முடியுமா? ஆர்வத்தைத் தக்கவைக்கும், சிந்தனையை உசுப்பும், புதிய கோணங்களை அறிமுகப்படுத்தும் எதையும் படிக்கலாம், படமாகப் பார்க்கலாம் - ஆனால், 120 days of Sodomஐயும் Decameronஐயும் penthouse letters தொகுப்புக்களையும் ஒப்பிட முடியுமா? முடியும் - என்னைப் பொறுத்தவரையில் penthouse letters பாடாவதியாகத்தான் இருக்கும். வேறொருவனுக்கு வேறுவகையாக இருக்கும். ஒரு கட்டத்துக்கு மேல், ஏன் அவனுக்கு அது வேறாக இருக்கிறதென்பதைத் தெரிந்துகொள்வதிலுள்ள சுவாரஸ்யம் புத்தகத்தின் வகைபிரிப்பிலோ, ஏன் புத்தகத்திலோ கூட இருக்காது - பாடாவதிப் படங்களையும் உருப்படியான படங்களையும் ஒப்பிடுவதும் இதே ரகந்தான்.

//குதிரை குதிரையாக இருப்பது கழுதை கழுதையாக இருப்பதால்தானே?// - இது நான் சொன்னது.

//இதில் ஒன்று குதிரை ஒன்று கழுதை என்றால் நீங்கள் குதிரையை உயர்வாக மதிப்பிடும் பயாஸ் கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம்:)// - இது நீங்கள் சொல்வது. Make your own conclusions.

//கமர்ஷியல் சினிமாவில் வெற்றிக்கு மக்கள் அங்கீகாரம் தான் முக்கியம்...அவார்டுக்கு படம் எடுப்பதென்ரால் அதை தயாரிப்பாளரிடம் சொல்லிவிட்டு எடுத்தால் பரவாயில்லை..கழுதை விற்கும் சந்தையில் கழுதையும் இல்லாமல் குதிரையும் இல்லாமல் கோவேறு கழுதையை கொண்டுவந்து நிறுத்திவிட்டு தயாரிப்பாளரிடம் 'இது கழுதை' என்றும் அவார்டு கமிட்டியிடம் 'இது குதிரை' என்றும் சொன்னால் தயாரிப்பாளர் கேள்விகேட்கத்தான் செய்வார்.//

ஏதோ கமலஹாசன்-specific அட்டாக் மாதிரி இருக்கிறது, அவரது ரசிகர்கள் பதில் சொல்லட்டும். யார் தயாரிப்பாளரை ஏமாற்றிப் படம் எடுத்தது? அடூர், தன் படங்கள் எதுவும் பொருளாதார ரீதியில் நஷ்டத்தை ஏற்படுத்தியதில்லை என்று பேட்டி கொடுக்கிறார். அது கிடக்கட்டும், கல்லா நிரம்பி வழியும் என்று திட்டம் போட்டு முன்னமே சொன்ன மாதிர் ஐஞ்சு பாட்டு ஆறு பைட்டு தொறந்து காட்டும் சூப்பர் சைட்டுன்னு எடுக்கும் மெகா மசாலா படங்கள் ஊத்திக்கொள்வதை என்ன சொல்வது அப்போது? நம்ப வைத்துக் கழுத்தறுத்தான் என்பதா? கலைப்படங்கள் வரை போகவேண்டாம், Reservoir dogs தயாரிப்புக்கு அதன் நடிகர்களில் ஒருவரான ஹார்வி கீட்டெல் பெரும்பாலான பண உதவி செய்ததும், Clerks படத்தை கெவின் ஸ்மித் தன் கிரெடிட் கார்டுகளைக் கொண்டே எடுத்து முடித்ததும் என்று, தான் விரும்பியதை, தான் விரும்பியபடி எடுக்க முயல்பவர்களாலேயே சாத்தியமாகிறது; தயாரிப்பாளர்களுக்கு 'இந்தப் படம் ஹிட் ஆகும்' என்று முடிவெடுத்துப் படமெடுப்பது இன்னொரு ரகம். அதிலும், ஹாலிவுட் படங்கள் போட்ட முதலை எடுப்பதற்கு படத்தின் தரம் மட்டும் காரணமல்ல, ஒரே சமயத்தில் 3000 தியேட்டர்களில் ரிலீஸ் செய்து, படம் குறித்த மோசமான விமர்சனங்கள் (படம் பாடாவதியாக இருப்பின்) பொதுஜனத்திடம் வெகுவாகப் பரவுமுன் முதல் வாரத்திலேயே போட்ட காசை எடுத்துவிடுவது, அதற்குப்பிறகு வந்தால் லாபம் வராவிட்டாலும் நஷ்டமில்லை என்ற வணிக உத்தியும் காரணம் என்பதை மறுக்கமுடியுமா? எண்பது கோடி போட்டுப் படம் எடுப்பவனும் இதே யுக்தியைத்தானே பிரயோகிக்கிறான்? இப்படி எத்தனை பேர் கோவேறு கழுதைகளை உருவாக்கிவிட்டார்கள், தயாரிப்பாளர்களை ஏமாற்றிவிட்டார்கள்? யாரையோ சொல்வதுமாதிரி ஜாடைமாடையாகச் சொல்கிறீர்களே தவிர ('...... என்று மக்கள் நினைக்கிறார்கள்/கூறுகிறார்கள்' என்ற தினமலர் ஸ்டைலில்), குறிப்பாக எந்தத் தகவலும் இல்லையே? அப்படி வஞ்சிக்கப்பட்ட தயாரிப்பாளர்கள் தமிழ்த் திரையுலகில் யார் என்று கூறமுடியுமா? அப்படியே, எந்த அவார்டு கமிட்டிகளுக்காக அந்தப் படம் எடுக்கப்பட்டதென்று கூறமுடியுமா?

//அவனவன் மூக்கு சளியை அவனவன் நக்கித் தின்றுகொண்டு போகிறான். ஃபாரின் மூக்கு சளியை நக்கி தின்கிற ஜோல்னாக்கள் இதை பற்றி சொல்ல என்ன இருக்கு?//

ஃபாரின் மூக்கு சளிய நக்கித் தின்று, மீதியிருக்கும் தலையில் தடவி blonde டோப்பாவும் ஒட்டவச்சிருக்கிற வெஸ்றன்பாய் ரஜினிகாந்த்துக்கு மட்டும்தான் அதைப்பற்றிச் சொல்ல அருகதை இருக்கு போல, இப்போனான் வெல்லைத்தமி லன்ன்ன்ன்ன் அப்படின்னு ;-)

//தெரு தெருவாக போய் கிடப்பதை தின்பதை விட போட்டதை தின்று மூலையில் கிடப்பது உடல்நலத்துக்கு நன்று.//

அட. இந்த முடக்கு'வாதமும்', போட்டதைத் தின்று மூலையில் கிடக்கும் தத்துவத்தின் சின்ன எக்ஸ்டென்சன் தானே? நமக்கு விதிச்சதை மட்டும் போட்டுத் தேச்சிட்டு உக்காந்திருக்கணும், சும்மா அங்க இங்கன்னு தலையத் திருப்பக்கூடாது, தலையைத் திருப்பினா கழுத்துல நரம்பு ஒண்ணு பொட்டுன்னு புட்டுக்க சான்ஸ் இருக்கு, எந்திரிச்சா முழங்காலில ஒரு கணு மொட்டுன்னு முறிஞ்சிர சான்ஸ் இருக்கு, நடந்தா கல் தடுக்கி மண்டையைப் பேத்துக்கினு சிவலோகம் போக சான்ஸ் இருக்கு, பஸ்ல ஏறினா பஸ் புளியமரத்துல மோதி பீஸ் பீஸாயிட சான்ஸ் இருக்கு, அட என்ன சொன்னீங்க? சென்றிடுவோம் எட்டுத் திக்கும் xyzகள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம் (xyzன்னு போட்டிருக்கு செல்வன், செல்வம்னு எழுதப்போக அது உங்களுக்கு வேற மாதிரிப் படப்போக, என்னத்துக்கு கெரகம்), வாழ்க தமிள்நாடு, வாழ்க ப்ஹாரதம்.

-------------------------------------

//இந்த விவாதத்தால் சம்பந்தப்பட்டவர்கள் யாரும் தமது நிலையை மாற்றிக்கொள்வார்கள் என்று தோன்றவில்லை....இந்த விவாதமும் எங்கும் செல்வது போல் தோன்றவில்லை.அதனால் இதை இத்துடன் முடித்துகொள்வதாக உத்தேசம்.//

உங்கள் நிலையை மாற்றவேண்டி இவ்வளவு பஜனையும் நடக்கவில்லை - மாற்றுக் கருத்துக்களும் இருக்கக்கூடும் என்ற எளிய உண்மையை மெலிதாகக் கோடிட்டுக் காட்ட முயன்றது மட்டுமே நிகழ்ந்தது. உங்களது பொறுமைக்கு மறுபடி ஒரு நன்றி.

Thekkikattan|தெகா said...

//ஒருவன் விரும்பி பார்க்கும் சினிமாவை வைத்தும் படிக்கும் நாவலை (மட்டும்) வைத்தும் அவனது அறிவை மதிப்பிடுவது முட்டாள்தனம்...//

//தாஜ்மகால் உலக அதிசயம்னு எழுத ஒருத்தன் அதை நேரில் பார்த்திருந்து விமர்சன கட்டுரை எழுதியிருக்கணுமா என்ன?//

//குஷ்பு சொன்னது நமது கலாச்சாரம் அல்ல. ஃபாரின் படமும் நமது கலாச்சாரம் அல்ல. குஷ்பு காட்டிய வழியில் செல்வதும் ஜோல்னாபை பார்ட்டிகளின் படங்களை பார்ப்பதும் ஒருவரின் தனிப்பட்ட விஷயம்..அதற்கு எதிராக துடப்பகட்டை தூக்குவது கல்சுரல் ஃபாசிசம்...நான் கல்ச்சரை மதிப்பவன்..ஆனால் பாசிஸ்ட் அல்ல.//


இது போன்ற கருத்துக்களை வெளியில் கொணர்வதற்கேனும் இது போன்ற ஆரோக்கியமான ஒரு பின்னூட்ட கலந்துரையாடல் தேவைப்படுகிறது, அல்லவா?

இந்த கலந்துரையாடலின் மூலமாக எந்த ஒரு பெரிய' தனிப்பட்ட மனிதரின் துதி பாடலுமில்லாமல் நடு நிலமையாக விசயங்களை கருத்தில் நிறுத்தி வாதிடுவது நலம். நாட்டிற்கும் வீட்டிற்கும். இப்பொழுது "செல்வம்" அந்த தனிப்பட்ட நபரின் துதி பாடுபவர்களின் சார்பாக நின்று ஆக்ரோசமாக தனது பார்வைகளை முன் வைக்காதப் பட்சத்தில் நமக்கு இது போன்ற ஒரு அற்புதமான கலந்துரையாடல் கிடைக்க வாய்ப்பிருக்காது.

வளர்ந்தும், வளராத நிலையில் உள்ளவர்கள் இப்பதிவினை புக் மார்க் பண்ணி வைத்துக் கொண்டு இன்னுமொரு இருபது வருடங்கள் கழித்து தான் மீண்டும் படித்துப் பார்க்கும் பொழுது எவ்வளவு தொலைவு கடந்து வந்திருக்கிறோம் என்ற ப்ரக்ஞை அளவுகோலிட உதவலாம்.

சன்னாசிக்கும், செல்வனுக்கு ஒரு சிறப்பு நன்றி!

-o❢o-

b r e a k i n g   n e w s...